Jump to content

யாழ் உறவை யாழில் கண்டேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பான்ஞ்,உங்கள் ப்யணக் கட்டுரை நன்றாக போகுகின்றது.தொடருங்கள்...ஜீவன்சிவா ஒரு கோப்பி குடிப்பதற்காக உங்களை "பழமுதிச்சோலை" வரச் சொன்னது ரொம்ப ஓவர். அதை ஒரு சாதரண கடையிலையே குடித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

-----

நேரம் கடந்தது. ஓசியில், ஏசியில் வந்து குந்தியுள்ளானோ...? கல்லாப்பெட்டியில் இருந்தவரின் பார்வை என்மீது பதிந்துசென்றது. என் தோற்றம் என்ன தெரிவித்ததோ? எதுவும் சொல்லவில்லை. குனிந்து ஏதோ எழுதத் தொடங்கினார்.------- :grin:

ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைப்போன்ற தோற்றத்தில், காய்ந்து கறுத்த உருவம்,உருவத்திற்கேற்பப் படியாது நிமிர்ந்து நின்ற கிராப்பு, அழகாகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, தாடி. வந்தவர் இறங்கி வண்டியைத் தாங்குகாலில் நிறுத்தினார்.----- 

கற்பனை செய்திருந்த உருவம் ஏமாற்றிவிட்டது. யாழ்ப்பாணத்தில், அந்த மண்ணின் பராமரிப்பில் இயற்கையோடு இணைந்து வாழுபவர்களை அங்கு வயல், தோட்டம், சந்தைகளில் அதிகமாகக் காணலாம். அப்படியான ஒரு தோற்றத்தோடு வருகைதந்த ஜீவன் சிவா அவர்களைச் சற்றுக் குனிந்து கைலாகுகொடுத்து வரவேற்றேன். சின்ன உருவம். சிறிது நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். இருங்கள் வரவேற்றுவிட்டு, அருகில் இருந்த உணவுவகைப் பட்டியலை எடுத்து முன்வைத்தேன். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?“ சிவாவை நோக்கினேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பையன் விழுதடித்து ஓடிவந்தான். விருந்துக்கு அழைத்த உறவை வீட்டுக்கு அழைத்து விருந்தளிக்க எனக்கு அங்கு சொந்தமாக வீடில்லை. ஆகையால் பழமுதிர்சோலை உணவகத்தில் அவர் போதும் போதும் என்னும்வரையில் விருந்தளிக்க முடிவுசெய்திருந்தேன். ஒரு காப்பி போதும். இல்லை குளிராக ஏதாவது குளிர்களியுடன்கூடிய சர்பத் அது இது என்று விலைகூடிய பண்டங்களின் பகுதியைக் காட்டினேன். இல்லை இல்லை காப்பிமட்டும் போதும். ஒருமுறை மறுத்தால் மறுமுறை கேட்டுத் திணிக்கும் பழக்கம் எனக்கு யேர்மனியில் வாழ்ந்து அற்றுப்போய்விட்டதால், எனக்கும் ஒரு காப்பி தருமாறு கேட்டுக்கொண்டேன். பையன் முகம் சப்பென்று போய்விட்டது. இதற்காகத்தானா இத்தனைநேரம் ஏசியை ஓசியில் அனுபவித்தீர்கள் என்று அவன் ஏளனம் செய்வதுபோல் இருந்தது.

------ ஜீவன் சிவா எப்படிப் பிறந்தமண்ணின், குணம், மணம், தோற்றம் எதுவுமே மாறாமல்.... அதிசயித்தேன்...!

------நலிந்தவர்களுக்கு அவர் செய்யும் உதவிகளை அடக்கமாகவே செய்துவருவதும் பேச்சுக்களில் தெரிந்தது. :)

