Jump to content

#AppleIOS10: நீங்கள் அறிய வேண்டிய 10 அப்டேட்ஸ்!


Recommended Posts

#AppleIOS10: நீங்கள் அறிய வேண்டிய 10 அப்டேட்ஸ்!

                                        1.png

வ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை அறிவித்துவிட்டு அவை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான  ஐ.ஓ.எஸ்-ஐ வெளியிடுவது ஆப்பிளின் ஸ்டைல். அதே போன்று இந்தாண்டுக்கான ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் சென்ற செப்டம்பர் 7-ம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டத்தோடு ஐ.ஓ.எஸ்10 செப்டம்பர் 13-ம் தேதி முதல் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்பிளின் பளிச்சிடும் மாற்றங்கள் ஐ.ஓ.எஸ்10-ல் இருக்கிறதா?

1. இனி ஸ்டாக் ஆப்ஸ்-ஐ நீக்கலாம்:

       பல ஐ-போன் பிரியர்களுக்கு பிடிக்காத ஒன்று இந்த ஸ்டாக் ஆப்ஸ். இதற்கு முந்தைய ஐ.ஓ.எஸ்-களில் நமக்குத் தேவையில்லை என்றால் நீக்க முடியாமல் இருந்த ஸ்டாக் ஆப்ஸை இந்த முறை நீக்க முடியும். ஐ.ஓ.எஸ்10-ல் மற்ற ஆப்ஸ்களை நீக்குவது போன்றே மேப்ஸ், போட்காஸ்ட் மற்றும் கான்டக்ட்ஸ் போன்ற சில ஸ்டாக் ஆப்ஸ்களை நீக்கலாம். மீண்டும் தேவைப்பட்டால், ஐ-டியூன்ஸ் சென்று டவுன்லோட் செய்து இன்ஸ்டாலும் செய்துகொள்ளலாம். இதில் முக்கியமானது, ஆப்ஸ்களோடு அதன் டேட்டாவையும் நீக்க வேண்டுமென்றால் ஐ-கிளவுட் சென்று குறிப்பிட்ட ஆப்பினுடைய பேக்கப்பை டெலீட் செய்வது அவசியம்.

ios%2010.jpg

2. விதவிதமான எமோஜிக்கள்:
   இதுவரை ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் மிஸ் செய்த ஒரு சிறப்பம்சம் என்றால் அது எமோஜிக்கள்தான். குறுஞ்செய்தி மேலும் குறைந்துப்போய் எமோஜிக்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் ஆப்பிள் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜிக்களை தனது கீபோர்டில் சேர்த்துள்ளதால் இனி ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுடன் சாட்டிங்கில் கலக்கலாம்.

ios%20101.jpg

3. தானாக திறக்கும் நோட்டிபிகேஷன்:

ஐ.ஓ.எஸ்10-ல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள “ரைஸ் டு வேக்” என்னும் வசதியின் மூலம் ஐபோன் 6, 6S, 5SE மற்றும் புதிய ஐபோன் 7-களில் மொபைலை கையில் எடுத்தாலே பாஸ்வேர்டினை டைப் செய்யாமல் நேரடியாக நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும்.

4. பல ஆப்களுக்கும் இனி சிரியை பயன்படுத்தலாம்:

    இதுவரை ஆப்பிளின் ஆப்களுக்கு மட்டுமே வாய்ஸ் அசிஸ்டன்ட்டான சிரியை பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் ஐ.ஓ.எஸ்10-ல் சிரியை மற்ற நிறுவனங்களின் ஆப்களிலும் பயன்படுத்தும் வசதியை ஆப்பிள் கொடுத்துள்ளது. அதன்படி உங்கள் குரல் மூலமாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் அப்டேட்டும், லிங்கிடு இன்னில் புதிய வேலையையும் நீங்கள் தேடலாம். இன்னும் சில மாதங்களில் மற்ற பல ஆப்களில் சிரியை பயன்படுத்த முடியும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

