Jump to content

மீள்குடியேற்றம்: அடுத்தது என்ன?


Recommended Posts


மீள்குடியேற்றம்: அடுத்தது என்ன?
 

article_1473782742-a.PNG'மீள்குடியேற்றம்', இந்த வார்த்தைதான் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதிகமாக பேசப்பட்டு வரும் முக்கிய வார்த்தையாக இருக்கும். 3 தசாப்த காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அல்லது தடம்மாற்றிய இடப்பெயர்வுகள் எண்ணிலடங்காதவை.

வடக்கு, கிழக்கில் தலைதூக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என அரசாங்கமும் தனிநாட்டைப் பெற்று, உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், இருதரப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தமது பூர்வீக மண்ணையும் சொத்துக்களையும் சொந்தங்களையும் விட்டு உயிரை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் ஒடிக்கொண்டிருந்த மக்களுக்கு 'இடம்பெயர்ந்தோர்' என்ற ஒற்றை வார்த்தையால் பெயர்சூட்டிவிட்டு, இருதரப்பினரும் யுத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.
அன்று தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த அந்த மக்களின் நிலை, இன்று என்ன என்பது குறித்து தேடிப்பார்ப்பதும் முக்கியமாகும்.

 

 

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் முகாம்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்க வேண்டும் என மக்கள், நீண்டகாலமாக பல போராட்டங்களை முன்னெடுத்தும் கோரிக்கைகளை விடுத்தும் வந்திருந்தனர்.

இந்நிலையில், இராணுவத்தால் வசப்படுத்தப்பட்ட நிலங்களை படிப்படியாக விடுவிக்க கடந்த அரசாங்கம் முடிவெடுத்த நிலையில், சில பகுதிகளை மாத்திரம் விடுவித்திருந்தது. இறுதி யுத்தத்தில், மனித உரிமைகள் மீறப்பட்டதாக  இலங்கைக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதிலிருந்து இலங்கை மீண்டுவருவதற்கான பிரயத்தனங்களை ஒருபுறத்தில் எடுத்து வர, மறுபக்கம் தமது நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றம் செய்யுமாறு மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள், முன்னைய அரசாங்கத்துக்கு  தலைவலியை கொடுத்தது.

அதனையடுத்து, நிலங்கள் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வந்தாலும், அது சிறியளவிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம், கடந்த வருடம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, வடக்கில் படையினர் வசமிருந்த பெருமளவான நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

படையினர் வசமிருந்த 11,629.72 ஏக்கர் அளவிலான நிலத்தில், இன்னும் 4,418.74 ஏக்கர் அளவிலான நிலம் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. 7,210.98 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, அதாவது 62 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். அதிலும், 2.7 சதவீதமான நிலப்பரப்பிலேயே இராணுவம் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நேரத்தில், யாழ்;. குடாநாட்டில் 2,293 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் வசிக்கத் தொடங்கினர். இதில் முற்று முழுதாக இடம்பெயர்ந்த மக்களும் உள்ளடங்குகின்றனர். இதில், 971 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 31 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த 971 குடும்பங்களில் 289 குடும்பங்கள், தமது நிலத்தை இழந்திருந்தார்கள். ஏனைய 682 குடும்பங்களுக்கு நிலங்கள் சொந்தமானதாக இருக்கவில்லை.

1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், யாழ். குடாநாட்டில் 159 நலன்புரி நிலையங்கள் இருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஆகும்போது, அதன் எண்ணிக்கை, 64 ஆக குறைவடைந்ததுடன் 2016இல் தற்போது வரையில், 31 நலன்புரி நிலையங்களே உள்ளன. இதில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3,388 நபர்கள் தங்கியுள்ளனர். 1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், 9,555 குடும்பங்களைச் சேர்ந்த 38,282 பேர், நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் ஆகக்கூடியதாக 30,164 குடும்பங்களைச் சேர்ந்த 1,18,367 பேர், 233 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கோணபுலம் முதல் காங்கேசன்துறை வரையுள்ள 31 நலன்புரி நிலையங்களில், 971 குடும்பங்களைச் சேர்ந்த 1,612ஆண்கள், 1,776 பெண்கள் என 3,388 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இனிவரும் காலங்களில், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை குடியேற்ற, இராணுவம் தமது பாரிய பங்களிப்பை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை வலிறுத்துவது போல, கீரிமலை பிரதேசத்தில் சுமார் 100 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில், இராணுவம் ஈடுபட்டுள்ளது.

