Jump to content

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்


Recommended Posts

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்

3legi_PTI.JPG

"ச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இது சட்டத்தின் வழிப்பட்ட தீர்ப்பல்ல. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்  அடிப்படையில் தீர்ப்பு சொல்லாமல், குத்துமதிப்பாக, பஞ்சாயத்து  செய்வது போல் இத்தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. கர்நாடகாவின் நீலிக்கண்ணீரை கண்டு மனம் உருகி, தமிழ்நாட்டிற்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர்  தந்தால் போதும் என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பு," என தமிழக விவசாயிகள் கவலைப்பட்டுக்கொண்டிருக்க... அந்த தண்ணீரை கூட திறந்து விடக்கூடாது என அடம்பிடிக்கிறது கர்நாடகா.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஆகஸ்ட் இறுதிக்குள் காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி நீரை கர்நாடக அரசு வழங்காததையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் “தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி நீரை செப்டம்பர் 5ம் தேதி முதல் அடுத்த 10 தினங்களுக்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது.

1Pro_PTI.JPG

கர்நாடகாவில் பதற்றம்

தமிழகத்திற்கு சட்டப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நீரை நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றதற்காக  இரண்டு நாட்களாக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது கர்நாடகம்.  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்பதற்காக சாலை மறியல், கடையடைப்பு என  கர்நாடகத்தினர் கையிலெடுத்திருக்கும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பதவி விலக சொல்கிறார்கள்... தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கொளுத்துகிறார்கள்... பிரதமர் மோடிக்கு எதிராகவும் போராடுகிறார்கள்... உச்சநீதிமன்றத்தை சாடுகிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது துவங்கிய இந்த போராட்டம், தண்ணீர் திறப்பதாக அறிவித்ததில் உச்சம் பெற்றிருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினரும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினரும் தெடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தண்ணீர் திறந்து விடுவதாக அறிவிப்பு வெளியிட்ட அன்று, மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாண்டியா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

10rally2_EPS.jpg

வாகன போக்குவரத்து நிறுத்தம்

மாண்டியாவை சேர்ந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் ஆகியோரின் உருவப்படங்களையும் கொளுத்தினார்கள். அப்போது உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷம் போட்டபடி கிருஷ்ணராஜ சாகர் அணையை நோக்கி பேரணியாகச் சென்றதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மைசூருவில் காவிரியில் இறங்கி போராட சென்ற விவசாயிகளை போலீஸார் தடுத்ததால் இரண்டு விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். அணையில் குதித்து தற்கொலை செய்வோம் என மிரட்டினார்கள். அதுமட்டுமல்லாது சாம்ராஜ்நகர், ராம்நகர், பெங்களூரு ஆகிய இடங்களிலும் பெரும் போராட்டம் வெடித்தது.

போராட்டத்தால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும்  உடனடியாக நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கர்நாடகாத்திற்கு இயக்கப்பட்ட அனைத்துப் பேருந்துகளும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்துப்போனார்கள். தமிழக பதிவுஎண் கொண்ட லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களும் கூட முன்னெச்சரிக்கையுடன் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.  உச்சகட்டமாக பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் தமிழ்த் திரைப்படங்களைக்கூட  திரையிடக்கூடாது என கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த...  உடனடியாக தமிழ்த்திரைப்படங்களின் காட்சி ரத்து செய்யப்பட்டன.

9block_PTI.JPG

அச்சத்தில் கர்நாடகா வாழ் தமிழர்கள்

கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 9ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 700-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டத்தால் கர்நாடகவாழ்  தமிழர்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.  “காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசின் முடிவுக்கு கர்நாடக தமிழர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது எங்களை வேதனைக்குள்ளாக்குகிறது பெங்களூரு,கோலார் தங்கவயல்,மாண்டியா, உள்ளிட்ட இடங்களில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள் தமிழ் அமைப்பினர்.