5. ஆப்களை திறக்காமலே பயன்படுத்தும் வசதி:

   நமக்கு வரும் நோட்டிபிகேஷனுக்கு பதில் சொல்வதற்கு அந்தக் குறிப்பிட்ட ஆப்பைத் திறந்து பதிலளிக்க வேண்டுமென்ற அவசியம் இதில் இல்லை.  ஐ.ஓ.எஸ்10-ல் எந்த ஒரு ஆப்பையும் திறக்காமலேயே நோட்டிபிகேஷன் பகுதியிலிருந்து நேரடியாக பதிலளிக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளதாக நோட்டிபிகேஷன் வந்தால், மின்னஞ்சல் ஆப்பை திறக்காமல் நேரடியாக பதிலளிக்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

6. மேம்படுத்தப்பட்ட புகைப்பட தேடல்கள்:

நாம் ஐ-போனிலோ, ஐ-பாடிலோ எடுக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் குறிப்பிட்ட புகைப்படங்களை தேடி கண்டுபிடிப்பதற்கு சிறிது நேரம் எடுக்கும். ஆனால், இந்த ஐ.ஓ.எஸ்10-ல் நீங்கள் தேடும் புகைப்படம் குறித்த குறிப்பு வார்த்தைகளை (கடற்கரை, கல்லூரி, சூரிய உதயம், மலைகள்) அளித்தால் போதும், அதனோடு தொடர்புடைய புகைப்படங்களை எளிதாக காணலாம்.                

7. புதிய வசதிகளுடன் மெசேஜ் ஆப்:

வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சரின் போட்டியை சமாளிக்கும் விதமாக ஏராளமான சிறப்பம்சங்களுடன் ஐ-மெசேஜ் ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மெசேஜ் செய்ய விரும்பும் வார்த்தைகளை டைப் செய்தவுடன் அதற்கு பொருத்தமான எமோஜிகளை இந்த ஆஃப் காண்பிக்கும். மேலும் கையால் எழுதியும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் மீது நம் கைப்பட எழுதியும் வரைந்தும் அனுப்பும் வசதியும் உள்ளது.

                        ios%2011.jpg

8. அதிசயிக்க வைக்கும் 'ஹோம்கிட்':

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டிலுள்ள லைட்டுகள், கதவுகள், டிவி முதல் மியூசிக் சிஸ்டம் வரை அனைத்தையும் உங்கள் ஐபோன் மற்றும் ஐ-பேடிலிருந்தே இயக்கவும் அல்லது நிறுத்தும் வகையில் வசதி கொண்ட 'ஹோம்கிட் ஆப்' மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

9. பல மொழிகளில் டைப் செய்யலாம்:

   இதற்கு முன் ஆங்கிலத்தில் கீபோர்டு வைத்திருந்தால் அதை செட்டிங்குக்கு சென்று தமிழில் மாற்றிய பின்னர்தான் பயன்படுத்த முடிந்தது. ஆனால் ஐ.ஓ.எஸ்10-ல் ஒரே நேரத்தில் பல மொழிகளில் டைப் செய்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நமது வார்த்தைகளுக்கு அளிக்கும் பரிந்துரைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

10. வேகமாக திறக்கும் கேமரா ஆப்:

பொதுவாக கேமரா ஆப்பை திறக்க வேண்டுமென்றால் அந்த ஐகானை தேடி கண்டுபிடித்து கிளிக் செய்தால் மட்டுமே திறக்க இயலும். ஆனால் ஐ.ஓ.எஸ்10-ல் ஐபோனோ அல்லது ஐபேடோ 'லாக்' செய்யப்பட்டிருக்கும்போதே இடதுப்புறம் நோக்கி தள்ளினாலே கேமரா ஆப் உடனடியாக திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

http://www.vikatan.com/news/information-technology/68409-ten-things-to-know-about-apple-ios-10.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.