Jump to content

நடை


Recommended Posts

எட்டுமணிக்கு முந்திய காலைப்பொழுது. தினம் விரியும் காட்சிகள் அப்படியே விரிந்து கொண்டிருக்கின்றன. பத்து நிமிட நடையில் மூன்று நடைபாதை நித்திரைகொள்ளிகள். காட்டுக்குள் காட்டெருமைகள் குழாமாய் நீரிற்கு ஓடுவதைப்போல் அலுவலகம் நோக்கி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நடைபாதை நித்திரைகொள்ளிகளை மிதித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் மேற்படி மூன்று இடங்களிலும்; காட்டருவி கிளையாய்ப் பிரிந்து பின் மறுபடி சேர்ந்து ஓடுவதைப்போல அலுவலக பயணிகள் விலகி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். நடைபாதை மனிதரை மிதித்துவிடக்கூடாது என்ற சிரத்தையில் நமக்கு அழுக்காகுமோ என்ற கவனமும் அவர்களிற்குள்ளாக இருந்ததாகவே பட்டது. அழுக்கு எனும்போது அது மனவெளியில் நடைபாதை மனிதன் சித்தரிக்கும் அந்தஸ்த்து இழப்பு சார்ந்து நிகழும் பயங்களுமாக இருக்கக்கூடும். 

ஒரு குழந்தையினை வளர்ப்பதற்கு ஒரு கிராமம் தேவை என்பது நடைமுறையாகையில், நடைபாதைக்கு வரும் ஒரு மனிதனின் கிராமம் தொலைந்தமை உணரப்படுவது உழைச்சல் தருகிறது. சிங்கம் கடிக்கையில் மல்லுக்கு நின்று ஒருவாறு சிங்கத்தை வென்று தப்பி வந்ததால் காட்டெருமைக்கு உயிர் இன்னமும் இருக்கிறது. ஆனால், நீருக்கு ஒடும் குழாத்தோடு சேர்ந்து தானும் ஓட வலுவில்லை. அங்கங்கு வெளித்தெரியும் சில ரணங்கள். தெரியாது பல ரணங்கள். மூசியபடி மாடு நகராது நிற்கிறது.

—-

மதியம் மனிதர்கள் மீண்டும் தெருவிற்கு வந்துவிடுகிறார்கள். கட்டிடங்களிற்குள் இருப்பதற்காய் நாளாந்தம் மல்லுக்கட்டும் மனிதன் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திறந்தவெளிக்கே ஓடிக்கொண்டிருக்கிறான். ஒரு மணிநேரத்திற்குப் பொருத்தமான நடைபாதையினை மனத்தில் ஏற்றிவிட்டுக் கால்கலைள இயல்பாய் விடுகிறேன். 

ஒரு தெருவிளக்கின் மாற்றம் பார்த்துச் சந்தியில் நிற்கையில் ஒரு மனிதன் வந்து பக்கத்தில் நின்று முகம்பார்க்கிறான். முறுவலி;க்கிறான் பின் நகர்ந்துசெல்கிறான். காலையில் பயணத்தின் போது ஒலித்திருந்த வானொலியில் எதிர்பார்க்காச் செவ்வி ஒன்று வந்து போயிருந்தது. ஏறத்தாள இருபது வருடங்கள் முன்னர் ஒரு அகால மரணத்தோடு துண்டிக்கப்பட்ட வாழ்வின் ஒரு கூறு வானொலி ஊடு பேசிச்சென்றிருந்தது. தெருவில் சிரித்த மனிதனிற்கும் வானொலியில் வந்துபோன கூறிற்கும் சம்பந்தம் ஏதுமிருந்தால் அது நானறியாதது. எனினும் அன்றைய நாளிற்கு அந்த இரண்டும் பின்னணி இசையினை வழங்கியதாய்ப்பட்டது. ஒன்று முன்னறிமுகமற்றது மற்றையது அறிந்து பிரிந்தது. இரண்டும் என்னிடம் பேசின. இரண்டுமே தாம் பேசியது எனக்குக் கேட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளத் தேவையற்றனவாய், தமது பேச்சை நானும் கேட்கிறேன் என்ற பிரஞ்ஞையே அற்றவர்களாகப் பேசிச்சொன்றன. இரு பேச்சும் எனக்குள் பதிந்து விரிந்தன.

