Jump to content

பணக்கார உலகுக்கான சூத்திரம் எது?


Recommended Posts

பணக்கார உலகுக்கான சூத்திரம் எது?

 

 
 
panam1_3010683f.jpg
 

உலகம் செல்வம் மிக்கதாக இருக்கிறது, இனி மேலும் செல்வந்த உலகமாகும். கவலையை விடுங்கள். நாம் எல்லோருமே பணக்காரர்கள் இல்லைதான்; 100 கோடிப் பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு 3 டாலர்கள் (80 ரூபாய்) அல்லது அதற்கும் குறைவான ஊதியத்துடன்தான் நாளை ஓட்டுகின்றனர். 1800-வது ஆண்டு வரையில் எல்லோருமே இந்த 3 டாலர்களுக்கும் குறைவான ஊதியத்தைத்தான் பெற்றுவந்தனர்.

செல்வம் சேருவது 17-வது நூற்றாண்டில், ஹாலந்தில்தான் முதலில் தொடங்கியது. 18-வது நூற்றாண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கக் காலனிகளுக்குப் பரவியது. இப்போது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

செல்வம் குவியும் வேகம் திடுக்கிட வைப்பதாக இருக்கிறது என்பதில் பொருளாதார நிபுணர்களும் வரலாற்று அறிஞர்களும் கருத்தொற்றுமையுடன் இருக்கிறார்கள். 2010 வாக்கில் உலகின் பல நாடுகளில் சராசரி தினசரி ஊதியம் - ஜப்பான், அமெரிக்கா, போட்ஸ்வானா, பிரேசில் உள்பட - 1800-ல் இருந்ததுடன் ஒப்பிடுகையில், 1,000% முதல் 3,000% வரை உயர்ந்திருக்கிறது. கூடாரங்களிலும் மண் சுவர் வீடுகளிலும் வசித்த மக்கள் இப்போது நகரங்களில் பல மாடி அடுக்ககங்களில் வசிக்கின்றனர். தண்ணீரால் பரவும் நோய்களால் இள வயதிலேயே மரணத்தைச் சந்தித்த இனம், இப்போது சராசரியாக 80 வயது தாண்டியும் வாழ முடிகிறது. ஏதுமே அறியாமல் அறியாமையில் மூழ்கிக் கிடந்தவர்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக முடிந்திருக்கிறது.

ஏற்றத்தாழ்வு குறைந்திருக்கிறது

பணக்காரர்கள்தான் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகத்தான் வாடுகின்றனர் என்று நீங்கள் கருதலாம். ஓரளவுக்கு வளமான வாழ்க்கைக்கு அவசியப்படும் செளகரியங்களை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால், பரம ஏழைகளாக இருந்தவர்கள்கூட இன்றைக்கு வசதிகளுடன் வாழ்கின்றனர். அயர்லாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் மிகவும் வறியவர்கள் என்று அடையாளம் காணப்படும் மக்கள்கூட போதிய உணவு, அடிப்படைக் கல்வி, தங்குமிடம், மருத்துவக் கவனிப்பு போன்றவற்றைப் பெற்றுள்ளனர். சில தலைமுறைகளுக்கு முன்னால் அவர்களுடைய மூதாதையர்கள் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள்.

செல்வ வளத்தில் ஏற்றத்தாழ்வு என்பது மாறிக் கொண்டேயிருக்கும். நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அது குறைந்திருப்பது தெரியவரும். 1800, 1900 காலங்களில் செல்வ வள ஏற்றத்தாழ்வு மிக மிக அதிகமாக இருந்தது. இதை பிரெஞ்சுப் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டியும் ஒப்புக்கொள்கிறார். உணவு, உடை, இதர நுகர்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும் ஒரே நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையிலும், வெவ்வேறு நாடுகளுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வு வெகுவாகக் குறைந்திருக்கிறது.

பால் காலிரின் வேண்டுகோள்

எந்தக் காலமாக இருந்தாலும் பிரச்சினை என்பது வறுமையைச் சுற்றித்தான் இருக்கிறதே தவிர, ஏற்றத்தாழ்வுகளைப் பற்றியல்ல. கடந்த 40 ஆண்டுகளில் அன்றாட சராசரி ஊதியம் 1 டாலர் அல்லது 2 டாலர் மட்டுமே பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்று உலக வங்கியின் மதிப்பீடு கூறுகிறது. அதாவது, குறைந்தபட்ச ஊதியம் அதிகமாகிவிட்டது என்கிறது.

உலகில் இப்போது வாழும் 700 கோடி மக்களில் கடைசிப் படிநிலையில் வாடும் 100 கோடி மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பொருளாதார அறிஞர் பால் காலிர் நமக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அப்படி உதவ வேண்டியது நம்முடைய கடமைதான். 50 ஆண்டுகளுக்கு முன்னால் 500 கோடி மக்களில் கிட்டத்தட்ட 400 கோடிப் பேர் மிகவும் மோசமான நிலையில் பரம ஏழைகளாகத்தான் வாழ்ந்தார்கள் என்பதை அவர் நினைவுபடுத்துகிறார். 1800-ல் வாழ்ந்த 100 கோடிப் பேரில் 95% வறுமையில்தான் வாடினர்.

