Jump to content

ஒரு மொரீஷியஸ் நகரத்தின் கதை


Recommended Posts

morishiyas_2979770f.jpg

ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குட்டித் தீவு மொரீஷியஸ். அதிநவீனத் தொழில்நுட்பக் கேந்திரமாக உத்தேசிக்கப்பட்டு 2001-ல் சைபர் சிட்டி என்னும் புதிய நகரத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஒரே நேரத்தில் இன்று நகரியத் திட்டமிடலின் சீரழிவாகவும், மொரீஷியஸ்காரர்களின் பெருமிதமாகவும் இந்த நகரம் இருக்கிறது. நவீன அலுவலக வாழ்க்கையை முழுமையாக அர்த்தப்படுத்தக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டது.

இன்று வார நாட்களில் 25 ஆயிரம் பேர் இந்த நகரத்தில் தங்குகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்துப் பணியாளர்கள். தொடர்ச்சியற்ற தன்மை, மோசமான பொதுப் போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களின் போதாமை, பாதசாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது போன்ற விமர்சனங்கள் இந்த நகரத்தின் மீது வைக்கப்பட்டாலும் நவீனத் தகவல்தொடர்பின் பல அம்சங்களை இந்த நகரத்தின் உருவாக்கம் மொரீஷியஸின் பணியாளர்களுக்குச் சாத்தியமாக்கியது.

வசதிகள் கொண்ட நகரம்

“இந்த நகரம் சற்றும் முழுமை பெறாததே என்றாலும் முன்பிருந்ததற்கு இப்போது எவ்வளவோ தேவலாம்” என்கிறார் ராஸ் மேக்பெத் என்ற கட்டிடக் கலைஞர்.

கரும்புத் தோட்டங்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்ட இந்த சைபர்சிட்டி சுற்றுப்புற நகரங்களிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டிருக்கிறது. மொரீஷியஸின் எதிர்காலத்தை நோக்கிய பெரும் பாய்ச்சல் என்றெல்லாம் இந்த நகரம் அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது.

எவ்வளவோ குறைகள் இருந்தாலும் 64 ஹெக்டேர் பரப்பளவுள்ள இதன் வளாகத்தில் அதிவேக இணைய வசதி இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நினைத்தே பார்த்திட முடியாத வசதி இது. அடிக்கடி நிகழும் மின்வெட்டைச் சமாளிக்க மின்னியற்றிகளும் இணையத் தொடர்பு துண்டிக்கப்படாமல் இருக்க வலைப்பின்னல் அமைப்புகளும் துணைபுரிகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து மிகவும் தொலைவில் இருந்தாலும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த இந்த தீவு இணையம் வழியாக ஆப்பிரிக்காவுடன் நன்றாகவே தொடர்பில் இருக்கிறது.

“புத்திசாலித்தனமான முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள், குளிர்சாதன அமைப்புகள், மின்சாரத்துக்கான பக்கத் துணைகள் என்று உண்மையில் இந்த நகரம் என்பது நவீன வசதிகளின் கேந்திரம்” என்கிறார் குமரன் செட்டி. மொரீஷியஸ் வணிகப் பூங்காக்களின் (BMPL) தலைமைச் செயலதிகாரியாக இவர் இருக்கிறார். சைபர்சிட்டியை உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்தான் இது.

இந்திய நிறுவனங்களின் கட்டிடங்கள்

முதல் பணியாக 12 மாடிகளைக் கொண்ட சைபர் டவர் 1 கட்டப்பட்டது. இதை வடிவமைத்தது, கட்டியது எல்லாம் இந்திய நிறுவனங்களே. கூடுதலாக இந்தக் கட்டுமானத்துக்கு இந்திய அரசு கடனுதவியும் வழங்கியது. ஆனால், இரண்டாவது கட்டிடத்தைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு உத்தேசித்தபோது உள்ளூர்க் கட்டிடப் பொறியாளர்களையும் உள்ளூர்க் கட்டுமான நிறுவனங்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள். வெளிநாடுகளிலிருந்து மொரீஷியஸ்காரகள் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது.

தற்போது இரண்டாவது பத்தாண்டில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது இந்த சைபர்சிட்டி. திட்டமிட்ட நகரிய வளர்ச்சியைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இடையில் இருக்கும் முக்கியமான வேறுபாட்டை சைபர்சிட்டி கோடிட்டுக் காட்டுகிறது.

“ஐரோப்பாவில் திறன் நகரங்களைப் பற்றி (smart cities) பேசும்போது ஏற்கெனவே இருக்கும் நகரங்களுக்குப் புத்துயிர் ஊட்டத்தான் நினைப்போம். ஆனால், இதற்கு நேரெதிராகத்தான் மொரீஷியஸ் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் திறன் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. புழுதியும் இரைச்சலும் சமத்துவமின்மையும் நிரம்பிக் காணப்படும் நகரங்களுக்குத் தொலை தூரத்தில் புத்தம் புதிதாகத் திறன் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. சமுதாயத்தில் எல்லோரையும் உள்ளடக்க வேண்டும் என்ற சிந்தனைக்கே எதிரான போக்கு இது” என்கிறார் மோஜோன பெர்த்ராந் என்ற பிரெஞ்சுப் பேராசிரியர்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெரும்பாலான திறன் நகரங்கள் அப்படித்தான் என்கிறார் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரஷீக் ஃபதார் என்ற நகரிய வல்லுநர். “பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் இதன் பின்னுள்ள ஒட்டுமொத்த நோக்கம்” என்கிறார் அவர்.

