Jump to content

முரணும் முடிவும் 50 அல்லது 60 வயதை கடக்கும் ஆண்களில் அதிகமானவர்களிடம் ஏற்படும் "பாலியல் பிறழ்வு" !!!


Recommended Posts

 

50 அல்லது 60 வயதை கடக்கும் ஆண்களில் அதிகமானவர்களிடம் ஏற்படும் "பாலியல் பிறழ்வு"

தனிப்பட்ட நடத்தை சார்ந்த பிரச்சினையா?

அல்லது உடற்கூறு சார்ந்த உளவியல் பிரச்சினையா? என்ற பகுப்பாய்வுக்கான காலத்தை நாம் மிக அண்மித்து நிற்கின்றோம்.

மனைவி அல்லாத மாற்றுப் பெண்ணொருவருடனான பாலியல் தொடர்புகள் இந்த வயது சார்ந்த ஆண்களிடம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை ஒரு சமுகச் சிக்கலாக பார்க்கப்பட வேண்டுமா?

பொருளாதார ரீதியில் தனது குடும்பத்தை தன்னிறைவாக்கிய ஒரு ஆண், இத்தகைய நடத்தை குறித்து எந்தவித பச்சாத்தாபமும் அற்றிருத்தல் எமது சமுகத்தில் மிகச் சாதாரணமாக பார்க்கப்படுகின்றதா?

90 வயது வரை பாலியல் வீரியத்தை இயற்கையான உடற்கூற்று ரீதியில் கொண்டுள்ள ஆண்களுக்கு,

55 வயதில் பாலியல் நாட்டம் நிறைவுறும் தனது மனைவிக்கு அப்பால் வேறொருவர் தேவையாவது தவிர்க்கப்பட முடியாததா?

அல்லது தவிர்ப்பதற்கான மார்க்கங்களை இதுவரை நாம் கண்டடையவில்லையா?

என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் பார்க்கவில்லை.

ஆயினும் பார்த்தால், பிட்டு அவிச்சுக் கொட்டுற மாதிரி எதையாவது கொட்டிப் தள்கிறார்கள் என்று நிறுத்துவேன் என்றும் தெரியும்.

நமது சழூகத்தில், அழுத்தம் திருத்தமாக ஆங்கில தூசனம் சொல்வார்கள். தமிழில் சொல்ல வெட்கப்படுவார்கள்.

உங்க பொம்பிளையளே தவறாக நடக்கும் நிலையில் இவர்கள் ஆண்களை மட்டும் கருவாக வைப்பது சரியல்ல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை  ஏதோ தமிழர் மட்டும் செய்யும் செயலாக விவாதிக்கின்றார்கள்.மனித இனம் உருவாகியது முதல் இது உலகளாவிய செயலாக இருந்து வந்துள்ளது. பணக்காரர் மட்டும் செயல் போல் பணத்தை காரணமாக கூறுகிறார்கள். ஆண்கள் மட்டும் இப்படியான செயல்களை செய்வதாகவும் விவாதிக்கின்றார்கள்.

ஊரிலை/இஞ்சை ரியலாய்  நடந்த நாலுகதை எடுத்து விட்டனெண்டால் தெரியும் கூத்து....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை!

பெரும்பாலான பெண்கள் திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுத்துவிடும் என்று நம்புகின்றார்கள்!

அதன் பின்னர் அவர்கள்..கணவனுக்கென வாழ்வதில்லை!  தங்களுக்கெனவே வாழ்கின்றார்கள்!

கணவனால் அங்கலாய்ப்பதை விடவும் வேறு எதுவும் செய்து விட முடியாது!

கணவனும் கெளரவம், குடும்பம் என்ற வார்த்தைகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான்!

தென்னிந்தியாவில் கொஞ்சம் வித்தியாசம் என்று நினைக்கிறேன்!

தலை நிறையப் பூ வைத்து...கணவனும் மனைவியும் படம் பார்க்கப் போகும் காட்சியே.. மனதை அப்படியே அள்ளும்!

ஒரு கார் பயணத்தில் கிடைக்காத சந்தோசம்...வெறும் ஸ்கூட்டர் பயணத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

தடித்த தாலிக்கொடியில் கிடைக்காத சந்தோசம்....வெறும் மஞ்சள் கயிறிலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

 

எமது சமூகத்தின் ஆண்கள் வெறும் கனவுகளிலேயே வாழ்ந்து திருப்தி காணப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, புங்கையூரன் said:

எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை!

பெரும்பாலான பெண்கள் திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுத்துவிடும் என்று நம்புகின்றார்கள்!

அதன் பின்னர் அவர்கள்..கணவனுக்கென வாழ்வதில்லை!  தங்களுக்கெனவே வாழ்கின்றார்கள்!

கணவனால் அங்கலாய்ப்பதை விடவும் வேறு எதுவும் செய்து விட முடியாது!

கணவனும் கெளரவம், குடும்பம் என்ற வார்த்தைகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான்!

தென்னிந்தியாவில் கொஞ்சம் வித்தியாசம் என்று நினைக்கிறேன்!

தலை நிறையப் பூ வைத்து...கணவனும் மனைவியும் படம் பார்க்கப் போகும் காட்சியே.. மனதை அப்படியே அள்ளும்!

