Jump to content

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-


Recommended Posts

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-

 

 

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-

 

என் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய மகான் 
 
அவர்களின் பிரிவுச் செய்தியை ஈழநாடு முன்னாள் உதவி ஆசிரியரும்  முன்னாள் கொழும்பு அலுவலக நிருபருமாகிய கந்தசாமி அண்ணா அனுப்பியது கண்டபோது 
முதலில் அதிர்ச்சியடைந்தேன்.
 
 நாட்டைவிட்டு திடீரென்று வெளிநாடு போன ஊடகவியலாளர்கள் போல   பிரிவுத் துயரைஅதிர்ச்சியுடன் தந்தது .
 
மகானை நான் கடைசியாகச் சந்தித்தது  கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் முன்னுள்ள ஒரு விருந்தகத்தில் . அவர் இந்தியா போவதற்கு முன்னர்  கொழும்பு வந்திருந்தபொழுது என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்.  கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் -இல்லத்தின் உரிமையாளரும் ஈழநாடு உரிமையாளரான  திரு ராஜன் சண்முகரத்தினமும் நானும் மகானும் அன்று அச் சந்திப்பில் கலந்திருந்தோம்.
 
ஈழநாட்டின் பூர்வீகத்  தொடர்போ என்று சொல்லலாமோ என்னவோ -திரு  ராஜனுடன்   இன்று வரைக்கும் தொடர்பு நீடித்தது.  குறிப்பாக மகாராஜா நிறுவனத்தில்  இணைந்த பின்னர் எனது "வாகனத்தின் "   பாவனை அலுவல்களுக்காக அவருடைய மோட்டார் இயந்திர நிலையத்திற்கே போக வேண்டியிருந்தது . கொழும்பு ஈழநாடு அலுவலகம் அமைந்திருந்த திரு ராஜனின் இல்லத்தில் தற்பொழுது அவரது வாகன இயந்திர பராமரிப்பு நிலையமும் உள்ளது. கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய திரு ராஜன் பின்னர் அங்கிருந்து விலகி வந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தாலும் - மகாராஜா நிறுவனத்தின் வாகனங்கள் அனைத்தையும் பழுது பார்ப்பதுடன் கண்காணிக்கும் பொறுப்பையும்  இதுவே செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
நான் இங்கு வந்த பின்னர் இரண்டு தடவை மகானுடன் பேசினேன்.  ஒன்று நட்பு ரீதியானது. மற்றது இலங்கையின் முன்னணி நிறுவனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழை மீண்டும் வெளியிடுவது தொடர்பான அவரது ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் கேட்பதற்காக அவருடன் பேசினேன்.
 
மகான் அதற்குச் சொன்ன பதில் , இன்றைய தமிழ் ஊடகங்களில் அவர் கொண்டிருந்த வெறுப்பையும் சலிப்பையும் காட்டியது.
 
"கானம் (அவர் குறிப்பிட்டது உதயன் பிரதம ஆசிரியர் திரு கான மயில் நாதனை ) இருக்கிறான் என்று நம்பினேன். இப்போ கானத்திற்கும் ஏலாது என்று தெரிகிறது. அவ என்ன மாதிரி எழுதுவான் தெரியுமா... எல்லாரும் தமிழ் இப்போ கொல்கிறான்கள் .
 
பெருமாள் மொழிபெயர்ப்போட நின்றுவிட்டாராம்.
 
எங்கட காலத்தில ஊடகப்  பயிற்சி , பல்கலைக்கழகத்தில் ஊடகப் பயிற்சி என்று ஒன்றும் இல்லை .. ஆனால் இப்போ தெருவுக்குத் தெரு பல பயிற்சிகள் நடத்திறார்களாம் ..ஆனால் எவனும் ஒழுங்கா தமிழ் எழுதுறானா அல்லது செய்தியை செய்தியாய் எழுதுறானா என்று தெரியுதில்லை ...ஆசிரியர் பதவியில் இருக்கிறவங்களும் பதவிக்கும் சம்பளத்திற்கும் இருக்கிறான்கள் " என்று தமது உள்ளக்  கிடக்கையைச்    சொன்னார்.
 
 மகான் என்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்பட்ட  அமரர்   கே ஜீ மகாதேவா ஈழநாட்டின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தான் நான் கரவெட்டி நிருபராக நியமனம் பெற்றேன் .
 
