Jump to content

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

இலங்கை அரசை ஆதரிப்பதோ அல்லது புலிகளை எதிர்ப்பதோ ஜெயமோகனின் விருப்பம். அதுபற்றி நான் எப்போதும் அலட்டிக் கொள்ளவதில்லை.  ஆனால் எதிர்காலத்திலாவது  ஜெயமோகன் சிங்களபாசிஸ்டுகளின் நிலைபாட்டை வழி மொழியமுன்னம் குறைந்த பட்ச்சம் சிங்கள ஜனநாயக சக்திகளின் கருத்துக்களையாவது வாசிக்கவேண்டும். இது என் கோரிக்கை.

 

அரசையும் புலிகளையும் போர்க் குற்றங்களுக்காக  விமர்சித்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பெரும்பாலான சர்வதேச நாடுகளும்  குறிப்பாக இலங்கை அரசின்மீது இனக்கொலை குற்றச்சாட்டையோ அல்லது மனுக்குலத்துக்கு எதிரான தக்குதல் குற்றச்சாட்டையோ அல்லது  போர்குற்றச் சாட்டையோ சுமத்தியுள்ளன.   

 

இலங்கை அரசு தமிழ் மக்கள்மீதும் தமிழ் பெண்கள் மீதும் நடத்திய இனக்கொலை தாக்குதல்களை  குறைந்த பட்ச்சம் மனுக்குலத்துக்கு எதிரான தாக்குதல்கள் எனவோ அல்லது போர்க்குற்ற நடவடிக்கையெனவோ சர்வதேச குற்றம் சாட்டி விசாரணையையும் கோரி நிற்கிறது. இவற்றைக்கூட ஜெயமோகன் கண்டுகொள்ளவில்லை என்பது வருத்தம் தருகிரது.

 

2

2009 முற் பாதியில் தீவிரமடைந்த  4 லாவது ஈழ யுத்தத்தின்போது இலங்கை அரசின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தால் லட்சக் கணக்கில் மக்கள் கொல்லப் பட்டதையும் மேலும் இலங்கை ராணுவத்தால் தமிழ் பெண்கள் மற்றும் கைது செய்யப்பட்ட தமிழ் பெண்போராளிகள் வகை தொகை இல்லாமல் பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப் பட்டதையும்  ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச மனித சஉரிமை அமைப்புகளும் ஆதாரபூர்வமாக உறுதிப் படுத்தியுள்ளன. இவற்றின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான அமைப்பு இலங்கை இராணுவத்தின்மீது போர்க்குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளது. 

 

சிங்கள பாசிஸ்ட்டுகளும் சிங்கள இனவாதிகளும் தவிர்ந்த சிங்கள ஜனநாயக சக்திகள்  குறிப்பாக திரு.பாசன அபயவர்த்தன (Bashana Abewardana) போன்ற மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் சிங்கள சிவில் சமூகத்தினர் இலங்கையில் இருந்து இடம்பெற்ற இனக்கொலைக்கான ஆதரங்களை  கடத்திவந்து சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு வைத்தார்கள். சனல் 4 ஒளிபரப்பிய இலங்கை யுத்தக் குற்றச்சாட்டு பற்றிய பதிவில் இடம்பெற்ற ஆதாரங்களில் பல சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் சிங்கள ஊடகவியலாளர்களால் கடத்திவரப் பட்டவையாகும்.

 எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இலங்கை தமிழர் இன படுகொலை தொடர்பாக இலங்கை இராணுவத்துக்கு எதிராக   சிங்கள ஜனநாயக சக்திகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களைக்கூட கண்டுகொள்ளாமல்  சிங்கள பாசிச சிங்கள இன வாத  சக்திகளின் கருத்துக்களை முன்னிலைப் படுத்துவது  அதிற்ச்சியும் கவலையும் தருகிறது.  