------காப்பி குடித்துமுடித்து நான் எழுவதற்கு முன்பாகவே பரபரப்புடன் எழுந்தவர் அதற்குரிய பணத்தைச் செலுத்திவிட்டார். தடுப்பதற்கு வினாடி நேரம்கூடத் தரவில்லை. பையனுக்கு ஏதாவது கொடுப்போம் என்று நான் எண்ணியிருந்ததை அவர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை, பையன் முகத்தைப் பார்க்காமலே உணவகத்தைவிட்டு வெளியேறினேன். உறவைச் சந்தித்த மகிழ்வுடன் வெளியே வந்தபோது அனல்பறக்கும் வெயிலினூடே காற்றும் சிறிது பலமாக வீசியது. சந்தித்த மகிழ்ச்சி மாறுவதற்கு முன்னே பிரிவதற்கான நேரமும் வந்தது. பிரிவதற்காகக் கைலாகு கொடுத்தவேளையில் வீசிய காற்று அவரது துவிச்சக்கர வண்டியைக் கீழே தள்ளி விழுத்தியது. அருகேநின்ற நான் பதறிப்போய் அதனைத் தாங்கிப் பிடிக்கச்செல்லுமுன் வண்டி விழ்ந்துவிட்டது. கவலைவேன்டாம் பாஞ், இனிமேல் அதுவிழாது, விழ்வதற்கும் முடியாது.“  எந்தப் பதட்டமும் இன்றி புன்சிரிப்போடு கூறினார். எத்தனை பெரியதத்துவம்தான் அதற்குள்...!! தமிழன் விழுந்துவிட்டான். இனிமேல் விழ இடமில்லை எனும்போது.... அடுத்தது முடிவுதானே! ஒரு முடிவு வந்துதான் ஆகவேண்டும். பிறந்தமண்ணில் மக்களோடு மக்களாகப் பலநாட்கள் தங்கி வாழும் ஒருவர்....! விடுமுறையைக் கழிக்க வந்துசெல்லும் ஒருவர்போல் நான்.....!! யாழுறவு ஜீவன் சிவா என்மனதில் உயர்ந்து உறைந்தார். Originalbild anzeigen

ஆங்காங்கே... நகைச்சுவை எழுத்துக்களுடன், ஜீவன் சிவாவின்  சந்திப்பை பற்றி அழகாக எழுதிய பயணக் கட்டுரை பாஞ்ச் அண்ணை.:)

உங்களை விட வேகமாக... ஜீவன் சிவா பணம் செலுத்த, கல்லாப் பெட்டிக்கு போனதை நினைக்க சிரிப்பு வந்து விட்டது. :grin:
ஏனென்றால்.... இங்கு சில இடங்களில் உங்களுடன் செல்லும் போது.... காருக்கு பெற்றோல் அடித்துக் கொண்டு இருக்கும் போதே,  நீங்கள் வேகமாக கல்லாப் பெட்டிக்கு போய், பணத்தை செலுத்தி   விடுவீர்கள், அந்த நேரம் எனக்கு இருந்த   நிலையை யோசித்துப் பார்த்தேன்.

பழமுதிர் சோலையில் வேலை செய்த பையன்... ஏமாற்ற மடைந்தது தான் சிறிய கவலையாக  உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா 

கங்காரு மாதிரி வயித்தில் இல்லை, முதுகில்.

அதில் எப்பவும் எனது கேமராவும், தண்ணிப் போத்தலும், கொஞ்சம் முகம் துடைக்கும் கடதாசிகளும் இருக்கும்.

---------

நன்றி பாஞ்ச்.

சந்திப்பை சுவையாக எழுதியிருந்தீர்கள். ஆனாலும் நான் 6/8 நிமிடம்தானே பிந்தி வந்தேன். காரணம் மகளின் தொலைபேசி என்றும் கூறியிருந்தேன். அதுக்காக இப்படி வாரக்கூடாது.:grin:

எப்படியாயினும் கருத்துக்களால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் நண்பர்களே என்பதை உங்கள் சந்திப்பு எனக்கு அடித்து சொல்லியதை நான் மறக்கவே மாட்டேன்.

மிகவும் இனிமையான ஒரு மனிதரை சந்தித்தித்தது மிகவும் சந்தோசம் - எனது முகமறிந்த நண்பர் குழாமில்  நீங்களும் சேர்ந்து விட்டீர்கள்.

வாழ்க நீடூழி.

அட... ஜீவன் சிவாவின் முதுகுப் பையில்,  கமெரா இருந்திருக்குது. WeblogSmileyCamera.gif
அப்ப கட்டாயம் படம் எடுத்து இருப்பீங்கள் தானே...  :grin:
ஜீவன் சிவா... சேரன் மாதிரி இருக்கிறாரா என்று நாங்களும் உறுதிப்  படுத்த, அந்தப் படத்தை விரைவில் இணைக்கவும்.  rgb lol emoticonlol text fonts emoticon

Link to comment
Share on other sites

9 hours ago, ரதி said:

பான்ஞ்,உங்கள் ப்யணக் கட்டுரை நன்றாக போகுகின்றது.தொடருங்கள்...ஜீவன்சிவா ஒரு கோப்பி குடிப்பதற்காக உங்களை "பழமுதிச்சோலை" வரச் சொன்னது ரொம்ப ஓவர். அதை ஒரு சாதரண கடையிலையே குடித்திருக்கலாம்.

