Jump to content

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!


Recommended Posts

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அரசியல் கைதியான டில்ருக்ஷ்ன் அவர்களின் நான்காவது வருட நினைவை மீட்கும் முகமாக குறித்த இத் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இனி வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தேசத்தைப் பதற்றத்துள் வைத்திருக்கும் அடாவடித் தனமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியும் பல்வேறு அரசியல், சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து குரல்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/113270

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

பல குற்றம் புரிந்தவர்கள் அரசுடன்... குற்றம் புரியாதவர்கள் சிறையில்....!

பல குற்றம் புரிந்தவர்கள் அரசுடன் இன்றும் இணைந்திருக்கின்ற சூழலில் குற்றம் புரியாதவர்கள் சிறைவாசம் அனுபவிப்பது என்பது உலக நீதிக்கு புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் காலக்கெடுகளைச் சொல்கிறது, நல்லாட்சி பற்றிப் பேசுகிறது, இந்த அரசு அமைவதற்கு நல்லெண்ணத்துடனும் தமது விடுதலை கிடைக்கும் என்ற நோக்கங்களுடனும் இந்த அரசை அமைப்பதற்கான முழு ஆதரவை வழங்கி இருந்தார்கள்.

இதுவரை ஒரு அரசியல் கைதியைக் கூட பொது மன்னிப்பு வழங்கி விடுவதற்கு இந்த அரசு தயாராக இல்லை.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஜே.வி.பி நடத்திய மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கூட கட்டுப்படுத்திய அரசு அவர்களை மூன்று ஆண்டுகளுக்குள் தனது இனம் என்ற வகையில் தனது அரசியல் நலன் கருதி விடுதலை செய்திருந்தது.

தமிழர் என்ற காரணத்திற்காக தமிழ் பிள்ளைகள் இன்றும் சிறையில் வதைக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எதிர்க்கட்சி தலைவரே கைதிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே?, அரசியற் கைதிகளின் விடுதலையே நல்லிணக்கத்தின் முதற்புள்ளி, பிள்ளைகள் சிறையில் வாட பிறக்குமா நல்லிணக்கம்?

இருபது வருடங்களாக இரும்பு சிறைவாழ்வு இதுதான் தமிழர்களுக்கு நீதியா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், சமூக அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ,கொள்கைபரப்புச் செயலாளர் வேழமாலிதன் ,எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்

http://www.tamilwin.com/community/01/116438

Link to comment
Share on other sites

தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டி கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம்

இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சிறை கைதிகளின் உறவினர்கள், காணாமல் போனோரின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர்.

நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும், அதன் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும், விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புடன் புதிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு நல்கியிருந்த போதிலும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என இந்தப் போராட்டத்தின் போது சுட்டி காட்டப்பட்டது.

160904133200_srilanka_kilinochi_protest_

160904133045_srilanka_kilinochi_protest_

 

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/09/160904_srilanka_kilinochi_protest

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.