கனத்த இதயத்துடன் தண்ணீர் திறக்கப்படுகிறது என்று இரங்கல் அறிவிப்பைப்போலத்தான் கர்நாடக முதல்வர் சித்தராமையா  தண்ணீர் திறப்பு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதை கூட கர்நாடக மக்கள் அதை ஏற்பதாக இல்லை.  மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்ததால், உடனடியாக அவசர அமைச்சரவை கூட்டம் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டார் சித்தராமையா. அதில், நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், குமாரசாமி உட்பட அனைத்துக்கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

160907180400_cauvery1_640x360__nocredit.

தண்ணீர் திறப்பு ஏன்? - சித்தராமையா

கூட்டத்தின் முடிவில் சித்தராமையா, ‘‘கர்நாடகாவில் இந்த ஆண்டில் பருவமழை பொய்த்ததால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் இறுதிவரை தமிழகத்துக்கு காவிரியில் 33 டிஎம்சி நீரை வழங்கி இருக்கிறோம். கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாததால் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் தர முடியாத சூழல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். கர்நாடகாவின் அனைத்து சிரமங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை மதிக்கும் வகையில் தமிழகத்துக்கு காவிரி நீரை முறைப்படி திறந்துவிட்டுள்ளோம். அதேபோல, கர்நாடக விவசாயிகளுக்கும் பாசனத்துக்கும், குடிநீருக்கும் காவிரி நீரை திறந்துவிட முடிவு செய்துள்ளோம். எனவே கர்நாடக மக்கள் எதற்கும் கவலைப்படாமல், பொறுமையாக இருக்க வேண்டும்.  இது தொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்," என்று மக்களுக்கு பதில் அளித்துள்ளார். இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் நிச்சயம் மத்திய அரசிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

4men_PTI.JPG

என்ன செய்யப்போகிறது தமிழகம்?

உண்மையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பெரும் பாதிப்பை சந்திப்பது தமிழகம் தான். பங்கீடு அடிப்படையில் தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. சட்டப்படி கொடுக்க வேண்டிய அளவில் இருந்து மிக குறைந்த அளவு தண்ணீரை தான் திறக்கச்சொல்லி இருக்கிறது. ஆனால் உரிய நீரை திறக்கக் கோரி தமிழகத்தில் மக்கள் திரள் போராட்டங்கள் நடக்கவில்லை... அனைத்துக்கட்சி கூட்டங்கள் கூட்டப்படவில்லை. சட்டத்துக்கும், விதிகளுக்கும் புறம்பான போராட்டத்தை கர்நாடகாவில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்தி வருகின்றன. அதற்கு மக்கள் பெருமளவில் திரள்கிறார்கள். சட்ட விதிகளுக்குட்பட்டு, நம் உரிமைகளை கேட்டு பெற தமிழக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைவதாக தெரியவில்லை.
இன்றும் கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்கிறது. ரயிலை மறிக்கிறார்கள். பஸ்சை அடித்து உடைக்கிறார்கள். தமிழ்  சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்கிறார்கள். ஆனால் நாம் இதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. செய்யவும் கூடாது. ஆனால் நம் கோரிக்கையை, நம் தேவையை நாம் ஒரே குரலில் எழுப்ப வேண்டும். முதலில் அதற்கு நாம் தயாராக வேண்டும்.

http://www.vikatan.com/news/india/68135-karnataka-protest-against-release-of-cauvery-water-to-tamil-nadu.art

Link to comment
Share on other sites

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்

எங்க பார் அதே நினைப்பு...

மக்களது அவலங்களுக்குள்ளும்

அரசியல் பேசவும்

பழி உணர்வுகளை கொட்டவும் சிலரால் மட்டுமே முடியும்...

