Jump to content

புங்குடுதீவை பிறப்பிடமாகக்கொண்ட இராமலிங்கம் ஞானசேகரன் அவர்களது இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று (11-08-2016) நடாத்தப்பட்டது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவை பிறப்பிடமாகக்கொண்ட இராமலிங்கம் ஞானசேகரன் அவர்களது

இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று (11-08-2016) நடாத்தப்பட்டது.

புலத்தில் உறவுகள் யாருமற்றநிலையில் இவரது இறப்பு சம்பந்தமாக

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து

அது சம்பந்தமான அரச மற்றும் சட்ட நிர்வாகம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தததும் 
FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அவரது இறுதி அடக்கம் சம்பந்தமான சகல விடயங்களையும் ஒழுங்கு செய்திருந்தது.

ஊரவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எமது சகோதரர் ஒருவருக்கு செய்யவேண்டிய அத்தனை கிரிகைகளும் முறைப்படி செய்யப்பட்டு 
வந்திருந்தவர்களால் கற்பூரம் சாம்பிராணி ஏற்றப்பட்டு பூக்கள் தூவப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு
அஞ்சலிகள் செய்யப்பட்டு இறுதியாக தேவாரம் பாடப்பட்டு

வருகை தந்திருந்த ஒன்றிய நிர்வாகிகளால் தோளில் சுமந்து அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

இவரது கிரியைகள் முடிவடைந்ததும் அவரது அஷ்டி (சாம்பல்)

தாயகத்தில் அவரது சகோதரர்களிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இவை அனைத்துக்குமான செலவான 2607 € 20 களை 
இது போன்ற அசாதாரண நிலைமைகளில் வழமையாக செய்வது போல்

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகிகள் குழு தமது சொந்த விருப்பத்தின் பேரில்

தம்மால் முடிந்த பங்களிப்புக்களை செய்து தம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் முழுமையான அறிவித்தல்கள் தொலைபேசி அழைப்புக்கள்

மற்றும் லா சப்பலில் நோட்டீசும் ஒட்டப்பட்ட போதும்
FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகிகளும்

பாரதி விளையாட்டுக்கழகமும்

மரணமடைந்தவரின் இரு நண்பர்களுமே இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

தகவல் - 
FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

Gnanasegaran_01_4.jpg

தகவல் - Photo de Kugathasan Subramaniam.
FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

 
Photo de Kugathasan Subramaniam.
Photo de Kugathasan Subramaniam.
Photo de Kugathasan Subramaniam.
J’aimeAfficher plus de réactions
CommenterPartager
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 

இந்த இக்கடடான நேரத்தில் உதவி செய்த FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.