 சிங்கள இனவாத அரசின் மறைமுக அனுசரணையோடு இரணுவம் தமிழ் மக்கள்மீதும் தமிழ் பெண்கள் மீதும் நடத்திய இனக்கொலை தாக்குதல்களை  குறைந்த பட்சம் மனுக்குலத்துக்கு எதிரான தாக்குதல்கள் எனவோ அல்லது போர்க்குற்ற நடவடிக்கையெனவோ சர்வதேச சமூகம் குற்றம் சாட்டி விசாரணையையும் கோரி நிற்கிறது. இனியேனும் இவற்றையெல்லாம் ஜெயமோகன் கருத்தில் கொள்ளவேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் அவர்களை நான் ஒரு இலக்கியவாதியாக ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.
இலக்கியவாதிக்கு ஒரு வரைமுறை உண்டு.
பிழைப்பிற்காக அவர் எதை வேண்டுமானாலும் வாசகர்களின் விருப்பை அறிந்து எழுதிவிடலாம்.
இனம் மொழி பண்பாடு சார்ந்து அந்த இனத்தின் இருப்பை வலியுறுத்தி எழுதும் இலக்கியங்கள் காலத்தாலும் அழிக்கப்பட முடியாதவை.
பிழைப்புவாதிகளின் எழுத்துக்கள் தாமரை இலையில் தண்ணீர்  போல
அங்கங்கே சிதறிக்கிடக்கட்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களாக ஒரு இந்திய எழுத்தாளர் தமிழரது இனப்படுகொலை பற்றி எழுதியது பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. பாவம் நம்மவர். நம்பி நம்பியே ஏமாறுகிறார்கள். அதிலும் தாமே வளர்த்துவிட்டு குத்து வாங்குகிறார்கள். இவர் போன்றவர்கள் சார்ந்து ஏற்கனவே தெரிந்தும் அனுபவமும் உள்ளவர்களை இது ஒன்றும் செய்யாது. பாவம் அம்பை நாம் நொந்தென்ன பயன்??
ஆகக்குறைந்தது தமிழகத்தை தமிழன் ஆட்சி செய்யும் நிலை இருந்திருந்தாலாவது நாம் சிலவற்றை எதிர்பார்க்கலாம்....

அந்த அம்பு நமக்கும் உதவியிருக்கிறது என எடுத்துக்கொள்ள வேண்டியது தான். இத்தனை வருடங்களுக்கு பின்பும் இனப்படுகொலை பற்றி இந்த வாரம் அதிகம் பேசிக்கொள்கிறார்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசின் கைக்கூலிகாளாகச் செயற்படும் இதுபோன்றவர்களை நோக்கிக் கோரிக்கை வைப்பதைவிட, இவர்களை தமிழக எழுத்தாளர் மட்டத்தில் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் வெட்கித் தலைகுனியும் நிலைதோன்றும். நாகலாந்து மணிப்பரி காஸ்மீரென கிந்தியக் கொடுங்கரங்கள் செய்யும் இனவழிப்பு, சிங்களத்தோடு இணைந்து தமிழினத்தை அழிக்கும் கிந்திய அரசுகளுக்கு துதிபாடிப்பிழைக்கும் எழுத்தாளர்களே(?) இப்படியான நீதிமறுப்புக் கருத்தகளை முன்வைப்பர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

மத்திய அரசின் கைக்கூலிகாளாகச் செயற்படும் இதுபோன்றவர்களை நோக்கிக் கோரிக்கை வைப்பதைவிட, இவர்களை தமிழக எழுத்தாளர் மட்டத்தில் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் வெட்கித் தலைகுனியும் நிலைதோன்றும். நாகலாந்து மணிப்பரி காஸ்மீரென கிந்தியக் கொடுங்கரங்கள் செய்யும் இனவழிப்பு, சிங்களத்தோடு இணைந்து தமிழினத்தை அழிக்கும் கிந்திய அரசுகளுக்கு துதிபாடிப்பிழைக்கும் எழுத்தாளர்களே(?) இப்படியான நீதிமறுப்புக் கருத்தகளை முன்வைப்பர்.  

ஜெயமோகன் எழுத்துக்களை விற்று வயிறு கழுவும் ஒருவர். 
வயிற்றுக்கு பஞ்சம் வந்தால் தன் தாயைக்கூட தாசியாக்கி எழுதும் வல்லமை பெற்றவர்.
எங்கேயாவது ஒரு இடத்தில் முட்டி மடிவார்கள் தானே.
இந்த பஞ்சபரதேசிகளுக்காக நாங்கள் கொதிப்படைந்து எம்மை நாமே வருத்திக்கொள்ள தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களைக் கொன்றவர்களை விடவும்... கொஞ்சம் ..கொஞ்சமாகத் தின்றவர்களே அதிகம்!

அவர்களில் ஒருவரே இந்த ஜெயமோகனும் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.