Jump to content

இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7


Recommended Posts

இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7

apple.jpg

ப்பிள் ரசிகர்களுக்கு இன்றைய இரவுதான் சிவராத்திரி. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 7 மற்றும் ஆப்பிள் வாட்ச் - 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறது. 7,000 பேர் வரை கொள்ளும், அந்த அரங்கில், டெக்னாலாஜி ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இன்று இரவு புதிய ஐபோன் பிறக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் லைவ்வாக காணவும் முடியும்.  ஐபோன் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும், கூட கபாலி ஓபனிங் சீன் போல, இன்னும்  அதுபற்றிய புதுப்புது தகவல்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதுபற்றிய லேட்டஸ்ட் அப்டேட்தான் இந்தக் கட்டுரை. 

(இந்தக் கட்டுரையை நல்லா படிச்சுக்கங்க ப்ரோ.. இதுதான் நீங்கள் படிக்கும் கடைசி ஐபோன் லீக்ஸ் பற்றிய கட்டுரை. ஏனெனில், இன்று இரவு ஐபோன் வெளியாகிவிட்டால், பிறகு அதைபற்றிய அலசல்களும், விவாதங்களும் துவங்கிவிடும் அல்லவா? எனவே படையப்பா சிவாஜி போல, கடைசியாக ஒருமுறை ஐபோன் பற்றி பாத்துடுவோமா?)

கசியவிட்ட ஹாங்காங் ஆப்பிள்:

ஐபோன் 7 வருவது தெரிந்தாலும், அதில் எத்தனை மாடல்கள் வரும் என்பது தெரியாத புதிராகவே இருந்தது. ஆனால் ஐபோன் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், அதனை பற்றிய தகவல்கள் பற்றி ஹாங்காங்-ன் ஆப்பிள் வலைதளத்தில் வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே சேர்க்கப்பட்ட தகவல்கள் நீக்கப்பட்டது. இயர்போன் வாங்கும் பகுதியில், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் என அதில் தெரியவர, அதை கேட்ச் செய்துவிட்டனர் ஐபோன் பாய்ஸ். ஆக இந்த இரண்டு மாடல்கள்தான் வரும் என முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் 3.5 mm ஆடியோ ஜாக் இருக்குமா, இருக்காதா என குழப்பம் இன்னும் தொடர்கிறது. சோ..ப்ளீஸ்..வெயிட்!

apple2.jpg

புதுசா என்ன இருக்கு?

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் டிஸ்பிளேவில் எந்த மாற்றமும் இல்லாமல் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் அளவிலேயே இருக்கும் என தெரிகிறது.  ஐபோன் 7 பிளஸ் இரண்டு, 12 மெகாபிக்சல் கேமராவுடனும், ஐபோன் 7 ஒரு 12 மெகாபிக்சல் கேமராவுடனும் வெளியாகலாம். ஐபோன் 7 மாடல்களில் இன்டர்னல் மெமரி 16 ஜி.பிக்கு பதில் 32 ஜி.பியாக மாறலாம். மேலும் இம்முறை 25 ஜி.பி மெமரியை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்கின்றனர் ஆப்பிள் பீப்பிள்ஸ். அத்துடன் கூடுதலாக Deep Blue மற்றும் Space Black ஆகிய இரு வண்ணங்களில் வெளியாகலாம். ஐபோன் 2 ஜி.பி ரேம் அல்லது 3 ஜி.பி ரேம் மற்றும் ஆப்பிள் A10  பிராஸசரை கொண்டிருக்கலாம். 

iphone-7-blue.jpg

 

