Jump to content

செப்டெம்பர் 16


Recommended Posts

செப்டெம்பர் 16
 
 

-மொஹமட பாதுஷா

இலங்கை முஸ்லிம் சமூகம், 16 வருடங்களுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் தமது கனவை இழந்துபோனது. தென்கிழக்கே ஒரு கிராமத்தில் உதித்த, ஆயிரம் விளக்குகளை விட பிரகாசமான ஓர் ஆதவன், மத்திய மலைநாட்டின் ஊரகந்த மலைத்தொடரில் அஸ்தமனமாகிப் போனது.   

அமெரிக்காவில் செப்டெம்பர் 11 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இரட்டைக் கோபுரங்கள் நொருங்கி விழுந்ததைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நொருங்கிச் சுக்குநூறாகிப் போயினர். அன்று நொருங்கி விழுந்த சமூகம்தான் இன்று வரை சரியாக எழுந்திருக்கவேயில்லை.   

2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி அந்த துரதிர்ஷ்டம் நேர்ந்தது. தலைவர் அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் பம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை மாவட்டத்தை நோக்கி ஹெலிகொப்டரில் புறப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த ஹெலிகொப்டர் அரநாயக்க, ஊரகந்தை மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது. அவ்வாறுதான் இன்றுவரையும் நம்பிக் கொண்டிருக்கின்றோம். இச்சம்பவத்தில் தலைவர் அஷ்ரப் உட்பட 13 பேர் பரிதாபகரமாக உயிழந்தனர்.   

ஒரு யுகாந்திர கனவுகளைச் சுமந்து வந்த மக்கள் தலைவனின் கதை அங்கேயே முடிந்துபோனது. முஸ்லிம்களின் ஒளிக்கீற்று ஒரு மலைத்தொடரில் தொலைந்து போனது. செப்டெம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவில் ஏற்படுத்திய அதிர்வுகளை விட செப்டம்பர் 16 இல் இடம்பெற்ற இவ்வனர்த்தம் முஸ்லிம்களிடையே ஏற்படுத்திய அதிர்வும் அதிர்ச்சியும் அதிகமானது எனக் கூறலாம்.  

அஷ்ரப் மிகப் பிரமாண்டமானதொரு ஆச்சரியக்குறி! தனது ஆதரவாளர்களாலும் சிஷ்யர்களாலும் மட்டுமன்றி ஒருபொது எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளாலும் பிற்காலத்தில் சிலாகித்துப் பேசப்பட்டவர். அவரிலும் சில குறைகளை காணலாம். என்றாலும், இன்றிருக்கின்ற தலைவர்களுடன் ஒப்பிடக்கூட முடியாத உயர்ந்த அந்தஸ்துக்குரிய பண்புகளை அவர் கொண்டிருந்தார். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குரிய வரைவிலக்கணமாக அவர் கொள்ளப்படுகின்றார். முஸ்லிம்களுக்காக ஒரு தூரநோக்குடைய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தமை, முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை கிழக்கிற்கு நகர்த்தியமை ஆகியவையே அவர் செய்த புரட்சிகர மாற்றங்களில் முதன்மையானவை.   

இந்த நாட்டில் சிங்களப் பெருந்தேசியவாதம் சிறுபான்மை மக்களை கொள்கை ரீதியாக அடக்க முற்பட்ட அன்றைய காலகட்டத்திலும் பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகித்தனர்; சேவைகளை செய்தனர். ஆனால் அத்தோடு தமது கடமை முடிந்தது என்று அவர்கள் இருந்தனரேயொழிய, நமக்கென்று ஓர் அரசியல் இயக்கம் வேண்டுமென்ற ஒரு வேட்கை அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களது சிந்தனையின் மூக்கணாங்கயிறு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் கைகளிலேயே இருந்தது. அவ்வேளையில் அஷ்ரப், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்து கொண்டிருந்தார். ஆனால். உலகில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஏனைய போராட்டங்களைப் போலவே தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களின் துணைகொண்டு பயணிக்கத் தொடங்கியபோது, அஷ்ரப் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி தனியொரு வழியில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் எனலாம்.   

ஆயுதப் போராட்டத்தின் காந்தப்புலனை நோக்கி முஸ்லிம் இளைஞர்கள் செல்வதைக் கட்டுப்படுத்தி, அவர்களை ஏதோ ஓர் அடிப்படையில், கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைத்தே அஷ்ரப் தனது தோழர்களுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். இது பின்னர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு, வடக்கு கிழக்கிற்கு வெளியே இடம்பெற்ற மாகாண சபை தேர்தலிலும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் அதிக உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டு, பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழைந்தது முஸ்லிம் காங்கிரஸ்!   