 

Link to comment
Share on other sites

 

 

தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துருக்கள் சிங்களம் போலவே இருக்கக் காரணம் என்ன? Rolleyes.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அஞ்சரன் said:

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

இன்னும்.....இன்னும் மேலை எதிர் பார்க்கிறம்.....உண்மையிலையே நீங்க ஒரு சிற்பி மாதிரி.. free laughing emoticon

Link to comment
Share on other sites

 

 

 

14222104_848290538603975_836850545612988

14203272_1402409786440226_36078203439673

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

Link to comment
Share on other sites

9 minutes ago, Paanch said:

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

ரொம்ப சிம்பிள் 

அதுதான் நம்ம டிசைன் 
மாத்தவா முடியும்

தமிழக தமிழர்களை விட்டுவிடுவோம்.
எமது மலையக தமிழருக்கு
என்ன செய்தோம்.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

இன்னும்.....இன்னும் மேலை எதிர் பார்க்கிறம்.....உண்மையிலையே நீங்க ஒரு சிற்பி மாதிரி.. free laughing emoticon

ஒரு  தலைவரை  காப்பாற்ற  முடியவில்லை  இப்ப  இருக்கும்  தலிவரையும்  கொடுத்துப்போட்டு  தமிழின  தலைவருக்கு  நாங்க  எங்க  போறது  என்ற   பயம்  தான்  சாமி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிவிவ் பெட்சன் போட்ட பிறகு கண்டம்ட் பெட்டிசன்  போட முடியுமா.. ஈழதோழர்கள் விளக்கதிற்காக .. ஒருவன் கோர்ட்டில் மீண்டும் மறுபரிசிலனை செய்யுங்கள்  என்பது ரிவிவ் பெட்சன் .. நீதிமன்ற ஆணையெ ஒருவன் மதிக்க மறுக்கிறான் என்பது கண்டம்ட் ஆப்த  கோர்ட்டு ..கிந்திய அரசியல் அமைப்பு சட்ட அமைப்பு படி ரிவிவ் பெட்டிசன் போட்ட பிறகு  கண்டம்ட் ஆப்த கோர்ட் வழக்கை போட முடியாது.. அதாவது கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு தண்ணிர் திறந்து விடவில்லை என்றால் . நீங்க ஏன் ரிவிவ் பெட்சனுக்கு போறீங்க முதலில்யே  .கண்டம்ட ஆப் த கோர்ட் ( நீதி மன்ற அவமதிப்பு )  போகணும்.. தவிச்ச தமிழன் வாயிக்கு முதலில்  தண்ணி அப்புறம் மீதி ....! சில அடிப்படை கூட தெரியாதா உங்களுக்கு எல்லாம் ..? இதெல்லாம் அரசியல் ... ஏன்டா நீஙக் எல்லாம் பி.எ.பில் .. எம் . ஏ. பில்  .. படிச்சிருக்கீங்க ...  ஜல்லிகட்டு வழக்கு வரும் போது பீட்டா கூட்டா அமைப்பின்  5   வழக்கு அறிஞர்களெல்லாம் திறமையாக வாதிடும் போது  தமிழ்நாட்டின் சார்பில் வாதம் செய்யும் வழக்கறிஞர எங்கே ? என்று ஜட்ஜ் கேட்ட போது... தூங்கி கொண்டு இருந்த வழக்கறிஞர  தண்ணீர் தெளித்து எழுப்பி கூட்டி வந்தால் என்ன வாதிடுவார்..?ஜல்லிகட்டு போய்விட்டது!!!!    அம்மாவை  கவுரவம் பட ஸ்டையில் எதிரும் புதிருமாக  நின்று வாதாடி  வெளியே கொண்டுவருவதற்கு  பாடுபட்ட பெருமக்கள் .. இதற்கும் வாதாட வேண்டியதுதானே..? ஏன் இப்படி ஒரு வழக்கு தொடர்ந்ந்தால் உடனே  தீர்ப்பு வந்துவிடும்  அது வேணாம்  நம்ம அரசியல் ரம்மிக்காக நாங்க ஜெயிச்சுட்டோம் நாங்க ஜெயிச்சுட்டுட்டோம்  என்னால் முகத்தை கழுவதற்கு தண்ணீர் இதோ வந்து விட்டது பார் .. உங்க .. கழுவதற்கு இதோ தண்ணீர் உண்மையில் இது 15 டி.எம்.சி எதற்குமே ???