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் 133 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க, மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்த நிலையில், அரச காணியில் இராணுவத்தினர் வீடுகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர். முதற்கட்டமாக, 100 குடும்பங்களுக்கான வீடுகளும் இரண்டாம் கட்டமாக, 33 குடும்பங்களுக்கான வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வீடுகளை அமைப்பதற்கு இடம் தேவைப்பட்ட போது, யாழ். மாவட்டச் செயலகம், கீரிமலை பிரதேசத்தில் 47 ஏக்கர் நிலப்பரப்பை பெற்றுக்கொடுத்துள்ளது. ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்படும் நிலத்தின் பெறுமதி, சுமார் 20 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை அமைப்பதற்கான செலவுகளுடன் சேர்த்து, வீடொன்றின் பெறுமதி 4,362,240 ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வீடமைப்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதால், சுமார் 122 மில்லியன் ரூபாய் பணத்தை சேமிக்க முடிந்துள்ளமை இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். முற்றும் முழுதாக, இராணுவத்தின் கைதேர்ந்த பொறியியலாளர்களினால், யாழ். மக்களின் பாராம்பரியத்துடன் கூடிய, சகல வசதிகளையும் கொண்டதாகவே, இந்த வீடுகளுக்கான திட்டம் வரைந்து கொடுக்கப்பட்டு, நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீட்டு திட்டத்துக்காக வரையப்பட்ட திட்டங்களில், பொதுமக்களுடன் கலந்துரையாடி, பிரதேச செயலகத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீட்டுத் திட்டமே, நிர்மாணப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளதாக, இராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர். 

45 நாட்களில், இந்த வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யத் தீர்மானித்த போதும், வீடுகளுக்கான நிர்மாணப் பொருட்களை, யாழ்ப்பாணத்திலிருந்துப் பெற்றுக்கொள்ள எடுத்த முயற்சி, பொருட்களுக்கு யாழில் ஏற்பட்ட தட்டுபாடு, வானிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, சுமார் 3 மாதங்களுக்கும் அதிகமாக, இவ்வீட்டுத்திட்டம் தாமதடைந்து வருவதாக, திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ். மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த வீட்டுத் திட்டத்தினால் கிடைக்கும் இலாபத்தை,  அந்த மக்களுக்கே பெற்றுக்கொடுத்து, வருமானம் பெற வழிசெய்ய வேண்டும் என்பதற்காக, நிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருட்களை, யாழ். வர்த்தகர்களிடமிருந்தே பெற்றுக்கொள்வதற்கு  இராணுவம் தீர்மானித்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இரண்டு அறைகள், விறாந்தை, தனியான சமையலறை மற்றும் குளியலறை, மலசலக்கூடம் போன்ற வசதிகளுடனேயே, இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த வீடமைப்புத் திட்டத்தில், தனியான பாதை வலையமைப்பு, விளையாட்டு மைதானம், பாலர் பாடசாலை,  பொலிஸ் நிலையம், சனசமூக நிலையம், மருத்துவ விடுதி, தண்ணீர் வசதி, மின்சாரம் என்பவை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இது இவ்வாறிருக்க, தற்போது சொந்த இடத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள வீமங்காமம் மற்றும் இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் மீள்குடியேற்றப்படாத கண்ணகிபுரம், சபாபதி பிள்ளை நலன்புரி நிலையங்களைச் சேர்ந்த மக்களை சந்திக்கும் சந்தர்ப்பம், எமக்கு கிடைத்தது.

கடந்த 1990 - 1996ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஜே 246 (மயிலிட்டி), ஜே 247 (தையிட்டி), ஜே 249 (தையிட்டி கடற்கரை) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து, சபாபதி நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டதுடன், பின்னர், அருகிலேயே கண்ணகிபுரம் நலன்புரி நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 136 குடும்பங்களைச் சேர்ந்த 596 பேர், 117 தற்காலிக வீடுகளில், கடந்த 26 வருடமாக கண்ணகிபுரம் நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர். இவ்விரு நலன்புரி நிலையங்களிலும், 160 வீடுகளில் 230 குடும்பங்கள் என்ற அடிப்படையில் வசித்து வருகின்றனர்.