அஷ்ரப்பிடம் சில விசேட குணாதிசயங்கள் இருந்ததை அவருடன் நெருக்கமாக இருந்த பலரும் கண்டிருக்கின்றார்கள். பெரும் ஞாபகசக்தி உடையவராக அவர் இருந்திருக்கின்றார். 10 நிமிடங்களுக்குள் குறட்டை விட்டு உறங்கி சரியாக 11 ஆவது நிமிடத்தில் அலாரம் வைத்து எழுப்பியது போல் எழும்பி விடுவாராம். பெரிய மக்கள் கூட்டத்தின் கடைசியில் நிற்பவனைக் கூட அடையாளம் காணும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவன் கட்சிக்காரனா அல்லது எதிர்க்கட்சி ஆதரவாளனா என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்வாராம். ஒரு கடைநிலை தொண்டனையும் கட்சி கவனிக்க வேண்டும் என்று நினைத்தவர் அவர். தேர்தல்கால கூட்டங்களில் கடலை விற்கும் ஒருவரது கடலைப் பக்கற்றுகளை மேடைக்கு கொண்டுவந்து தலைவரே விற்பனை செய்தமை உள்ளடங்கலாக, மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட எத்தனையோ சம்பவங்கள் உள்ளன.   

அஷ்ரப்பிற்கு முன்னர், கிழக்கில் அரசியல்வாதிகள் இருந்தனரே தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி தேசிய அரசியலில் ஜொலித்த 'முஸ்லிம் தலைமைகள்' உருவாகவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நிலைமையைத் தலைகீழாக புரட்டிப் போட்டார் அஷ்ரப். கொழும்பில் மையங்கொண்டிருந்த முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை தென்கிழக்கு கரையோரத்திற்கு கொண்டு வந்தார். அப்போதிருந்த சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியும் இதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. அஷ்ரப்பை விடுத்து முஸ்லிம்கள் தொடர்பான எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கத்தால் எடுக்க இயலாது போனது. காலகாலமாக பெருந்தேசிய கட்சிகளில் மேட்டுக்குடி அரசியல் நடத்திக் கொண்டு, நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லோருக்கும் பொதுவான அரசியல்வாதிகள் தாமே என்று நினைத்துக் கொண்டிருந்த சிலருக்கு இது வயிற்றில் புளியை கரைத்தது. சமயம் பார்த்து சிண்டுமுடிவதிலும் அஷ்ரப்பை போட்டுக் கொடுப்பதிலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளே ஈடுபட்டதாக பின்வந்த நாட்களில் தகவல்கள் கசிந்தன. அந்தளவுக்கு பொறாமைப்படத்தக்க ஓர் இடத்தில் அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இருந்தார்.   

அஷ்ரப், சுமார் ஆறு வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்த வேளையில்தான் விகிதாசார தேர்தல் முறைமையின் வெட்டுப்புள்ளியை ஐந்து வீதமாக குறைத்தார். பின்னர் அமைச்சுப் பதவியில் இருந்தது வெறும் ஆறு வருடங்கள் மட்டுமே. இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள் அவர் செய்த சேவைகளை இன்று பார்த்தால் திகைப்பாக இருக்கின்றது. அவருக்குப் பின்வந்த தலைவரினாலோ அல்லது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 20 இற்கு மேற்பட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்தோ இதுபோன்ற பாரிய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனும் போது, அவரின் கனதியும் இன்றிருப்பவர்களின் இயலாமையும் தௌ்ளத்தெளிவாகின்றது.   

'கனவு காணுங்கள்' என்று சொன்னவரே அஷ்ரப்தான். இன்றிருக்கும் அரசியல்வாதிகளைப் போல் பிற்போக்குத்தனமாக செயற்பட்டுவிட்டு அதனை சாணக்கியம் என்று சொல்கின்ற பத்தோடு பதினோராவது ஆளுமையல்ல அவர். சோரம் போகும் அரசியலை அவர் ஒருபோதும் பேரம்பேசும் அரசியல் என்று சொன்னதில்லை. அபிவிருத்தி அரசியலையும் உரிமை அரசியலையும் சமகாலத்தில் முன்னெடுத்துச் சென்றவர் என்ற பெருமை வேறு எந்த முஸ்லிம் தலைமைக்கும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.   

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மக்களின் விருப்பத்தைப் பெறாமல் இணைக்கப்பட்டதை பகிரங்கமாக எதிர்த்தார். புலிகளின் படுகொலைப் பட்டியில் பெயர் இருக்கின்றது என்று சொல்லப்பட்ட காலத்திலும், இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகை கோரினார். ஆயுதக் கலாசாரத்திற்கு எதிராக ஜனநாயக போராட்டங்களை மேற்கொண்டார்.

இவற்றையெல்லாம் செய்து கொண்டே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தையும் ஒலுவில் வெளிச்சவீட்டையும் நிறுவினார். துறைமுகத்திற்கு அடித்தளமிட்டார். ஏகப்பட்ட தொழில்களை வழங்கியதுடன் மேலும் பல திட்டங்களை வகுத்தார். உண்மையில் அஷ்ரப் கூட ஓர் அரசியல்வாதியே என்றாலும் அவர் அரசியலை  அரசியலாக செய்தார்.   