Bildergebnis für smiley sleeping

நித்திரையா.....? என் செல்ல ரதியே! துயில்லெழுப்பத் தாதியர்கூட இல்லையா....! கட்டுரை முடிந்து 6 மணித் துளிகள் வீழ்ந்ததுகூடத் தெரியாது உறங்கும் அளவிற்கு, என் கட்டுரை தங்களைத் தாலாட்டி விட்டதே சோதரி. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் : ஜீவன்சிவா சேரன் மாதிரி வந்தார் .....! அவர் சேரனேதான் ....!

யோகர் சுவாமிகள் "தவமாய் தவமிருந்த " பூமியாம் " (சென்னையில் ) நல்லூரில் ஓர் நாள் " பாஞ்ச் "ராமன் தேடிய சீதை"யாய் காத்திருக்க "மாயக்  கண்ணாடி"யுடன்  வந்தார் ஜீவன். சந்தித்த நேரம் "பொற்காலம் ". கதைத்தனர்  "முரண்"கள் எதுவுமின்றி. ஆனாலும் "சொல்ல மறந்த கதை" ஏராளம் .இவர்கள் "ஆடும் கூத்து " பார்த்த சர்வர் பையன் "யுத்தம் செய் "ய  முடிவெடுக்க ,இவர்கள் (போட்டொ ) "ஆட்டொகிராப் " எடுத்துக் கொண்டு "வெற்றிக் கொடி கட்டி "வெளியேறி" பிரிவோம்  சந்திப்போம் " மீண்டும் என்று கை குலுக்கி "பொக்கிஷம் " போன்ற நினைவுகளுடன் எதிரெதிரே சென்றனர் .

"கதை திரைக்கதை வசனம் இயக்கம் "

சுவி ....! tw_blush:

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

பாஞ்ச் : ஜீவன்சிவா சேரன் மாதிரி வந்தார் .....! அவர் சேரனேதான் ....!

யோகர் சுவாமிகள் "தவமாய் தவமிருந்த " பூமியாம் " (சென்னையில் ) நல்லூரில் ஓர் நாள் " பாஞ்ச் "ராமன் தேடிய சீதை"யாய் காத்திருக்க "மாயக்  கண்ணாடி"யுடன்  வந்தார் ஜீவன். சந்தித்த நேரம் "பொற்காலம் ". கதைத்தனர்  "முரண்"கள் எதுவுமின்றி. ஆனாலும் "சொல்ல மறந்த கதை" ஏராளம் .இவர்கள் "ஆடும் கூத்து " பார்த்த சர்வர் பையன் "யுத்தம் செய் "ய  முடிவெடுக்க ,இவர்கள் (போட்டொ ) "ஆட்டொகிராப் " எடுத்துக் கொண்டு "வெற்றிக் கொடி கட்டி "வெளியேறி" பிரிவோம்  சந்திப்போம் " மீண்டும் என்று கை குலுக்கி "பொக்கிஷம் " போன்ற நினைவுகளுடன் எதிரெதிரே சென்றனர் .

"கதை திரைக்கதை வசனம் இயக்கம் "

சுவி ....! tw_blush:

பச்சை முடிந்துவிட்டதே சுவித் தம்பி. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2016 at 9:40 PM, ராசவன்னியன் said:

Mr.பாஞ்,

சிங்கள மக்கள் அடிப்படையில், மனதளவில் தமிழர்களை சக உறவாக, சமமாக எற்றுக்கொள்பவர்களாக இருந்தால் ஏன் இந்தக் கலவரங்கள்? இரத்தக் களரி?அவர்களிலிருந்து வருபவர்கள்தானே இந்த சிங்கள அரசியல்வாதிகள்?

ஒன்றுபடவே முடியாத இனங்கள் என வரலாற்று நிகழ்வுகள், துயரங்கள் சொல்ல, நீங்கள் இப்படி எழுதுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது..!

வேறு வழியே இல்லையென இணக்க மனமாற்றமா?

ஏன் இந்த தடுமாற்றம்? rebond.gif

தற்பொழுது யாழ்களத்தில் சிலரிடமும் இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது..

