Jump to content

தெரியுமோ உங்களுக்கு ???? போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே!

நீண்ட நாட்களின் பின்னர் ஒரு போட்டி நிகழ்வோடு.....

சிறுவயதில் நாம் விடுகதைகள் கூறி மகிழ்ந்திருக்கிறோம். இப்போதைய வாழ்வில் பலருக்கு அவை மறந்தும் இருக்கும். எந்த வயதிலும் சிந்தனையைத் தூண்ட தமிழர்களிடம் இருக்கும் சிறந்த மருந்து இந்த விடுகதைகள்.

நான்  ஐந்து விடுகதைகளைப் போடுவேன். யார் முதலில் ஐந்துக்கும் சரியான பதில்களைக் கூறுகிறாரோ அவருக்குப் பச்சைப்புள்ளி வழங்கப்படும். ஐந்து விடுகதைகளில் ஐந்துக்கும் விடை தெரியாது மூன்று அல்லது நான்குக்கு மட்டும் யாராவது கூறினாலும் அவருக்கும் பச்சை உண்டு யாரும் விடை கூறாது விடில். பார்ப்போம் யார் அதிக பச்சை வெல்கிறீர்கள் என்று ...........

 சரியான விடையை ஒருவர் கூறிவிட்டால் நான் அடுத்த விடுகதைகளைப் போடுவேன்.

 

1.அண்ணன் இனிப்பான், தம்பி புளிப்பான், தங்கை மணப்பாள். அவர்கள் யார் ?

2.அடித்து நொறுக்கி அனலில் போட்டதும் மணத்திடும். அது என்ன ?

3.அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?

4.அடித்தால் வலிக்கும்,கடித்தால் இனிக்கும். அது என்ன ?

5.அம்மா கொடுத்த தட்டில் நீர் ஒட்டவில்லை. அது என்ன ?

 

 

 

Link to comment
Share on other sites

1.அண்ணன் இனிப்பான், தம்பி புளிப்பான், தங்கை மணப்பாள். அவர்கள் யார் ?

      பால் - மோர் - வெண்ணெய்

2.அடித்து நொறுக்கி அனலில் போட்டதும் மணத்திடும். அது என்ன ?

    சாம்பிராணி

3.அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?

    வளையல்

4.அடித்தால் வலிக்கும்,கடித்தால் இனிக்கும். அது என்ன ?

   கரும்பு

5.அம்மா கொடுத்த தட்டில் நீர் ஒட்டவில்லை. அது என்ன ?

  தாமரை இலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் எட்டியும் பாக்குதில்ல. அதால போட்டி விதிகளை இலகுபடுத்தியுள்ளேன். தமிழினிக்கு வாழ்த்துக்களும் பச்சையும்.

பச்சை பின்னேரம் தான் போடலாம் தமிழினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சனம் எட்டியும் பாக்குதில்ல. அதால போட்டி விதிகளை இலகுபடுத்தியுள்ளேன். தமிழினிக்கு வாழ்த்துக்களும் பச்சையும்.

பச்சை பின்னேரம் தான் போடலாம் தமிழினி.

ஏற்கனேவே விடுகதை திரி இருக்கிறது  என நினைக்கிறேன் sumeriyar:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓநான் கவனிக்கவில்லை. எனக்கு ஒருக்கா லிங்க் தர முடியுமோ முனிவர்? ஏற்க்கனவே ஒன்று இருந்தால் இன்னொன்று தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவர் ஜீ. 

2014 ஜூன் 5 ம் திகதிக்குப் பின் இந்தத் திரி அப்படியே இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள். அவருக்குத் தனிமடல் இட்டுள்ளேன். அவர் வந்து தொடரும் வரை நான் இதை தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

தொகுதி இரண்டு

6. அடிமேல் அடிவாங்கி அனைவரையும் சொக்கவைக்கும். அது என்ன ?

7. அகோரத் தாய்க்கு ஐம்பது குஞ்சுகள். குஞ்சுகள் வாயெல்லாம் நஞ்சு.அது என்ன ?

8. அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு அங்கம் முழுதும் தங்கக் கண்ணாடி. அது என்ன ?

9. அவன் வருவான் தெரியும். எப்போ போவான் எங்கே போவான் என்பது தெரியாது. அவன் யார்?

10.அக்காள் தங்கை உறவுண்டு. அண்டை வீடுண்டு. கிட்ட வந்தாலும் தொட்டுக்கொள்ள முடியாது. அது என்ன ?

 

சரி இம்முறை யார் பார்ப்போம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6. அடிமேல் அடிவாங்கி அனைவரையும் சொக்கவைக்கும். அது என்ன ?

அம்மி 

7. அகோரத் தாய்க்கு ஐம்பது குஞ்சுகள். குஞ்சுகள் வாயெல்லாம் நஞ்சு.அது என்ன ?

 

8. அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு அங்கம் முழுதும் தங்கக் கண்ணாடி. அது என்ன ?

 

9. அவன் வருவான் தெரியும். எப்போ போவான் எங்கே போவான் என்பது தெரியாது. அவன் யார்?