2000.09.16 ஆம் திகதி காலை வேளையில் அவர் பயணித்த எம்ஐ.17 ரக ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி அதில் பயணித்த எல்லோரும் உயிரிழந்த செய்தியை விட, இலங்கை முஸ்லிம்களைக் கவலை கொள்ளச் செய்த செய்தி வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அப்போது உடனடியாக செய்ய வேண்டிய இரண்டு முக்கிய பணிகள் முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இருந்தது. முதலாவது, தலைவரின் மரணத்தில் இருந்த மர்மத்தை துலக்குவது. இரண்டாவது, தலைவர் விட்ட இடத்தில் இருந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வது. இவ்விரண்டு விடயங்களையும் இரண்டாம்நிலை தலைவர்கள் சரியாக மேற்கொள்ளவில்லை என்பதை சொல்லாமல் விட முடியாது.   

அஷ்ரபின் மரணத்தை, இயற்கையாக காலன் நிகழ்த்தியிருக்கலாம். அல்லது செயற்கையாக சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இயற்கையான விபத்து மரணம் என்று இது சொல்லப்பட்ட போதும் அது பற்றிய சந்தேகம் இன்னும் கட்சிப் போராளிகள் மத்தியில் இருக்கவே செய்கின்றது. எனவே, இதில் இருக்கின்ற மர்மத்தை ஆதாரபூர்வமாக துலக்காதிருக்கின்றமை தமது அரசியல் குருவுக்கு அவருடைய சிஷ்யர்கள் செய்த பெரும் துரோகம் எனலாம். அப்போது, அந்த ஹெலியில் அஷ்ரபுடன் பயணித்து உயிரிழந்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகப்பார்வை ஏற்பட்டது. புலிகள் அவரைத் தற்கொலைக் குண்டுதாரியாக அனுப்பினார்களா என்ற சந்தேகம் நிலவியது.   

 இதேவேளை, வடக்கு கிழக்கில் இருந்து ஒரு முஸ்லிம் தலைமை உருவாகி அவர் தேசிய அரங்கில் முக்கியம் பெறுவதை பொறுக்கமாட்டாத சிங்கள பெருந்தேசியவாதிகள் சதித்திட்டம் ஒன்றை தீட்டினார்களா என்ற கோணத்திலும் இவ்விபத்து பார்க்கப்பட்டது. சந்திரிகாவுடன் மிக நெருக்கமாக இருந்தாலும், மரணிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அஷ்ரப் காட்டமான அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதற்கும் இவ் விபத்திற்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்றும் பலர் கதைத்துக் கொண்டனர். இதனைவிட முக்கியமாக, அப்போது அஷ்ரப்புடன் விவாதம் நடாத்தி பின்வாங்கியிருந்த இனவாதிகள் ஏதாவது சதி வேலையை செய்திருக்கலாமோ என்ற ஐயப்பாடும் இருந்தது.   

இவற்றையெல்லாம் விசாரித்து, உண்மை என்ன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடுமையாக முயற்சிக்கும் என்று மக்கள் திடமாக நம்பினர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக எரிகின்ற வீட்டில் எதையாவது பிடுங்கிக் கொள்வோம் என்ற தோரணையில் பதவிக்காக ஆளுக்காள் அடித்துக் கொண்டனர். அஷ்ரப்பின் மரணத்தை பற்றிய விசாரணை அறிக்கை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடம் கையளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது இன்று வரைக்கும் அஷ்ரப்பை நேசித்த இலட்சக்கணக்கான முஸ்லிம், தமிழ் மக்களுக்குத் தெரியாது. அந்த மர்மம் என்னவென்று கண்டறிந்து கூறுவதற்கு, அவருக்குப் பின் தலைவரான ரவூப் ஹக்கீமோ, அவரது சிஷ்யர்களென மார்தட்டிக் கொள்ளும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஸாட் பதியுதீனோ, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவோ, ஏனையவர்களோ அல்லது அவரது மனைவியோ கூட முன்னிற்கவில்லை என்பதை விட மிகப் பெரிய கைசேதம் வேறெதுவும் இருக்க முடியுமா?   

சரி, அஷ்ரப்பின் மரணம் இயற்கையானதாகவோ செயற்கையானதாகவோ நிகழ்ந்து விட்டது. விசாரணை அறிக்கையும் எப்படியோ அமைந்துவிட்டது என வைத்துக் கொள்வோம். அவரது பாசறையில் வளர்ந்தவர்கள் அவரது கொள்கையை, வழிகாட்டலை, அறிவுரைகளை எல்லாவற்றையும் அல்லவா குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்! 'கருத்து வேறுபாடு என்னும் காளான்கள் வந்து உங்கள் ஒற்றுமையைக் குலைத்துவிடும். கவனமாக இருங்கள்' என்று தலைவர் கூறியிருந்த போதிலும், பல கட்சிகளாக பிரிந்து செயற்பட ஆரம்பித்தமை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது கவனத்தை வேறு விடயங்களில் குவிவடையச் செய்தமை, அஷ்ரப்பின் பாதையில் இருந்து விலகி முதலாளித்துவ இயல்போடு செயற்பட ஆரம்பித்தமை, மக்களை மறந்த அரசியல் என எத்தனையோ விடயங்களில் அஷ்ரப்பின் கொள்கைகள் அன்றாடம் குழிதோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.   

