Jump to content

900 மில்லியன் திறன்பேசிகளில் அன்ட்ரொயிட் bug என அச்சம்


Recommended Posts

900 மில்லியன் திறன்பேசிகளில் அன்ட்ரொயிட் bug என அச்சம்
 
 

article_1470838369-BucketQualComchipse.jமில்லியன் கணக்கான அன்ட்ரொயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளில், திறன்பேசியினுடைய தரவின் கையாளுகையை முழுமையாக ஹக்கர்களுக்கு வழங்கும் மோசமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்க நிறுவனமான Qualcomm-இனால் தயாரிக்கப்பட்ட chipsetகளில் இயங்கும் மென்பொருள்களிலேயே Checkpoint ஆராய்ச்சியாளர்களினாலேயே மேற்கூறப்பட்ட bugsகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Qualcomm processorsகளானவை, ஏறத்தாழ 900 மில்லியன் அன்ட்ரொயிட் திறன்பேசிகளில் இருப்பதாக Checkpoint நிறுவனம் தெரிவிக்கிறது.

எவ்வாறெனினும், தற்போது இணையத் திருடர்களினால் மேற்கொள்ளப்படும் இணையத் திருட்டுக்களில், மேற்கூறப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் எவையும் காணப்பட்டிருக்கவில்லை.

எனினும், கருத்துத் தெரிவித்த Checkpoint நிறுவனத்தின் திறன்பேசித் தயாரிப்பு முகாமைத்துவத்தின் தலைவர் மைக்கல் ஷவுலோவ், மேற்படிப் பாதுகாப்புக் குறைபாடுகள், அடுத்து வரும் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களில் பயன்படுத்தப்படும் என தான் உறுதியாக நம்புவதாகக் கூறியுள்ளார். நல்லவர்களோ அல்லது கெட்டவர்களோ முதலில் bugஐ கண்டுபிடிப்பது என எப்போதும் போட்டி காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Qualcomm-இனுடைய codeகளை ஆறு மாதங்களாக மீட்டிப் பார்த்ததிலேயே பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஷவுலோவ் தெரிவித்துள்ளார். வரைபடங்களை கையாளும் மென்பொருளிலும், திறன்பேசிகளினுள்ளே இடம்பெறும் வெவ்வேறு செயற்பாடுகளுக்கிடையிலான தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் code-இலுமே பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், bugsகளை பயன்படுத்துவதன் மூலம் ஹக்கர் ஒருவர், குறிப்பிட்ட சாதனத்தின் மேலதிகமாக கட்டுப்படுத்த முடியுமென்பதுடன், தரவுகளைக் கையாள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

bugsகள் குறித்த தகவலையும், அதற்கு ஆதாரமான codeகளையும் இந்த வருட ஆரம்பத்தில் Qualcomm-இடம் Checkpoint கையளித்துள்ள நிலையில், bugsகளுக்கான patchesகளை Qualcomm உருவாக்கியுள்ளதாக நம்பப்படுவதோடு, தனது தொழிற்சாலைகளில் சீர்செய்யப்பட்ட பதிப்புக்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தவிர, திறன்பேசி தயாரிப்பாளர்களுக்கும் வழங்குநர்களுக்கும் patchesகளை வழங்கியுள்ளது. எனினும், எத்தனை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் திறன்பேசிகளுக்கு இற்றைப்படுத்தல்களை வழங்கியுள்ளன என்பது தெளிவில்லாமல் உள்ளது.

இந்நிலையில், QuadRooter Scanner என்ற இலவச செயலியை உருவாக்கியுள்ள Checkpoint, அதைப் பயன்படுத்தி, எந்தவொரு bugsகளினாலும் திறன்பேசி பாதிக்கப்பட்டுள்ளதாக என பார்வையிட முடியும் எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் patchesகள் தரவிறக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக, உத்தியோகபூர்வ கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே செயலிகளை தரவிறக்குமாறு அன்ட்ரொயிட் பாவனையாளர்களுக்கு தெரிவித்த ஷவுலோவ், தவறான செயலிகளால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

பிளக்பெரி பிறிவ், பிளக்போன் 1, பிளக்போன் 2, கூகுள் நெக்ஸஸ் 5எக்ஸ், நெக்ஸஸ் 6, நெக்ஸஸ் 6பி, எச்.டி.சி வண், எச்.டி.சி எம்9, எச்.டி.சி 10, எல்.ஜி ஜி4, எல்.ஜி ஜி5, எல்.ஜி வி10, மோட்டோரோலாவின் மோட்டோ எக்ஸ், வண்பிளஸ் வண், வண் பிளஸ் 2, வண் பிளஸ் 3, சம்சுங் கலக்ஸி எஸ்7 மற்றும் சம்சுங் எஸ்7 எட்ஜின் ஐக்கிய அமெரிக்க பதிப்புக்கள், சொனி எக்ஸ்பீரியா ஸட் அல்ட்ரா உள்ளிட்ட திறன்பேசிகளே பாதிக்கப்பட்டுள்ளன.

- See more at: http://www.tamilmirror.lk/179166/-ம-ல-ல-யன-த-றன-ப-ச-கள-ல-அன-ட-ர-ய-ட-bug-என-அச-சம-#sthash.HH8msGBW.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.