வடிவமைப்பை பொறுத்தவரை மெல்லியதாகவும், வாட்டர் ரிசிஸ்டண்ட் வசதிகளுடன் இருக்கும். ஆப்பிள் ஐபோன் 7, 32 ஜி.பியின் விலை 53,100 ரூபாய், 128 ஜி.பி 61,200 ரூபாய் மற்றும் 128 ஜி.பியின் விலை 71,300 ரூபாயாகவும் இருக்கும் எனவும் எர்திர்பார்க்கப்படுகிறது.  ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ், 32 ஜி.பியின் விலை 61,100 ரூபாய், 128 ஜி.பி 69,200 ரூபாய் மற்றும் 128 ஜி.பியின் விலை 79,300 ரூபாயாகவும் இருக்கலாம்.. கடந்த ஆப்பிள் ஐபோன் 6 எஸ் போல் அல்லாமல் இந்த போன் மிகுந்த வரவேற்பை பெறும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனவே ஐபோன் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி முதலும், இந்தியாவில் தீபாவளி பட்ஜெட்டைக் குறிவைத்து, அக்டோபரிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/information-technology/68117-will-this-be-the-new-iphone-7-feature.art

Link to comment
Share on other sites

ஒன்றுமே இல்லாத சாதா போனை ஏக எதிர்பார்ப்புக்கு எகிறவைத்து விற்கிறதில் அமெரிக்கனை மிஞ்ச ஆள் கிடையாது .oneplus 3 phone இரண்டு சிம் கார்ட்  விலையும் குறைவு  பாவிப்பில் மற்ற போன்கள் கிட்டவும் வராது என்னிடம்  oneplus 1 இரண்டு சிம் உள்ளது whatsapp,முகநூலுக்கு ஒன்றும் தொடர்புக்கு ஒன்றுமா உபயோகத்தில் உள்ளது இதுவரை பிரச்சினை இல்லை .

 

Link to comment
Share on other sites

ஆப்பிள் வாட்ச், சூப்பர் மேரியோ, கலக்கல் ஆப்பிள் நிகழ்ச்சி அப்டேட்ஸ்!

*ஆப்பிள் நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் அவசரப்பட்டு, தனது புதிய ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ் போன்களைப் பற்றி ட்வீட் செய்துவிட்டது ஆப்பிள்.

* ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் லென்ஸ் கேமரா உள்ளது. ஐபோன் 7 வாட்டர் ரெஸிஸ்டன்ட் என்பது பெரிய ப்ளஸ்.

14237688_2021409798085420_49907883554371

* செப்டம்பர் 16ம் தேதி அன்று புக்கிங் ஸ்டார்ட்ஸ்!

* ஆப்பிள் வாட்சில் போக்கிமான் கோ

* ஐபோனில் புதிய சூப்பர் மேரியோ 

* ஆப்பிள் ஸ்டோரில் 140 பில்லியன் டவுன்லோடுகள்

* ஆப்பிள் மியூசிக்கில் 17 மில்லியன் பயன்பாட்டாளர்கள்

14287609_1068520049870609_1621813944_n.j

* ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பிள் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார்

http://www.vikatan.com/news/information-technology/68124-apple-event--iphone-7-launch-updates.art

Link to comment
Share on other sites

ஆப்பிள் வாட்ச், சூப்பர் மேரியோ, கலக்கல் ஆப்பிள் நிகழ்ச்சி அப்டேட்ஸ்!

* எதிர்பார்த்தபடியே ஐபோன் 7-ல் ஆடியோ ஜாக் இல்லை!!

iphonee.jpg

* 25 சதவிகிதம் அதிக ப்ரைட்னஸ், கலர் மேனேஜ்மென்ட், 3டி டச் வசதி கொண்டது ஐபோன் 7

* ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் மாடல்களில் வெளியாகிறது.

* ஐபோன் 7-ல் 7 MP FaceTime HD செல்ஃபி கேமரா, 12 MP பின்புற கேமரா

* வெளியானது ஐபோன் 7…இது தான் ஐபோன் 7-ன் ஃபர்ஸ்ட் லுக் 

iphone%207.JPG

*ஆப்பிள் நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் அவசரப்பட்டு, தனது புதிய ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ் போன்களைப் பற்றி ட்வீட் செய்துவிட்டது ஆப்பிள்.

* ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் லென்ஸ் கேமரா உள்ளது. ஐபோன் 7 வாட்டர் ரெஸிஸ்டன்ட் என்பது பெரிய ப்ளஸ்.

http://www.vikatan.com/news/information-technology/68124-apple-event--iphone-7-launch-updates.art

புதுமையின் உச்சம் : ஏர்பாட்ஸ் - ஐந்து மணிநேரம் நீடிக்கும் பேட்டரி கொண்ட வையர்லெஸ் ஹெட்போன்ஸ்

ipods.JPG

ipods1.jpg

* எதிர்பார்த்தபடியே ஐபோன் 7-ல் ஆடியோ ஜாக் இல்லை!!

Link to comment
Share on other sites

வெளியாகியது ஐ-போன் 7 : விலை தெரியுமா?

 

 

 

உலகமே எதிர்ப்பார்த்த புதிய பொழிவுடன் ஐ-போன் 7, மாதிரிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் முன்னணி உள்ள ஆப்பிள் நிறுவனமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியது. 3806E63100000578-3778252-The_iPhone_7_wi

அதே போன்று இந்தாண்டின் ஐபோன் 7 மாதிரிகளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்  புதிய மாதிரி ஐபோன் 7, ஐ போன் 7 பிளஸ், மற்றும் கைக்கடிகாரம் 2 மாதிரிகள்  அறிமுகப்பட்டுத்தப்பட்டன. 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் ஐபோன்களை அறிமுகம் செய்து, அதன் சிறப்பம்சங்கள் கூறினார்.

 

இந்த கையடக்கத் தொலைபேசியில் இருக்கும் புதிய வசதிகள் குறித்து டிம் குக் தெரிவிக்கையில்,

 

சூப்பர் மெரியோ ரன்:

ஆப்பிள் ஐபோன் 7 இல் உலகில் பிரபலமான மரியோ விளையாட்டு அறிமுகமாகிறது. மக்கள் அதிகம் இந்த விளையாட்டை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.DF0f5fdf.jpg

 

ஆப்பிள் கைக்கடிகாரம் மாதிரி 2:

ஆப்பிள் கைக்கடிகாரம் மாதிரி 2 அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ஆப்பிள் வாட்சின் டிசைனில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தண்ணிருக்குள் 50 மீட்டர் ஆழம் வரை ‛வோட்டர் புரூப்' மற்றும் ‛ஸ்விம் புரூப்' அம்சம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கைக்கடிகாரம் டூயல் - கோர் புரசசர் உடன் வேகமாக செயல்படும் திறன் கொண்டது. மேலும் கைக்கடிகாரத்தில் ஜி.பி.எஸ்., வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.3806D7E300000578-3778252-A_new_Watch_ver

 

ஜொக்கிங் மற்றும் ஓட்ட பயிற்சி பெறுபவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆப்பிள் நிறுவனம் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பல்வேறு மேம்பாடுகளை கொண்ட நைக் பிளஸ் கைக்கடிகாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 54 ஆயிரம் ரூபாய் ஆகும்.3806D01A00000578-3778252-Jeff_Williams_o

 

போக்கிமேன் கோ:

உலகம் முழுவதும சமீபத்தில் மிகவும் பிரபலமான ‛போக்கிமேன் கோ' விளையாட்டு ஆப்பிள் கைக்கடிகாரத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3806E4BE00000578-3778252-image-a-74_1473

ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் :

ஐபோன் 7 ‛வோட்டர்- டஸ்ட் புரூப்' வசதியுடன் வருகிறது. இந்த கையடக்கத் தொலைபேசி ஜெட் பிளக், பிளக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய வர்ணங்களில் வெளியாகிறது. fs0fsf1561fdfs.jpg

ஆப்பிள் 7 பிளஸ்சில் பிரதான கெமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஒப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸ{ம், வைட் ஹேங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸ{ம் கொடுக்கப்பட்டுள்ளது.

3807191000000578-3778252-The_iPhone_7_plfsdfd6f2dfsfs.jpg

ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளம்

இந்த போன் ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளத்தில் செயல்பட கூடியது.

