Jump to content

பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’


Recommended Posts

பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’
 

article_1473916874-mm.jpgகனகலிங்கம் கோபிகிருஷ்ணா

உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்பை விட அதிகளவிலான பெண்கள், நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் தெரேசா மே, ஜேர்மனியின் அங்கெலா மேர்க்கெல், நோர்வேயின் ஏர்னா சோல்பேர்க், மியான்மாரின் ஆங் சாங் சூகி என்று நீளும் இந்தப் பட்டியலில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனும் இணைந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஆனால் இந்த முன்னேற்றங்கள், இன்னமும் அடைய வேண்டியிருக்கின்ற முன்னேற்றங்களை எப்போதுமே மறைத்துவிடக் கூடாது. அதற்காகத் தான், 2016ஆம் ஆண்டிலும் பெண்ணுரிமை பற்றியும் பெண்ணியம் பற்றியும் பேசிக் கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. 

பெண்ணை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கும் ஆணாதிக்கம் வேண்டுமானால், உலகின் பல நாடுகளில் இப்போது இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் பெண்ணை வீட்டை விட்டு வெளியேறுவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து, அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள், இப்போதும் இடம்பெற்று வருகின்றன தான். பெண்ணொருத்தி, இந்த ஆடையைத் தான் அணிய வேண்டுமென்ற கட்டாயம் வேண்டுமானால், முன்பை விடக் குறைந்திருக்கலாம், ஆனால் பல்வேறு விதமான அழுத்தங்களுக்கு மத்தியில், பெண்கள் அணிய வேண்டிய ஆடைகளை ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களும் அரசாங்கங்களும் முடிவு செய்கின்ற நிலைமை, இன்னும் நீடித்துத் தான் வருகிறது. “புர்கா அணியாவிட்டால், எமது குடும்ப மானத்தை நீ குழிதோண்டிப் புதைக்கிறாய்” எனத் தெரிவித்து, பெண்ணைக் கொலை செய்யும் நிலைமை காணப்படும் அதேநிலையில், “கடற்கரைக்கு வரும்போது, உன் உடலை முழுமையாக மறைத்து வராதே. பிக்கினியில் தான் வரவேண்டும். இல்லாவிடின் கைது செய்வேன்” என்று, அரசாங்கங்கள் சொல்லுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. 

இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் பியர் அருந்துகின்ற பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவருவதாக, தனது “ஆதங்கத்தை” வெளிப்படுத்தியிருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அண்மைய சில ஆண்டுகளில், இலங்கைப் பெண்களின் மட்டத்தில், பியர் அருந்துவோர், கணிசமானளவு அதிகரித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன என்பது தான் அவரது கருத்து.  

ஜனாதிபதியின் கருத்தின் பொருத்தமான தன்மையைப் பற்றி ஆராய்வதற்கு முன்பதாக, அவரின் அந்தக் கருத்தில் உண்மை காணப்படுகிறதா என்பதை ஆராய்வது நலமானது. இலங்கையில் மதுப்பாவனை தொடர்பான அண்மைய தரவுகளைப் பெற்றுக் கொள்வது, கடினமாக உள்ளது. சுகாதார அமைச்சிடம், 2014ஆம் ஆண்டுக்கான தரவுகளே காணப்படுகின்றன. ஆனால், கடந்த மாதம் கருத்துத் தெரிவித்திருந்த புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் பாலித அபேகோன், இலங்கையைச் சேர்ந்த வளர்ந்தோரில் (15 வயதுக்கு மேற்பட்டோர்), ஏறத்தாழ 40 சதவீதமானோர் மதுபானப் பாவனையில் ஈடுபடுதாகத் தெரிவித்திருந்தார். ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியாகக் குறிப்பிட்ட அவர், ஆண்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோரும் பெண்களில் 2 சதவீதமானோரும் இவ்வாறு மதுபானப் பாவனையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த 2 சதவீதம் என்பது, 2014ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் அறிக்கையிலுள்ள 2.6 சதவீதத்தை விடக் குறைவானதாகும். ஆகவே, என்ன அடிப்படையில், பெண்கள் பியர் அருந்துவது அதிகரித்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார் என்பது கேள்விக்குரியது. 

சரி, ஜனாதிபதி தெரிவித்த கருத்து, தரவுகளின் அடிப்படையில் சரியானது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் கூட, அவ்வாறு பியர் அருந்துவது அதிகரித்தால் தான் என்ன என்ற கேள்வி எழுகின்றது இல்லையா? தாங்கள் விரும்புகின்ற விடயங்களை அருந்துவதற்கும் உண்ணுவதற்கும், பெண்கள் உட்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. இலங்கையில் மதுப்பழக்கம் அதிகரித்திருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்த ஜனாதிபதி விரும்பியிருப்பாரானால், ஒட்டுமொத்தமாக அனைவர் சம்பந்தமாகவும் தான் கதைத்திருக்க வேண்டும். “பெண்கள், பியர் அருந்துவது அதிகரித்துவிட்டது” என்று சொல்வது, “பெண்ணாக இருந்துகொண்டு, பியர் அருந்துகிறார்கள்” என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு என்று தான் கருத வேண்டியுள்ளது. இலங்கையில், மது அருந்துவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வித்தியாசம், மிக அதிகளவில் காணப்படுகிறது. இலங்கையின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்ற, ஆண்களின் மது அருந்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படாமல் இருப்பது எதற்காக? இலங்கையில் இன்னமும் கசிப்புக் காய்ச்சுதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், அவற்றைப் பற்றிய போதிய கவனம் செலுத்தப்படுகிறதா? போயா போன்ற, மது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கூட, கொழும்பு உட்படப் பல பகுதிகளில், மதுபானங்களைத் தாராளமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதைப் பற்றி, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏதோவொன்று சொல்ல வந்து, அது இறுதியில் பெண்களைத் தாழ்வுபடுத்துவது அல்லது ஒடுக்குவது போன்றதாகிவிட்டது என்ற கருத்தும் முன்வைக்கப்படலாம். ஆனால், இதற்கு முன்னரும், இவ்வாறான ஆணாதிக்கப் போக்குடைய கருத்துகளை, ஜனாதிபதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது தான், இவ்விடயத்தில் அவருக்குச் சந்தேகத்தின் பலனை வழங்குவதில் பின்னடிக்க வைக்கிறது.