உழைக்கும் வர்க்கத்தாரின் வாழ்க்கைத் தரத்தை நம்மால் உயர்த்த முடியும். மிகவும் குறைவாகவுள்ள உற்பத்தித் திறனை, மனித இனத்துக்கே உரித்தான படைப்புத் திறனைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் உயர்த்த முடியும். பணக்காரர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலம் ஓரளவுக்குத்தான் ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியும். அதுவும் எப்போதோ ஒரு முறைதான் அது சாத்தியம். சந்தையில் பலமுறை சோதிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் வருவாயைப் பெருக்கி, அதை எல்லோரும் அடையும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டால் அடுத்த நூறாண்டுகளில் அனைவருமே அதிலும் குறிப்பாக, மத்திய தர வர்க்கம் வசதியாக வாழும் நிலையை ஏற்படுத்திவிடலாம்.

1978 முதல் சீனத்திலும் 1991 முதல் இந்தியாவிலும் ஏற்பட்டுவரும் வியத்தகு மாற்றங்களைப் பாருங்கள். உலக மக்கள் தொகையில் 40% பேர் இவ்விரு நாடுகளில் வாழ்கின்றனர். அமெரிக்காவில் கூட உண்மையான வருவாய் மதிப்பு மெதுவாக உயர்ந்துகொண்டே வருகிறது. ஆனால், மற்றவர்கள் சொல்வதென்னவோ வருவாயின் உண்மை மதிப்பும் குறைந்துகொண்டே வருகிறது என்று. பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் உயர்ந்துகொண்டே வருவதாலும் ஊதியமற்ற இதர பணப் பயன்களாலும் உண்மையான ஊதிய மதிப்பும் உயர்ந்துகொண்டு வருகிறது என்று ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் டோனல்ட் தெரிவிக்கிறார். 1950-களில் இருந்ததைப் போல இரு மடங்குக்கு மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. 1950-களில்தான் அமெரிக்காவின் பெரும்பாலான குழந்தைகள் இரவுச் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துறங்கினர்.

ஏழைகளைச் சுரண்டி அல்ல, முதலீடுகள் மட்டும் காரணம் அல்ல, இப்போதுள்ள அமைப்புகள் மூலமும் அல்ல, வெறும் கருத்துகளாலும் அல்ல; தத்துவ அறிஞரும் பொருளாதார நிபுணருமான ஆடம் ஸ்மித் கூறியபடி - சமத்துவம், விடுதலை, நீதி ஆகிய லட்சியங்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததன் மூலமே இது சாத்தியமானது. ஐரோப்பியர்கள் கூறும் சுதந்திரச் சந்தையை ஏற்படுத்த தாராளமயம் உதவியது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை சாமானியர்களையும் சமூகக் கண்ணியத்தோடு விரும்பிய உற்பத்தியை மேற்கொள்ள அனுமதித்தது. இதன் விளைவாக அவர்கள் அசாதாரணமான முறையில் ஆக்கபூர்வமாகவும் ஆற்றலுடனும் செயல்பட்டுச் சாதித்துள்ளனர்.

மகிழ்ச்சிகரமான விபத்துகள்

வட மேற்கு ஐரோப்பாவில் 1517 முதல் 1789 வரையில் நிகழ்ந்த சில மகிழ்ச்சிகரமான விபத்துகள் (சம்பவங்கள்) காரணமாகத்தான் விடுதலைச் சிந்தனை பரவியது. சீர்திருத்தங்கள், டச்சு (ஹாலந்து) நாட்டில் அரசுக்கு எதிராக மூண்ட கலகம், இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் ஏற்பட்ட புரட்சிகள்தான் அத்தகைய மகிழ்ச்சிகரமான சம்பவங்கள். இந்த நான்கும் மக்களை அவர்களுடைய அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்தது. எதையும் முயன்று பார்த்துவிடுவது என்ற சிந்தனைப் போக்குள்ள முதலாளித்துவ எண்ணம் கொண்டோர் வாழ்க்கைத் தரம் உயரக் காரணமாக இருந்தனர். “முதலில் நான் இந்த உற்பத்தி முறையை முயன்று பார்க்கிறேன்; இதில் கிடைக்கும் லாபம் எனக்கு, வேலை உனக்கு, உற்பத்தி நாட்டுக்கு என்பது முதல்கட்டம். அடுத்த கட்டத்தில் மேலும் சிலர் போட்டிக்கு வந்து, முதல் முதலாளிக்குப் போட்டியை அளித்து லாபத்தைக் குறைக்கப் பார்ப்பார்கள். இதன் விளைவு, பொருளின் விலையும் சரியும், கொள்ளை லாபம் என்பதும் குறையும். மூன்றாவதாக, புதிய உற்பத்தியால் அனைவரின் வாழ்க்கைத் தரமும் கூடும், முதலீடு செய்தவரும் பணக்காரர் ஆவார். அது அப்படித்தான் நடந்தது.