கரவெட்டி நிருபராக பணியாற்றிய எனது சகோதரர் வெளிநாடு சென்றதால் அந்த இடத்துக்கு நான் விண்ணப்பித்த போது  அண்ணர் மீதான ஒரு நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. பொதுவாக  மூன்று மாதங்கள் பார்த்த பின்னர்தான்  நிரந்தரமான நியாயமனக் கடிதம் வழங்கப்படும்.
எனினும் மகாதேவா எனக்கு ஒரு மாதத்திலேயே கொடுப்பனவைச்  சிபாரிசு செய்தார்.
 
"நல்ல எழுத்து ஐஸே ! அண்ணரும் நீரும் தமிழை மட்டுமல்ல எழுத்தையும் அழகாக எழுதுகிறீர்கள்  "- என்று சொல்லிவிட்டு என்னைச் சில கணங்கள் அவர் பார்த்துக் கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வருகிறது .
 
ரூபவாஹினிக்கு நான் நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற போது   ஈழநாடு செய்தி ஆசிரியர் என்ற வகையில் ஒரு கடிதம் கேட்டிருந்தேன்.
 
"எப்ப இன்ரவியூ ..போக முன்னர் நினைவு படுத்தும்"  என்று  சொன்னார்.
 
அப்படியே போக முன்னர் அவரிடம் போய்க் கேட்டேன் . அவர் அங்கு இருந்த அமரர் பெரி சண்முகநாதனை அழைத்து தான் சொல்வதை ஆங்கிலத்தில் எழுதச்   சொல்லிவிட்டு - எனது பதவியை  correspondent  என்று போடாமல் stringer என்று போடச்  சொன்னார்.
 
பெரி - "அது அங்க உள்ளவங்களுக்கு விளங்குமோ தெரியாது " என்றார் .
 
இது விளங்காட்டா அவனுக்கு மீடியா தெரியாது .அதனால எடுப்பார்கள் என்று தமக்கேயுரிய நக்கலான சிரிப்புடன் சொன்னார்.
 
இரண்டு மூன்று வசனங்களை மட்டும் கொண்ட மூன்றே  மூன்று  பந்திகள் கொண்ட கடிதம் அது.
 
நான் வாங்கிப் பார்த்தபோது , "என்ன கடிதம் சின்னனாய் இருக்கு என்று பார்க்கிறீரா ? ; இதன் வல்லமை அங்கு இருப்பவர்களில் தங்கியுள்ளது . இது விளங்கினால் உம்மை விளங்குவார்கள் என்று என் முதுகில் தட்டி வாழ்த்தினார்.
 
நான் ரூபவாஹினிக்கு 1984 ஜூலை மாதம் நேர்முகப் பரீட்சசைக்கு சென்றபொழுது என்னுடைய எல்லா சான்றிதழ்கள் கலைத்துறை சார்ந்த படங்களை பார்த்தவர்கள் மகானின் கடிதத்தை  ஆழமாக மெதுவாக வாசித்தனர். அங்கு இருந்த ஒருவர் ஆங்கில இலக்கியம் கவிதைகளில்  ஆர்வமும் தேர்ச்சியும்  மிக்க ஒருவர்.  
அவரின் நிருவாகத்தின் கீழ் நான் பின்னர் பணியாற்றினேன்.
அவர் நேர்முகத்தில் மகனின் கடிதத்தைத்  திரும்பித் திரும்பி வாசித்து என்னைப் பார்த்தார்.
 
மகாதேவா  சொல்லி, பெரி ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் அதுவாயினும்  மகானின்  சிறுகச் சொல்லித் தகவல் வழங்கும் ஆளுமையை   அக் கடிதம் காட்டி நின்றது. இக் கடிதம் தவறியமையால் இங்கு இட  முடியவில்லை.எனது 
தவறவிடப்பட்ட ஆவணங்களில் அதுவும் ஒன்று.
 
மகானின் "இப்படியும் நடக்கிறது" என்ற பத்தியை ஈழநாட்டின் பின் பக்கத்தில் படித்துவிட்டுத் தான் முதற்பக்கத்தைப் பார்க்கும் ஒரு காலத்தை ஈழநாடு கொண்டிருந்தது.
 
இப்படியும் நடக்கிறது ஊடுருவி ஒரு "ஸ்டார்ட்டர் (starter) -தொடக்கி வைப்பவர் போல அன்றைய பல வாசகர்களுக்கு இருந்தார் .
 
நான் ரூபவாஹினிக்கு போய் எனக்கு எனது நேர் முகப் பரீட்சசையில் நடந்ததை ஊடுருவி (மகான் ) தமது இப்படியும் நடக்கிறது பத்தியில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
 
அண்மையில் தலைநகரில் ஒரு நேர்முகப் பரீட்சசை நடந்தது.
 
நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் பரீட்சசைக்குத் தோற்றினர் .
 