3806AC2000000578-3778252-The_handset_wil

ஹெட் போன் 

ஐபோன்7 மற்றும் 7 பிளஸில் ஸ்டிரியோஸ்பிக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக ‛வயர்லெஸ் - ஹெட் போன் ' வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்டுள்ளது.

f0dfd1f5d1fdfd.jpg

ஐபோன் 7 ல் வை-பை இணைப்புடன் 14-15 மணி நேரம் செயலில் இருக்கும் அளவிற்கு பேட்டரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

380715F300000578-3778252-The_new_159_wir

ஐ-கிளவுட்:

ஐபோன்7 ஐயும் மற்ற ஆப்பிள் தயாரிப்புகளையும் இனைக்கும் வகையில் ஐ-கிளவுட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏனைய ஆப்பிள் தயாரிப்புகளுக்கு கோப்புகளை பரிமாற்றம்செய்ய முடியும்.

3806CC1B00000578-3778252-The_new_Watch_a

ஆப்பிள் பே:

ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ‛ஆப்பிள் பே' வை பயன்படுத்தும் வகையில் ‛என்.எப்.சி.,' தொழினுட்ப வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம பணபரிமாற்றம் செய்யமுடியும்.

 

பியுசன் புரொசசர்:

ஐபோன் 7 பியுசன் புரொசசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புரொசசர்  சுமார் 3.3 பில்லியன் டிரான்சிஸ்டர்களை கொண்டு செயல்படுகிறது. அதனால் இதன் செயல்திறன் பல மடங்கு அதிகமாக இருக்கும்

3806E4BE00000578-3778252-image-a-74_1473

அதிக சேமிப்புத்திறன்:

ஐபோன் 7 ல் புதிதாக 128 மற்றும் 256 ஜி.பி., உள்ளடக்க மெமரியுடன் வெளியாகிறது. குறைந்தபட்சமாக 32 ஜி.பி., போனும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

3806B1B000000578-3778252-Apple_is_alsop_

விலை: 

ஐபோன் 7 இன் ஆரம்ப விலை ரூ. 95000 (32 ஜிபி), ஐபோன் 7 ப்ளஸ் தொடக்க விலை ரூ. 112847 (32 ஜிபி) எனவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் அதிகார்பூர்வ விலை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஐ-போன் 7, 7 ப்ளஸ் மாதிரி கையக்கத் தொலைபேசிகள் அமெரிக்க சந்தைகளில் செப்டம்பர் 16 முதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அதற்கான இணைய முன்பதிவு நாளை முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

http://www.virakesari.lk/article/11110

Link to comment
Share on other sites

#iphone7: ஆப்பிள் எடுத்த முடிவு சரிதானா?

a2.jpg

ப்பிளின் புதிய ஐபோன்களோடு, சில சர்ச்சைகளும், சிக்கல்களும் சேர்ந்தே வெளியாகியிருக்கின்றன. அதாவது ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன்களில் “ஹெட்போன் ஜாக்” எனப்படும் பாடல் கேட்பதற்கான வொயரை சொருகும் 3.5 மிமீ போர்ட்டை நீக்கியுள்ளது. இதற்குப் பதிலாக, வயர்லெஸ் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் வகையில் “ஏர்பாட்ஸ்” என்னும் வயர்லெஸ் ஹெட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் ஆதரவும் இருக்கின்றன. ஆப்பிள் செய்தது சரிதானா?

இதற்கு ஆப்பிள் சொல்லும் காரணம் என்ன?

ஐபோன்களிலிருந்து ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் தகவலை அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் சில்லேர் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது “கடைசியாக இருப்பது ஒரே வார்த்தைதான்: நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் மூலம் முன்னேறி, நம்மை முன்னேற்றிடும் புதிய விஷயங்களை செய்வதே அது” என்றார்.  நூறு வருடங்களுக்கும் மேலான, ஆடியோ ஜாக் எல்லாம் பழசு. இனி எல்லாம் வயர்லஸ்தான். அதற்கு இதுவே முதல்படி எனக் கூறியிருக்கிறது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் சொல்லும் காரணங்கள் இவைதான்.
         1. "ஒவ்வொரு வருடமும் மக்கள் புதுப்புது சிறப்பம்சங்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் ஐபோன்களின் வடிவமைப்பு, வாட்டர் ப்ரூப், சிறந்த பேட்டரி போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக ஹெட்போன் ஜாக்கை நீக்கியுள்ளோம்"
         2. மேலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது இதுபோன்ற கருத்துக்கள் சகஜம்தான் எனக்கூறும் ஆப்பிள், இன்னும் சில வருடங்களில் மக்களிடையே நாம் ஏன் இத்தனை வருடமாக வயர்லெஸ் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுமென்றும் சவால்விடுகிறது.

