Jump to content

காலேஜ் பெண்கள் விரும்பும் உடைகள்


Recommended Posts

The-beauties.jpg

காலம் மாற மாற, அதற்கேற்ற வகையில் ஃபேஷன்களும் மாறிக் கொண்டே இருக்கும். உடைகளாகட்டும், நகைகளாகட்டும் ஃபேஷன்களின் அணிவகுப்பு முதன் முதலில் கல்லூரிகளில் தான் களை கட்டும். இளமையில் புதுமை தான் காணச் சலிக்காத அழகு. தங்களில் ரசனைக்கு ஏற்றவகையில் பெண்கள் இன்று தங்களை நன்கு அலங்கரித்துக் கொள்கிறார்கள். அழகுக் கலை பராமரிப்பு தனித்துவம் பெற்றிருக்கும் இந்தக் காலத்தைச் சேர்ந்த இளம் நங்கைகள் என்ன மாதிரியான உடைகளை விரும்பி அணிகிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்தோம். இதோ சில முடிவுகள் –

1121.jpg
 

ஜீன்ஸ்

கல்லூரி பெண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் ஆண்கள் என அனைவருக்கும் பிடித்த தேசிய உடையாகி விட்டது ஜீன்ஸ். ஜீன்ஸ் பலவிதமாக இருந்தாலும் காலேஜ் பெண்கள் விரும்பி அணிவது 3/4த் ஜீன்ஸ்.  இவை டீஷர்ட்டுகள் அருமையாக ஒத்துப் போகும்.


 
லெக்கின்ஸ்

அணிய வசதி எல்லா கலர்களிலும் கிடைக்கிறது. மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து அணிய இதைவிட சிறந்த உடை எதுவுமில்லை என்கிறார்கள்.

லெஹங்கா


 hqdefault%20(1).jpg
 
பாவடை தாவணியின் வெஸ்டர்ன் அவதாரம் தான் இது. கேஷுவலாக அணிய முடியாவிட்டாலும் பிறந்த நாள், வெள்ளிக்கிழமை அல்லது காலேஜ் பங்ஷனுக்கு அணிகிறார்கள்.

ஸ்கர்ட்

ஸ்கர்ட்களின் ஏ லைன், அம்பெரல்லா, பென்சில், மெர்மெய்ட், பானல், ஏசிமெட்ரிகல், என விதம் விதமான பாவடைகள் உள்ளன. கால் பாதம் வரைத் தொடுகிற லாங் ஸ்கர்ட்களைத்தான் கல்லூரிப் பெண்கள் அதிகம் விரும்பி அணிகிறார்கள். இவை வண்ண வண்ணமாக அழகிய டிசைன்களில் பிரின்ட் செய்யப்பட்டுக் கிடைக்கிறது.

பலாஸோ

தொள தொளவென்று பாவாடை போலிருக்கும் இந்த தோத்தி வகை உடை அணிய வசதியானது. கேஷுவலாக அணியலாம். தகுந்த டாப்ஸுடன் அணிய பார்வைக்கும் அழகாக இருக்கும்.

ஃபார்மல் பேண்ட், கேதரிங், பாரலல், டைட்ஸ் என்று பல வகை உடை இருக்கிறது. டெனிம் ரகத்தில் குட்டைப் பாவாடை மற்றும் ஷார்ட்ஸ் கூட சில பெண்கள் விரும்பி அணிகிறார்கள். டாப்ஸ் பொருத்தவரையில் கல்லூரி பெண்கள் அடிக்கடி அணிய விரும்புவது –

டீஷர்ட்

ஜீன்ஸுக்கு ஏற்ற மேலாடை இதுதான். ப்ளெயின், பிரிண்டட் டிசைன்களில் கிடைக்கிறது. பெண்களுக்கான ப்ராண்டட் டீஷர்ட் பெரிதும் விரும்புகிறார்கள். வாசகங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட டீஷர்டுகளுக்கு அதிக மவுசு.

குர்தி

50527876.jpg
ஷார்ட் குர்தி பார்க்கவும் அணியவும் வசதியாக இருப்பதால் அதிகம் வாங்குகிறார்கள். மிக்ஸ் மேட்ச் செய்து அணியவும் வசதியானது. எத்னிக்காக இருக்கும் அதே சமயம் மாடர்னாகவும் காண்பிக்கும் இந்த குர்தியை ஆல் டைம் ஃபேவரைட்டாக காலேஜ் பெண்கள் அறிவித்துவிட்டார்கள்.

சுடிதார்

டைட் ஃபிட்டிங்கில் ஆரம்பித்து, அம்ப்ரெல்லா, அனார்க்கலி என சுடிதாரின் பரிணாம வளர்ச்சி எப்படியிருந்தாலும் அதை விரும்பி வாங்கி அணியவே இளம் பெண்கள் விரும்புகிறார்கள். மெட்டீரியல் வாங்கி தைத்து அணிவது அல்லது ரெடிமேடாகக் கிடைக்கும் சுடிதார்களையும் வாங்குகிறார்கள்.

ஷர்ட்

images.jpg
பெண்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட ஷர்ட்டுகள் சந்தையில் உள்ளன. ஃபார்மல் கேஷுவல், ஷார்ட் ஷர்ட்ஸ் என்று பலவகை உண்டு. ஜீன்ஸ், பென்சில் ஸ்கர்ட்டுகளுக்கு டாப்பாக அணியலாம். விதவிதமான காலர் வைத்த ஷர்ட்டுகளையும் அணிகிறார்கள்.

ஸ்டோல்

Tips-for-College-Girls.jpg
 
 
இது பார்க்க துப்பட்டா போல இருந்தாலும் அது இல்லை, ஆனால் அதைப் போன்ற ஒன்று. விதவிதமான ஸ்டைல்களில் கிடைக்கிறது. ஜீன்ஸ் டிஷர்ட் அணிந்தாலும் சரி அல்லது குர்திக்கும் சரி இது பொருந்தும். இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் முகத்தையும் தலையையும் பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

எப்போதாவது உடுத்தும் புடவை கூட இவர்களின் லிஸ்டில் உள்ளது. அழகான டிசைனர் ப்ளவுஸுடன் கூட புடவைகளை விரும்பி அணிகிறார்கள். இந்தக் காலத்துப் பெண்களுக்கு ஏற்ற வகையில் ப்ளீட்ஸ் தைக்கப்பட்ட புடவை கூட கடைகளில் கிடைக்கிறது.

என்ன உடையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக தகுந்த ஆக்ஸசரிகளுடன் காலேஜ் பெண்கள் அணிவார்கள். உடைக்குப் பொருத்தமான நிறத்தில் அணிகலன்களும் அணிந்து, கச்சிதமான ஹேர் ஸ்டைல்களுடன் வலம் வரும் இவர்கள் சின்ன சின்ன தேவதைகள் என்றால் மிகையாகாது.

http://www.dinamani.com/lifestyle/2016/07/12/காலேஜ்-பெண்கள்-விரும்பும்-உ/article3525677.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.