எட்டுக்கோடியினை அண்மிக்கும் மனிதர் தொகையில் முகங்கள் அதிகமாகிவிட்டன. புறாக்கூட்டம் போன்று மனிதக்கூட்டம். முகங்களைப் பார்ப்பதற்கும் புரிவதற்கும் அவகாசமில்லை. பிரபஞ்சத்தில் வேறேதும் உயிரனங்கள் உள்ளனவா என்பதைத் தேடியலைகிறான் மனிதன். பக்கத்தில் நிற்பவன் பேசுவதையே கேட்கமுடியாதவனிற்குப் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருந்து இனம்புரியாக் கதைகள் வரின் அது புரியும் என்ற நம்பிக்கை அவன் கண்டுபிடித்து வைத்திருக்கும் கருவிகளின் சக்த்தியின் நம்பிக்கையால் மட்டும் பிறக்கிறது. சுற்றுலாக்களிற்குச்; செல்பவன் கூட கருவிகளில் காட்சிகளைப் பதிந்து செல்ல நினைக்கிறானே அன்றி மனிதனாய் ஒரு காட்சியை வாங்கி விரிய மறந்துபோகிறான். நடைபாதை நித்திரைகொள்ளிகள் வயதுவேறுபாடின்றி உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

காதிற்குக் கேட்காத கதைகளையும் உடல் உள்வாங்கிக்கொண்டே இருக்கிறது. அலைவரிசைகள் ஏராளம் ஏதேதோ கதைபேசியபடி அதிர்ந்திருக்கின்றன. கேட்பதற்கு நாதியற்றவனாய் மனிதன் கருவிகளிடம் சரணாகதியாகி வாழாதிருக்கிறான். அதனால் பொழுதைப்போக்கச் சிரமப்பட்டவனாய் போதையினை வேலை வடிவிலோ வேறேதின் வடிவிலோ தேடியலைந்துகொண்டிருக்கிறான்.


நோர்வேயின் ஒன்டால்ஸ்னஸ் பிரதேசத்தின் ற்றோல்ஸ்ற்றீகன் மலையில் ஏறிக்கொண்டிருக்கிறேன். மலையேறுவதைக் கயிறுகளோடும், படிகளோடும் மட்டும் நினைத்திருந்த எனக்கு, கரடுமுரடான பாறாங்கற்களிலும், சிறுசெடிகளும் கூளாங்கலும் எனச் சறுக்கும் மலையில் பாதுகாப்பு ஏதுமின்றி, உருண்டு விழுந்தால் இறப்பு நிச்சயம் என ஏறிக்கொண்டிருந்தமை மனதைக் குவியப்படுத்தியது. மூச்சுவாங்கியது. ஒரு மணிநேரம் ஏறி ஒரு தற்காலிக சமாந்தரத்தை அடைந்தபோது அங்கு செம்மரி ஆடுகள் மேய்ந்து நின்றன. அதுவரை குளிர்மட்டும் தெரிந்த மனதிற்குள் குளிர்ச்சி பிறந்தது. ஆடுகளைப் பிரிய மனமின்றிப் பிரிந்து இன்னமும் இருமணிநேரம் ஏறியபோது மேலும் ஒரு தற்காலிக சமாந்தரம் ஆனால் பெரிய நிலப்பரப்பு. மலை இன்னமும் உயர்ந்துகொண்டிருந்தது. தற்காலிக சமாந்தரத்தில் பனி இருந்தது. 
ஒரு பெரிய குளம் இருந்தது. சுத்தமான காற்றுப் போதையேற்றியது. பாறாங்கல்லில் பூ இருந்தது. வானம் தெளிவாய் இருக்க, சுற்றிப் பார்த்தபோது நான் சந்திரனில் நிற்கின் இப்படி இருக்குமோ என்று தோன்றியது. சந்திரனில் பூபும் செம்மரியும் இருப்பதாய்ச் சொல்லவில்லை மனிதன் அமைத்த கட்டிடம் ஒன்று கூட இல்லை. மலைக்கு மனிதன் வந்து போனதால் நிகழ்ந்த மாற்றமின்றிப் பிறவனைத்தும் இம்மலையில் இயற்கைக்பிரகாரமிருந்தன. மலை என் கர்வங்களை உடைத்துப் பணிய வைத்தது. மனமாரப் பணிந்து நிற்கையில் எழும் பிரமாண்டம் கட்டற்றது. மலைக்குத் தியானம் செய்யப் போகும் கதைகளை ஏராளம் கேட்டதுண்டு. மலைக்கு வந்தால் பின் தனியாகத் தியானம் செய்ய எவரிற்கும் தோன்றாது. மலையே தியானம்.

