Jump to content

திருமணங்களில் ஒரு மாற்றம் வேண்டும்! - பிரீத்தி கும்பரே


Recommended Posts

இந்தியத் திருமணங்களில் ஒரு மாற்றம் வேண்டும்! - பிரீத்தி கும்பரே

17.jpg

 

திருமணம் என்றால்  சுபச் செலவுதான். தங்கள் வீட்டுக் கல்யாணத்தை  பிறர்  வியக்கும் அளவுக்கு நடத்த வேண்டும்  என்றுதான் எல்லாரும் விரும்புவர். வரதட்சணை,  இலை நிறைய விதம் விதமான அறுசுவை உணவு... பூக்களால் ஜோடனை,  மேளம், கச்சேரி  அல்லது மெல்லிசை,  தாம்பூலம்... மொய்  இல்லாமல்  இந்தியக் கல்யாணங்கள் நடப்பதில்லை. இவை  எதுவும் இன்றி  சென்ற  ஜுலை  3 ஆம்  நாள் நடந்த   திருமணம்  அகில இந்தியாவுக்கு  ஒரு முன்மாதிரியான  திருமணமாக  அமைந்து விட்டது.  

திருமணச் செலவை குறைத்து,  ஆடம்பரம் ஆரவாரம் இல்லாமல் அந்தத்  திருமணம் நடந்ததினால் மட்டும் பிரபலம் அடையவில்லை. திருமணம் முடிந்ததும், கடனை அடைக்க முடியாமல்  தற்கொலை செய்து கொண்ட 10  விவசாயிகளின்   குடும்பத்திற்கு  தலா  இருபதாயிரம் ரூபாய்  நன்கொடையாக  மணமக்கள் வழங்கி இருக்கிறார்கள். இந்த சமூக  சிந்தனைக்காகத்  தான், இந்தத்  திருமணம்  அகில இந்திய அளவில்  பிரபலமாகி உள்ளது. மணமகள்  பிரீத்தி கும்பரே தொடர்கிறார்:

""என் கணவரான அபெய் தெவாரே,   மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.   அவரது   குடும்பம்  பாரம்பரியமாக விவசாயக் குடும்பம். அபெய்   டில்லி ஐஐடியில்  தொழில் நுட்ப பட்டதாரி.  இந்திய அரசு பணி தேர்வினை எழுதி, இந்திய வருமானத்துறையில்  அதிகாரியாக  பொறுப்பேற்றார்.  நானும் தொழில் நுட்ப பட்டதாரிதான். மத்திய அரசுத் தேர்வுகளுக்கு நானும்  அபெய்யும் எங்களை  தயார் செய்து கொண்டிருக்கும் போதுதான்  எங்கள்  இருவருக்கிடையே அறிமுகம்  ஏற்பட்டது. பிறகு  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்,  திருமணம் செய்து கொள்ளலாம்  என்று முடிவு  செய்தோம்.  எனக்கும்  மத்திய அரசு வங்கியொன்றில்   அதிகாரியாக வேலை கிடைத்தது.

 சென்ற  மார்ச்   மாதம்  அபெய்யும்,  அவருடன்  இந்திய வருமான துறைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களும்   சேர்ந்து  குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர்.  குடியரசுத் தலைவர்,  நாட்டின்  சமூகப் பொருளாதார  மாற்றத்திற்காக உழைக்கும் படி  அந்தக் குழுவினரைக் கேட்டுக் கொண்டார். குடியரசுத் தலைவர்  கேட்டுக் கொண்டது போன்று, தன்னால்  முடிந்ததை  சமூக நலத்திற்காகச்  செய்ய வேண்டும்  என்று  அன்றே தீர்மானித்தார் அபெய்.

 சமூக பொருளாதார  வேறுபாடுகள் இருந்தாலும்,   ஒரு கல்யாணத்திற்கு   மூன்று  லட்சம் முதல் அம்பது கோடி வரை  செலவு செய்யப்படுகிறது  என்பதையும் தெரிந்து  கொண்டோம்.  குடும்பத்  தலைவர்   கடன்   வாங்க,  திருமணமும்  ஒரு முக்கிய காரணமாக அமைகிறது  என்பதும் புரிந்தது.  சிலர் நில புலன்களை  திருமணத்திற்காக   விற்பதும்,   பிறகு  அதுவும்  போதாதென்று  மேலும் கடன் வாங்குவதும், பலர்  தங்கள் சம்பாத்தித்த அனைத்தையும், தங்கள் வாரிசுகளின்    திருமணங்களுக்காகச் செலவு செய்து  சேமிப்பு அனைத்தையும் தொலைக்கின்றனர்.  பிறகு கடன் வாங்கி வறுமைச் சிறையில்  அடைபட்டுக் கொள்கிறார்கள்.  அமராவதி பகுதியில்  இந்த நிலைமைதான். விவசாயக் கடன்,  திருமணக் கடன்.. அதற்கான வட்டி  இவற்றை  கட்ட முடியாமல்,   விவசாயிகள்  தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  இப்படி  தற்கொலை  செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு  பண உதவி செய்யவேண்டும். அதற்காக  எங்கள் திருமணத்தை மிகச் சாதாரண முறையில் நடத்தி, திருமணத்திற்காக ஒதுக்கி  வைத்த      பணத்தை, விவசாயிகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உதவி செய்யலாம்       என்று நாங்கள் தீர்மானித்தோம்.  எங்களது பெற்றோரும் எங்கள் முடிவிற்கு ஆதரவளித்தனர்.