கூட்டுத்தாபனம் ஒன்றில் காலியாகவுள்ள பதவிக்கு இந்த நேர்முகப் பரீட்சசை நடைபெற்றது .
 
அந்த இளைஞர் 
நீதிபதிகள்" முன்னர் தமது "பைலுடன் " நின்றார் .பல "செர்டிபிகேட்டுகளும்" கைமாறின.
 
 நீதிபதிகளில் ஒருவர்," நீர் ஈழநாடு பத்திரிகையிலும் கடமையாற்றியிருக்கிறீர் . அது யாழ்ப்பாணத்திலிருந்துதானே வருகிறது .அது தடைசெய்யப்பட்டு விட்டதல்லவா?
 
நீதிபதிகளில் மற்றொருவர் ," நீங்கள் சொல்வது சாட்டர்டே ரிவியூவை . ஈழநாடு ஒரு தேசிய பத்திரிகை அது யாழ்பாணத்திலிருந்து நீண்ட காலமாக வருகிறது."
 
உங்கள் காதுகளுக்கு மட்டும் :-
 
இந்த இளைஞரை முதலில் விசாரித்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவரது கேள்வியின் சந்தேகத்தைத் தீர்த்தவர் ஒரு சிங்களப்  பெண்மணி.
 
 மகாதேவாவின் சமூகப்பாங்கை வெளிக்காட்டும் அவரது  "இப்படியும் நடக்கிறது"
 பத்தியில் வந்த சில குறிப்புக்கள் அன்றைய யாழ்ப்பாணத்தினதும் தமிழ் சமூகத்தினதும் காலத்தின் கண்ணாடியாக அமைகிறது.
 
அவற்றில்  சிலவற்றை இங்கு நினைவு கூர்வது அன்னாருக்கு இந்நாளில் செய்யும் அஞ்சலியாகுமென நான் கருதுகிறேன்.
 
எமது அரச ஊடகங்கள் பற்றி அவர் எழுதிய சில:-
 
( தனியார் ஊடகங்கள் மன்னிக்க வேண்டும் ஏனெனில் அக்காலத்தில் வசை வாங்குவதற்கும் புகழ் பெறுவதற்கும் அரச ஊடகங்கள் மட்டுமே இருந்தன)  
 
 
வானொலியின் செய்தி வேகம் 
 
சர்வகட் சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழர் விடுதலைக்கு கூட்டணிச் செயலாளர் நாயகம் திரு அ .அமிர்தலிங்கமும் முன்னாள் திருமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு இரா. சம்பந்தனும் சென்னையிலிருந்து புறப்படுகின்றனர் என்று பி ரி ஐ செய்தி தெரிவித்துள்ளது.
 
மேலே நீங்கள் படித்தது இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இன்றைய தமிழ்ச் செய்தி  அறிக்கை.
 
ஒருவர் கதைத்தால் இரகசியம் இருவர் கதைத்தால் பரம இரகசியம் என்பார்கள் .இதனை சற்றுத் தலை கீழாகப் பார்ப்போம்.
 
பரம இரகசியம்:- மேற்படி செய்தி ஓர் எழுத்துக்கு கூட மாற்றமடையாமல் நேற்று முன்தினம் இரவும் நேற்றுக் காலையும்  இலங்கை ஒலி பரப்புக் கூடுத்த்தாபனத்தின் தமிழ்ச் செய்திகளில் இடம்பெற்றிருந்தன.
 
காதோடு காதாக :- திரு அமிர்தலிங்கமும் திரு சம்பந்தனும் நேற்று முன்தினம் பகலே கொழும்பு திரும்பிவிட்டனர்.
 
ஈழநாடு:07.02.84
*****
 
தமிழ்சசேவையின் கழுத்தறுப்பு 
 
 ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் நூல் வெளியீட்டு விழா சம்பந்தமான செய்தி இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை யின் செய்திப் பிரிவுக்குச் சென்றிருக்கிறது .
 
காலையில் இடம்பெறும் மாகாணச்   செய்தியில் இடம்பெறுவதாக ஏற்பாடு .ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை , குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு விழாச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டது.
 
இது ஒரு செய்தி . மற்றைய செய்தி..
 
தமிழகத்தின் "குப்பை இலக்கியங்கள்" என்று வர்ணிக்கப்பட்டு கடந்த கால இலங்கை அரசால் கட்டுப்படுத்தப்பட்ட சஞ்சிகைகளில்  வெளிவந்த 
சிறுகதைகளைத் தொகுத்து ஜே எம் சாலியினால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா பற்றிய செய்தி, இலங்கை வானொலிச் செய்தியில் அதுவும் நண்பகல் பிரதான செய்தியில் இடம், நேரம், காலம் ஆகிய விப ரங்களுடன்  இடம்பெற்றிருக்கிறது.
 
