Jump to content

ஒருதலைக் காதலால் 3 கொலைகள்: இளைஞர்களின் மனதை கெடுக்கிறதா திரைப்படங்கள்?


Recommended Posts

swathi_2994475f.jpg
 

தமிழக காவல் துறை அதிகாரிகள் பேசுகிறார்கள்

ஒருதலைக் காதலால் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் கடந்த ஜூலை 24-ம் தேதி காலையில் ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப் பட்டார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரூரில் கல்லூரிக்குள் நுழைந்து சோனாலி என்ற மாணவியை, அதே கல்லூரியில் படித்த உதயகுமார் என்ற முன்னாள் மாணவர் கட்டையால் தாக்கி கொலை செய்தார். ஒருதலைக் காதலை ஏற்க சோனாலி மறுத்ததால் ஆத்திரமடைந்த உதயகுமார் இவ்வாறு செய்துள்ளார்.

இதே ஒருதலைக் காதலால் தூத்துக் குடியில் நேற்று தேவாலயத்தில் பிரார்த் தனை செய்து கொண்டிருந்த ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த 3 கொலை களும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறிய கருத்துகள் வருமாறு:

police_2994473a.jpg

மா.கருணாநிதி (ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர்)

‘‘ஒரு திரைப்படத்தை பார்க்கும் குழந்தை, அதன் மனதில் பதிந்த காட்சிகளை சில நாட்களுக்கு தனது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கச் செய்யும். இதேபோல இளைஞர்களும் நடந்து கொள்கின்றனர். இது ஒரு மன பாதிப்பு பிரச்சினை. இதற்கு ‘copycat’ என்று பெயர். முந்தைய காலங்களில் திரைப்படங்களில் வரும் ஹீரோக்கள் நல்லவராகவும், உயர்ந்த இடத்தில் இருப்பவராகவும் காண்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவரும் பல படங்களில் கீழ் நிலையில் இருக்கும் ஹீரோ உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்ணை காதலிப்பதும், தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்வதன் மூலம் அவரை அடைய முடியும் என்பது போலவும் காட்சிகள் உள்ளன. இதையே இளைஞர்களும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த நினைக்கின்றனர். தற்போது நடை பெற்றுள்ள 3 கொலைகளும் இதே ரகத்தை சேர்ந்தவைதான்.

ஒரு வீட்டில் உடைந்திருக்கும் ஜன்னல் குற்றவாளிகளுக்கு அழைப்பு விடுப்பது போல இருக்கும். குற்ற வாளிகள் அடைய நினைக்கும் இலக்கை கடினமாக்குவதே நம்மை பாதுகாப்பதற்கான சிறந்த வழி. ஆண்களின் இலக்கு பெண்கள். ஆண்கள் நன்றாக பழகினாலும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தவறு செய்கிறார்கள். எனவே பெண்கள் தங்களை கடினமாக்குவதன் மூலம் ஆண்களின் வன்முறையில் இருந்து தப்பிக்கலாம். ஆண்கள் எவ்வளவு பழகினாலும் அவர்களை குறிப்பிட்ட இடைவெளியில்தான் எப்போதும் வைக்க வேண்டும். பெண்கள் தங்களால் காத்துக்கொள்ள முடியாத பட்சத்தில் குடும்பத்தினரின் உதவியை உடனடியாக கேட்க வேண்டும்.

காவல் நிலையத்துக்கு வரும் அவசர புகார்களை, காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ்காரரே உடனடியாக விசாரிக்க வேண்டும். ஆய்வாளர் அல்லது உயர் அதிகாரி வரும் வரை காத்திருக்கக் கூடாது. இப்படி செய்வதன் மூலம் பல தவறுகள் தடுக்கப் படும்" என்று கருணாநிதி தெரிவித்தார்.

பி.கே.செந்தில்குமாரி (காவல் கண்காணிப்பாளர்)

இதுபோன்ற கொலைகள் திட்ட மிட்டு அல்லது பழிக்குப் பழியாக நடப்பதில்லை. ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களில் திடீரென ஈடுபடுவதால், அதன் பின்விளைவுகள் என்ன என்பது அவர்களுக்குத் தெரி யாது.

