Jump to content

நாடு பூராகவும் சீன குடிவரவாளர்களை பரப்ப விரும்பும் கனடா.


Recommended Posts

நாடு பூராகவும் சீன குடிவரவாளர்களை பரப்ப விரும்பும் கனடா.

 

வன்கூவர்- கனடாவிற்கு அதிக அளவிலான புதிய குடிவரவாளர்கள் தேவைப்படுகின்றனர் என கனடாவின் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு அமைச்சர் அண்மையில் சீனா விஜயம் ஒன்றை மேற்கொண்டு விட்டு திரும்பியுள்ளார்.அங்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி சீனாவிற்கான விசா விண்ணப்பங்களை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரித்து  அதிக அளவிலான சீன மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் உல்லாச பயணிகளிற்கு கனடாவின் கதவை திறக்க அதிகாரிகளின் ஆதரவை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கனடா பூராகவும் பல ஆலோசனைகளை நடாத்தியுள்ளார்.வன்கூவரில் வர்த்தக தலைவர்களுடன் நடாத்திய வட்டமேசை மாநாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு இளைய தலைமுறையினர் விசேடமாக  பெரிய நகரங்களிற்கு வெளியே தேவை என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் குடிவரவாளர்களை சமஅளவில் விரிவு படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார் ரொறொன்ரோ அல்லது வன்கூவரிற்கு விரும்புவதாகவும் தாங்கள் கடைசியாக விரும்பும் ஒரு விடயம் ஒவ்வொரு குடிவரவாளர்களும் ஒன்றில் ரொறொன்ரோ அல்லது வன்கூவர் செல்வரை தாங்கள் விரும்புவதாகவும் புதன்கிழமை தெரிவித்தார்.
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ செப்ரம்பர் மாதம் G20 உச்சி மாநாட்டிற்காக சீனா செல்வதற்கு சற்று முன்னராக குடிவரவு அமைச்சரின் பீஜிங் விடயம் மேற்கொள்ளப்பட்டது.
எவ்வளவு குடிவரவாளர்களை ஏற்பது குறித்து முடிவாகவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.செப்ரம்பரில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அட்லான்டிக் கனடா புது வரவாளர்களை ஈர்க்கும்  ஒரு முன்னோடி திட்டமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

- See more at: http://www.canadamirror.com/canada/68126.html#sthash.8Irmo0B7.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

syria-rubble.jpg

சிரிய நாட்டு அகதிகளுக்கும் உங்கடை பெருந்தன்மையை பகிரங்கமாய் தெரிவிக்கலாமே...tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.8.2016 at 6:21 PM, குமாரசாமி said:

syria-rubble.jpg

சிரிய நாட்டு அகதிகளுக்கும் உங்கடை பெருந்தன்மையை பகிரங்கமாய் தெரிவிக்கலாமே...tw_anguished:

நாங்கள் பொருளாதரத்தை வலுப்படுத்த ஆட்களைத் தேட நீங்கள் மனிதாபிமாத்தைப் பற்றிப் பேசுறது நியாயமா என்று கனடா கேட்பது காதில் விழுகிறதா குமாரசாமியண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.