ஒரு கார் பயணத்தில் கிடைக்காத சந்தோசம்...வெறும் ஸ்கூட்டர் பயணத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

தடித்த தாலிக்கொடியில் கிடைக்காத சந்தோசம்....வெறும் மஞ்சள் கயிறிலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

 

எமது சமூகத்தின் ஆண்கள் வெறும் கனவுகளிலேயே வாழ்ந்து திருப்தி காணப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

holdinghands.jpg

அப்ப நாங்கள் வெளியிலை நடந்து போகேக்கை கையை பிடிச்சுக்கொண்டு உல்லாசமாய் நடந்து போறதை பொய்யெண்டு சொல்ல வருகின்றீர்கள்.

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை!

பெரும்பாலான பெண்கள் திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுத்துவிடும் என்று நம்புகின்றார்கள்!

அதன் பின்னர் அவர்கள்..கணவனுக்கென வாழ்வதில்லை!  தங்களுக்கெனவே வாழ்கின்றார்கள்!

கணவனால் அங்கலாய்ப்பதை விடவும் வேறு எதுவும் செய்து விட முடியாது!

கணவனும் கெளரவம், குடும்பம் என்ற வார்த்தைகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான்!

தென்னிந்தியாவில் கொஞ்சம் வித்தியாசம் என்று நினைக்கிறேன்!

தலை நிறையப் பூ வைத்து...கணவனும் மனைவியும் படம் பார்க்கப் போகும் காட்சியே.. மனதை அப்படியே அள்ளும்!

ஒரு கார் பயணத்தில் கிடைக்காத சந்தோசம்...வெறும் ஸ்கூட்டர் பயணத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

தடித்த தாலிக்கொடியில் கிடைக்காத சந்தோசம்....வெறும் மஞ்சள் கயிறிலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

 

எமது சமூகத்தின் ஆண்கள் வெறும் கனவுகளிலேயே வாழ்ந்து திருப்தி காணப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

உண்மை புங்கை.
நீங்கள் தென்னிந்தியாவுடன், எம்மவர்களை ஒப்பிட்டதை சிந்தித்து பார்க்கும் போது.... அதன் தாக்கம், பெரிய அளவில் உள்ளது நிதர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை!

பெரும்பாலான பெண்கள் திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுத்துவிடும் என்று நம்புகின்றார்கள்!

அதன் பின்னர் அவர்கள்..கணவனுக்கென வாழ்வதில்லை!  தங்களுக்கெனவே வாழ்கின்றார்கள்!

கணவனால் அங்கலாய்ப்பதை விடவும் வேறு எதுவும் செய்து விட முடியாது!

கணவனும் கெளரவம், குடும்பம் என்ற வார்த்தைகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான்!

தென்னிந்தியாவில் கொஞ்சம் வித்தியாசம் என்று நினைக்கிறேன்!

தலை நிறையப் பூ வைத்து...கணவனும் மனைவியும் படம் பார்க்கப் போகும் காட்சியே.. மனதை அப்படியே அள்ளும்!

ஒரு கார் பயணத்தில் கிடைக்காத சந்தோசம்...வெறும் ஸ்கூட்டர் பயணத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

தடித்த தாலிக்கொடியில் கிடைக்காத சந்தோசம்....வெறும் மஞ்சள் கயிறிலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

 

எமது சமூகத்தின் ஆண்கள் வெறும் கனவுகளிலேயே வாழ்ந்து திருப்தி காணப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

புங்கையர்,

உங்கள் அவதானிப்பில் உடன்பாடு இல்லை. காட்சிகள் எல்லாம் அப்படியே உண்மை இல்லை.

தமிழகத்தில் பெண்களை, ஆண்கள் ஏறக்குறைய கொத்து அடிமைகளாக அல்லவா நடாத்துகிறார்கள். 

கணவர் முதல் பிள்ளைகள் வரை 'நீ' சொல்லி உரிய மரியாதை தராது அழைப்பார்கள். வீட்டில் ஆண்பிள்ளைகளுக்கு தான் சாப்பாட்டில் முன்னுரிமை. கள்ளிப்பால் சமாச்சாரங்கள் நம்மூரில் நிச்சயமாக இல்லையே.

இந்த மல்லிப்பூ விவகாரம் நானும் நேரே பார்த்திருக்கிறேன். வியந்த மறுநாளே, இன்னிக்கு, 'அங்க சக்களத்தியா வீடு, உங்கப்பா வரமாட்டாரு' என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன். கருணாநிதி முதல் காசு வைத்திருபவர்கள் எவ்லோருக்கும் 'அந்த' சின்னவீடு சமாச்சாரம்.

பெண்கள் மனவலி, காயம்.... கவலைப் படமாட்டார்கள். காரணம் இது இல்லாவிடில் இன்னொன்று...

அதற்காக நமது பகுதியில் இல்லை என்றவில்லை. கொஞ்சம் மனக்காயம் உண்டாக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

இப்போது படிப்பறிவு அதிகரிக்கிறது. ஆனால் நமது பகுதி வெள்ளைக்காரர் காலத்தில் இருந்தே, குடும்பம், பிள்ளைகள் கல்வி முன்னேற்றம்.... அதற்காக அன்னிய தேச உழைப்பு.... உழைப்பு. அதுவே நமது சந்தோசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.