எந்தெந்த விடயங்களில் அஷ்ரப்பின் கனவு உயிர்ப்பிக்கப்பட வேண்டுமோ அந்தந்த விடயங்களில் அஷ்ரப்பின் வழிகாட்டுதலை புறமொதுக்கிவிட்டு, எவ்வாறான நேரங்களில் அவர் நினைவுக்கு வரவேண்டுமோ அப்போதெல்லாம் மறந்து விட்டு, தேர்தல் காலங்களில் பிரசாரத்திற்காக அவர் நினைவு கூரப்படுகின்றார். செப்டெம்பர் 16ஆம் திகதி அவருக்காக கத்தமுல் குர்ஆனும் விசேட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. 16 வருடத்திற்கு பிறகாவது இந்த நிலைமை மாறி, அஷ்ரப்பின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.   

மேற்சொன்ன காரியங்கள் எதையுமே செய்யாது, வருடத்திற்கு ஒரு தடவை அவரை நினைவு கூருவதும், அமெரிக்கர்கள் செப்டெம்பர் 11ஆம் திகதி இரட்டைக் கோபுர வளாகத்தில் மொழுகுவர்த்தி ஏற்றுவதற்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று விளங்கவில்லை.  

- See more at: http://www.tamilmirror.lk/182023/ச-ப-ட-ம-பர-#sthash.xW836siy.dpuf
Link to comment
Share on other sites

அஷ்ரப் எனும் ஆளுமை
எம்.எம்.ஏ.ஸமட்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்­ரப்பின் 16ஆவது வருட நினைவு தினம் இன்று
showImageInStory?imageid=297304:tn
 

ஒரு சமூ­கத்தின் எழுச்சி நோக்­கிய பய­ணத்­திற்கும், வீழ்ச்சி நோக்­கிய நகர்­வுக்கும் கார­ண­மாக அமை­வது ஆன்­மீக, அர­சியல் ரீதியில் அச்­ச­மூ­கத்­திற்கு தலைமை வகிக்கும் தலை­வர்­களின் வழி­காட்­டல்­கள்தான்.

தலை­வர்­களின் முறை­யான, செயல் திறன் மிக்க வழி­காட்­டல்­களே சமூ­கத்தின் வளர்ச்­சியில் செல்­வாக்குச் செலுத்தும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறு­களின் விருத்­திக்கு கார­ண­மாக அமை­கி­றது. சமூக மட்­டத்தில் உள்ள துறை­க­ளுக்கு துறை­சார்ந்த தலை­வர்கள் தலை­மைத்­துவம் வழங்­கி­னாலும், அச்­ச­மூ­கத்தின் சார்பில் அர­சியல் துறையில் தலை­மைத்­துவம் வழங்கும் தலை­வர்­களின் செயற்­பா­டு­களும், தீர்­மா­னங்­களும் அச்­ச­மூ­கத்­திற்கு நன்­மை­ய­ளிக்கக் கூடி­ய­தாக அமை­வது அவ­சியம்.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் முஸ்லிம் அர­சி­யலை நோக்­கு­கின்­ற­போது, 1948 முதல் 1980 வரை­யான காலப்­ப­கு­தியில் காணப்­பட்ட அர­சி­யலும் 1980களின் பிற்­ப­குதி முதல் தற்­போது வரை காணப்­படும் அர­சி­யலும் வெவ்­வே­றான படி­மங்­களைத் தாங்கி நிற்­கி­றது.

இருப்­பினும், 1980களின் பின்னர் முஸ்லிம் அர­சி­யலில் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஏற்­பட்ட அர­சியல் புரட்­சிக்கு வித்­திட்­டவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்­பதை மறு­த­லிக்க முடி­யாது.

1948ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 23ஆம் திகதி சம்­மாந்­துறை மண்ணில் பிறந்த அஷ்ரப் 2000ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 16ஆம் திகதி சமூ­கத்தின் பல கன­வு­க­ளோடு விண்ணில் பறக்­கையில் மாவ­னல்லை அர­நா­யக்க வான்­ப­ரப்பில் அகால மர­ணத்தைத் தழு­வினார்.

தான் அங்கம் வகிக்கும் சமூ­கத்­திற்­காக மாத்­தி­ர­மின்றி முழு சிறு­பான்மை சமூ­கத்­திற்­கா­கவும் குரல் கொடுக்கும் தலை­மை­யாக விளங்­கிய அஷ்ரப் மர­ணத்தை எதிர்­பார்த்­த­வ­ரா­கவே அர­சியல் பய­ணத்தை நகர்த்திச் சென்றார். அதைத் தனது போரா­ளி­களே புறப்­ப­டுங்கள் என்ற கவிதை வரி­களால் தனது மரணம் இவ்­வா­றுதான் அமையும் என்று மர­ணிக்கும் முன்­னமே உறு­திப்­ப­டுத்­தினார். தான் இவ்­வா­றுதான் மர­ணிப்பேன் என்­பதை மர­ணிக்கும் முன்பே வெளிப்­படுத்­திய ஒரு தலை­வரும் அஷ்­ரப்தான்.