பொருள் உற்பத்தி தொடர்பாக ஆயிரம் எண்ணங்கள் இருக்கலாம்; அவை வெற்றிகரமாகக் கைகூட மனித வளமும், மூலதனமும், நல்ல நிறுவனங்களும் தேவையாயிற்றே என்று நீங்கள் கூறலாம். உலக வங்கியில் இருப்பவர்கள் அப்படித்தான் தவறாக நினைக்கிறார்கள். நல்ல கருத்துகளைச் செயல்படுத்த மூலதனமும் நிறுவனங்களும் அவசியம் என்பது உண்மைதான். உச்ச நீதிமன்றம் சிறப்பாகச் செயல்பட பளிங்குக் கல் பதிக்கப்பட்ட தரையும், மையப்படுத்தப்பட்ட வெப்பமூட்டி அறை அமைப்பும் அவசியம் என்று கருதலாம். அதைப் போல மூலதனமும் நிறுவனங்களும் மட்டும் போதுமான அடிப்படைகள் அல்ல.

கசப்பான சிந்தனைகள்

பெண்ணியம், போருக்கு எதிரான இயக்கம் போன்றவை மக்களிடையே பரவ எந்த அமைப்புகள் அல்லது யார் காரணம்? கார்ல் மார்க்ஸ் காலத்திலிருந்தே நாம் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு உலகாயதமான காரணங்களையே ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நவீன உலகமோ மக்களை மேலும் மேலும் மரியாதையாக, கண்ணியமாக நடத்துவதால் உருவாகிக்கொண்டிருக்கிறது.

எல்லா சிந்தனைகளுமே இனிப்பானவை அல்ல என்பதும் உண்மைதான்; பாசிசம், நிறவெறி, இனத் தூய்மை, தேசியவாதம் என்பவையெல்லாம் மக்களிடையே சமீபத்தில் பிரபலமாகிவரும் - நாம் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய கசப்பான சிந்தனைகள். லாபகரமான தொழில்நுட்பங்கள், லாபகரமான நிறுவனங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க சாமானியர்களுக்குக் கிடைத்த தாராளமயத்தால்தான் உற்பத்தி பெருகி வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. மேட்டுக்குடிகளை அல்ல, சாமானியர்களைத்தான் நாம் புதிய சிந்தனைக்கு ஊக்கப்படுத்த வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அவர்களிடத்தில் கடைப்பிடித்து, சமூக சமத்துவத்தை அவர்களிடம் நிலைநாட்டினால், அவர்களே வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான பங்களிப்புகளைச் சமூகத்துக்குச் செய்வார்கள். சமத்துவம் என்பது பொருளாதார சமத்துவம் மட்டுமல்ல, ஆன்மிகம் சார்ந்ததும் ஆகும்.

தமிழில் சுருக்கமாக: சாரி,

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

(கட்டுரையாளர் பொருளாதாரம், வரலாறு, ஆங்கிலம், தகவல் தொடர்பியல் ஆகிய பாடங்களில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறவர்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அங்கு வாழும் சமுதாயங்களின் கட்டமைப்பு கலாசாரம் வாழ்வியல் பழக்கவழக்கங்கள் என்பவற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது என் கருத்து. அவற்றை மாற்றிக்கொண்டு காலத்தை எதிர்கொள்ள விரும்பாத சமுதாயங்கள்  என்றும் பின்தங்கிய நிலையிலேயே வாழ நேரிடும். மட்டறுக்கப்பட்ட மீண்டும் புதிப்பிக்க முடியாத உலக வளங்களை சமகாலத்தில் பங்குபோட்டு மற்றைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளக்கூட இந்த நாடுகள் திராணியற்று கிடக்கின்றன. இவர்களின் காலம் ஒரு நாள் வரும்போது அந்த வளங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் முடிந்துபோயிருக்கும்.

தனது காலடியை  குனிந்து பார்க்கும் அதே வேளையில் தலையை நிமிர்தி தொலைவையும் பார்க்க சமுதாயத்தின் தலைவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். வறிய  நாடுகளில் உள்ளுரில் சில செல்வந்தர் இருப்பார்கள் அவர்களுக்கு கொத்தடிமைகளும் இருப்பார்கள். படித்தவர்கள் படிப்பறிவற்றவர் என இரு வகையும் இருக்கும். கொள்ளை இலாபமீட்டும் முதலாளிகள் உரிமையற்ற தொழிலாளர்களை வாட்டி வேலைவாங்குவார்கள். சமுதாய சீர்கேடுகள் மூடி மறைக்கப்படும் அல்லது அரசு அதை கவனத்தில் எடுக்காது. இலஞ்சம் ஊழல் மோசடி தலைவிரித்தாடும்.

இவையனைத்தும் மாற்றி வாழ இளைய சமுதாயத்துக்கு பாடசாலைகளில் கற்றுத்தர அரசு முன்வர வேண்டும். அதன்பிறகு சில பத்து ஆண்டுகளில் மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.