Jump to content

உங்கள் மொபைல், உங்கள் சொல்பேச்சுக் கேட்கிறதா?


Recommended Posts

உங்கள் மொபைல், உங்கள் சொல்பேச்சுக் கேட்கிறதா?

 speech2.jpg

நாம ஸ்மார்ட்டா இருக்கோமோ, இல்லையோ... ஆனா நம்ம கையில இருக்க போன் ஸ்மார்ட்டாதான் இருக்கு. ஸ்மார்ட் போன்ல பல வருஷமா இருக்கும் ஸ்பீச் ரெககனைஷன் (speech recognition) ஆப்ஷனை நீங்கள் அதிகம் பயனபடுத்தியிருக்கவே மாட்டீர்கள் அல்லவா? அதில் இருந்த பல குறைபாடுகள் காரணமாக இந்த தொழில்நுட்பம், மக்களிடம் அவ்வளவாக  வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் கூட, இந்த ஸ்பீச் ரெககனைஷன் தொழில்நுட்பத்தில் சாதிப்பதற்காக அதிகம் ஆர்வம் காட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், "சத்தமே இல்லாமல் இதன் வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சியை போன்றே இதன் வேகமும் இரு மடங்காக அதிகரித்துள்ளது" என்கிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் லேண்டே.

   மேலும் தற்போது இந்த, "ஸ்பீச் ரெககனைஷன்' சாஃப்ட்வேர் டெக்ஸ்ட் செய்வதை விட மூன்று மடங்கு வேகமாக செயல்படுகிறது. 19 முதல் 32 வயதினருக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது. நாம் பயன்படுத்தும் qwerty கீபோர்டு மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் ஆங்கிலம் மற்றும் மேன்டரின் சைனீஷ் ஆகிய இருவேறு மொழிகளில் டெக்ஸ்ட் செய்தனர். மொத்தமாக ஆராய்ச்சியில் 32 பேர் பங்கெடுத்தனர். இதற்காக சொற்றொடர்களின் தினசரி அகராதியில் (standard library of everyday phrases) இருந்து 100 வார்த்தைகளை எடுத்து டைப் செய்தும், ஸ்பீச் ரெககனைஷன் சாஃப்ட்வேரில் பேசியும் பதிவு செய்யப்பட்டன. இரண்டும் மக்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பதையும் ஆராய்ந்தனர். (have a  good week end, physics and chemistry very hard, go out for some pizza ) போன்ற சொற்றொடர்கள்தான் இதில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டது. முடிவில் ஆங்கிலத்தில் டைப் செய்வதை காட்டிலும் மூன்று மடங்கு வேகமாக ஸ்பீச் ரெககனைஷன் சாஃப்ட்வேரானது செய்தியை அதிவேகமாக அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டது.

speech.jpg


          ஸ்பீச் ரெககனைஷன் மூலம் அனுப்பப்படும் செய்தி டைப் செய்வதைக் காட்டிலும் 20.4% குறைவான தவறையே ஏற்படுத்துகிறது. மேன்டரின் சைனீஸ் மொழியில் செய்திகள் டைப் செய்வதைக் காட்டிலும், 63.4% குறைவான தவறையே ஸ்பீச் ரெககனைஷன் ஏற்படுத்துகிறது. மேலும் இது text செய்வதை காட்டிலும் 2.8% அதிவேகமாக செயல்படுகிறது என்பதையும் கண்டறியப்பட்டது" என்கிறார். 


எல்லா ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஸ்பீச் ரெககனைஷன் ஆப்ஷன் இருந்தாலும் கூட, இதை நாம் பயன்படுத்தாமலேயே இருக்கக் காரணம், அதன் தொழில்நுட்ப பிழைகள்தான். இங்கிலாந்தில் இருக்கும் ஒருவரின் ஆங்கில உச்சரிப்பும், இந்தியாவில் இருக்கும் ஆங்கில உச்சரிப்பும் வேறுவேறு அல்லவா? ஆனாலும் ஒரே மொபைலைத் தான் இருநாட்டவர்களும் உபயோகப்படுத்துவார்கள். இதுபோன்ற எத்தனை நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் கூட, டெக்ஸ்ட் சாட்டிங், மொபைல் கமாண்ட்ஸ் கொடுப்பது போன்ற பல விஷயங்களுக்கு இது பயன்படுவதால், இந்த தொழில்நுட்பத்திற்கான மவுசு இன்னும் குறையவே இல்லை. எனவே இன்னும் சில காலம் பொறுத்திருங்கள். உங்கள் மொபைல், உங்கள் சொல்லைத் தட்டாமல் கேட்கலாம்!

அப்படியே, தமிழில் சரளமாக பேசுவதையும் , ஸ்பீச் ரெககனைஷன் செய்துவிடுங்களேன் டெக்கீஸ்!

http://www.vikatan.com/news/information-technology/67864-smartphone-speech-recognition-can-text-faster-than-human.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.