மர­ணத்துக்கு அஞ்­சாது, பத­வி­க­ளுக்கும் பச்­சோந்­தி­க­ளுக்கும் சோரம் போகாது சமூ­கத்தின் எதிர்­கால கன­வு­களை வெற்றி கொள்ளும் பய­ணத்தை பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் முன்­னெ­டுத்தார். அர­சியல் அடை­யாளம் இன்றி அநா­தை­க­ளாக்­கப்­பட்­டி­ருந்த முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் பலம் எத்­த­கை­யது என்­பதை பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கு புடம்­போட்டும் காட்­டினார். வெற்­றிகள் பல­வற்­றையும் அந்த ஆளுமை கண்­டது.

அஷ்­ரபின் பன்­முக ஆளுமை கொண்ட தலை­மைத்­துவ அர­சியல் வழி­காட்­டல்­களும், செயற்­பா­டு­களும், தீர்­மா­னங்­களும் முஸ்லிம் சமூ­கத்தில் அர­சியல் எழுச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. அது­மாத்­தி­ர­மின்றி, முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் வாக்­கு­க­ளுக்­கான உரிய அந்­தஸ்தை தோ்தல் காலங்­களில் பெற்­றுக்­கொ­டுத்­தது. ஆட்சி மாற்­றங்­க­ளுக்­கான சக்­தி­யா­கவும் அந்த வாக்­குகள் மாற்­றப்­பட்­டன. இத்­த­னைக்கும் ஆளு­மை­மிக்க அஷ்­ரபின் அர­சியல் தலை­மைத்­துவம் வழி­வ­குத்­தது.

அவ்­வாறு அஷ்ரப் எனும் ஆளு­மையின் பல்­வேறு தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் விருட்­ச­மாக வளர்க்­கப்­பட்ட கட்சி இன்று அதன் முக­வரி தெரி­யா­த­வர்­களின் கூடா­ரா­மாகக் காட்­சி­ய­ளிப்­பது அவ­ருக்­கா­கவும் கட்­சிக்­கா­கவும் பல்­வேறு தியா­கங்கள் புரிந்த அவ­ரது அபி­மா­னி­களின் இதயப் பரப்­புக்­களை வேத­னையால் நனைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

ஆளு­மை­மிக்க தலை­மைத்­துவம்

தூர­நோக்­கோடு ஒன்றை உரு­வாக்கி அதை அடை­வ­தற்­கான செயல் நுணுக்­கத்தை விருத்தி செய்து, ஏனை­ய­வர்­களின் ஆத­ரவைத் திரட்டி, தூர­நோக்கை அடைந்து கொள்­வ­தற்­கான செயற்­பாட்டை ஊக்­கப்­ப­டுத்தி. அதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற இயக்­கத்தை 1982ஆம் ஆண்டு உரு­வாக்கி அதனை 1986ஆம் ஆண்டு அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்தார் அஷ்ரப்.

இக்­கட்­சியை 14 வரு­டங்கள் வழி­ந­டத்­தி­யதன் மூலம் அவ­ரது 14 வருட அர­சியல் பய­ணத்தில் அவரின் செயல் திறன் மிக்க தலை­மைத்­துவ ஆளு­மை­யினால் சாதித்­தவை ஏராளம். அவர் முன்­னெ­டுத்த செயற்­பா­டு­களை வெற்­றி­பெறச் செய்­தது, அவ­ரிடம் காணப்­பட்ட செயல் திறன் மிக்க பன்­முக ஆளுமை கொண்ட தலை­மைத்­துவ பண்­பு­க­ளாகும்.

ஒரு செயல் திறன் மிக்க தலைவர் எதிர்­காலம் பற்­றிய தூர இலக்கை உரு­வாக்­குவார். அத்­தூர இலக்கை நோக்கி இயங்­கு­வ­தற்­கான அறி­வு­பூர்­வ­மான செயல் உபா­யங்­களை விருத்தி செய்வார். அவ்­வாறு இயங்­கு­வ­தற்கு அவ­சி­ய­மா­கின்ற ஆத­ர­வையும் இணக்­கத்­தையும் குழு முயற்­சியை வழங்கக் கூடிய மிக முக்­கி­ய­மான அங்­கத்­தி­னர்­களின் ஒத்­து­ழைப்­பையும் திரட்­டுவார். அவற்­றுடன் செயல் உபா­யங்­களை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் பங்­கு­கொண்டு தொழிற்­படக் கூடிய நபர்­களை நல்ல முறையில் ஊக்­கப்­ப­டுத்­துவார்.

இவ்­வா­றான பண்­புகள் பல­வற்றை மறைந்த அஷ்ரப் கொண்­டி­ருந்­ததனால் அவ­ரையும் கட்­சி­யையும் ஏற்று நாளுக்கு நாள் அபி­மா­னி­கள், ஆதர­வா­ளர்கள் அவர் பக்கம் திரண்­டனர். அதற்­கான வர­லாற்றுச் சான்­று­க­ளாக நிழற்­ப­டங்­களும் காணொ­ளி­களும் இப்­போதும் காட்­சி­க­ளாக உள்­ளன. அக்­காட்­சிகள் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளினால் காலத்­திற்குக் காலம் நடை­பெறும் தேர்தல் காலங்­களில் காண்­பிக்­கப்­ப­டு­வ­தையும் அதைக் கண்டு அவ­ரது அபி­மா­னிகள் கண் ­க­லங்­கு­வ­தையும் வாக்­கு­களை அள்ளி வழங்­கு­வ­தையும் காண­மு­டி­கி­றது.

ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மேற்­கொள்ள வேண்­டிய விட­யங்­களை நிர்ணயித்து, ஒழுங்­கு­ப­டுத்தி, அவற்றை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்றத் தேவை­யான திட்­டங்­களை வகுத்து, அத்­திட்­டங்­களைச் செய­லு­ருப்­ப­டுத்த தம்­மோடு இணைந்­தி­ருக்கும் பல­ரையும் ஆர்­வத்­தோடு பங்­கு­கொள்ளச் செய்­வ­தற்கும், குறித்த திட்­டங்­களைச் செயற்­ப­டுத்­தும்­போது அல்­லது மேற்­கொள்­ளும்­போது ஏற்­படக் கூடிய முரண்­பாடுகள், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெறக் கூடி­ய­வ­ரா­கவும் தலைவர் அல்­லது தலை­மைத்­துவம் இருக்க வேண்டும். இத்­த­கைய தலை­மைத்­து­வத்­துக்­கான அடிப்­படைத் தகை­மையை மறைந்த தலைவர் அஷ்ரப் கொண்­டி­ருந்தார். அத­னால்தான், இன்­று­வரை அவரின் தலை­மைத்­துவ வழி­காட்­டல்­க­ளையும் அவரால் சமூகம் அடைந்த நன்­மை­க­ளையும் அபி­மா­னி­களால் மறக்க முடி­யாமல் ஞாப­கப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

வற்­பு­றுத்தல், வலுக்­கட்­டா­ய­மில்­லாத வழி­க­ளி­னூ­டக மக்­களைச் செயற்­பட ஊக்­கு­விப்­பதன் மூலம் ஒரு திட்­ட­மிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயல்­முறை கொண்ட தலை­மைத்­து­வத்­தினால் நீண்­ட­கால, குறு­கிய கால நோக்­கங்­களை அடைய முடியும். அதன் அடிப்­ப­டையில் பல குறு­கிய கால செயற்­றிட்­டங்­களில் வெற்றி கண்ட அஷ்ரப் நீண்ட கால செயற்­றிட்­டங்கள் பல­வற்­றையும் வகுத்துச் செயற்­பட்டார். அதில் ஒன்­றுதான் 2012ஆம் ஆண்டை நோக்கி என்ற அடிப்­ப­டையில் தேசிய ஐக்­கிய முன்­னணி என்ற அர­சியல் கட்­சியை புறாச் சின்­னத்தில் ஸ்தாபித்து அதில் அனைத்து இனங்­க­ளையும் இணையச் செய்­த­தாகும்.

1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட தேசிய ஐக்­கிய முன்­னணி குறித்து 1999ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்ட விவா­தத்தின் போது மறைந்த தலைவர் அஷ்ரப் பார­ாளு­மன்­றத்தில் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார். அத­வாது, முஸ்லிம் காங்­கிரஸ் பார்­வையில் மனித இனமும் அனைத்து ஸ்ரீலங்கா மக்­களும் ஒரு குடும்­பமே. எல்லாம் வல்ல இறை­வனின் படைப்­புக்­களே நாம் அனை­வரும். நாட்டைக் கட்டி எழுப்­பு­வ­தற்கு குறு­கிய பாதைகள் இல்லை என்­பதை நாங்கள் திட­மாக நம்­பு­கிறோம். அது மலர்கள் இல்­லாத முட்கள் நிறைந்த நீண்ட கஷ்­ட­மான பாதை­யாகும். நாட்டில் புரை­யோடிப் போயி­ருக்கும் சில பிரச்­சி­னை­க­ளுக்கு விடை­காண்­பதில் காங்­கிரஸ் வெற்றி கண்­டுள்­ளது.

ஐக்­கி­யத்­தையும் ஒருங்­கி­ணைப்­பையும் பிர­தி­ப­லிக்கும் பொருட்டு மூன்று நிறங்­க­ளையும் தேசியக் கொடியில் சந்­திக்கச் செய்­துள்ளோம். மூன்று சமூ­கங்­க­ளையும் கொண்­ட­தாக ஒற்­று­மைப்­பட்ட மக்­களின் நிறம் ஒன்­றையும் கண்­டெ­டுப்­பதில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதுதான் சிவப்பும், கரு­மஞ்­சலும் பச்­சையும் கூட்டுச் சேர்ந்த நிற­மாகும். நிறம் சம்­பந்­த­மாக அர­சியல் கட்­சி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுக்­க­தை­களை அறிந்து வான­வில்லின் ஏழு அழ­கிய நிறங்­க­ளையும் கொண்ட தேசிய ஐக்­கிய முன்­னணி கொடியை ஏற்­றி­யுள்ளோம். இறைவன் நாடினால் 2012ஆம் வரு­ட­மளவில் நமது மக்கள் அனை­வ­ருக்கும் சமா­தானம் கிடைக்கும் வகையில் தொழில்­ப­டு­கின்றோம். இவ்­வாறு அவர் அன்று ஆற்­றிய உரை­யா­னது எதிர்­கால இலங்­கையின் சமா­தா­னத்தை அடை­வது குறித்த தூர நோக்கை வெளிப்­ப­டுத்­தி­ய­தாக அமைந்­தி­ருந்­ததை சம­கா­லத்தில் சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும்.

