Jump to content

ஆண்களின் இல்லற வாழ்வினை சீரழிக்கும் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் இணையத்தின் ஊடாக அதிகளவில் பாலியல் படங்களை பார்ப்பதால் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருகின்றது.

இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று என்று  நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை சேர்ந்த ஏங்கெல்லா கிரகோரி தெரிவித்துள்ளார்.


கடந்த காலத்தில், ஆணுறுப்பு விறைப்பு தன்மை செயலின்மை பிரச்சினையின் நிமிர்த்தமாக வைத்தியசாலைகளுக்கு வந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள், நீரிழிவு நோய், மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் உடல் இயக்கத் திறனை குறைக்கும் நோய் மற்றும் இதய பிரச்சினைகள் காரணமாக வைத்தியசாலைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.

இணையவழி மூலம் ஆபாசப் படங்களை பார்க்கக் கூடிய வசதி இப்போது எளிதாகக் கிடைப்பது சில பாலியல் உறவுகளை சேதப்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.

இணையத்தின் ஊடாக ஆபாசப் படங்களை பார்வையிடும்  இளம் ஆண்களின் மூளைகள் நிஜ பெண்களை மறந்து கணினிகளில் பார்க்கக்கிடைக்கும் படங்களோடு ஒன்றிவிடுவதே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது

 

http://www.virakesari.lk/article/10302

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா ஊடகங்கள் பெண்களை பாலியல் சித்திரங்களாக சித்தரிக்கவும் ஆண்களை பாலியல் வெறியர்களாக இனங்காட்டிப் பிழைக்கவுமே நிற்கின்றனர்.

அண்மையில் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெண்.. தான் 9 வயதில் ஆபாசப் படத்தை தற்செயலாகப் பார்க்க வெளிக்கிட்டு தினமும் 3 தடவை அதைப் பார்த்தால் தான் நாளே ஓடும் என்ற அடிமை நிலைக்கு வந்து.. இப்போ பாலுறவு என்றாலே ஒருவித தயக்கம் அச்சம் காரணமாக அதில் இருந்து ஒதுங்கி இருப்பதாகக் கூறினார்.

ஆக.. பிரச்சனை ஆண்களுக்கு மட்டுமானதல்ல.. மொத்த சமூகத்திற்குமானது.

ஆனால்.. இந்த ஆய்வுகளின் நம்பகத் தன்மை என்பது கொஞ்சம் கடினமாகவே உள்ளது. 

காரணம்.. பாலியல் குறைபாட்டிற்கும் ஆபாசப் படம் பார்ப்பதற்கும் நேரடித் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. அவற்றிற்கு வேறு பல காரணங்களும் உள. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பிரச்சனைதான் போல இருக்கிறது  

ஆனால் ஆண்கள் மட்டுமா இணையம் பார்ப்பது பெண்கள்  இந்த முகப்புத்தகத்தில் எப்படி நேரத்தை போக்குறார்கள் என்பது யாவரும் அறியாததா ஒரு  டமால் டூமில் கவிதைக்கு லைக்கு கொமண்டு போட்டு நாம் வெந்து போயிருக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

பாலியல் குறைபாட்டிற்கும் ஆபாசப் படம் பார்ப்பதற்கும் நேரடித் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. அவற்றிற்கு வேறு பல காரணங்களும் உள. tw_blush::rolleyes:

 அந்த வேறை காரணங்கள் என்னெண்டு தெரியாமல் உங்களிட்டை கேட்க முனிவர் ஜீ  வெட்கப்படுறார் போலை கிடக்கு ....... கையோடை அதையும் ஒருக்கால் சொல்லி விடுங்கோ..:11_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.