அப்படியானால் இலங்கைப் படைப்பாளியின் நூல் வெளியீட்டுவிழாவில் தஞ்சாவூர் பல்கலைக்கழக விரிவுரையாளர் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , உதவி அரசாங்க அதிபர் கலந்து கொள்வது செய்தி அல்ல.
 
தமிழக எழுத்தாளரின் மூன்றாம் ரகக் கதைகள் வெளியீட்டு விழாதான் இலங்கை வானொலியின் தரத்துக்குச் செய்தி!
 
ஈழநாடு 23.05.83
 
 *****
 
கனா  கண்ட  காலங்கள் ...
 
இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம் முன்னர் இலங்கை வானொலியாக இருந்தபோது ,அரை மணிநேரம் நடைபெற்ற வர்த்தக சேவை புகழ் பெற்றது. அச்சேவையைத் திறம்பட நடத்தி இந்தியாவிலும் இலங்கை வானொலியை அறிமுகப்படுத்திய பெருமை திரு என் மயில்வாகனனையே சாரும். விளம்பரத்துத்துறையில் பல புதுமைகள் செய்தவர் அவர்.
 
இதுபோல இப்பொழுது குரல் வளமிக்க பி எச் அப்துல் ஹமீத் ஒரு புதுமை  செய்கிறார்-பொருத்தமாக 
 
இரவுச் சேவை இரண்டு இரவின் மடியில் முடிந்ததும் "பி எச்" இப்படி நம்பிக்கை கூறுகிறார்.
 
"நாளை விடியும்போது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டி விடைபெறுவது "என்று பய பக்தியுடன் சொல்கிறார்.
 
எத்தனை அர்த்தங்கள் 
 
(ஈழநாடு 12.11.1983)
 
 ******
 
 
குருட்டு அதிர்ஷ்டம் 
 
தேசிய லொத்தர் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது செய்தியில் நேற்று மாலை பின்வருமாறு வெளியிட்டது:-
 
"அண்மையில் நிகழ்ந்த கலவரத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுவீப்  டிக்கற் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது.   வாரந்தோறும் இந்த அதிகரிப்புக் காணப்படுகிறது.
 
தெற்கில் எல்லாவற்றையும் இழந்து வடக்கே வந்தவர்களின் "அதிர்ஷ்ட நம்பிக்கையை " இது பிரதிபலிக்கிறது அல்லவா?
 
(ஈழநாடு 13.11.1983)
 
******
 
 பனைமட்டை இரகசியம் 
 
கண்டிப்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்து பணம் மட்டைகளைக் கொள்வனவு செய்து அவற்றைக் கண்டிக்கு கொண்டு சென்று தும்புகளாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் அவர் நூற்று நாற்பது இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டார். இதற்கு ஊக்குவிப்பு உபகார பணமாக 14 இலட்சம் ரூபாவையும் அரசிடமிருந்து தட்டிக் கொண்டார் .
 
இந்த விபரத்தை வெளியிட்டவர் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினரும் யாழ் மாவட்ட தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனைச் சங்கத்தின் தலைவருமான எஸ் நடேசு அவர்கள்.
 
வடபகுதி தொழில் அதிபர்கள் ,வர்த்தகர்களுக்கு இது சமர்ப்பணம்.!
 
ஈழநாடு 14.07.1983
 
*******
 
 
பத்திரிகா தர்மம் 
 
ஒரு நாட்டின் ஐக்கியத்தை  கட்டிக் காப்பதில் தேசிய பத்திரிகைகளின் பங்கு எத்தகையது?
 
இது என்ன கேள்வி? ஜனநாயகத்தின் காவல் நாய்களே பத்திரிகைகள்  தானே என்று நீங்கள் முணுமுப்பது ஒருபுறமிருக்கட்டும்...
 
நேற்று வெளியான ஒரு செய்தி சின்ன சந்தேகத்தை எழுப்பிவிட்டிருக்கிறது..
 
ஒரே பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகைகள் அவை .ஆங்கிலம் .சிங்களம் ,தமிழ் மூன்றிலும் தினசரிகள் வெளிவருகின்றன.
 