தலை­வர்கள், உண்­மைத்­தன்மை, நம்­ப­கத்­தன்மை, தூர­நோக்குச் சிந்­தனை, தொடர்­பாடல் திறன், ஏனை­ய­வர்­க­ளுடன் சுமு­க­மான உறவு, செல்­வாக்குச் செலுத்தும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, தீர்­மா­னிக்கும் ஆற்றல், திட்­ட­மிடல். கலந்­து­ரை­யாடல் போன்ற பண்­பு­டை­யர்­வ­ளாக இருத்தல் அவ­சி­யம். அவ்­வா­றன தலை­மைத்­துவ குணா­தி­ச­யங்கள் பல அஷ்­ர­பிடம் காணப்­பட்­ட­த­னாலும் அவற்­றினால் அவர் மக்கள் மத்­தியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அர­சியல் தலை­வ­ராகத் திகழ்ந்­த­த­னாலும் அவர் மறைந்து இன்­றுடன் 16 வரு­டங்கள் கடந்தும் கூட அவரை அபி­மா­னி­களால் மறக்க முடி­யா­துள்­ளது.

ஆனால், அவர் கண்ட தேசிய ரீதி­யி­லான தூர நோக்­கு­களும் சமூக ரீதி­யி­லான எதிர்­கால எதிர்­பார்ப்­புக்­களும் அவ­ரது பாச­றையில் வளர்ந்­த­வர்­க­ளாலும் பயிற்­றப்­பட்­ட­வர்­க­ளாலும் அனு­ப­வப்­பட்­ட­­வர்­க­ளாலும் அவ­ரது மர­ணத்­தோடு மறக்­கப்­பட்­டு­விட்­ட­னவா என்ற கேள்வி கடந்த 16 வரு­டங்­க­ளாக அவ­ரது அபி­மா­னி­களால் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன.

தேசிய நீரோட்­டத்தில் மக்­களை இணைத்து அதன் மூலம் நிரந்­தர சமா­தா­னத்தை இந்­நாட்டில் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட தேசிய ஐக்­கிய முன்­னணி கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக கலைக்­கப்­பட்­டதன் மூலம் அஷ்­ரபின் தேசிய ரீதி­யி­லான தூர­நோக்கு சிந்­தனை சிதைக்­கப்­பட்­டது. ஒன்­று­தி­ரட்­டப்­பட்ட சக்­தியின் மூலம் இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் உரி­மைகள் அடங்­க­லாக அத்­தனை தேவை­க­ளையும் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும் என்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி அவ­ரது பாச­றையில் வளர்ந்­த­வர்­க­ளினால் உடைக்­கப்­பட்­டதன் மூலமும் இலக்­குகள் இல்­லா­த­வர்கள் அல்­லது சமூக இலக்­கு­களை வகுத்து செயற்­படத் தெரி­ய­ாத­வர்கள் அவர் வளர்த்து விருட்ச­மாக்­கிய கட்­சிக்குள் இணைக்­கப்­பட்­டதன் ஊடாக அவ­ரது சமூகம் தொடர்­பான எதிர்­கால சிந்­த­னையும் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­னை­யையும் செய்­த­வர்கள் அவ­ரது செயல் திறன்­மிக்க தலை­மைத்­துவ வழி­காட்­ட­லினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூலமும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் மூலமும் நன்­மை­ய­டைந்­த­வர்கள் என்­பதை அஷ்­ர­பினால் எவ்­வித நலன்­க­ளையும் அடை­யாது அவரை சமூ­கத்தின் அர­சியல் தலைமை என விசு­வா­சித்து இன்­று­வரை நினை­வு­ப­டுத்தும் அபி­மா­னிகள் கூறு­வதை மறுக்­க­மு­டி­யாது.

தலை­மை­களும் அபி­மா­னி­களும்

தலை­வர்கள் உரு­வா­கு­வ­தில்லை உரு­வாக்­கப்­ப­டு­கி­றார்கள் என்று ஒரு சாராரும் தலை­வர்கள் காலத்­திற்குக் காலம் பிறக்­கி­றார்கள் என்று மற்­று­மொரு சாராரும் கருத்­தியல் முரண்­பாட்டில் அன்று முதல் இன்று வரை உள்ள நிலையில், தலை­வர்கள் உரு­வா­னாலோ அல்­லது உரு­வாக்­கப்­பட்­டாலோ அவர்கள் மக்கள் விரும்­பும், மக்­க­ளுக்­காகச் செயற்­படும் தலை­வர்­க­ளாக மிளிர்­வது காலத்தின் தேவை­யாகும். அத்­த­லை­வர்­க­ளின் உண்­மை­யான அபி­மா­னி­களின் விருப்­பமும் அது­வா­கத்தான் இருக்கும்.