மோஜோன பெர்த்ராந், “சமீபத்திய ஐரோப்பிய, அமெரிக்கத் திறன் நகரங்களை ஆப்பிரிக்கா பின்பற்றினால் நல்லது” என வலியுறுத்திறார். அவர் குறிப்பிடும் ஐரோப்பிய, அமெரிக்க மாதிரிகள் சமூக, சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டவை.

புதிய நகரங்கள் தேவை இல்லை

மொரீஷியஸின் சைபர்சிட்டியைப் பீடித்துள்ள பிரச்சினைகள் அங்குள்ள கட்டிடங்கள், அவற்றிலுள்ள அலுவலகங்கள் தொடர்பானவையல்ல; ஒட்டுமொத்த திட்டப்பணிக்கும் தொடர்பானவை. ஒன்றுக்கொன்று இயைந்துபோகாத கட்டிடக் கலை வடிவமைப்புகளின் கலவையாக இந்த நகரம் காட்சிளிக்கிறது. நவீனத்தன்மை, வசதிகள் போன்றவை தரத்தில் வெவ்வேறு அளவில் வேறுபடுகின்றன. நசநசப்பு, மோசமான காற்றோட்ட வசதி, மோசமான குளிர்சாதன வசதி, எங்கெங்கும் உணவின் நாற்றம்! இதுதான் சைபர்சிட்டியின் நிலை என்கிறார்கள்.

13 லட்சம் பேர் வசிக்கும் இந்தத் தீவைப் பொறுத்தவரை நகர மேம்பாடு என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பெரும் பிரச்சினையாக இருக்கிறது. சைபர்சிட்டியும் அதில் அரசின் பங்கும் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில் புதிய அரசு அந்தத் தீவு முழுவதும் பல்வேறு திறன் நகரங்களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 115 ஹெக்டேரில் அமையவிருக்கும் ஹெரிட்டேஜ் நகரமும் அவற்றுள் ஒன்று. அந்த நாட்டின் பெரும்பாலான அரசுக் கட்டிடங்களும் அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளும் அந்த நகரத்தில் அமையவிருக்கின்றன.

“எங்களுக்குப் புதிய நகரங்கள் வேண்டாம்; எங்கள் நகரங்களைத் திறன் மிக்கவையாக ஆக்கினால் போதும்” என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவருமான ஆடில் ஆமீர் மீயா.

ஹெரிட்டேஜ் நகரத்துக்கான நிதியை மொரீஷியஸ் அரசு எங்கிருந்து பெறப்போகிறது என்பது குறித்த தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. கட்டுமானச் செலவுக்காக சவுதி அரேபியாவிடம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க மொரீஷியஸ் அரசு திட்டமிட்டிருக்கிறது.

morishiyas2_2979773a.jpg

“மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்களைத்தான் நாங்கள் பின்பற்ற நினைக்கிறோமே தவிர ஆதியில் நடந்ததுபோல் முதன்முதலாகச் சக்கரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை” என்கிறார் கேட்டன் சீவ். திறன் நகரங்களுக்கு அங்கீகாரமும், வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அளிக்கும் குழுவின் தலைவர் இவர்.

சைபர்சிட்டியில் தனது அலுவலகத்தில் அமர்ந்தபடி நம்முடன் பேசும் குமரன் செட்டி, சைபர்சிட்டியின் குறைகளை ஒப்புக்கொள்ளவே செய்கிறார். அந்தக் குறைகளைக் களைவதற்காக ‘திறன் சமூகம்’ என்ற ஒரு திட்டத்தைத் தான் வைத்திருப்பதாக அவர் கூறுகிறார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் அங்கே வரவழைத்து அவர்கள் ஒன்றுகூட, பழக, ஒரு சமூகமாக உருவெடுக்க ஏற்றவாறு வெவ்வேறு கட்டிடங்களை அங்கே கட்டலாம் என்று குமரன் செட்டி கூறுகிறார்.

இந்தத் தீவை மறுவடிவமைப்பு செய்யும் செயல்பாட்டில் சந்தையின் தேவை என்ற ஒரு விஷயத்தையே காணோம் என்கிறார் மீயா. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலல்லாமல் மொரீஷியஸின் மக்கள்தொகை நிதானமாகவே இருக்கிறது. இந்தச் சிறிய நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் திருமணங்களே நடைபெறுகின்றன. ஏராளமான வெளிநாட்டுக்காரர்கள் வந்தாலொழிய புதிய நகரங்களை உருவாக்குவதற்கான தேவை இங்கு குறைவே.

morishiyas1_2979771a.jpg

காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி மக்கள் வெகுவேகமாகத் தங்கள் அலுவலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். தலைநகரத்துக்குச் செல்லும் வழியின் இடது புறம் கரும்பு வயல்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அங்கேதான் புதிதாக உத்தேசிக்கப்பட்ட ஹெரிட்டேஜ் நகரம் வரக்கூடும். இடது பக்கமோ சைபர் சிட்டி நிற்கிறது, வெறும் கட்டிடங்கள் ஒருபோதும் சமூகங்களை உருவாக்காது என்பதையும் நகரிய மேம்பாட்டுச் செயல்பாடுகள் எல்லோருக்கும் வேலை தராது என்பதையும் நினைவுறுத்தியபடி.

தமிழில் சுருக்கமாக: ஆசை

http://tamil.thehindu.com/society/real-estate/ஒரு-மொரீஷியஸ்-நகரத்தின்-கதை/article9011405.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.