Jump to content

சிங்கள பெண்களை திருமணம் செய்யலாமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் நண்பர்களா இன்றைய கால கட்டத்தில் நம் தமிழ‌ர்கள் சிங்கள‌ பெண்களை திருமணம் செய்யலாமா அப்படி செய்தால் என்ன பிழை இங்கே திருகோணமலையில் பிற நாட்டவரை ந‌மது கலாச்சார முறைப்படி ஒரு வெளிநாட்டு(இலங்கை)  தமிழ் பொண்ணு திருமணம் செய்தாள் அது முகநூலில் பல பாராட்டுகளை பெற்றது அதாவது அந்த வெள்ள்ளைக்காரர் ந‌மது கலாச்சார முறையில் திருமணம் செய்து கொண்டாரம் இப்படியிருக்க நமது முன்னாள் போராளிகளை கூட ராணுவ சிப்பாய்கள் திருமணம் செய்து கொண்டார்கள் ,நமது ஆட்கள் சிலரும் கொழும்பு பிறபகுதிகளில் வேலை செய்பவர்கள்  சிங்கள் பெண்களை திருமணம்  முடித்தும் வருகிறார்கள் 
பல ஈழ தமிழ் பெண்கள் கூட வெளிநாடுகளில் காதலில் விழுந்து வெள்ளைகார ஆண்களை திருமணம் முடிக்கும் போது இது தவறு என்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியாதுள்ளது 

எனது நண்பர் கூட விரைவில் ஒரு கொழும்பு சிங்கள‌ பெண்ணை கல்யாணம் செய்ய இருக்கிறார் அவரிடம் கேட்ட போது  உதாரணம் கூறினார் இந்த திருகோணமலை சம்பவம் பற்றியும் வெளிநாட்டில் பல ஈழ பெண்கள் வெள்ளைகளை கட்டுவதையும்  கூறினார்  இது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன ??
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..

கோழி எங்கயோ சிக்கீற்றுது போல கிடக்குது.  :grin:

கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்கோணும். :grin:

இங்க வெளிநாட்டு கதை எண்ணென்டா, 'மக்கா, கறுப்போ, சிவப்போ, வெள்ளையோ, சப்பட்டையோ (சீனா) ..... ஆம்பிளை பிள்ளையெண்டா, பெட்டயயும், பொம்பிளப் பிள்ளயெண்டா பெடியயும் கொண்டு வாருங்க.... உந்த கே, லெஸ்பியன் கருமாந்திரம் வேண்டாம்'. :unsure:

எண்டபடியால, தெற்கத்திப் பெட்ட திறமான செலக்சன். குரு இந்த முறை பக்தயப் பார்த்த பார்வையிலேயே தெரிஞ்சது, உது தான் நடக்கப் போகுது எண்டு. அப்படியே, ஆச்சிரமம் பக்கம் வேற பக்தயள் வந்தா, இந்த சிஸ்யனும் கரை சேர வழிவிடுங்க குருஜி. ஆசிர வாழ்க்க போரடிக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெட்டையளை திருமணம் செய்யலாம்... என்பதில் என்ன சந்தேகம். 

சிங்களப் பெட்டை என்ற எண்ணத்தை மனசில்.. வைச்சுக் கொண்டு கட்டிறது நல்லதோ தெரியல்ல. 

ஆனா ஜீ இந்தக் கேள்வியைக் கேட்பது அவரின் மடாதிக்கத்தை சிங்களப் பகுதிகள் நோக்கி விரிவாக்கும் எண்ணமோ என்னமோ..!! tw_blush:

கதிர்காமக் கந்தன் சிங்களக் கன்னியை காணிக்கை கொடுத்திட்டார் போல. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

 

எண்டபடியால, தெற்கத்திப் பெட்ட திறமான செலக்சன். குரு இந்த முறை பக்தயப் பார்த்த பார்வையிலேயே தெரிஞ்சது, உது தான் நடக்கப் போகுது எண்டு. அப்படியே, ஆச்சிரமம் பக்கம் வேற பக்தயள் வந்தா, இந்த சிஸ்யனும் கரை சேர வழிவிடுங்க குருஜி. ஆசிர வாழ்க்க போரடிக்குது. :grin:

இங்கே குருவே கும்மியடிக்காரு இதுல சிஷ்யனுக்கு சிலுக்கு கேட்டிச்சாம்:11_blush:
 நான் சிக்க வில்லையப்பன் நண்பன் தான் சிக்கி கொண்டான் நான் வாழ்த்துக்கள் கூறினேன் ஏனென்றால் நம்ம சனம் எப்படி கதைக்கும் என்று தெரியாதா 
(இவருக்கு அவ்வளவுக்கு ஊரில ஒரு பொண்ணு இல்லையா என்று கேட்டு ) இதில் என்ன சந்தோசம் என்றால் இரு வீட்டாருக்கும் நல்ல சந்தோசம் என்பதை விட நல்ல இணக்கம் என்று கூறலாம் 

கல்யாணத்தில வேறு யாரையாவது கண்டால் நானும் ஒரு அப்பிளிகேசன் போட போகிறேன் வேறென்ன நம்ம தமிழ் பிள்ளைக்ள் வெளிநாட்டு மோகம் கொண்டு திரியுதுகள் நமக்கு செட்டாவுதில்லை சரி இப்படியே வாழ்க்கையை ஓட்ட லாம் என்று பார்த்தல் நண்பர்கள் சாவடிகானுகள் என்ன மச்சி விதைக்கு விட்டிருக்கா என்று கேட்டு  முடியல:10_wink:

4 hours ago, nedukkalapoovan said:

சிங்கள பெட்டையளை திருமணம் செய்யலாம்... என்பதில் என்ன சந்தேகம். 

சிங்களப் பெட்டை என்ற எண்ணத்தை மனசில்.. வைச்சுக் கொண்டு கட்டிறது நல்லதோ தெரியல்ல. 

ஆனா ஜீ இந்தக் கேள்வியைக் கேட்பது அவரின் மடாதிக்கத்தை சிங்களப் பகுதிகள் நோக்கி விரிவாக்கும் எண்ணமோ என்னமோ..!! tw_blush:

கதிர்காமக் கந்தன் சிங்களக் கன்னியை காணிக்கை கொடுத்திட்டார் போல. :rolleyes:

நானும் அதைதான் சொல்ல முற்பட்டேன் நண்பா அவாவை ஒரு வேறு இனம் என்று பார்க்காதே அப்படி பார்த்தால் வாழ்க்கை நல்லா இராது அவளும் ஒரு பெண் என நினைத்துக்கொள் என்றேன்  வாழ்க்கை இனிக்கும் உன் வாழ்க்கை உன் கையில் 

( என்ன ஒரு ஒரு முடிவு சுயமாக எடுக்க மாட்டாய் என்றேன் ) முறைக்கிறது தெரிகிறது நண்பேன்டா :11_blush:

கந்தன் யோசிக்கிறான் முனிவருக்கு கொடுப்பதா வேண்டாமா என்று இதுக்குள்ள சிங்களக்கன்னியா:rolleyes: 
ஆனாலும் அனியாயத்திற்கு அழகாய் இருக்ககாளுகள் 
நம்ம பெட்டைகள் பத்தாயிரம் ரூபா செலவு செய்தே அழகாய் இருப்பாளுகள் ஆனால்  அந்த பிள்ளைகள் ரீ சேட்டும் குட்டை பாவாடையும்  ஆற்று நீரில் குளித்த அழகும் தனி அழகு  முனிவர் ரசிகன்டா நீ tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பதே வேறு ஐயா

அதை முதலில் உணரணும்...

தமிழ் சிங்களம் என்பது பிரிவுக்குள்ளானது இரு சமூகப்பிர்ச்சினை

அது ஒட்டவே முடியாத அளவுக்கு  சிதைவடைந்து போயுள்ளது

இதையும் வெளிநாடுகளையும்

புலத்தாரையும் ஒப்பிடுதலே தப்பு..

அக புற காரணிகளை புரிந்து கொண்டு

அது பற்றி இருவரும் தெளிவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்து

திருமணம் முடிப்பின் வாழ்வு இனிக்கும்

அல்லது.....????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

திருமணம் என்பதே வேறு ஐயா

அதை முதலில் உணரணும்...