எற்றுவால் வெற்றிக் கோபுரத்தின் உச்சியில் நின்று பாரீசைப் பார்த்து நிற்கிறேன். இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது பாரீசில் இருந்து மாமா அனுப்பிய போஸ்ற்காட்டில் இருந்த படத்தை அப்படியே நேரே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மணிநேரம் தொலைந்தது தெரியாது தொலைந்து போகிறது. ச்சாஸ் அலிசேயில் மனித வெள்ளத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு கபேயில் அமர்;ந்து கோப்பியைப் பருகிக்கொண்டு மணிக்கணக்கில் மனிதரைப் பார்க்கிறேன். எத்தனை ஆனந்தம் முகங்களில். எத்தனை பேச்சுக்கள். நோற்றடாம் தேவாலயத்தின் பிரமிப்பில் இருந்து மீழ்வதற்காய் சீன் நதியோரம் சென்று அமர்ந்துகொள்கிறேன். இருமணிநேரம் கரைந்தது தெரியாது கரைந்து போகிறது. உறங்கி எழுந்து பதினான்காம் லூயி தொட்டு நெப்போலியன் வரை நடந்து திரிந்த வேர்சாய் கோட்டையில் தொலைந்து போகிறேன். ஒரு நாள் கரைந்து போகிறது. 'பாணில்லை என்றால் கேக்கை உண்ணட்டுமே' என்று சொன்ன மேரி அன்ற்றுனற் வாழ்ந்த அரண்மனையினைப் பார்க்கவேண்டும் என்று பட்டதால் சென்று நின்று அவள் எப்படி அதைச் சொல்லியிருப்பாள் என நினைப் பார்த்துக் கொண்டேன். ல்லூவ் அருங்காட்சியகம் முழுவதும் சரித்திரம் நேரக்குடுவையில் வைத்து என்னை அழைத்துத் திரிந்தது. போதை இறங்கும் என நினைத்து ற்றூவலறீஸ் பூங்காவிற்குள்ளால் நடந்து கால்போன போக்கில் திரிந்து பாரீசை அணுவணுவாய் ரசிக்கிறேன். போதை ஏறிக்கொண்டேயிருக்கிறது.

பாரீசின் வெள்ளையன் பாதைகளில் திரிந்துகொண்டிருக்கையில் தமிழன் தொணதொணத்தான். லாசப்பல் சென்றேன். ஆசியாவிற்கு வெளியே அதிக தமிழர் வாழும் கனடாவில் வாழும் எனக்கும் கூட லாசப்பல் ஊரைக் காட்டத் தவறவில்லை. நடந்து திரிந்தபடி அப்பக்கடைக்கு முன்னால் இருந்த பாரத் கபே என்ற தமிழ் உணவகத்திற்குள் நுழைந்தேன். அருமையான சாப்பாடு, அற்புதனமான உபசரிப்பு. மகிழ்வாய் எழுகையில், பரிமாறியவர், இதற்கு முன் நான அறிந்திராதவர் வந்து 'சாப்பிட்டாச்சா, சந்தோசம். போட்டுவாங்கோ' என்றோர். எத்தைனையோ தேசங்களில் எத்தனையோ உணவகங்களைக் கடந்து எனக்குள் மேற்படி வாசகம் நெகிழ்தலைப் பரப்பியது. அடையாளம் சார்ந்து நினைக்கத் தோன்றியது. அறிந்தவர் தெரிந்தவரை எல்லாம் பாரீஸ் போனால் பாரத் கபேக்குப் போங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மனதில் ஏற்றிய பாதையின் ஒரு மணிநேர முடிவாய்க் கால்கள் அலுவலகத்தை அண்மித்தன. நோர்வேயின் மலைகளில், பாரீசின் வனப்பில் அலைந்த எனது மனநிலைகளை அப்படியே ரொறன்ரோவின் மத்தியில் நடந்துகொண்டிருந்தபடி அள்ளிப் பருக முடிந்தமை புத்துணர்ச்சி தந்தன. காலையில் கேட்ட வானொலிச் செவ்வியின் பேச்சு, சந்தியில் நின்று பார்த்துக் கடந்து போன மனிதனின் பேச்சு, நடைபாதை நித்திரைகொள்ளிகளைக் கடந்து போன மனிதரின் பயங்கள், உலகெங்கும் எனக்குள் பதிந்த பதிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாக ஆனால் தனித்தனித் தெளிவாக நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உணரமுடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Innumoruvan said:

பாரீசின் வெள்ளையன் பாதைகளில் திரிந்துகொண்டிருக்கையில் தமிழன் தொணதொணத்தான். லாசப்பல் சென்றேன். ஆசியாவிற்கு வெளியே அதிக தமிழர் வாழும் கனடாவில் வாழும் எனக்கும் கூட லாசப்பல் ஊரைக் காட்டத் தவறவில்லை. நடந்து திரிந்தபடி அப்பக்கடைக்கு முன்னால் இருந்த பாரத் கபே என்ற தமிழ் உணவகத்திற்குள் நுழைந்தேன். அருமையான சாப்பாடு, அற்புதனமான உபசரிப்பு. மகிழ்வாய் எழுகையில், பரிமாறியவர், இதற்கு முன் நான அறிந்திராதவர் வந்து 'சாப்பிட்டாச்சா, சந்தோசம். போட்டுவாங்கோ' என்றோர். எத்தைனையோ தேசங்களில் எத்தனையோ உணவகங்களைக் கடந்து எனக்குள் மேற்படி வாசகம் நெகிழ்தலைப் பரப்பியது. அடையாளம் சார்ந்து நினைக்கத் தோன்றியது. அறிந்தவர் தெரிந்தவரை எல்லாம் பாரீஸ் போனால் பாரத் கபேக்குப் போங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு தொலைபேசி  எடுத்திருந்தால்

ஓடி வந்திருப்பேன்

கடை முதலாளிமார் எனது உறவுகள்தான்

இதை நிச்சயம் அவர்களுக்கு காட்டுவேன்.