கண்ணகிபுரம் நலன்புரி நிலையத்தில், பாலர் பாடசாலை ஒன்றும் உள்ளது. அங்கு இரண்டு முன்பள்ளி ஆசிரியர்கள் கல்விகற்றுக் கொடுப்பதுடன், அவர்களுக்கு மாதாந்தம், 4,000 ரூபாய் மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. பாரிய கஷ்டங்களுக்கு மத்தியிலேயே, தாம் கல்விகற்றுக் கொடுப்பதாக, அவர்கள் கூறுகின்றனர். குறித்த நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள், தம்மை தமது சொந்த இடங்களான மயிலிட்டி, தையிட்டி, தையிட்டி கடற்கரை பிரதேசங்களில் மீள்குடியமர்த்துமாறு வேண்டுகோள் விடுகின்றனர்.

'கடந்த 26 ஆண்டுகளாக, இங்கேயே இருக்கின்றோம். இப்போது, அப்போது என்று சொல்கின்றனர். ஆனால், மீள்குடியேற்றம் செய்யவில்லை. எங்களது சொந்த இடங்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு' என, 31 நலன்புரி நிலையங்களினது சங்கத்தின் பொது நிர்வாகக்குழுத் தலைவர் அன்டனி கூறுகிறார்.

இதேவேளை, 'சாப்பாட்டுக்கே வழியில்லை, அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வது மிகவும் சிரமாக உள்ளது. மயிலிட்டியில் எனக்கு நிறைய காணிகள் சொந்தமாக உள்ளன. அவை விடுவிக்கப்படாததால், 26 வருடங்களாக இந்த நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளேன். என் இரண்டு பிள்ளைகளும் திருமணம் முடித்து, வேறு இடங்களில் உள்ளனர். என்னை கவனிப்பதற்கு யாரும் இல்லை. இந்த வயதிலும் கூலி வேலைக்கு சென்று கஷ்டப்படுகிறேன்' என தனது சோகத்தை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார், தனது பேரப்பிள்ளையுடன் வசிக்கும் 68 வயதான செல்வராசா பரஞ்சோதி என்ற வயோதிபப் பெண்.

இதேவேளை, 'தேர்தல் காலத்தில் மட்டும் வந்து வாக்குறுதிகளை வாரி வழங்கும் வள்ளலான அரசியல்வாதிகள், அதன் பின்னர் எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சொந்த இடங்களுக்கு எங்களை அனுப்பி வைத்தால் மாத்திரமே எங்களால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இங்கு தொழிலும் இல்லை. கூலி வேலைக்கே செல்ல வேண்டியுள்ளது' என்கிறார் சபாபதி முகாமின் தலைவர் நேசன்.

அவர்களைப் போலவே, இந்த நலன்புரி நிலையத்தில் வாழும் ஒவ்வொருவரும், தமது மனதில் பெரும் சோகத்தையும் சொந்த மண்ணில் என்றாவது ஒருநாள் மீள்குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையிலும், தமது வாழ்நாளை, பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடத்திச் செல்கின்றனர்.

இதேவேளை, மழைக் காலங்களில், வெள்ளத்தில் தாம் அவதியுறும் போது, இராணுவத்தினர் ஓடி வந்து உதவி செய்வதாகவும் தேவையான உணவுகளை அவர்களால் முடிந்தளவு பெற்றுக் கொடுப்பதாவும் இந்த மக்கள் கூறுகின்றனர். அத்துடன், இராணுவத்தினரால் தமக்கு அச்சுறுத்தலோ தொல்லைகளோ இப்போது இல்லை எனவும் அச்சமின்றி தாம் வாழ்வதாகச் சுட்டிக்காட்டும் அந்த மக்களின் ஒரே எதிர்பார்ப்பு, மீள்குடியேற்றம் மட்டுமேயாகும்.

