Jump to content

'பீரியட்ஸ்' நேரங்களில் பெண்களின் மனநிலை என்ன? #ஆண்களின் கவனத்துக்கு!


Recommended Posts

'பீரியட்ஸ்' நேரங்களில் பெண்களின் மனநிலை என்ன? #ஆண்களின் கவனத்துக்கு!

bipolar-symptoms-men-women.jpg

உங்கள் மனைவியோ, காதலியோ, தங்கையோ தேவையில்லாமல் கோபப்படுவதாக நீங்கள் நினைத்து இருக்கிறீர்களா? அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்புகூட வந்திருக்கும். ஆனால் ஏன் அவர்கள் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அவர்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் தான் இதற்குக் காரணம். என்ன மாற்றங்கள் என்று நூறு சதவீதம் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த நேரத்தில் ஆதரவாய் இருப்பது உங்கள் கடமை.

அதிக அன்பை செலுத்துங்கள்

love.jpg

அந்த நாட்களில் பெண்கள் சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிமிக்கவராக ஆவது இயல்பு. உங்களால் முடிந்தவரை அவர்களிம் அன்பாய் இருக்க முயற்சி செய்யுங்கள். அவ்வபோது, 'I love you', 'You are cute' போன்ற காதலை வெளிப்படுத்தும் வார்த்தைகளை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களின் வேலை சார்ந்த விஷயங்களில் ஊக்கப்படுத்துங்கள். இவை, அவர்களின் மூடை மாற்றி சந்தோஷமாய் உணரச் செய்யும்.

சிறு விஷயங்களில் ஆச்சரியப்படுத்துங்கள்

surprise.jpg

காலை எழுந்தவுடன் மலர்கள் அல்லது சாக்லேட் கொடுத்து குட் மார்னிங் சொல்வதும், அவர்கள் செல்லும் இடத்திற்கோ, அலுவலத்திற்கோ சிறு பரிசுகள் அனுப்புவதும் பெண்களின் மூட் ஸ்விங்கை உடனே மாற்றி உற்சாகமான மனநிலைக்கு கொண்டு செல்ல உதவும். நேரம் கிடைக்கும் போது அவர்களின் உடல் சோர்வும், மாதவிடாய் வலியும் குறைய உதவுங்கள் . மனைவிக்கு/ காதலிக்கு பிடித்த உணவுகளை தயார் செய்து அசத்துங்கள். உடன் அமர்ந்து அவர்கள் ரசிக்கும் படத்தை பாருங்கள். பயணம் செய்ய விரும்பினால் அவர்களுக்குப் பிடித்த இடத்திற்கோ, பிடித்த சினிமாவிற்கோ அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் ரசனையைப் புரிந்து திட்டமிடுங்கள். வேலையில் அவர்கள் அதிக கவனம் செலுத்த இதுபோன்ற ஆச்சரியங்கள் ஓர் எனர்ஜி பூஸ்டாக இருக்கும்.

வீட்டு வேலைகளில் உதவுங்கள்

home%20making.jpg

மாதவிடாய் நாட்களில் பெண்கள் பொதுவாகவே சோர்வுடன் இருப்பார்கள். அலுவலகத்தில் அந்த சோர்வைத் தாண்டியும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கும். வீட்டு வேலைகளையும் அவர்களே பார்க்க வேண்டும் என்பது இல்லை. முடிந்த வரை, வீட்டில் உள்ள வேலைகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்களின் பெரும் பாரத்தை, நீங்கள் குறைத்ததாக உணர்வர்கள்.

வேண்டாமே!

saying-no22.jpg

மாதவிடாய் காலத்தில் உடல் உறவு கொள்ள உங்கள் மனைவியை வற்புறுத்தாதீர்கள். ஏற்கனவே அவர்கள் சோர்வுடன் இருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வலியில் இருக்கும் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து, அவர்களைப் புரிந்து நடப்பது அவசியம்.

மாதவிடாய் சுழற்சியை நினைவில் கொள்ளுங்கள்

date.jpg

உங்களால் மேலே சொன்ன எந்த விஷயத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, அவர்களின் மாதவிடாய் சுழற்சியை குறித்து வையுங்கள். இது 28 நாட்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒன்று. இதில் 21-28 நாட்களில், உடல் ரீதியான மாற்றங்கள் நடக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு தலைவலி, முதுகுதண்டு வலி, அடி வயிறு வலி போன்றவை ஏற்படும். ஒரு வாரத்திற்கு முடிந்த வரை அமைதியாய் இருக்க முயற்சியுங்கள்.

பெண்ணின் இடத்தில் இருந்து அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் படும் அவஸ்த்தையை உங்களால் உணர முடியாவிட்டாலும் கூட, அவர்களுக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஓவ்வொரு மாதமும் ஏற்படும், அது அவர்களுக்கு வலியை கொடுக்கும் என்று புரிந்து கொண்டாலே போதுமானது. நீங்கள் கொடுக்கும் அன்பு அந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையானதாக இருக்கக் கூடும்.

http://www.vikatan.com/news/womens/67039-things-every-man-should-know-about-her-periods.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வேறு எதையாவது  செய்திகளை இணையுங்களண்டா கன் நாளா சும்மா பிறியா கிடக்குது இந்த பீரியட் பகுதி:rolleyes::rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாளா ஒன்றுமே இல்லை என்ற விசரில் இருக்கும் போது பூ கொத்துடன் யாராவது போவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

மூன்று நாளா ஒன்றுமே இல்லை என்ற விசரில் இருக்கும் போது பூ கொத்துடன் யாராவது போவார்களா?

அண்ணே நானும் வேற செய்தியை போடுவானுகள் என்று பார்த்தால் அப்படியே இருக்கிறது இந்த திரி  கன் பேர் சத்தம் இல்லாமல் திரிவது விளங்குதுtw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.