இறாலை போட்டு சுறா பிடிப்பது என்பது 
சில ஆயிரம் வருடம் கடந்த யுத்தி இன்றைய நாளில் மட்டுமல்ல 
இன்னும் சில ஆயிரம் ஆண்டு  கடந்தாலும் இந்த யுத்தி பலிக்க கூடியது

காரணம் தெளிவானது ....
சுறாவிட்க்கு பசி தவிர்க்க முடியாத ஒன்று 
இறால் இனிப்பான இரை 
மறைந்திருக்கும் தூண்டில் மாட்டு பட்ட பின்பே தெரிய கூடியது.


ஈழத்தமிழன் சுத்த சுயநலத்தால் அழிந்து போனவன் 
எனக்கு ஈழத்தமிழன் தலைநிமிரவில்லை என்ற ஆதங்கம் அதிகமில்லை.

பாவம் பாலஸ்தீனர்கள் ....
திடடமிட்டு அழிக்க படுகிறார்கள் 
பயங்கரவாதிகளை இஸ்திரேல் உருவாக்கி கொண்டே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

பச்சை முடிந்துவிட்டதே சுவித் தம்பி. :(

இதில் பச்சை இல்லாவிட்டால் என்ன  இதயத்தில் பசுமை இருந்தால் போதும்  பாஞ்ச் .....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

பாஞ்ச் : ஜீவன்சிவா சேரன் மாதிரி வந்தார் .....! அவர் சேரனேதான் ....!

யோகர் சுவாமிகள் "தவமாய் தவமிருந்த " பூமியாம் " (சென்னையில் ) நல்லூரில் ஓர் நாள் " பாஞ்ச் "ராமன் தேடிய சீதை"யாய் காத்திருக்க "மாயக்  கண்ணாடி"யுடன்  வந்தார் ஜீவன். சந்தித்த நேரம் "பொற்காலம் ". கதைத்தனர்  "முரண்"கள் எதுவுமின்றி. ஆனாலும் "சொல்ல மறந்த கதை" ஏராளம் .இவர்கள் "ஆடும் கூத்து " பார்த்த சர்வர் பையன் "யுத்தம் செய் "ய  முடிவெடுக்க ,இவர்கள் (போட்டொ ) "ஆட்டொகிராப் " எடுத்துக் கொண்டு "வெற்றிக் கொடி கட்டி "வெளியேறி" பிரிவோம்  சந்திப்போம் " மீண்டும் என்று கை குலுக்கி "பொக்கிஷம் " போன்ற நினைவுகளுடன் எதிரெதிரே சென்றனர் .

"கதை திரைக்கதை வசனம் இயக்கம் "

சுவி ....! tw_blush:

சுவி.... உங்கள் எழுத்துகள், அழகு.
உண்மையில்... நான் உங்களை, "சுவி  அண்ணா"  என்றே அழைக்க வேண்டும்.
களத்தில்.... சுவி, என்று, அழைத்து பழகி விட்டதால், கஸ்ரமாக  இருக்கு.
உங்கள்... எழுத்து, இன்னும்... இளமை... என்பதால், 
உங்களை... சுவி என்று, எழுதுவதால்.... குறை நினைக்க வேண்டாம். அண்ணா. :)

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

சுவி.... உங்கள் எழுத்துகள், அழகு.
உண்மையில்... நான் உங்களை, "சுவி  அண்ணா"  என்றே அழைக்க வேண்டும்.
களத்தில்.... சுவி, என்று, அழைத்து பழகி விட்டதால், கஸ்ரமாக  இருக்கு.
உங்கள்... எழுத்து, இன்னும்... இளமை... என்பதால், 
உங்களை... சுவி என்று, எழுதுவதால்.... குறை நினைக்க வேண்டாம். அண்ணா. :)

நீங்கள் இளமை என்றால் நானும் இளமைதான் தமிழ் சிறி. நாங்கள் அந்தக்காலத்து நண்பர்கள் அல்லவா! இளமையானவர்களாகக் காட்டிக்கொள்வதில்தான் மனிதர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி....! அப்பப்பா,  அலங்காரப் பொருட்களென்ன! திரவியங்கள் மருந்து வகைகளென்ன! சிகிச்சை நிலையங்களென்ன! தற்பொழுது யாழ்களமும் தன் சொந்தங்களை இளமையானவர்களாக வெளிக்காட்ட உதவிபுரியும் என்பதை இளமை விரும்பிகளுக்கு அறியத்தந்த உங்கள் எழுத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.!! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சுவி.... உங்கள் எழுத்துகள், அழகு.
உண்மையில்... நான் உங்களை, "சுவி  அண்ணா"  என்றே அழைக்க வேண்டும்.
களத்தில்.... சுவி, என்று, அழைத்து பழகி விட்டதால், கஸ்ரமாக  இருக்கு.
உங்கள்... எழுத்து, இன்னும்... இளமை... என்பதால், 
உங்களை... சுவி என்று, எழுதுவதால்.... குறை நினைக்க வேண்டாம். அண்ணா. :)