இது இவ்வாறிருக்க, மீள்குடியேறியுள்ள வீமங்காமம் மக்கள், தமக்கான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட போதும், அதில் நிறைவுத் தன்மை இல்லை என்றும் தொழிவாய்ப்பு தான், பாரிய பிரச்சினையாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

வீமங்காமம் மக்களின் நிலங்கள், 2015ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு, அதே ஆண்டின் செப்டெம்பர் மாதமளவில் குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கு, 65 குடும்பங்களைச் சேர்ந்த 500 பொதுமக்கள் வசிப்பதுடன், 65 வீடுகள் - மலசலகூட வசதியுடன் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுக் கிணறுகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர். உரும்பிராய், அளவெட்டி போன்ற தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்து இருந்த மக்களே இங்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கான வீடுகள் அமைக்க, அரசாங்கத்தால் கட்டம் கட்டமாக பணம் வழங்கப்பட்டபோதும், அவை உரிய காலத்தில் ஒழுங்காக வழங்கப்படவில்லை எனவும், பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில், வீடுகளைப் பூர்த்திச் செய்ய முடியாமல் திண்டாடுவதாகவும், அந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்;.

இடம்பெயர்ந்து வாழும் மக்கள், தமக்கான சகல வாயப்புகளையும் இழந்துவிட்ட நிலையிலேயே, நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர். இப்போது, மீள்குடியேற்றம் செய்த நிலையில், அவர்களால் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எனினும், அந்த மக்களின் வாழ்க்கை சீராக அமைய, மீள்குடியேற்றப்பட்டுள்ள இடங்களில் தொழிவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியத் தேவையாகவுள்ளது.

மயிலிட்டி விடுவிக்கப்படாமையால், தொழில் தேடி தினமும் யாழ்ப்பாணம் வரை கூட, கூலி வேலைக்குச் செல்வதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமக்கான தொழிவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே, இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். 'மீளக் குடியேற்றியதுடன், அரசாங்கத்தின் கடமை முடிந்துவிட்டதா? அடுத்து என்ன?' என்பதே அந்த மக்களின் மனதிலுள்ள ஒரே கேள்வியாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/181822/ம-ள-க-ட-ய-ற-றம-அட-த-தத-என-ன-#sthash.ntCEhSL5.dpuf
Link to comment
Share on other sites

15 hours ago, நவீனன் said:

மீள்குடியேற்றம்: அடுத்தது என்ன?
 

article_1473782742-a.PNG'மீள்குடியேற்றம்', இந்த வார்த்தைதான் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதிகமாக பேசப்பட்டு வரும் முக்கிய வார்த்தையாக இருக்கும். 3 தசாப்த காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அல்லது தடம்மாற்றிய இடப்பெயர்வுகள் எண்ணிலடங்காதவை.

வடக்கு, கிழக்கில் தலைதூக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என அரசாங்கமும் தனிநாட்டைப் பெற்று, உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், இருதரப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தமது பூர்வீக மண்ணையும் சொத்துக்களையும் சொந்தங்களையும் விட்டு உயிரை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் ஒடிக்கொண்டிருந்த மக்களுக்கு 'இடம்பெயர்ந்தோர்' என்ற ஒற்றை வார்த்தையால் பெயர்சூட்டிவிட்டு, இருதரப்பினரும் யுத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.
அன்று தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த அந்த மக்களின் நிலை, இன்று என்ன என்பது குறித்து தேடிப்பார்ப்பதும் முக்கியமாகும்.

 

 

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் முகாம்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்க வேண்டும் என மக்கள், நீண்டகாலமாக பல போராட்டங்களை முன்னெடுத்தும் கோரிக்கைகளை விடுத்தும் வந்திருந்தனர்.

இந்நிலையில், இராணுவத்தால் வசப்படுத்தப்பட்ட நிலங்களை படிப்படியாக விடுவிக்க கடந்த அரசாங்கம் முடிவெடுத்த நிலையில், சில பகுதிகளை மாத்திரம் விடுவித்திருந்தது. இறுதி யுத்தத்தில், மனித உரிமைகள் மீறப்பட்டதாக  இலங்கைக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதிலிருந்து இலங்கை மீண்டுவருவதற்கான பிரயத்தனங்களை ஒருபுறத்தில் எடுத்து வர, மறுபக்கம் தமது நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றம் செய்யுமாறு மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள், முன்னைய அரசாங்கத்துக்கு  தலைவலியை கொடுத்தது.

