Jump to content

ஐரிஸ் ஸ்கேனருடன் அசத்தலாக களமிறங்குகிறது நோட் 7!


Recommended Posts

ஐரிஸ் ஸ்கேனருடன் அசத்தலாக களமிறங்குகிறது நோட் 7!

SG_2.jpg

லெனோவோ, ரெட்மி போன்ற நிறுவனங்கள், தங்களை பட்ஜெட் நிலை மொபைல்களின் வரிசையில் நிலைநிறுத்திக் கொண்டன. சோனி போன்ற நிறுவனங்கள், பட்ஜெட் மொபைல் நிறுவனங்களோடு தாக்குப்பிடிக்க முடியாமல், வேறு நாடுகளில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார்கள். பட்ஜெட் நிலை, ஃபிளாக்ஷிப் மொபைல் என இரு பக்கங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த, போராடி வருகிறது சாம்சங்.

சாம்சங் நிறுவனத்தின் நோட் மாடல்களுக்கு என்றுமே, எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். இன்று நியூயார்க்கில், சாம்சங் காலக்ஸி நோட் 7-ஐ வெளியிட்டுள்ளார்கள். நோட் 5-க்கு அடுத்து, தடாலடியாக ஏறிக் குதித்து, நோட் 7-ஐ வெளியிடுகிறது சாம்சங் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5.

எவ்வளவு அழகாக ஸ்கிரீன் இருந்தாலும், ஒருமுறை கீழே விழுந்தாலும் நொறுங்கிப்போய் விடுகிறது. தற்போது சந்தைக்கு வரும் பல மொபைல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 4- உடன்தான் வருகின்றன. ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும், மொபைலுக்கு 80 சதவீதம் எதுவும் ஆகாது என உறுதி அளித்தது கொரில்லா கிளாஸ் 4. தற்போது வர இருக்கும் 5-ல், 1.6 மீட்டர் உயரம் என வரையறுக்கப்பட்டு உள்ளது. மொபைலின் இரு பக்கங்களிலும், பொருத்தப்பட்டிருக்கும், இந்த கொரில்லா கிளாஸ் 5, சாம்சங் நோட்டில்தான் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

SG_1.jpg

ஐரிஸ் ஸ்கேனர்

பல மொபைல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக, நாங்கள் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் தருகிறோம் என மார்தட்டிக்கொண்டு இருக்க, சாம்சங் ஒருபடி மேலே போய், ஐரிஸ் ஸ்கேனரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம், உங்கள் கண்களில் இருக்கும் கருவிழியை ஸ்கேன் செய்து, மொபைலை லாக் செய்யலாம்.

வாட்டர் ரெஸிஸ்டன்ட்

சாம்சங் S சீரிஸ், சோனி Z  மொபைல்களைப் போல், நோட் 7ம் வாட்டர் ரெஸிஸ்டன்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. IP68 ரேட்டிங் என்பதால், ஒரு மீட்டர் ஆழத்திற்கு கீழும், இந்த மொபலை நீரில் பயன்படுத்தலாம்.

எஸ் பென்

சாம்சங் நோட்டில் இருக்கும் S Pen வசதி இதிலும் இருக்கிறது. சற்றே மேம்படுத்தப்பட்ட S Pen-ஐ இதில் வடிவமைத்து இருக்கிறார்கள். மொபைல் வாட்டர் ரெஸிஸ்டென்ட் என்பதால், தண்ணீருக்கு அடியிலும், இந்த பென் வேலை செய்யும்.

SG_a3.jpg

ஸ்பெக்ஸ்

3500 mAh பேட்டரி
இன்டெர்னல் மெமரி: 64ஜிபி
கூடுதல் மெமரி: 256ஜிபி வரை
வொயர்லெஸ் சார்ஜிங்
4 ஜிபி ரேம்
5.7" ஸ்கிரீன்
12 மெகாபிக்ஸல் டூயல் பிக்ஸல் ரியர் கேமரா
5 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா

 5-ல் இல்லை, 7-ல் இருக்கு

* Curved திரை
* அதிகவேக சார்ஜ் செய்யும் டைப்-சி USB போர்ட்
* ஐரிஸ் ஸ்கான்னர்
* கொரில்லா கிளாஸ் 5
* இன்னும் துள்ளியமான  S Pen
* மைக்ரோ SD ஸ்லாட்
* 3500 mAh பேட்டரி

இன்னும் ஆறு வாரத்தில், ஆப்பிள் நிறுவனமும் ஐஃபோனை 7 பிளஸை லாஞ்ச் செய்ய இருக்கிறார்கள். மொபைல் சந்தையில் , ஐஃபோன் 7க்கு போட்டியாக நோட் 7 இருக்கும் என்கிறார்கள்.

http://www.vikatan.com/news/information-technology/66788-samsung-galaxy-note-screen-android-phones.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.