ஜனாதிபதி ஜே ஆரின் அதி முக்கியம் வாய்ந்த உரை பற்றிய செய்தி அது. அதுவும் ஜூலைக் கலவரம் தொடர்பாக அவர் கூறிய அறிவுரை :-
 
"மீண்டும் ஒரு ஜூலைக்  கலவரம் வரக்கூடாது . தமிழக கடைகளை சிங்களவர்கள் தாக்கியதால் சிங்களவர்கள் தான் நஷ்டம் அடைந்தனர் . . தமிழர்களைத் தோற்கடித்து சிங்களவர்கள்வெற்றி அடைந்தனர்  என்று சில சிங்களவர் நினைத்தால் அது முட்டாள்த்தனமாகும்" என்று "பச்சை"யாகக் கூறியுள்ளார் ஜனாதிபதி .
இது யாருக்கு கூறிய அறிவுரை? சாட்சாத் . சிங்கள மக்களுக்குத்தான். அவர்கள் தான் இந்த அறிவுரையைப் பார்க்க வேண்டும் .படிக்க வேண்டும். ஆனால் செய்தி வந்த விதமோ..?
தமிழ்ப் பத்திரிகையில் அதன் முதல் பக்கத்தில் அது தலைப்புச் செய்தி.
 
அதே நிறுவனத்தின் ஆங்கிலப் பத்திரிகையில் , வரி வரியாக படித்து, தொடர்ச்சிகளையும் பார்த்து ,ஒரு படியாக ஏதோ ஒரு மூலையில் சில வசனங்களில் மூழ்கிக் கிடந்தது அந்தச் செய்தி .
 
ஆனால், சிங்கள பத்திரிகையில் ..பூதக்  கண்ணாடி பிடித்தும் கண்ணுக்குப் புலப்படவில்லை !
 
ஈழநாடு 17.07.84
 
*******
 
தரமான யாழ் வீடியோ 
 
யாழ்ப்பாணத்தில் திரைப்படப் பயிற்சி நிலையம் எதுவும் இயங்குகிறதா?
 
படத்தின் பெயர் :-"கல்லூரி வசந்தத்தில் "
வெறும் பொழுதுபோக்கு  அம்சம் எதுவுமில்லாமல் மாணவ சமுதாயத்தை வழிநடத்தக் கூடிய விதத்தில் படம் அமைந்திருக்கிறது 
தயாரிப்பு :-யாழ்ப்பாணக் கல்லூரி தமிழ் மன்றத்தினர்.
 
இயக்குனர்:- யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் வீ எஸ் நேசானந்தன்  
 
சும்மா சொல்லக் கூடாது .படம் வீடியோப் படம் தான்.ஆனால் தென் இந்தியாவின் தரமான திரைப்படங்களுக்கு நிகராக இருக்கிறது.  சபாஷ்!
 
ஈழநாடு 16.07.84
 
*******
 
 
அமைச்சர் விமலா வீசிய குண்டு 
 
  அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சுக்கு குறித்து இருவர் சுவாரஸ்யமாகக் கதைத்துக்கொண்டிருந்தார்கள் 
 
ஒருவர்:- கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் விமலா ஒரு கூட்டத்தில் நல்லாய் பேசியிருக்கிறாரே ..?
 
மற்றவர்;- நானும்  பேப்பர் பார்த்தனான் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லையே..?
 
ஒருவர்:- அப்படின்னா பேப்பரை ஒழுங்காய் படிக்கேல்லை என்று சொல்லுங்க. அமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? யானையும் புலியும் காட்டில் ஒன்றையொன்று மோதிக்கொள்ளாமல் வாழமுடியுமானால், நாட்டில் ஏன் இரு வேறுபட்ட மக்கள் ஒன்றாகக் கூடி வாழ முடியாது ? என்று அமைச்சர் விமலா கேட்டிருக்கிறார்.
 
மற்றவர்:- அது சரி காட்டில் யானையும் புலியும் வாழ்ந்தாலும் ஒன்றாக வாழ்வதில்லையே ? அதுபோல இரு இன  மக்களும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்  செளக்கியமே..."
 
 (ஈழநாடு 2.11.1983)
 
********
 
 
 காலத்தின்  ஆவணமாக இவரது "இப்படியும் நடக்கிறது " பல நிகழ்வுகளையும் சமூகத்தின்  அனுபவங்களையும் நமக்குத்தந்துள்ளது.
 
கதையல்ல நிஜம் என்ற இவரது நூல் இவற்றின் தொகுப்பாகவும், நினைவலைகள் இவரது ஊடக வாழ்வின் அனுபவங்களையும் தரும் வகையில் ஊடக மாணவர்களுக்கும் தாம் வாழ்ந்த சமூகத்திற்கும் நல்ல இரு ஆவணப் பதிவுகளைத்  தந்துவிட்டுச் சென்றுள்ளார் !
 
மகா தேவாவின் ஆத்மா சாந்தியடைவதாக!

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135874/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.