அதனையடுத்து, நிலங்கள் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வந்தாலும், அது சிறியளவிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம், கடந்த வருடம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, வடக்கில் படையினர் வசமிருந்த பெருமளவான நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

படையினர் வசமிருந்த 11,629.72 ஏக்கர் அளவிலான நிலத்தில், இன்னும் 4,418.74 ஏக்கர் அளவிலான நிலம் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. 7,210.98 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, அதாவது 62 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். அதிலும், 2.7 சதவீதமான நிலப்பரப்பிலேயே இராணுவம் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நேரத்தில், யாழ்;. குடாநாட்டில் 2,293 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் வசிக்கத் தொடங்கினர். இதில் முற்று முழுதாக இடம்பெயர்ந்த மக்களும் உள்ளடங்குகின்றனர். இதில், 971 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 31 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த 971 குடும்பங்களில் 289 குடும்பங்கள், தமது நிலத்தை இழந்திருந்தார்கள். ஏனைய 682 குடும்பங்களுக்கு நிலங்கள் சொந்தமானதாக இருக்கவில்லை.

1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், யாழ். குடாநாட்டில் 159 நலன்புரி நிலையங்கள் இருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஆகும்போது, அதன் எண்ணிக்கை, 64 ஆக குறைவடைந்ததுடன் 2016இல் தற்போது வரையில், 31 நலன்புரி நிலையங்களே உள்ளன. இதில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3,388 நபர்கள் தங்கியுள்ளனர். 1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், 9,555 குடும்பங்களைச் சேர்ந்த 38,282 பேர், நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் ஆகக்கூடியதாக 30,164 குடும்பங்களைச் சேர்ந்த 1,18,367 பேர், 233 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கோணபுலம் முதல் காங்கேசன்துறை வரையுள்ள 31 நலன்புரி நிலையங்களில், 971 குடும்பங்களைச் சேர்ந்த 1,612ஆண்கள், 1,776 பெண்கள் என 3,388 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இனிவரும் காலங்களில், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை குடியேற்ற, இராணுவம் தமது பாரிய பங்களிப்பை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை வலிறுத்துவது போல, கீரிமலை பிரதேசத்தில் சுமார் 100 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில், இராணுவம் ஈடுபட்டுள்ளது.

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் 133 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க, மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்த நிலையில், அரச காணியில் இராணுவத்தினர் வீடுகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர். முதற்கட்டமாக, 100 குடும்பங்களுக்கான வீடுகளும் இரண்டாம் கட்டமாக, 33 குடும்பங்களுக்கான வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வீடுகளை அமைப்பதற்கு இடம் தேவைப்பட்ட போது, யாழ். மாவட்டச் செயலகம், கீரிமலை பிரதேசத்தில் 47 ஏக்கர் நிலப்பரப்பை பெற்றுக்கொடுத்துள்ளது. ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்படும் நிலத்தின் பெறுமதி, சுமார் 20 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை அமைப்பதற்கான செலவுகளுடன் சேர்த்து, வீடொன்றின் பெறுமதி 4,362,240 ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வீடமைப்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதால், சுமார் 122 மில்லியன் ரூபாய் பணத்தை சேமிக்க முடிந்துள்ளமை இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். முற்றும் முழுதாக, இராணுவத்தின் கைதேர்ந்த பொறியியலாளர்களினால், யாழ். மக்களின் பாராம்பரியத்துடன் கூடிய, சகல வசதிகளையும் கொண்டதாகவே, இந்த வீடுகளுக்கான திட்டம் வரைந்து கொடுக்கப்பட்டு, நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீட்டு திட்டத்துக்காக வரையப்பட்ட திட்டங்களில், பொதுமக்களுடன் கலந்துரையாடி, பிரதேச செயலகத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீட்டுத் திட்டமே, நிர்மாணப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளதாக, இராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர். 