a3.jpg

இனி பழைய “ஹெட் போன்களை” ஐபோனில் பயன்படுத்த வழியே இல்லையா?

         உங்களின் பழைய ஹெட்போன்களையும் புதிய ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்சில் பயன்படுத்தலாம். ஆனால் அதை நேரடியாக இல்லாமல் அதற்குரிய “அடாப்டர்” மூலம் லைட்னிங் போர்ட் எனப்படும் நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் பகுதியில் இணைத்து பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அந்த அடாப்டர், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வாங்கும்போது இலவசமாக வழங்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

ஆடியோ ஜாக்கை நீக்கியதால் ஏற்படும் பிரச்சனைகள்:

a4.jpg

நமது பழைய ஹெட் போன்களை பயன்படுத்தி பாடல் கேட்க வேண்டுமென்றால் நம்மிடம் எப்போதும் அந்த அடாப்டர் இருக்க வேண்டியது அவசியம். நம்மில் பலபேர் மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொண்டே பாடல் கேட்பது வழக்கம். ஆனால் அது இனி சாத்தியமில்லை. ஏனெனில் அந்த அடாப்டர் இணைக்கப்பட்டிருப்பது நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் “லைட்னிங் போர்ட்” ஆகும். எனவே ஒரே சமயத்தில் பாடல் கேட்டுக்கொண்டே மொபைலை சார்ஜ் ஏற்றுவது சாத்தியமில்லை. ஆடியோ ஜாக்கை நீக்கியதற்காக ஆப்பிள் நிறுவனம் சொல்லும் காரணங்களை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடியோ ஜாக்கோடும், ஐபோனை விட சிறந்த பேட்டரி திறனும், வாட்டர் ப்ரூப்  உள்ள மொபைல்களை மற்ற நிறுவனங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் இந்த விளக்கம் போதுமானதாக இல்லை.
மேலும் நாம் பயன்படுத்தும் மொபைல், டேப்லட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களில் அத்தியாவசமான தேவை என்று நாம் நினைக்கும் வசதிகளை ஆப்பிள் நீக்குவது இது முதல் முறையல்ல. அவ்வாறு ஆப்பிள் நீக்கியவற்றில் முக்கியமான விஷயங்களை கீழே காணலாம்.

பிளாப்பி டிஸ்க்:

1976 முதல் 1998 வரை பிளாப்பி டிஸ்க் என்னும் கணினிகளுக்குக்கிடையே தகவல் பரிமாற உதவும் முக்கியமான வழி. அப்போது பயன்பாடு உச்சத்தில் இருந்தது. அதில் அதிகபட்சம் 1.4 எம்பி தகவல்களை மட்டுமே சேமிக்க முடியும் என்பது வேறு கதை. ஆனால் 1998-ம் ஆண்டு ஆப்பிளின் ஐமேக் ஜி-3 என்னும் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பிளாப்பி டிஸ்க் நீக்கப்பட்டு நாம் தற்போது பயன்படுத்தும் யூஎஸ்பி சேர்க்கப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இப்போது நாம் பயன்படுத்தும் யூஎஸ்பிக்கு அதுவே தொடக்கம்.

