Jump to content

"பிரித்தானியாவில் சில்பா செட்டி இனவாதத்தால் பாதிப்பாம்", இந்தியர்களின் முதலைக் கண்ணீர்!!!!


Recommended Posts

கடந்த சனியன்று எனது வீட்டு அருகில் இருக்கும் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான தலைமுடி வெட்டும் கடைக்கு தலையை மேலால எடுக்க சென்றிருந்தேன். அங்கு சில பெண்கள் உட்பட பத்து வட இந்தியர்கள் இருந்திருப்பார்கள். போனது தொடக்கம் முடியும் வரை கட்டிப்பிடித்து அழாத குறையாக விம்மிக் கொண்டிருந்தார்கள். என்ன???? "பிரித்தானியாவில் சில்பா செட்டி இனவாதத்தால் பாதிப்பாம்". அரை மணி நேரம் தலையை குடுத்துக் கொண்டிருந்த எனக்கோ பொறுமை இழந்து "இந்தியர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பாடம்" என்றேன். "ஏன்?" என்றார் ஒருவர். நானோ "இந்தியாவில் இல்லாத இனவாதமா??, மொழி வாதாமா? சாதியமா? ... " என்று ஒரு பட்டியல் போட்டேன்.எப்படி இந்தியாவில் சாதி என்ற மிருகம் தலை விரித்தாடுகின்றதை மெல்லமாக விட்டு விட்டு, வீடு வந்தேன். ஒரு சிறிய திருப்தி!!

பிரித்தானியாவில் சனல் 4 நடத்தும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் இந்த சில்பா கலந்து கொண்டிருக்கும் "பிக் பிரதர்". அந்நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே சில்பா செட்டி "போலியாக" நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இக்குற்றச்சாட்டை இந்தியர்களின் "சன்றைஸ்" ரேடியோவிலும் பலர் இந்தியர்களாலேயே கூறப்பட்டது. அதற்கு மேல் அந்நிகழ்ச்சியில் நடைபெற்ற பல பிரட்சனைகளுக்கு எண்ணை ஊற்றி எரிய விட்டதும் சில்பாதான்! ஆனால் பின்பு சில இனவாதம் சம்பந்தமான பிரட்சனைகள் வந்தது உண்மைதான்.

அதற்காக இங்குள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர், பிரித்தானிய பாராளுமன்றத்தில் மனு கொண்டுவருமளவிற்கு ஒன்றும் நடந்து விடவில்லை. மாறாக இவர்களின் இச்செயல்கள் இங்கு இனவாதத்தை தூண்டுவதாகவே உள்ளது.

* இந்தியாவில் இனங்கள், மதங்களிற்கிடையில் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், பிரித்தானியாவில் இனவாதமென்று கூக்குரலிட இந்தியர்கள் அருகதை உடையவர்களா?????

* சொந்த நாட்டினுள் உள்ள மக்களையே "தொடக்கூடாதர்கள்" என்ற ஒரு சாதிக்குள் அடக்கி கூத்தாடும் இவர்களா இனவாதம் பற்றிக் கதைப்பது????

இது இந்தியர்களின் முதலைக் கண்ணீர் ஒழிய வேறொன்றுமில்லை!!!! இந்தியாவில் இல்லாததை பிரித்தானியாவில் எதிர் பார்க்கிறார்கள்!!!! மிகப் பெரிய வேடிக்கை என்னவென்ரால் இந்தியாவை சகிப்புணர்வு/ நட்புணர்வு/சகோதரத்துவ உணர்வுள்ள தேசமாக இந்நிகழ்ச்சியின் பின் ஜோடிக்க முயல்கிராகள். இந்நிகழ்ச்சியால் இந்தியர்களின் மனங்களெல்லாம் புண்பட்டு விட்டதாம்!!!! புண்பட்டதற்கு மருந்து கட்ட இங்குள்ள பொய்யூடகங்களும், அரசியல் பொய்யர்களும்!!!!! .....ம்ம்ம்ம்ம்... விட்டால் இன்னும் விடுவாஙகள்!!!

"தன்னை திருத்திக் கொள், சமுதாயம் தானே திருந்துமாம்", அப்படி முதலில் "பாரதமாதாவின் புதல்வர்கள் தங்களைத் திருத்தட்டும், உலகம் தானே திருந்தும்"!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் தினனியம் என்ற இடத்தில் தலித் துகளை மலம் தின்ன வைத்த கொடுமையையையும் கவுண்டன் பட்டியில் மூத்திரம் குடிக்க வைத்த வேதனையையும் பேசாத இந்திய பெரிமிதம் இருந்தென்ன? இறந்தென்ன?

