Jump to content

உடுவில் மகளீர் கல்லூரி சர்ச்சை – நடந்தது என்ன?


Recommended Posts

உடுவில் மகளீர் கல்லூரி சர்ச்சை - நடந்தது என்ன?

உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ் ஐ அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு தென்னிந்தியத் திருச்சபை குருமுதல்வர் உட்பட நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த கிழமை அக்கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பாடசாலையின் சில ஆசிரியர்களை பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மீது கோபம் கொள்ளச் செய்தது.

பிரச்சனையின் உண்மையான காரணம் என ரெலிகிராப் ஆராய்கிறது,

உடுவில் மகளிர் கல்லூரியானது தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணக் குருமுதல்வருக்குக் கீழ் இயங்கி வருகின்றது. இந்தப் பாடசாலையானது நீண்டகாலமாக கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்ட அதிபர்களாலேயே வழிநடாத்தப்பட்டு வருகின்றது.

மிக அண்மைக்காலத்திலேயே அதிபர் சி.வி.செல்லையா 68 வயதில் ஓய்வுபெற்றார். சிராணி மில்சிற்கு  60வயதாகின்றது. அவரது சேவையை இன்னும் 5 ஆண்டுகளுக்கு அதிகரிக்குமாறு  மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சிரானி மில்ஸின் தலைமைத்துவத்தின் கீழ் உடுவில் மகளிர் கல்லூரியானது மாவட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் பல சாதனை எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜூன் மாதம் தென்னிந்தியத் திருச்சபை தன்னுடைய வலைப்பக்கத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அதிபருக்கான விண்ணப்பம் கோரல் பத்திரத்தை விளம்பரப்படுத்தியதுடன், கொழும்பிலிருந்து வெளிவரும் செய்தித்தாள்களிலும் பிரசுரித்திருந்தது. இதில் சிரானி மில்ஸ் உம் ஏனைய மூன்றுபேரும் தெரிவுசெய்யப்பட்டு ஓகஸ்ட் மாதம் நேர்முகத் தேர்வுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டனர் (முதலில் உப அதிபராக இருந்தவர் தற்போது அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட உப அதிபர் உடுவில் மகளில் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர்) நேர்முகத் தேர்வு நடைபெற்ற தினம் சிரானி மில்ஸ் இற்கு தனியாக நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

crisis-at-uduvil-girls-college1

crisis-at-uduvil-girls-college

குறித்த நேர்முகத் தேர்வை நடாத்தியவர்கள்,

திருமதி எஸ். சாவித்திரி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மனைவி)
செல்வி வியுலா அருளானந்தம் (சுமந்திரனின் நெருங்கிய சட்ட இணைப்பாளர்)
திருமதி தயாளினி தியாகராஜா (தென்னிந்தியத்திருச்சபை குருமுதல் தியாகராஜாவின் மனைவி)
திருமதி சுகந்தி வீரசிங்க (யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியர்)
திரு. அலெக்ஸ்சான்டர் ஜேசுதாசன் (மதுரை கிறிஸ்தவக் கல்லூரி அதிபர்)

இதில் சுமந்திரனின் மனைவி, அவரது நெருங்கிய சகாவான வியுலா, சுகந்தி வீரசிங்க மற்றும் தென்னிந்திய குருமுதல்வரின் மனைவி தயாளினி ஆகியோரே புதிய அதிபரை நியமிப்பதில் மும்முரமாக ஈடுபட்டவர்களாவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிரானி மில்ஸ் இற்கு எதிராக பல தடவைகள் சட்டச் சிக்கல்களில் ஈடுபட்டவர் என்பதுடன் இவரால் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிரானி மில்ஸ் இனை நேர்முகத் தேர்வு நடாத்தியவர்கள் அனைவரும் சுமந்திரனுக்கு நெருக்கியவர்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

http://thuliyam.com/?p=40994

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.