ஒரு கட்­சியின் உரு­வாக்கம் ஒரு தனி மனி­த­னா­லேயே முதன் முதலில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது உண்­மைதான் ஆனால் அவ்­வா­றான ஒரு கட்சி ஒரு தனி மனிதன் அல்ல.

“ஒரே நோக்­குள்ள பல மனி­தர்கள் ஒரே சிந்­த­னை­யு­டை­யவர்­க­ளாக ஒரு மித்து ஊக்­கத்­தோடும் விடா­மு­யற்­சி­யோடும் தியா­கத்­தோடும் உழைக்­கும்­போ­துதான் அந்தக் கட்சி பல கிளை­விட்டு படர்ந்து செல்­கி­றது. நல்­லெண்­ணமும் தீர்க்­க­த­ரி­ச­னமும் சரி­யான செயல்­பாடும் இடை­ய­றாத இயக்­கமும், கால­தேச வர்த்­த­மா­னங்­களை அனு­ச­ரித்த போக்கும், இலட்­சி­யங்­களை அடை­வ­தற்­கான உறு­தியும் இன்­னல்­க­ளையும் இடை­யூறு­க­ளையும் தோல்­வி­க­ளையும் கண்டு சலிப்­பு­றாத மனமும் அங்­கத்­த­வர்­க­ளி­டையே பொது நோக்­கங்­களின் பேரில் ஒற்­று­மையும். கூட்டு முயற்­சியும், எதி­ரி­க­ளி­னதும் சதி­கா­ரர்­க­ளி­னதும் தந்­தி­ரோ­பா­யங்­களை, அடை­யாளம் காணும் சாமர்த்­தி­யமும், சூழ்ச்­சி­களை சுமு­க­மாக முறி­ய­டித்தும் முன்­னேறும் சாணக்­கி­யமும். எடுத்த கருமத்தை முடித்து வைக்கும் ஆத்ம பலமும், இறை நம்­பிக்­கையும், முன்­னோ­டி­க­ளான நல்­ல­டி­யார்­களின் மீது நேசமும் பற்றும் இருக்­கு­மானால் நமது கட்சி (முஸ்லிம் காங்­கிரஸ்) நிச்­ச­யமாக தனது பாதை­யிலும் பய­ணத்­திலும் பரி­பூ­ரண வெற்­றியை அடையும் என்­பதை நான் உங்­க­ளுக்கு வலி­யு­றுத்த விரும்­பு­கிறேன்” என இற்­றைக்கு 27 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற முஸ்லிம் காங்­கி­ரஸின் 6ஆவது மகா­நாட்டில் உரை­யாற்­றும்­போது மறைந்த தலைவர் அஷ்ரப் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஒரு கட்­சியின் வெற்­றிக்கு எத்­த­கைய செயற்­பா­டுகள், பண்­புகள் அவ­சியம் என்­பதை மறைந்த தலைவர் 27 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே கூறிச் சென்­றுள்ளார். ஆனால், அவர் கூறிய விட­யங்­களில் எவை முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னாலும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்ற கட்சிகளினாலும் கடைப்பிடிக்கப்படுகிறது என்ற கேள்வியும் அஷ்ரபின் அபிமானிகள் மத்தியில் 27 வருடங்களின் பின்னர் எழுந்துள்ளது.

ஒருதூர நோக்கை இலக்காகக் கொண்டு தான் மறைந்த அஷ்ரபினால் முஸ்லிம்களுக்கான கட்சி உருவாக்கப் பட்டது. ஆனால், இந்த இலக்கு நோக்கிய பயணம் அவரது மரணத்துடன் திசைமாற்றப்பட்டுள்ளது. மறைந்த தலைவர் அஷ்ரபிற்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக வேண்டியாவது அவர் கொண்டிருந்த தேசிய மற்றும் சமூக ரீதியிலான இலக்குகளை அடைவதற்கு இன்றைய முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் முயற்சி செய்கின்றனவா? அல்லது இலக்குகளின்றி பயணிக்கின்றனவா என்ற கேள்விகளும் அஷ்ரபின் அபிமானிகளால் கேட்கப்படுகிறது.

அஷ்ரபின் தேசிய மற்றும் சமூக ரீதியிலான இலக்கை அடையாது அல்லது அடைய மறந்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் அந்த பெரும் தலைவர் மரணித்த இந்த செப்டெம்பர் 16இல் இருந்தாவது அவர் சிந்தனையில் மலர்ந்திருந்த தேசிய சமாதானத்தை அடைவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பிரச்சினை­களுக்கான தீர்வை உரிய தரப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.

இந்த ஒருமைப்பாடு அப்பெரும் தலைவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாக அமையுமென்பதே அஷ்ரப் அபிமானிகளின் அபிலாஷையாகவும் எதிர்பார்ப்பாக வுமுள்ளது. இந்த எதிர்பார்ப்பை முஸ்லிம் தலைமைகள் நிறைவேற்றுமா? அல்லது முஸ்லிம்கள் ஆளுமையுள்ள அரசியல் தலைமையொன்றை உருவாக்கும் பயணத்தை இன்றிலிருந்து தொடங்கு வார்களா என்ற கேள்விகளுக்கு எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=16/09/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.