45 நாட்களில், இந்த வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யத் தீர்மானித்த போதும், வீடுகளுக்கான நிர்மாணப் பொருட்களை, யாழ்ப்பாணத்திலிருந்துப் பெற்றுக்கொள்ள எடுத்த முயற்சி, பொருட்களுக்கு யாழில் ஏற்பட்ட தட்டுபாடு, வானிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, சுமார் 3 மாதங்களுக்கும் அதிகமாக, இவ்வீட்டுத்திட்டம் தாமதடைந்து வருவதாக, திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ். மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த வீட்டுத் திட்டத்தினால் கிடைக்கும் இலாபத்தை,  அந்த மக்களுக்கே பெற்றுக்கொடுத்து, வருமானம் பெற வழிசெய்ய வேண்டும் என்பதற்காக, நிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருட்களை, யாழ். வர்த்தகர்களிடமிருந்தே பெற்றுக்கொள்வதற்கு  இராணுவம் தீர்மானித்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இரண்டு அறைகள், விறாந்தை, தனியான சமையலறை மற்றும் குளியலறை, மலசலக்கூடம் போன்ற வசதிகளுடனேயே, இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த வீடமைப்புத் திட்டத்தில், தனியான பாதை வலையமைப்பு, விளையாட்டு மைதானம், பாலர் பாடசாலை,  பொலிஸ் நிலையம், சனசமூக நிலையம், மருத்துவ விடுதி, தண்ணீர் வசதி, மின்சாரம் என்பவை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இது இவ்வாறிருக்க, தற்போது சொந்த இடத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள வீமங்காமம் மற்றும் இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் மீள்குடியேற்றப்படாத கண்ணகிபுரம், சபாபதி பிள்ளை நலன்புரி நிலையங்களைச் சேர்ந்த மக்களை சந்திக்கும் சந்தர்ப்பம், எமக்கு கிடைத்தது.

கடந்த 1990 - 1996ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஜே 246 (மயிலிட்டி), ஜே 247 (தையிட்டி), ஜே 249 (தையிட்டி கடற்கரை) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து, சபாபதி நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டதுடன், பின்னர், அருகிலேயே கண்ணகிபுரம் நலன்புரி நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 136 குடும்பங்களைச் சேர்ந்த 596 பேர், 117 தற்காலிக வீடுகளில், கடந்த 26 வருடமாக கண்ணகிபுரம் நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர். இவ்விரு நலன்புரி நிலையங்களிலும், 160 வீடுகளில் 230 குடும்பங்கள் என்ற அடிப்படையில் வசித்து வருகின்றனர்.

கண்ணகிபுரம் நலன்புரி நிலையத்தில், பாலர் பாடசாலை ஒன்றும் உள்ளது. அங்கு இரண்டு முன்பள்ளி ஆசிரியர்கள் கல்விகற்றுக் கொடுப்பதுடன், அவர்களுக்கு மாதாந்தம், 4,000 ரூபாய் மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. பாரிய கஷ்டங்களுக்கு மத்தியிலேயே, தாம் கல்விகற்றுக் கொடுப்பதாக, அவர்கள் கூறுகின்றனர். குறித்த நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள், தம்மை தமது சொந்த இடங்களான மயிலிட்டி, தையிட்டி, தையிட்டி கடற்கரை பிரதேசங்களில் மீள்குடியமர்த்துமாறு வேண்டுகோள் விடுகின்றனர்.

'கடந்த 26 ஆண்டுகளாக, இங்கேயே இருக்கின்றோம். இப்போது, அப்போது என்று சொல்கின்றனர். ஆனால், மீள்குடியேற்றம் செய்யவில்லை. எங்களது சொந்த இடங்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு' என, 31 நலன்புரி நிலையங்களினது சங்கத்தின் பொது நிர்வாகக்குழுத் தலைவர் அன்டனி கூறுகிறார்.

இதேவேளை, 'சாப்பாட்டுக்கே வழியில்லை, அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வது மிகவும் சிரமாக உள்ளது. மயிலிட்டியில் எனக்கு நிறைய காணிகள் சொந்தமாக உள்ளன. அவை விடுவிக்கப்படாததால், 26 வருடங்களாக இந்த நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளேன். என் இரண்டு பிள்ளைகளும் திருமணம் முடித்து, வேறு இடங்களில் உள்ளனர். என்னை கவனிப்பதற்கு யாரும் இல்லை. இந்த வயதிலும் கூலி வேலைக்கு சென்று கஷ்டப்படுகிறேன்' என தனது சோகத்தை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார், தனது பேரப்பிள்ளையுடன் வசிக்கும் 68 வயதான செல்வராசா பரஞ்சோதி என்ற வயோதிபப் பெண்.