 

10.அக்காள் தங்கை உறவுண்டு. அண்டை வீடுண்டு. கிட்ட வந்தாலும் தொட்டுக்கொள்ள முடியாது. அது என்ன ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல போட்டி திரிதான்....நேரம் கிடைக்கும் போது பங்குபற்றுவேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நல்ல போட்டி திரிதான்....நேரம் கிடைக்கும் போது பங்குபற்றுவேன்.:cool:

என்ன தான் உத்தியோகமோ அப்படி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வந்திட்டுப் போகாமல் குசாவும் முனிவரும் முயன்று பார்க்கலாமே. 

3 hours ago, முனிவர் ஜீ said:

என்ன தான் உத்தியோகமோ அப்படி tw_blush:

உத்தியோகத்தைப் பற்றி இப்பிடிப் ப்ப்ளிக்கில கேக்கிறதோ

Link to comment
Share on other sites

8 மணித்துளிகளாக யாரும் முழுமையாக பதில் தராமையால்  பதில் போடுறன்..பதில்கள் சரியா இல்லையா என்று

சுமோக்கா வந்தால் தான் தெரியும்.

 

6. அடிமேல் அடிவாங்கி அனைவரையும் சொக்கவைக்கும். அது என்ன ?

      மேளம்   

7. அகோரத் தாய்க்கு ஐம்பது குஞ்சுகள். குஞ்சுகள் வாயெல்லாம் நஞ்சு.அது என்ன ?

    தீப்பெட்டி

8. அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு அங்கம் முழுதும் தங்கக் கண்ணாடி. அது என்ன ?

      மயில்

9. அவன் வருவான் தெரியும். எப்போ போவான் எங்கே போவான் என்பது தெரியாது. அவன் யார்?

     நிழல்

10.அக்காள் தங்கை உறவுண்டு. அண்டை வீடுண்டு. கிட்ட வந்தாலும் தொட்டுக்கொள்ள முடியாது. அது என்ன ?

     கண்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி.

ஒன்பதாவது விடுகதையின் விடை புகை. ஆனாலும் நீங்கள் நான்கிற்குச் சரியாகப் பதில் கூறியமையால் பச்சை பெறுகிறீர்கள்.

தொகுதி 3

11. அடிபட்டவன் அழுதால் அதுவே ஆனந்தம் பலருக்கு. அது என்ன ?

12. அருகருகே அண்ணன் தம்பி, ஆனாலும் ஆயுள்வரை சேரமாட்டார்கள். அவர்கள் யார்?

13. அவனைத் தொடுவானேன், ஆபத்தை அணைப்பானேன். அவன் யார் ?

14. அண்ணன் தம்பி ஐவர், ஐவர் குடியிருப்பும் ஒரு வீட்டு முற்றத்தில்.அவர்கள் யார்?

15. அடித்தாலும் உதைத்தாலும் அவன் அழ மாட்டான். அவன் யார்?

 

சரி இம்முறை பார்ப்போம் யார் சரியாகச் சொல்கிறீர்கள் என்று

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சும்மா வந்திட்டுப் போகாமல் குசாவும் முனிவரும் முயன்று பார்க்கலாமே. 

உத்தியோகத்தைப் பற்றி இப்பிடிப் ப்ப்ளிக்கில கேக்கிறதோ

நம்மாஆள் தானே சும்மா போட்டு தாக்குவது  நல்ல மனுசன் தம்பி எப்படி பகிடி விட்டாலும் அடிக்காத அண்ணன்tw_blush:

எனக்குதான் வயது போகபோக இந்த விடு கதைகள் எல்லாம் மறந்து போய்விட்டது:unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவியளே ஒருத்தர் கூட வரேல்லையோ ??

யாரும் பதில் கூறாத பட்சத்தில் நாளை பதில் கூறுவேன்.

Link to comment
Share on other sites

11. அடிபட்டவன் அழுதால் அதுவே ஆனந்தம் பலருக்கு. அது என்ன ?

    மத்தளம்

12. அருகருகே அண்ணன் தம்பி, ஆனாலும் ஆயுள்வரை சேரமாட்டார்கள். அவர்கள் யார்?

   தண்டவாளம்

13. அவனைத் தொடுவானேன், ஆபத்தை அணைப்பானேன். அவன் யார் ?

  மின்சாரம்

14. அண்ணன் தம்பி ஐவர், ஐவர் குடியிருப்பும் ஒரு வீட்டு முற்றத்தில்.அவர்கள் யார்?

  கைவிரல்கள்

15. அடித்தாலும் உதைத்தாலும் அவன் அழ மாட்டான். அவன் யார்?

   பந்து

Link to comment
Share on other sites

On ‎8‎/‎17‎/‎2016 at 0:23 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாழ்த்துக்கள் தமிழினி.

ஒன்பதாவது விடுகதையின் விடை புகை. ஆனாலும் நீங்கள் நான்கிற்குச் சரியாகப் பதில் கூறியமையால் பச்சை பெறுகிறீர்கள்.