தமிழ் சிங்களம் என்பது பிரிவுக்குள்ளானது இரு சமூகப்பிர்ச்சினை

அது ஒட்டவே முடியாத அளவுக்கு  சிதைவடைந்து போயுள்ளது

இதையும் வெளிநாடுகளையும்

புலத்தாரையும் ஒப்பிடுதலே தப்பு..

அக புற காரணிகளை புரிந்து கொண்டு

அது பற்றி இருவரும் தெளிவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்து

திருமணம் முடிப்பின் வாழ்வு இனிக்கும்

அல்லது.....????

குகதாசன்  அண்ணை நாம் ஒன்றை புரிந்து கொள்ள  வேண்டும் இங்கே இருமனம் இணைந்தால் திருமணம் என்ற சொல்லுக்கு  இனியும்  அவன் வேறு இனம் அவள் வேறு இனம் என்று பார்த்து விரும்ம்பிய வாழ்க்கைய அமைத்துக்கொண்டு வாழாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி வாழ போகிறோம்.:unsure:
 
புலத்தை நான் ஏன் ஒப்பிடக்காரணம் என்றால் அந்த  திருமணத்தை புலத்தில் நடத்தினால் நல்லது தானே ஏன் இங்கே வந்து நடத்தினார்கள் என்பதில்  எனக்கு சிறிய கோபம்  ஆனாலும் அங்கேயும் மனம் ஒத்து போகிறது ஆனால் நமது கலாச்சார வாழ்க்கைக்கு வெள்ளைகள் ஒத்து வருமா ?
அதுவும் எத்தனை ஆண்டுகளுக்கு ? அது வாழ்க்கை பூராக தொடருமானால் அது ச்ந்தோசமே:101_point_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

குகதாசன்  அண்ணை நாம் ஒன்றை புரிந்து கொள்ள  வேண்டும் இங்கே இருமனம் இணைந்தால் திருமணம் என்ற சொல்லுக்கு  இனியும்  அவன் வேறு இனம் அவள் வேறு இனம் என்று பார்த்து விரும்ம்பிய வாழ்க்கைய அமைத்துக்கொண்டு வாழாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி வாழ போகிறோம்.:unsure:
 
புலத்தை நான் ஏன் ஒப்பிடக்காரணம் என்றால் அந்த  திருமணத்தை புலத்தில் நடத்தினால் நல்லது தானே ஏன் இங்கே வந்து நடத்தினார்கள் என்பதில்  எனக்கு சிறிய கோபம்  ஆனாலும் அங்கேயும் மனம் ஒத்து போகிறது ஆனால் நமது கலாச்சார வாழ்க்கைக்கு வெள்ளைகள் ஒத்து வருமா ?
அதுவும் எத்தனை ஆண்டுகளுக்கு ? அது வாழ்க்கை பூராக தொடருமானால் அது ச்ந்தோசமே:101_point_up:

மேலே நானும் அதைத்தான் எழுதியுள்ளேன்

இருவரது வாழ்விலும் பெரும் தாக்கங்களை எமது இனவேறுபாடு கொண்டு வரும்

அதை இருவரும் பேசி முடிவுக்கு வந்தால் இனிக்கும் என.

பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றால் அலைகள் அடிக்கும் போது.........???

புலம் பெயர் திருமணங்களில் இரு பக்கமும் நீதி தர்மம் சட்டம் அதிகாரம்

நடுநிலையாக இருக்கும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

மேலே நானும் அதைத்தான் எழுதியுள்ளேன்

இருவரது வாழ்விலும் பெரும் தாக்கங்களை எமது இனவேறுபாடு கொண்டு வரும்

அதை இருவரும் பேசி முடிவுக்கு வந்தால் இனிக்கும் என.

பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றால் அலைகள் அடிக்கும் போது.........???

புலம் பெயர் திருமணங்களில் இரு பக்கமும் நீதி தர்மம் சட்டம் அதிகாரம்

நடுநிலையாக இருக்கும்.

 

 

 

உங்கள் கருத்துக்கு  மிக்க நன்றி அண்ணா 

புரிதல் மிக முக்கியமான ஒன்று  அதுவே வாழ்க்கை  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.