டிஸ்கி:


 இதற்கு ஒரே தீர்வு  இந்த இரண்டு திருட்டு கழங்களின் பிடியில்  இருந்து விடுபட்டு உண்மையான தமிழன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதுவும்  சட்ட நுணுக்கங்கள் தெரிந்த ..யாருக்கும் விலை போகாத ... மக்களுக்காக....தமிழன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்

டிஸ்கிக்கு டிஸ்கி :

தனிபட்ட முறைய்யில் என்னை தாக்க விரும்பும் பெருமக்கள் .. ஏதோ 6/2 (1+2) = ? மாதிரி  குதர்க்கமாக  குதரவேண்டாம் ... பல கில்மாக்கல் எனக்கும் தெரியும்  e=mc*2  தனிபட முறையில் மின்னஞ்சல் அனுப்பவும் ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அஞ்சரன் said:

ஒரு  தலைவரை  காப்பாற்ற  முடியவில்லை  இப்ப  இருக்கும்  தலிவரையும்  கொடுத்துப்போட்டு  தமிழின  தலைவருக்கு  நாங்க  எங்க  போறது  என்ற   பயம்  தான்  சாமி .

vadivelu happycrying GIF - vadivelu happycrying tamil GIFs  உதை கேட்டதோடை எனக்கு ஆனந்தகண்ணீர் ஆறாய் ஓடுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அஞ்சரன் said:

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

மகிழ்ச்சி வாழ்க  வளமுடன்
இந்தப்பிரச்சனைக்கும் நம்ம தலைவர் தான் வரணுமா 

Link to comment
Share on other sites

23 hours ago, குமாரசாமி said:

vadivelu happycrying GIF - vadivelu happycrying tamil GIFs  உதை கேட்டதோடை எனக்கு ஆனந்தகண்ணீர் ஆறாய் ஓடுது..

நீங்க  சொன்னதை  தானே  நானு  எழுதின  பிறகு  எதுக்கு  பீல்  பண்ணிட்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2016 at 11:07 PM, Paanch said:

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

அதை யாழிலும் காணலாம்தானே? :)

 

Link to comment
Share on other sites

7 minutes ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனாலும் உறவுகளான தமிழர்கள் யாழ்கள கருத்துகளில் மட்டுமன்றி திண்ணையிலும் கிளர்ந்தெழுந்ததைக் கண்டோமல்லவா. :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

எதை அடிப்படையாக கொண்டு கொந்தளிக்க சொல்கிறீர்கள் வன்னியரே ....?
இறங்கி சில நிமிடத்தில் தமிழ்நாட்டு தமிழனிடமிருக்கும் திராவிடன்,தென்னிந்தியன் மற்றும்  இந்தியன் எட்டிப்பார்த்துவிடுவான் .
பிறகென்ன செய்வது ...நாங்கள் இந்தியர்கள் எங்கள் அரசியலை நாங்களே பார்த்துகொள்வோம் என்று பாடமெடுக்க தொடங்கிவிடுவினம் 

இந்த நிலையை அவர்களே விரும்பி வரவழைத்து கொண்டபின்னர் என்ன செய்வது ....பரிதாபப்படத்தான் முடியும். ஈழத்தமிழர் மீது அடிமைத்தனம் திணிக்கப்பட்டது 
தமிழ்நாட்டு தமிழர்களுக்கோ தமக்கென்று ஒரு தகுதி வாய்ந்த அரசை நிறுவும் ஜனநாயக பொதுவெளியை வைத்துகொண்டே இலவசங்களுக்கும் பணத்திட்க்கும் டாஸ்மாக்கிட்க்கும் சோரம் போய் தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுகொண்டிருக்கின்றனர்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி என்றால் ஏதாவது நடக்கும்

ஆட்சியை அண்டை மாநிலக்காரர்களிடம் கொடுத்துவிட்டு நல்லது நடக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

 

புரிதல் இல்லாத ஒருசிலரால் (தமிழகம், ஈழம், மலேசியா, கனடா எங்கினும்) அவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.. பெரும்பான்மையோர் விளக்கம் தரும்போது ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

14237479_365400737182015_920527568519949

14344893_365400767182012_277313857269475

14324417_365400930515329_425668501509946

14311263_365400997181989_533361505980601

14249974_365401043848651_607506610105234

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.