நன்றி விளம்பரத்துக்கும் கதைக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் ஜரோப்பா டூர் வந்து போயிருக்கார் போல.பரத் கபேயை ரொம்பத் தான் புகழுகிறார்.கொஞ்ச காலத்திற்கு முன்பு பிரான்சில் இருப்பவர்கள் சொன்னார்கள் அந்த உண்வகத்தினர் தமிழாட்கள் போனால் வடிவாய் கவனிக்க மாட்டினமாம் என்று ஒரு வேளை இன்னுமொருவனைப் பார்த்தால்...

பி.கு; முகத்தை ஒருத்தருக்கும் காட்டாதீங்கோ.காட்டினால் தில் குறைந்து விடும். அனுபவ பதிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

இன்னுமொருவன் எங்கெல்லாமோ சுற்றியலைந்து வந்து பரத் கபேயில் ஒரு மனிதனைக் கண்டு களித்தார். அழகான அனுபவக் கதை, கதை கவிதை வடிவிலும் வடிந்து கருத்தைக் கவருகிறது. வாழ்த்துக்கள்!! 

Link to comment
Share on other sites

நன்றி விசுகு, ரதி, புங்கையூரான் மற்றும் பான்ச் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

நண்பர் எண்ணிக்கை வைத்துப் பார்க்கையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் வகை தான் என்னையும் உள்ளடக்கும். ஆத்மார்த்தமற்ற உறவுகளில் நேரம் செலவிடுவதில்லை. வுhழ்வில் இரண்டே நண்பர்கள் தான். ஒருவர் அகாலமான காலகட்டத்தில் தான் இரண்டாவது நட்புக் கிடைத்தது. எனவே ஒரே ஒரு நட்பு தான் வாழ்வில் இருந்திருக்கிறது. ஏகப்பட்ட தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நட்பு என்பது ஒன்று தான்.

பொதுவில் பிற இடங்களிற்குச் செல்லும் போது ஹோட்டலில் நிற்பது தான் வழமை. இம்முறை என்னைச் சற்று மாற்றவேண்டும் என்ற முயற்சியில் உறவுக்காரர்--ஆனால் நான் இதற்குமுன்னர் சந்தித்திராதவர்-வீட்டில் நின்றேன். நான் வெளியே கிழம்பித் திரிந்த நேரங்கள் போக அவர்கள் வீட்டில் நின்றபோது, உண்மையிலேயே நெகிழச்செய்து விட்டார்கள். இதற்கு முன்னால் நான் பார்த்தே இராதவர்கள நான் கிழம்பும்போது ஏதோ சிறுபராயம் முதல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் போன்றதொரு அன்னியோன்னியத்தை உணரவைத்துவிட்டார்கள். 

வட அமெரிக்க வாழ்வு முறைக்கும் ஐரோப்பாவிற்கும் நிறையவே வித்தியாசங்களை உணர முடிந்தது (இது பற்றி ஒரு பதிவு போட நினைத்து பின் விட்டுவிட்டேன்). ஈழத்தில் பதின்ம வயதில் விட்டுப் பிரிந்த நடைமுறைகள் ஐரோப்பாவில் மீளக் காணமுடிந்தது (ஈழத்தைக் காட்டிலும் வட அமெரிக்காவில் நிலமை வெகு சிறப்பாக உள்ளது—எனது அபிப்பிராயம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மனிதர்களை அவதானிப்பது ஒரு பொழுதுபோக்கு. இலண்டனில் உள்ள பிரபலமான trafalgar சதுக்கத்தில் இருந்து விதவிதமான மனிதர்களை பார்ப்பது பிடிக்கும். எனினும் இதனை என்னுடன் வேலை செய்த பின்லாந்துக்காரன் ஒருவனுக்கு ஒருமுறை சொன்னபோது ஒரு மாதிரியாகப் பார்த்தான்!

இலண்டனில் இருந்தாலும் பாரிஸ் வீதிகளில் நடப்பதுதான் பிடித்தமானது. இன்னுமொருவனின் அனுபவம் எழுத்தில் மிகவும் அழகாக வந்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.