புரியவில்லையே  ஈழப்பிரியன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் கட்டினால் ஒரு கோகாரி நட்டமுமில்லை, தமிழனுக்கு...ஆனால் ஊரில் இருப்பவர்கள் கட்டினால் எந்த இனத்தில் சனத்தொகை அதிகரிக்கும்tw_angry:

Link to comment
Share on other sites

ஒரு ஆணும் பெண்ணும் தமது முழு விருப்படன் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். இங்கு இனவேறுபாடு கிடையாது. அது அவரவர் தனிப்பட்ட விடயம் . இந்த தலையங்கமே மற்றவர்களின் தனிப்பட்ட விடயத்தில் தலையிடுவது போல உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நந்தன் said:

வெளிநாட்டில் கட்டினால் ஒரு கோகாரி நட்டமுமில்லை, தமிழனுக்கு...ஆனால் ஊரில் இருப்பவர்கள் கட்டினால் எந்த இனத்தில் சனத்தொகை அதிகரிக்கும்tw_angry:

இந்த இனம் தானே பெரிய பிரச்சினையாக இருக்கிறது  இது வரை காலமும்  
இனம் மதம் ஜாதி   தாண்டி கல்யாணம் கட்டினால் ஆயிரம் கேள்விகள்  ஆக மொத்தத்தில் இன்னும் நான் பழைய கால நினைவுகளுடன் தான்tw_cold_sweat:

7 minutes ago, trinco said:

ஒரு ஆணும் பெண்ணும் தமது முழு விருப்படன் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். இங்கு இனவேறுபாடு கிடையாது. அது அவரவர் தனிப்பட்ட விடயம் . இந்த தலையங்கமே மற்றவர்களின் தனிப்பட்ட விடயத்தில் தலையிடுவது போல உள்ளது. 

என்னப்பா தலையங்கம் வெளிப்படையாக இருக்கிறது  அப்படியானால்  இதில் என்ன  தனிப்பட்ட விடயத்தில்  தலையிடுவது  போல் உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த இனம் தானே பெரிய பிரச்சினையாக இருக்கிறது  இது வரை காலமும்  
இனம் மதம் ஜாதி   தாண்டி கல்யாணம் கட்டினால் ஆயிரம் கேள்விகள்  ஆக மொத்தத்தில் இன்னும் நான் பழைய கால நினைவுகளுடன் தான்tw_cold_sweat:

இது இந்தப்பழம் புளிக்கும் என்ற கதை போல கிடக்கு

முதலில் சிங்களப்பெட்டைகள் எம்மவரை கட்ட தயாரோ என்ற பாருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இது இந்தப்பழம் புளிக்கும் என்ற கதை போல கிடக்கு

முதலில் சிங்களப்பெட்டைகள் எம்மவரை கட்ட தயாரோ என்ற பாருங்கள்..

கன்பேர் கட்டியிருக்கிறார்கள் அவர்கள் நம் பகுதிகளில் இல்லை யென்பது  உன்மை  காரணம்  தொழில் நிமிர்த்தம் வேலையாக சென்றவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்:unsure: 

இந்த கேள்விக்கு எந்த பெட்டையிற்ற நான் போய் கேட்பன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

கன்பேர் கட்டியிருக்கிறார்கள் அவர்கள் நம் பகுதிகளில் இல்லை யென்பது  உன்மை  காரணம்  தொழில் நிமிர்த்தம் வேலையாக சென்றவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்:unsure: 

இந்த கேள்விக்கு எந்த பெட்டையிற்ற நான் போய் கேட்பன் :rolleyes:

ஆமா

இதைக்கேட்கவே நான் தான் ஆளைக்காட்டணும்..??

இதில சிங்களத்து சின்னக்குயில் கேட்குது.....???:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஆமா

இதைக்கேட்கவே நான் தான் ஆளைக்காட்டணும்..??