எங்கள் திருமணம் பதிவுத் திருமணம்தான்.  அதில்  எங்களது பெற்றோர்கள்,  சொந்த பந்தங்கள்,  நண்பர்கள்,   சமூக ஆர்வலாளர்கள் கலந்து கொண்டனர். நாங்கள் மணமக்களாகப்  பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக  மட்டுமே  புதிய உடைகளை அணிந்தோம். சம்பிரதாயத்திற்காக  ஒரே  ஒரு மாலையை மட்டும் அணிந்து கொண்டோம். திருமண மண்டபத்தில்  வேறு எங்கும்  பூக்கள் பயன்படுத்தப் படவில்லை. கல்யாணச் சாப்பாடும்  சாதாரணமாக  வீட்டில்  எப்படி  சாப்பிடுவோமோ  அதே போன்ற எளிமையான வீட்டு சாப்பாடுதான்  பரிமாறப்பட்டது.  மண்டபத்தில்,  சமூகப் பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகளை சரி செய்ய அழைப்பு விடுக்கும்  சுவரொட்டிகள் தொங்க விடப்பட்டன.   சமூக  ஆர்வலர்களும்  இது குறித்து  திருமண  அரங்கில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்..

திருமணத்தை  வீட்டில் வைத்திருந்தால் செலவை இன்னமும் குறைத்திருக்கலாம்.  திருமணத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் அமர வீட்டில் இட வசதியில்லாததால்,  திருமணத்தை  அரங்கினுள் வைத்தோம்.  தவிர,   திருமணத்தில் கலந்து கொள்பவர்களை  சிக்கன  திருமணம்  என்கிற சித்தாந்தத்தின்பால்  திருப்ப  இந்த தருணத்தைப்  பயன்படுத்திக்  கொண்டோம். 

தீபக்  என்கிற விவசாயியின்  மருமகள் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களில்  தீபக்கின்  மகன் தங்களுக்கு இருந்த மூன்று ஏக்கர் நிலத்தை  விற்று எல்லா கடன்களையும்  அடைத்து விட்டு, வாழ வழியின்றி  அவரும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்ளும் போது  பக்கத்து டீக்கடைக்காரருக்கு  ஒரு ரூபாய் கடன் பாக்கி உள்ளது. அதைக்  கொடுத்து கடனை தீர்க்க வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு  தற்கொலை செய்திருக்கிறார். தீபக் தனது  பேரனை  இந்தத்  தள்ளாத வயதில்  ஏற்க வேண்டிய நிலைமை.  இதுபோன்று மிகவும்  பொருளாதார  கஷ்டங்கள் இருப்பவர்களுக்கு  இந்த நிதி உதவி செய்திருக்கிறோம்.

 அமராவதி மாவட்டத்தில்  ஐந்து நூலகங்களுக்கு தலா ஐம்பத்திஇரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை வாங்கி  அன்பளிப்பு செய்துள்ளோம்.

எங்கள் திருமணத்தின் முதல் ஆண்டு  விழாவினை  நாங்கள் உதவியிருக்கும் பத்து  விவசாயக் குடும்பங்களுடன்  கொண்டாடவும்  முடிவு செய்திருக்கிறோம். படித்த இளம் தலைமுறையினர்  சம்பிரதாய நிர்பந்தங்களை விட்டு வெளியே வந்து   சமூகப் பொறுப்புடன்  நடந்து கொண்டால்  நமது சமூகம் நிச்சயம் முன்னேறும் எனும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்தியத் திருமண முறைகளில் ஒரு மாற்றம்  வேண்டும் என்ற குறிக்கோளிலும்  நடந்ததுதான் எங்கள் திருமணம்''  பிரீத்தி  பிரகாசமாகச்  புன்னகைக்கிறார்.

- பிஸ்மி பரிணாமன்

http://www.dinamani.com/weekly_supplements/magalirmani-weekly/2016/08/10/இந்தியத்-திருமணங்களில்-ஒரு-/article3572767.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.