சில்பா செட்டியின் நிகழ்ச்சி மூக்கால் வழிந்து முக்கால் பக்கம் கருத்து எழுதின ஒரு பேப்பர் என்னவோ ஆனான ஆடுகள் தவிடு புண்ணாக்குக்கு அலைய இந்த ஆடு என்னத்துகோ அலைஞ்சதாம்....

Link to comment
Share on other sites

இந்தியாவின் பொருளாதாரம் படு வேகமாக வளர்கிறது. அதனால் அதன் சந்தையும் வளர்கிறது. சந்தை வளர்ந்தால் வியாபாரிகளிற்கு தேவையான இடமாகி விடும்.

அதுபோக சீனாவை விட மேற்குலம் இந்தியாவை தன்னால் ஒரளவேனும் கட்டுப்படுத்தக் கூடிய ஒத்துழைக்கக் கூடிய பொது நலன்கள் சவால்களை கொண்ட நேச சக்த்தியாக எதிர்கால வல்லரசாக பார்க்கிறது.

மேற்குல மீடியா நிறுவனங்கள் இந்தியாவின் வழர்ந்து வரும் நடுத்தரவர்க்கத்தின் நுகர்வின் ஒரு பங்கை தமதாக்கிக் கொள்ள முனைவார்கள். பிக்பிரதர் இந்தியாவில் விரைவில் தொடங்கினால் ஆச்சரியம் இல்லை. உல்டா நிகழ்ச்சிகள் அல்ல உண்மையா பிக்பிரதர் நிறுவனத்தின் நிகழ்வு.

பிரித்தானியாவும் சில்பா விடையத்தை கொஞ்சம் தூபமிடுவதும் அதற்கு பாராளமன்றம் வரை இடங் கொடுப்பதும் மக்கள் அபிப்பிராயத்தில் இந்தியாவின் நேச சக்தியாக காட்ட அதை மேலும் பலப்படுத்த. அதாவது நாங்கள் இந்தியர்களின் (உயர் தர ஆளும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கங்களின்) உணர்வுகளை மதிப்பளித்து நடந்து கொள்பவர்கள் என்று காட்டிக் கொள்ள. இது இந்தியாவோடு உயர்நிலை உறவுகளை பலப்படுத்த கீழ் நிலையில் போடப்படும் அத்திவாரம்.

சில காலத்திற்கு முன்னர் (2005 என நினைக்கிறேன்) செய்த ஒரு ஆய்வில் அமெரிக்காவிற்கு வெளியில் அதிக அமெரிக்க ஆதரவு மக்கள் அபிப்பிராயம் கொண்ட நாடாக இந்தியா இருந்தது. கவனிக்கவும் பல மேற்குல நாட்டு மக்களிடம் கூட இல்லாத இந்த ஆதரவுத் தொனி இந்தியாவில் அவதானிக்கப்பட்டது. இந்த ஆய்வுகளும் இந்தியாவின் ஏனைய ஆளும் வர்க்க முடிவுகளிற்கும் பட்டி தொட்டியில் பிறப்பாலே சாதி அடிப்படையில் மலம் அள்ளுமாறு நிர்ப்பந்திக்கப் படுபவர்களிற்கு பங்கு இருக்குமா? இன்று அல்ல எதிர்காலத்திலும் தான்.

மலம் அள்ளி வாழ்கையை ஓட்டுமாறு நிர்ப்பந்திக்கபடுபவர்கள் அப்படியே தான் இருப்பார்கள். மேக்கப் கலையாது ரிசுவால் மென்மையாக ஒத்தி ஒத்தி இனவாதம் பற்றி அழுபவர்களும் ஓகோ என்று தமது வாழ்க்கையை இன்னும் வளமாக ஓட்டிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='தலித்' date='Jan 24 2007, 11:57 AM' post='252879']

இந்தியாவில் தினனியம் என்ற இடத்தில் தலித் துகளை மலம் தின்ன வைத்த கொடுமையையையும் கவுண்டன் பட்டியில் மூத்திரம் குடிக்க வைத்த வேதனையையும் பேசாத இந்திய பெரிமிதம் இருந்தென்ன? இறந்தென்ன?

சில்பா செட்டியின் நிகழ்ச்சி மூக்கால் வழிந்து முக்கால் பக்கம் கருத்து எழுதின ஒரு பேப்பர் என்னவோ ஆனான ஆடுகள் தவிடு புண்ணாக்குக்கு அலைய இந்த ஆடு என்னத்துகோ அலைஞ்சதாம்....

Link to comment
Share on other sites

ஓம்.......இந்த சில்பா சட்டி தான் இப்ப எங்கள் தாயகத்து அவசர மனிதாபிமான பிரச்சினை கண்டியளோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.