இதிலென்ன வருத்தம் சிறி....! உறவினர்களின் குழந்தைகள் கூட பெயர் சொல்லி கூப்பிட  சந்தோசமாய் இருக்கும், அந்நேரம் தாயோ,யாரோ குறுக்க வந்து அப்படிச்  சொல்லக் கூடாது செல்லம் தாத்தா என்று சொல்லு என்று சொல்லும் போதுதான் உள்ளே சுனாமி பொங்கும். 

சந்தேகம் இருந்தால் பஞ்ச், ராசவன்னியன் ,சுமேயைக் கேட்டுப் பாருங்கள் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

... தாத்தா என்று சொல்லு என்று சொல்லும் போதுதான் உள்ளே சுனாமி பொங்கும்...

குழந்தைகள் அழைத்தால் மனதில் குதூகலம்தான்.. hug-2.gif

ஆனால் அதுவே "இளசுகள்" அழைத்தால், no.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 04/08/2016 at 3:05 PM, Paanch said:

ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைப்போன்ற தோற்றத்தில், காய்ந்து கறுத்த உருவம், உருவத்திற்கேற்பப் படியாது நிமிர்ந்து நின்ற கிராப்பு, அழகாகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, தாடி. வந்தவர்

அட ஒரு படத்தை இணைத்திருந்தால் நானும் ஒருக்கால் பாத்திருப்பேன் ஆள் எப்படி என்று.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2016 at 8:11 PM, குமாரசாமி said:

 தோளில் பை ஏதாவது தொங்க விட்டிருந்தாரா? :cool:

எப்ப பாரு ஏதையாவதை கேட்டு நோண்டிக்கிட்டு இருக்கிறது பை இருந்துச்ச்சா பழம் இருந்துச்ச்சா என்று<_< :cool:

நன்றாக இருந்தது இருவரது சந்திப்பு புதிய புதிய உறவுகள் கிடைப்பது சந்தோசமேtw_blush: 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஜீவன் சிவாவைக் காட்டுமாறு சில உறவுகள் ஆவலுடன் கேட்டிருந்தார்கள். இதோ அவருடைய பிம்பம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Paanch said:

ஜீவன் சிவாவைக் காட்டுமாறு சில உறவுகள் ஆவலுடன் கேட்டிருந்தார்கள். இதோ அவருடைய பிம்பம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பிம்பத்தின்ரை தோளிலை இந்த மஞ்சள் பையை கொழுவிட்டால் எப்பிடியிருக்கும்:grin:

190220091182.jpg

Link to comment
Share on other sites

On 21/08/2016 at 2:54 AM, கரும்பு said:

கவிஞர் காசி ஆனந்தனின் தம்பி போல் உள்ளது பார்ப்பதற்கு, கவிதை எல்லாம் எழுதுவீர்களோ ஜீவன்?

காசிக்கு மொட்டை எனக்கு நிறைய மயிர் இருக்கு.

எனக்கு புதுக்கவிதைகள் ரொம்ப பிடிக்கும். 
ஆனால் எழுத தெரியாது.

சங்க காலத்து கவிதைகள் பிடிக்காது
ஏனெனில் எனக்கு அது முழுமையாக புரியாது.

----------------------------------------------------------------------------------------

நான் ஒளிந்து மறைந்து வாழ எந்தவித நிர்ப்பந்தமும் எனக்கில்லை. எந்த பிழையையும் மனதறிய விடவில்லை. நான் சந்தித்தவர்களிடம் வேண்டுவது படங்களை பகிர வேண்டாம் என்பதே. அதனை கடைப்பிடித்த உறவுகளுக்கு நன்றி. 

சில சந்தேகங்களை தீர்க்க இணைக்க வேண்டியதாயிற்று.

இது எனது தனிப்பட்ட படம் இங்கு தேவை இல்லாதது. இணைத்து 2 நாட்களாகிறது. 

இதற்குமேல் இது தேவை இல்லை. 

இந்தப்படத்தை பார்த்த உறவுகள்எ ன்னை சந்திக்க வரும்போது இலகுவாக என்னை அடையாளப்படுத்தலாம்.

இதனை நீக்குமாறு நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

மன்னிக்கவும்.

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.