இதில சிங்களத்து சின்னக்குயில் கேட்குது.....???:grin:

நான் இல்லப்பா நான் உங்களிடம் கூறமலா கட்டுவன் சொல்லாமலா  செய்வேன் திருமணம்
 நண்பர் தான் வெளிநாட்டில் வேலைசெய்தார்  துபாயில் அங்கே காதலாகி போனதாம் இங்கே வந்து எனக்கு அறிவித்தல் தந்தான் கல்யாணத்திற்கு அது தான் அதை இங்கே எழுதினேன்  அங்கே பழக்க மானவன் தான் அவன் 

தம்பியை உங்களுக்கு தெரியாதா என்ன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த கேள்விக்கு எந்த பெட்டையிற்ற நான் போய் கேட்பன் :rolleyes:

அது இதற்கான பதில் ராசா..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அது இதற்கான பதில் ராசா..:grin:

கூடிய விரைவில் தங்களுக்கு அறிவிக்கப்படும்  என்பதை தெரிவித்து கொள்ள விரும்பிகிறேன்:unsure:

ஆகா விடமாட்டார் போலtw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

கூடிய விரைவில் தங்களுக்கு அறிவிக்கப்படும்  என்பதை தெரிவித்து கொள்ள விரும்பிகிறேன்:unsure:

ஆகா விடமாட்டார் போலtw_angry:

ஏற்கனவே ஒருத்தர் எனக்குள் இதை விதைத்துவிட்டார்..:grin:

Link to comment
Share on other sites

15 minutes ago, முனிவர் ஜீ said:

கூடிய விரைவில் தங்களுக்கு அறிவிக்கப்படும்  என்பதை தெரிவித்து கொள்ள விரும்பிகிறேன்:unsure:

ஆகா விடமாட்டார் போலtw_angry:

 யோவ் முனிவர் நீர் சிங்களத்திய கட்டினா என்ன சீனத்திய கட்டினா எமக்கென்ன.

காலாகாலத்தில சும்மா நெத்துக்கு விடாம பயிர் செய்தா காணும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

புரியவில்லையே  ஈழப்பிரியன் :rolleyes:

யாரோ ஒருத்தியை கட்டுவதென முடிவெடுத்தால் யாராக இருந்தா என்ன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஏற்கனவே ஒருத்தர் எனக்குள் இதை விதைத்துவிட்டார்..:grin:

அது அவுஸ் பக்கம் தானே அண்ணtw_blush:

 

2 hours ago, ஜீவன் சிவா said:

 யோவ் முனிவர் நீர் சிங்களத்திய கட்டினா என்ன சீனத்திய கட்டினா எமக்கென்ன.

காலாகாலத்தில சும்மா நெத்துக்கு விடாம பயிர் செய்தா காணும். :grin:

அது அவுஸ் பக்கம் தானே அண்ண

நீங்களுமா அண்ண நம்ம நண்பர்கள் தான் அப்படி பகிடி பண்ணுகிறானுகள் என்று பார்த்தால் நீங்களும் நாங்க என்ன வச்சிருந்தா வஞ்ஜகம் பண்றம் அமையும் வரை வெயிடிங்tw_blush:

1 hour ago, ஈழப்பிரியன் said:

யாரோ ஒருத்தியை கட்டுவதென முடிவெடுத்தால் யாராக இருந்தா என்ன 

பிறகு என்ன நக்குண்டார் நாவிளந்தார் போல காதலில் விழுந்தார் கரை சேர்ந்தால்  நல்லதேtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து கலியாணத்திலை சாதி சமயம் இனம் பார்க்கிறதை விரும்புறேல்லை... 
இரு மனம் ஒன்றானால் அதுவே போதும்.
இருந்தாலும்....
யாழ்ப்பாணத்திலை சிங்களப்பெண்ணை கலியாணம் கட்டி வாழுறது கஸ்டம்.ஏன் யாழ்ப்பாணத்து பெடியன் மட்டக்களப்பு பெட்டையை லவ் பண்ணினாலே....தாய் தகப்பன் ஐயோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு தலையிலை அடிச்சு கத்துங்கள்.
கண்டி,கொழும்பிலை நோர்மல் வாழ்க்கையாய் போகும்..
மட்டக்களப்பிலை எதுவும் ஓகே எண்டு நினைக்கிறன்.எண்டாலும் மட்டக்களப்பார் பறங்கியர் வீட்டிலை கை நனைச்சதாய் தெரியேல்லை.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ.....
உங்களது நண்பர்.... சிங்களப்  பெட்டையை கலியாணம் கட்டுறதை விட....
அவரை பிரமச்சரிய வாழ்க்கை வாழச் சொல்லி, 
உங்களது ஆச்சிரமத்தில் மெம்பராக... சேர்த்து விடுங்கள். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.