டிவிடி டிரைவ் :

இன்றுவரை நாம் பயன்படுத்தி வரும் டிவிடிக்களை கிட்டத்தட்ட ஆப்பிளின் ஐமேக் கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக்புக் லேப்டாப்களிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கிவிட்டனர். குறைந்து வரும் டிவிடி பயன்பாடு, அதிகரித்து வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு மற்றும் கணினியின் வடிவமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக டிவிடி டிரைவ் நீக்கப்பட்டதாக அப்போது, கூறப்பட்டது.

a1.jpg

இப்போதும் கூட, "ஆப்பிள் எடுக்கும் இதுபோன்ற அதிரடி முடிவுகளால்தான் இன்னும் முன்னணியில் இருக்கிறது. இதுதான் ஆப்பிளின் ஸ்டைலே!" என்கிறது ஒரு க்ரூப். "அப்படி இயர்போன் போர்ட்டை நீக்கும் அளவுக்கு, அப்படி என்ன அதில் குறை இருந்தது?" என்கிறது ஒரு க்ரூப். இது ஆப்பிளின் துணிச்சலா? சறுக்கலா? வழக்கம் போலவே, காலத்தின் கையில்தான் விடை இருக்கிறது!

http://www.vikatan.com/news/information-technology/68211-why-apple-just-eliminated-the-headphone-jack-from-the-iphone-7.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

2016, செப்டம்பர் மாத தொடக்கத்தில்,  ஐபோன் 7  மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஐ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொள்ளளவில் கிடைக்கின்றது.  இதன் விலை அமெரிக்க டாலரில் $649 இருந்து $849 வரையாகும். இந்திய மதிப்பில் 43 ஆயிரத்திலிருந்து 56 ஆயிரம் ரூபா வாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்  7, 4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.  இதன் எடை 138 கிராம்.

4 ஜிபி ரேம் நினைவகத்துடன் , ஆப்பிளின் விஷேட A10 பியூசின்  சிப்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2.4GHz பிராசஸர் பொருத்தியுள்ளதால் அதிக ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தல் மற்றும் அதிக நேரம் பேட்டரி சார்ஜ் நீடித்தல் போன்றவற்றை அதிக வசதிகளாக தரலாம் என எதிர்பார்க்கின்றனர்.

ஐபோன் 7 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.  3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மாடலில் 14 மணிநேரம் இயங்கும் பேட்டரி உள்ளது 
ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்-ல் முதல் முறையாக இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.  ஹெட் போன் ஜாக் நீக்கி வயர்லெஸ் ஆடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் புதிதாக வயர்லெஸ் “ஏர்பாட்ஸ்” என்னும் ஹெட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் போன்றவைகளுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஐபோன் 7 வெளியாகிய நாட்களுக்கு அண்மையிலேயே சாம்சங்க் இற்கு சோதனைக்காலம் ஆரம்பமானது.  சாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 தொலைபேசிகள் வெடிக்கத்தொடங்கியதுடன் அவற்றை உடனடியாக மீளப்பெறுவதாக அறிவித்தது சாம்சங்க்.

சாம்சங்க் கேலக்ஸி நோட்7 - ஐ பயன்படுத்த வேண்டாம் - சாம்சங்க் நிறுவனம் அறிவிப்பு

ஹேட்போன் ஜாக் ஐ முழுமையாக நீக்கிய ஆப்பிள் அதற்கு பதிலாக சார்ஜ் செய்யும் இடத்திலேயே பொருத்தக்கூடிய (lightning connector ) ஹெட்போன்களை தருகின்றது. எனினும் தனியாக Lightning to 3.5 mm Headphone Jack Adapter ஐயும் தருகின்றது. இதை தவறவிட்டால் 9 டாலர்களுக்கு வாங்க வேண்டும். எவ்வாறாயினும் சார்ஜ் செய்துகொண்டு இசையையும் கேட்க வேண்டுமென்றால் அதற்காக மேலும் 49 டாலர்கள் செலவு செய்து  iPhone Lightning Dock ஐ வாங்க வேண்டும்.


ஐபோன் 7 வெளிவந்ததை அடுத்து ஐபோன் 6 மற்றும் 6 ப்ள்ஸின் விலைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.  இதன்படி இந்தியாவில் ரூபாய் 22000 வரை விலை குறைந்துள்ளதாக தெரியவருகின்றது.

ஐபோன் 7 முதல் பார்வை வீடியோ

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.