ஒரு கொலையால் தனது குடும்பம் மீதான சமூக பார்வை குறித்து அவர் களுக்கு சரியான புரிதல் இருக் காது. மனப்பக்குவம் இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத, தங்களிடம் இருக்கும் குறைகளை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள்தான் இப்படி நடந்துகொள்வார்கள். இதற்கு, முகநூல், வாட்ஸ்-அப் போன்றவையும் ஒரு காரணம் என கூறலாம்.

முகநூல் பக்கம், வாட்ஸ்-அப் குழுக்களில் தங்கள் கருத்துகளை தைரியமாக பதிவு செய்யும் பெரும் பாலானவர்கள் நிஜத்தில் அப்படி நடந்துகொள்வதில்லை. பொது இடத்தில் தயக்கத்துடன் செயல்படுகின்றனர். சுவாதி கொலை சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த நிலை மாற வேண்டும். சமூகத்தின் மீதான அக்கறையை தைரியமாக வெளிக் கொண்டுவர வேண்டும்.

ஒரு பிரச்சினை நம்மை பாதிக்காத வரையில் நமக்கு ஏன் கவலை என்றிருக்கும் நிலை மாற வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியமானது. மாறிவரும் சமூகத்தின் நிலையைக் கருதி பள்ளி, கல்லூரி அளவில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். பிள்ளைகளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்துகொடுக்கும் பெற்றோர், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ப தையும் கண்காணிக்க வேண்டும்.

எஸ்.விஜயகுமார் (திருநெல்வேலி, உதவி ஆணையர்)

தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு புறத்தூண்டுதல்களால் இளை ஞர்களும், இளம் பெண்களும் பாதிக்கப் படுகிறார்கள். அத்தகைய புறத்தூண்டு தல்களுக்கு ஆளாகாமல் இருக்க இளைஞர்களை தயார்படுத்த வேண்டும். பல்வேறு தடைகளைத் தாண்டி இளைஞர்களும், இளம் பெண்களும் சாதிக்கிறார்கள் என்பதை வளரும் இளம் பருவத்தினருக்கு உணர்த்தினால் இது போன்ற சம்பவங்களை தடுக்கலாம்.

முன்பெல்லாம் பள்ளிகளில் நன்னெறி கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போதெல்லாம் அது இல்லை. பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவியருக்கு நல்லொழுக்க வகுப்புகளை நடத்த வேண்டும். பாலின வேறுபாடு இருக்கக் கூடாது என்பதை இளம் வயதிலேயே அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். அதேநேரத்தில் வருங்காலத்தில் இதுபோன்ற குற்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும்.

ஆ.சரவணன் (திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்)

சட்டங்களை கடுமையாக்கி குற்ற வாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்து விடுவதால் மட்டுமே இது போன்ற காதல் விவகார கொலை களுக்கு தீர்வு காண முடியாது. படிக்கின்ற வயதில் ஏற்படுவது காதல் அல்ல. அது ஒரு முகக் கவர்ச்சியே. விளையாட்டாக காதலிக்கத் தொடங்கி அதில் ஏமாற்றம் ஏற்படும்போது உடனிருக்கும் நண்பர்கள், சமூக நெருக்கடியால் அவர்கள் கொலை செய்யும் அளவுக்கு துணிகின்றனர். இந்த தவறுக்கு, அவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. குடும்ப சூழல், பள்ளி, சினிமா, டிவி மற்றும் சமூகச் சூழல் உள்ளிட்டவை மறைமுக காரணிகளாக இருக்கின்றன.

குறிப்பாக சினிமாவில் சொல்லப்படும் காதல், வன்முறை ஆகியவற்றை உண்மை என நினைக்கின்றனர். காதலிக் கும் பெண் மறுக்கும்போது, சினிமாவில் வரும் ஜோடிப்பு காட்சிகளை நிஜமாக்க துணிகின்றனர். இதில் பெற்றோர்கள், கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. தற்போது பள்ளிகளில் மதிப்பெண் கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒழுக்கம் சார்ந்த நல்லொழுக்க கல்விக்கு முக்கி யத்துவம் தரப்படாததால் பள்ளிகள் அளவிலேயே மாணவர்கள் தனி மனித ஒழுக்கம் இல்லாமல் வளருகின்றனர்.