பாடகர் இக்லேஷியஸின் இசை நிகழ்ச்சியில், பெண்ணொருவர் தனது மேல் உள்ளாடையைக் கழற்றி எறிய, அதனால் “அறச்சீற்றம்” கொண்ட ஜனாதிபதி, இவ்வாறான நிகழ்வுகளால் கலாசாரம் சீர்கெடுகிறது என்று தெரிவித்ததோடு மாத்திரமல்லாது, இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டதால், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்குத் திருக்கை வாலால் அடிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். அவரது அக்கருத்தை, உலகமே வியப்புடன் பார்த்திருந்தது. ஆகவே, காலாகாலமாக, பெண்கள் எதை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதே ஆணாதிக்க மனநிலையைத் தான் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை, ஓரளவு வெளிப்படையாகவே புரிந்துகொள்ள முடிகின்றது. 

அந்தக் கருத்து, ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து என்று சொல்லப்படக்கூடும். ஆனால், உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், நாட்டின் ஜனாதிபதியாகக் கலந்துகொண்டு, அதில் ஜனாதிபதி தெரிவிக்கும் கருத்துகள், ஊடகங்களால் மிகவும் கவனிக்கப்படும் கருத்துகளாகவே இருக்குமென்பதை, பழுத்த அரசியல்வாதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். மாறாக, அவரது இந்தக் கருத்து, பெண்கள், மது அருந்துவதையும் இரவு விடுதிகளுக்குச் செல்வதையும் கட்டுப்படுத்தும் அல்லது அது தொடர்பான தவறான பார்வையைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, அவல் கிடைத்தது போன்றிருக்கும். தங்களது கருத்து அல்லது “கொள்கை”, சரியானது என்ற திடப்படுத்தலை அக்கருத்து வழங்கியிருக்கும். 

மது அருந்துவதாலோ அல்லது சிகரெட் புகைப்பதாலோ, பெண்ணுரிமை கிடைத்துவிடும் என்பது இதன் கருத்தல்ல. ஆண்கள் செய்யும் அத்தனை தவறுகளையும் செய்வதன் மூலம் தான் பெண்களுக்கான சமவுரிமை என்ற உணர்வு ஏற்படுமென்ற அர்த்தமும் கிடையாது. மாறாக, பெண்ணென்பதால் மாத்திரம், ஒரு விடயத்தைச் செய்வதற்கு ஒருவர் தடுக்கப்படுவது ஏனென்ற கேள்வியை எழுப்புவது தான் இதன் நோக்கம். 

மது, சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் உட்பட, மது, சிகரெட் பழக்கத்தைக் கொண்ட ஆண்களில் சிலர், பெண்கள் மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் ஏற்றுக் கொள்வதற்குத் தயராக இல்லை. பெண்கள் மது, சிகரெட் அருந்துவதைக் கொள்கையால் ஆதரிப்போர் கூட, அந்தப் பெண்கள், தங்களது சகோதரிகளாகவோ அல்லது அன்புக்கு உரியவர்களாகவோ இருப்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. மது அருந்துவது தான் தவறு என்றால், எதற்காகப் பெண்கள் மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறார்கள்? 

உலகில், தனிநபர் ஒருவருக்கு, அதிகளவு வடிகட்டப்பட்ட சாராயத்தை உள்ளெடுக்கும் நாடுகளில் ஒன்றாக, இலங்கை இருக்கிறது என்ற நிலையில், இலங்கையின் மதுப்பிரச்சினை என்பது மிக முக்கியமானது. ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஆனால், பெண்கள் மது அருந்துதல் என்பது, இன்னமும் ஒரு பிரச்சினை தரக்கூடிய அளவுக்கு வரவில்லை. ஒருவேளை, இலங்கையில் 70 சதவீதமான பெண்கள் பியர் அருந்தத் தொடங்க, ஆண்களில் 30 சதவீதமானோர் தான் மது அருந்துகிறார்கள் என்றால், பெண்களைத் தனியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்கும். மாறாக, ஆண்களுக்கு பெண்கள் என்பது, 35:2 என்ற விகிதத்தில் காணப்படும் நிலையில், கவனஞ்செலுத்த வேண்டியவர்கள், ஆண்களே.    

- See more at: http://www.tamilmirror.lk/181909/ப-ண-கள-அர-ந-த-ம-ப-யர-ம-ஆண-கள-ன-கவல-ய-ம-#sthash.txzhi46f.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.