Jump to content

செப்டம்பரில் வருகிறது எஸ் 3...


Recommended Posts

செப்டம்பரில் வருகிறது எஸ் 3...

SW_1.jpg

ஸ் - 3 என்றவுடன் சூர்யாவின் சிங்கம் - 3 பற்றிய செய்தி என நினைத்தவர்களுக்கு......ஸாரி நீங்கள் சினிமா பக்கத்தை பின் தொடரவும். இது கேட்ஜட் (gadget) பிரியர்களுக்கான இனிப்பான செய்தி.

ஆம், சாம்சங் தனது கியர் (துணைக்கருவி) எஸ் 3 ஸ்மார்ட் வாட்ச்சை இவ்வருட செப்டம்பர் மாதம் பெர்லினில் நடக்கவிருக்கும் ஐ.எஃப்.ஏ (IFA) தொழில்நுட்ப நிகழ்வில் வெளியிடவிருக்கிறது.

ஸ்மார்ட் வாட்ச் என்பது என்ன?

ஸ்மார்ட் போன்கள் போர் அடிக்க ஆரம்பித்துவிட, பயனாளர்களின் அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதில் தான் கையடக்க...மன்னிக்கவும்., கைகளில் கட்டிக்கொள்ளக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள். நாம் சாதாரணமாக அணியும் டிஜிட்டல் கைக்கடிகாரமே, ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் செய்யத்தக்க அழைப்பு, குறுஞ்செய்தி போன்ற சில விஷயங்களை இணைத்து உருவாக்கப்பட்டு ஸ்மார்ட் வாட்ச் ஆகியிருக்கிறது. முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள் போன்றவை இவ்வகை கைக்கடிகார தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.

சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்சுகள்

ஆண்ட்ராய்டு போன்களுடன் இணைத்து எளிதாக பயன்படுத்தத்தக்க வகையிலான ஸ்மார்ட் வாட்ச்களை சாம்சங் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. அதில் சாம்சங்கின் கடைசி ஸ்மார்ட் வாட்ச் வெளியீடான கியர் எஸ் 2 பரவலான பயன்பாட்டாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதனால், தான் எஸ் 2ன் தொடர்ச்சியாக வெளிவரவிருக்கும் எஸ் 3க்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

SW_2.jpg

எஸ் 3ல் என்னனென்ன ஸ்பெஷல்?

எஸ் 3ன் வரவேற்கத்தக்க சிறந்த மேம்பாடு, இதனை ஆன்ட்ராய்டு போனுடன் இணைத்து பயன்படுத்த தேவையில்லை. எஸ் 3 சாம்சங்கின் சொந்த இயங்குதளமான டைசன்(Tizen )-ஐ கொண்டு இயங்கத்தக்கது. செயலிகளையும், கடிகார முகப்புகளையும் நேரடியாக ப்ளே ஸ்டோரிலிருந்து (play store) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முகப்புகளுக்கு பயனாளர்களிடம் உள்ள புகைப்படங்களையும் பயன்படுத்தலாம். எஸ் ஹெல்த் (S Health) (உடல் ஆரோக்கிய ஆலோசனைகள் வழங்கி உடல் இயக்கங்களை கவனிக்கும் செயலி) ரிசல்ட்களை நேரடியாக முகப்புத்தகத்தில் (FB) பகிரும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பயனாளர்கள், ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துவது ஜாக்கிங் போன்ற சமயங்களில்தான். ஆனால், அப்போதும் மொபைலை உடன் வைத்திருந்தால் மட்டுமே, மெசேஜ், இ-மெயில் போன்ற நோட்டிஃபிகேஷன்கள் நமக்கு வரும். அதை டைசன் இயங்குதளம் கொண்டு மாற்றி அமைத்து இருக்கிறது எஸ் 3. தனியான இயங்குதளம் என்பதால், நோட்டிஃபிகேஷன்களுக்கு, இனி மொபைலை உடன் எடுத்துச் செல்லும் தேவை இருக்காது.

இந்தக் கடிகாரத்தை அணிந்து உறங்கும் பயனாளரின் உறக்க விகிதங்களையும் கணக்கிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அழைப்பு, செய்தி அனுப்புதலோடு பயனாளரின் தொடர்புகள் (contacts) சேமிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குரல் அடையாளம் கொண்டு இயங்கத்தக்கதாக தயாராகியிருக்கிறது, இந்த எஸ் 3. வரும் நாட்களில் ஸ்மார்ட் வாட்ச்களில் அதிகரித்து வரும் பயன்பாடுகளை பார்க்கும் போது, கூடிய விரைவில் ஸ்மார்ட் வாட்ச்கள் ஸ்மார்ட் போன்களின் இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

http://www.vikatan.com/news/information-technology/66810-s3-smart-watch-technology-coming-soon.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.