10-ம் வகுப்பு வரை மட்டுமே மாண வர்கள், பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். அதன்பின், அவர்கள் பார்க்கும் சினிமா, சமூகத்தை பார்த்து பெண்களை பற்றி தவறாக சிந்திக்க தொடங்கிவிடுகின்றனர். தற்போது எல்லா மாணவர்களிடமும், ஸ்மார்ட் போன் உள்ளது. அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மாணவர்கள் எங்கு செல்கின்றனர், என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். பெண் குழந்தைகள் வெளியே செல்லும்போது சுற்றியுள்ளவர்களிடம் எப்படி பழக வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் கற்றுக் கொடுப்பதுடன், கண்காணிக்கவும் செய்கின்றனர். அதே போன்று ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். மாண வர்கள் பலரின் மனநிலை தெளி வற்றே உள்ளது. பலவீனமான மனநிலை யில் சில நேரங்களில் காதல் விவ காரம் மட்டுமல்லாமல் அவர்கள் நினைக்கும் காரியங்கள் நடக்கா விட்டாலும் விரக்தியடைவதுடன், கோபப் படுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கின்றனர்.

பெண் குழந்தைகளும் பெற்றோர் படிப்பை நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் தங்களுடைய பிரச்சினை களை பெற்றோரிடம் சொல்லாமல் மறைக்கின்றனர். இதுவே கடைசியில் விபரீதமாக முடிகிறது. இதற்கு பெற்றோர், கல்வி நிறுவனங்கள், சமூக தன்னார்வ அமைப்புகள் இணைந்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகள் அளவில் மாணவர்களுக்கு நன்னெறி கதைகள், பாடங்களை சொல்லிக் கொடுத்து ஆலோசனை வழங்க வேண்டும்.

police1_2994474a.jpg

டி.ஆர்.ராஜசேகர், (ஓய்வுபெற்ற உதவி ஆணையர்)

ஒருதலைக் காதலால் நிகழக் கூடிய கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் போதிய அளவு அக்கறை காட்டாததே. ஆண்களைப் பொறுத்தவரை 20 முதல் 25 வயது வரை பாலின ஈர்ப்பு அதிகமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளிக்காவிட்டால், சிலர் தவறான பாதையை தேர்வு செய்துவிடுகின்றனர். படிப்பு, தொழில் போன்ற பயனுள்ள செயல்களில் நேரத்தை செலவிடாமல், காதல் செய் வதில் நேரத்தை வீணடிக்கின்றனர். இதில் ஏமாற்றம் நேரிடும்போது, அதை தாங்க இயலாமல், கொலைக்கும் துணிந்து விடுகின்றனர். இந்த போக்கு, தற்போது அதிகரித்து வருவது நல்லதல்ல. ஓர் ஆணும் பெண்ணும் நெருங்கி பழகும்போது எந்த இடத்திலும் எல்லை மீறாமல் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். ஆண்களிடமிருந்து எந்த வகையிலாவது நெருக்குதலோ, தொந்தரவோ இருந்தால், அதுபற்றி உடனடியாக குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக ஒருதலைக் காதல் விவகாரங்களில் இது முக்கியம். அப்போதுதான் பிரச்சினைக்கு ஆரம்ப நிலையிலேயே தீர்வுகாண முடியும். இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நடத்தையில் சிறு மாறுதல் என்றாலும் உடனடியாக அவர்களை அழைத்துப் பேசி எண்ணம், செயலை நல்வழிப்படுத்த வேண்டும். வீட்டுக்கு நல்ல குழந்தையாக இருப்பவர்களால்தான், நாட்டுக்கு நல்ல குடிமக்களாக இருக்க முடியும். "குறிப்பிட்ட பேருந்துக்காகவோ அல்லது பெண்ணுக்காகவோ ஒரு போதும் காத்திருக்க வேண்டாம். அடுத் தது விரைவில் வரும்" என்ற பெர்னாட் ஷாவின் வார்த்தைகளின் அர்த்தத்தை ஒவ்வொருவரும் உணர்ந்துகொண்டால், இதுபோன்ற பிரச்சினைகளே இருக்காது.

