Jump to content

பாராமுகத்தில் சென்னையும், தில்லியும் ஒன்றா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாராமுகத்தில் சென்னையும், தில்லியும் ஒன்றா..?

சக மனிதன் உயிர்போகும் நிலையில், பாரமுகமாக செல்லும் மனித மனங்களைப் பொறுத்தவகையில் சென்னையும், தில்லியும் ஒன்றே என இக்காணொளி நிரூபிக்கிறது. vil-triste2.gif

(பலவீனமானவர்கள், காணொளியை பார்க்க வேண்டாம்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செத்து விட்டதா மனித நேயம்..!?

delhi%20acc%202.jpg

 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்பூல் எனும் 40 வயது இளைஞர் கிழக்கு டில்லியில் பகலில் இ.ரிக்‌ஷா டிரைவராகவும், இரவுகளில் செக்யூரிட்டியாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். நேற்று பகலில் கிழக்கு டில்லியின் சுபாஷ் நகர் பகுதியில் மத்பூலின் வாகனத்தை டெம்போ வேன் ஒன்று மோதியதில் மத்பூல் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடும் நிலையில் சாலையோரம் கிடந்தார். இந்நிலையில் மத்பூலின் வாகனத்தை இடித்து தள்ளிய டெம்போ ஓட்டுனர், தனது வாகனத்தைவிட்டு இறங்கி வந்து அடிபட்டவர் உயிருடன் இருக்கிறாரா? என்று பார்த்து விட்டு காயமுற்றவரை காப்பாற்றும் மனிதநேயம் சிறிதுமின்றி மறுபடியும் தனது வாகனத்தை  எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து விரைந்து மறைந்து போனார். டிரக் ஓட்டுனர் மட்டுமல்ல அந்தச் சாலையைக் கடந்த எல்லா மனிதர்களும் மத்பூலின் நிலையை வேடிக்கை பார்த்தார்களே தவிர அவருக்கு உதவும் மனநிலை யாருக்குமே வரவில்லை.

அதோடு மட்டுமல்ல, மத்பூலைக் கடந்து போன ஒரு கை ரிக்‌ஷா தொழிலாளி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சக மனிதனுக்கு உதவாமல், மத்பூலின் அருகே கிடந்த அவரது மொபைல் ஃபோனை மட்டும் எடுத்துக் கொண்டு விலகிச் செல்வது சி.சி.டி.வி வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. சாலை விபத்து குறித்து மட்டுமல்ல என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும் அச்சத்தை ஏற்படுத்துகிறது இந்தப் வீடியோ பதிவு.

‘மண்ணில் மனித நேயம் வளர்ப்போம்' எனும் சொல்லாடல் வாகனங்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் பலவிதமான வாசகங்களில் இதுவும் ஒன்றே எனும்படியாக முக்கியத்துவம் அற்று நீர்த்துப் போய் விட்டது.

சுவாதி கொலையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடும் போது மக்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு எப்படி எழுந்ததோ, அதைப் போலவே நேற்று கிழக்கு டில்லியில் நடந்த ஒரு சம்பவம் மக்களிடையே மிகக் கடுமையான ஆட்சேபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கே வேடிக்கை என்னவென்றால் சக உயிர்களின் ஜீவ மரணப் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அப்போது  வேடிக்கை பார்த்தவர்களும் மக்களே! இப்போது ஆட்சேபிப்பவர்களும் மக்களே!  இதில் யாரைக் குறை சொல்வது? 

’மனிதநேயம்’ என்ற வார்த்தை செத்து விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

தினமணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிருக்கு, மதிப்பு அற்றுப் போய்விட்டதா ?
இங்கு  விபத்தை ஏற்படுத்தியவர்..... காவல் துறைக்கு அறிவிக்காமல்  தப்பி ஓடினால், அது மிகப் பெரிய பார தூரமான குற்றமாக கருதப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.