இதேவேளை, 'தேர்தல் காலத்தில் மட்டும் வந்து வாக்குறுதிகளை வாரி வழங்கும் வள்ளலான அரசியல்வாதிகள், அதன் பின்னர் எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சொந்த இடங்களுக்கு எங்களை அனுப்பி வைத்தால் மாத்திரமே எங்களால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இங்கு தொழிலும் இல்லை. கூலி வேலைக்கே செல்ல வேண்டியுள்ளது' என்கிறார் சபாபதி முகாமின் தலைவர் நேசன்.

அவர்களைப் போலவே, இந்த நலன்புரி நிலையத்தில் வாழும் ஒவ்வொருவரும், தமது மனதில் பெரும் சோகத்தையும் சொந்த மண்ணில் என்றாவது ஒருநாள் மீள்குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையிலும், தமது வாழ்நாளை, பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடத்திச் செல்கின்றனர்.

இதேவேளை, மழைக் காலங்களில், வெள்ளத்தில் தாம் அவதியுறும் போது, இராணுவத்தினர் ஓடி வந்து உதவி செய்வதாகவும் தேவையான உணவுகளை அவர்களால் முடிந்தளவு பெற்றுக் கொடுப்பதாவும் இந்த மக்கள் கூறுகின்றனர். அத்துடன், இராணுவத்தினரால் தமக்கு அச்சுறுத்தலோ தொல்லைகளோ இப்போது இல்லை எனவும் அச்சமின்றி தாம் வாழ்வதாகச் சுட்டிக்காட்டும் அந்த மக்களின் ஒரே எதிர்பார்ப்பு, மீள்குடியேற்றம் மட்டுமேயாகும்.

இது இவ்வாறிருக்க, மீள்குடியேறியுள்ள வீமங்காமம் மக்கள், தமக்கான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட போதும், அதில் நிறைவுத் தன்மை இல்லை என்றும் தொழிவாய்ப்பு தான், பாரிய பிரச்சினையாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

வீமங்காமம் மக்களின் நிலங்கள், 2015ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு, அதே ஆண்டின் செப்டெம்பர் மாதமளவில் குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கு, 65 குடும்பங்களைச் சேர்ந்த 500 பொதுமக்கள் வசிப்பதுடன், 65 வீடுகள் - மலசலகூட வசதியுடன் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுக் கிணறுகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர். உரும்பிராய், அளவெட்டி போன்ற தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்து இருந்த மக்களே இங்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கான வீடுகள் அமைக்க, அரசாங்கத்தால் கட்டம் கட்டமாக பணம் வழங்கப்பட்டபோதும், அவை உரிய காலத்தில் ஒழுங்காக வழங்கப்படவில்லை எனவும், பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில், வீடுகளைப் பூர்த்திச் செய்ய முடியாமல் திண்டாடுவதாகவும், அந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்;.

இடம்பெயர்ந்து வாழும் மக்கள், தமக்கான சகல வாயப்புகளையும் இழந்துவிட்ட நிலையிலேயே, நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர். இப்போது, மீள்குடியேற்றம் செய்த நிலையில், அவர்களால் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எனினும், அந்த மக்களின் வாழ்க்கை சீராக அமைய, மீள்குடியேற்றப்பட்டுள்ள இடங்களில் தொழிவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியத் தேவையாகவுள்ளது.

மயிலிட்டி விடுவிக்கப்படாமையால், தொழில் தேடி தினமும் யாழ்ப்பாணம் வரை கூட, கூலி வேலைக்குச் செல்வதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமக்கான தொழிவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே, இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். 'மீளக் குடியேற்றியதுடன், அரசாங்கத்தின் கடமை முடிந்துவிட்டதா? அடுத்து என்ன?' என்பதே அந்த மக்களின் மனதிலுள்ள ஒரே கேள்வியாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/181822/ம-ள-க-ட-ய-ற-றம-அட-த-தத-என-ன-#sthash.ntCEhSL5.dpuf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.