அ. கலியமூர்த்தி (ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர்)

பெற்றோர்கள் மரத்தின் வேர்களைப் போன்றவர்கள். பிள்ளைகள் அதில் பூத்துக்குலுங்கும் பூக்களைப் போன்றவர்கள். வேர்களின் பலத்தைப் பொறுத்தே, பூக்களின் வசீகரம் அமையும். வேர்கள் பட்டுப்போனால், பூக்கள் கெட்டுப்போகும். பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து, அவர்களுடன் செலவிடும் நேரம். இப்போதைய காலகட்டத்தில், பிள்ளைகளுடன் பெற் றோர்கள் நேரம் செலவிடாமல் இருப்பது அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்காக எவ்வளவுதான் சொத்து சேர்த்து வைத்தாலும், அவர்களிடம் போதிய நேரத்தை செல விடாவிட்டால் குழந்தைகள் வீணாகி விடுகிறார்கள். பிள்ளைகள் கெட்டுப் போகின்றனர் என்பதை கடைசியாகத் தெரிந்துகொள்பவர்கள் பெற்றோர்களே.

குழந்தைகளின் முதல் உலகம் பெற்றோர். ஆனால் குழந்தைகளின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்க பெற்றோருக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் தகாத நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துதல், புகைபிடித்தல், போதைப் பழக்கம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். மதுவே பெரும் பாலான தவறுகளுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது.

பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் இவர்க ளுக்கு, "நோ" சொல்லத் தெரிவ தில்லை. இப்படி பழகிய குழந்தைகள், ஒருதலைப்பட்சமாக காதலித்த பெண் கிடைக்காவிட்டால் தவித்துவிடுகின்ற னர். அந்த பெண், தன்னை விரும்ப வில்லை என்றால், அதை ஒப்புக் கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் கொண்டவர்களாக இப்போதைய பிள் ளைகள் இல்லை. தனக்கு கிடைக்காத வர், யாருக்கு கிடைக்கக்கூடாதென நினைக்கின்றனர். படிக்கும்போது நல்லது எது, கெட்டது எது என்று நெறிசார்ந்த வாழ்க்கை முறைகளைச் சொல்லித்தர ஆசிரியர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. அவர்கள் மதிப் பெண்களின் பின்னாலேயே ஓடிக்கொண் டுள்ளனர். இந்த சூழலில் ஊடகங்களில் (சினிமா, டி.வி, இணையதளங்கள்) பாலியல் தொடர்பான தகவல்கள் எளிதில் காணக் கிடைக்கின்றன. முறை யற்ற பாலுணர்வு, வக்கிரமான எண்ணம் போன்றவை குறித்த செய்திகள் வரு கின்றன. இவற்றைப் படிக்கும் இளை ஞர்கள், இதுதான் உலக இயல்பு என நினைத்துக் கொண்டு தாங்களும் அதுபோல செயல்பட முயற்சிக்கின்றனர்.

"சிறப்புடை மரபின் பொருளும், இன்பமும் அறத்து வழிப்படுஉம்" என்பது புறநானூறு. தனக்கோ அல்லது குடும்பத்துக்கோ வரும் பொருளும், இன்பமும் முறையான வழியில் வர வேண்டும் என்பது இதன் பொருள். ஆனால் குழந்தைகளுக்கு இதை யாரும் சொல்லித் தருவதில்லை. இன் றைய கல்விமுறை பொருள் சார்ந்ததாக இருக்கிறதே ஒழிய, அறம் சார்ந்ததாக இல்லை. அறம் சார்ந்த கல்வி முறைதான் இதயத்தைத் தொடும். ஒழுக்கத்தை உருவாக்கி வளர்ப்பதுதான் கல்வியின் தலையாயக் குறிக்கோள். அதை முறையாகச் செய்ய வேண்டும்.

கருவறை முதல் கல்லறை வரை பெண்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. பெண்கள் ஒரு பிரச்சினை வந்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பெற்றோர்களும், காவல் நிலையங்களில் இதைத் தெரியப்படுத்த தயங்கக் கூடாது. இவ்வாறு சொல்லிவிட்டால் தொடக்கத்திலேயே பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அதேபோல, பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை முழுமையாக நம்ப வேண்டும்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஒருதலைக்-காதலால்-3-கொலைகள்-இளைஞர்களின்-மனதை-கெடுக்கிறதா-திரைப்படங்கள்/article9058633.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.