தொகுதி 4

 

12. அருகருகே அண்ணன் தம்பி, ஆனாலும் ஆயுள்வரை சேரமாட்டார்கள். அவர்கள் யார்?

விடை: தண்டவாளம் (இதுக்கு கண்களையும் விடையாகச் சொல்லலாம்)

13. அவனைத் தொடுவானேன், ஆபத்தை அணைப்பானேன். அவன் யார் ?

நெருப்பு

14. அண்ணன் தம்பி ஐவர், ஐவர் குடியிருப்பும் ஒரு வீட்டு முற்றத்தில்.அவர்கள் யார்?

கைவிரல்கள்

15. அடித்தாலும் உதைத்தாலும் அவன் அழ மாட்டான். அவன் யார்?

பந்து

சரி இம்முறை பார்ப்போம் யார் சரியாகச் சொல்கிறீர்கள் என்று

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி. இம்முறையும் தமிழினியே பச்சை வென்றுள்ளார். வருகை தந்து விடைகளைக் கூறிய நுணாவிலானுக்கும் நிழலிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

தொகுதி 4

16. அரசமரம் தூங்க, ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் உறங்க, அவன் மட்டும் உறங்கவில்லை. அவன் யார்?

17. அனலுக்கும் பிறப்பான்,குளிருக்கும் பிறப்பான்.அவன் யார்?

18. அறைகள் அறுநூறு அத்தனையும் ஒரே அளவு. அது என்ன ?

19. அவன் போகும் இடம் தெரியாது, ஆனால் போன இடத்துக்குத் தெரியும். அது என்ன ?

20. அடை மழை பெய்தபின் படை படையாய் வந்திறங்கும் பறங்கி நாட்டு விமானம்.அது என்ன ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாழ்த்துக்கள் தமிழினி. இம்முறையும் தமிழினியே பச்சை வென்றுள்ளார். வருகை தந்து விடைகளைக் கூறிய நுணாவிலானுக்கும் நிழலிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

தொகுதி 4

16. அரசமரம் தூங்க, ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் உறங்க, அவன் மட்டும் உறங்கவில்லை. அவன் யார்?

17. அனலுக்கும் பிறப்பான்,குளிருக்கும் பிறப்பான்.அவன் யார்?

18. அறைகள் அறுநூறு அத்தனையும் ஒரே அளவு. அது என்ன ?

19. அவன் போகும் இடம் தெரியாது, ஆனால் போன இடத்துக்குத் தெரியும். அது என்ன ?

20. அடை மழை பெய்தபின் படை படையாய் வந்திறங்கும் பறங்கி நாட்டு விமானம்.அது என்ன ?

 

16. சந்திரன்.

17. புகார் 

18. தேன்கூடு.

19. காற்று..????

20. புற்றீசல்கள். 

Link to comment
Share on other sites

16. அரசமரம் தூங்க, ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் உறங்க, அவன் மட்டும் உறங்கவில்லை. அவன் யார்?

      மூச்சு

17. அனலுக்கும் பிறப்பான்,குளிருக்கும் பிறப்பான்.அவன் யார்?

      புகை

18. அறைகள் அறுநூறு அத்தனையும் ஒரே அளவு. அது என்ன ?

      தேன்கூடு

19. அவன் போகும் இடம் தெரியாது, ஆனால் போன இடத்துக்குத் தெரியும். அது என்ன ?

     காற்று

20. அடை மழை பெய்தபின் படை படையாய் வந்திறங்கும் பறங்கி நாட்டு விமானம்.அது என்ன ?

    ஈசல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16.8.2016 at 10:21 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சும்மா வந்திட்டுப் போகாமல் குசாவும் முனிவரும் முயன்று பார்க்கலாமே. 

தெரிஞ்சு வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறம்? :312_new_moon:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதோ பாத்துக் கீத்துப்பதிலை எழுதேலாதா ?? குசா

வாழ்த்துக்கள் தமிழினி சரியான பதில்களைத் தந்தமைக்கு. அத்தோடு பச்சையும் பெறுகிறீர்கள்.

புங்கையும் பதில்களை எழுதினாலும் இரு விடைகள் சரிபோல இருந்தாலும் தவறானவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி 5

21.அவனி எல்லாம் தூங்க அவன் மட்டும் தூங்கவில்லை.அவன் யார்?

22. அன்றாடம் தீப்பிடிக்கும் அழகு மாளிகையில் அறுசுவை விருந்து தயாரிக்கும்.அது என்ன?

23.அடிக்கடி தாவுவான்,அரசியல்வாதியல்ல. அவன் யார்?

24. அரக்கர்கள் நடுவே அழகி பவனி வருகிறாள்.அவள் யார் ?

25.அரிசிபோல் பூப்பூக்கும்,அம்மாடி என்று காய் காய்க்கும். அது என்ன ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் போடுற பதில் சரியோ ,பிழையே  tw_dizzy:ஒரு பச்சை போடணும் .டீல் ஒகே எண்டா சொல்லுங்க :205_dog:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.