Jump to content

அதிர வைக்கும் ஆபிரிக்க மூட நம்பிக்கை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரின் மூட நம்பிக்கைகள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம்.

படிப்பறிவு இல்லாவிடில் இந்த மூட நம்பிக்கையை வைத்து பயம் காட்டி பிழைக்கும் ஒரு கூட்டம் உலகெங்கும் உள்ளது. சென்னையில் முன்பு ஒரு மோசடிக் கும்பல் உலாவுவார்கள் . மண்டை ஓட்டினை வைத்து ஏதோ வித்தை செய்வார்கள். மக்கள் விடுப்பு பார்க்க கூடுவார்கள். தீடீரென அவர்களது ஆட்களில் ஒருவர் கிளம்புவார். அதோ சைத்தூண் கைலே துட்டு வைக்காம போறன், ரத்தம் கக்கி விழுவான் பாரு என்பார், வித்தை  காட்டுபவர். அவரும் பெரு நடிப்பு நடித்து ரத்தம் கக்கி விழுவார். தீடிரென எழுந்து வந்து, 100 ரூபா நோட்டினை  வைத்தவுடன், மந்திரக் கோலை  தலையில் வைத்து ஏதோ மந்திரம் சொல்லி, இப்ப சைத்தான் சந்தோசம். உனக்கு ஒன்னும் இல்லை. போ என்றவுடனும் அவரும் சிரித்த வாறே போக, அங்கே நின்று விடுப்பு பார்த்தவர்கள், மூட நம்பிக்கையில் பணத்தை எடுத்து போட்டு நகர்வார்கள்.

அதே போல் கடவுள், காட்டேரி, பேய், பிசாசு பெயர்களில் கிராம பூசாரிகள் பண்ணும் அடடாகாசங்கள் வேறு ரகம்.

இதை எல்லாம் ஜுஜுபி ஆக்கும், அட இப்படியுமா என அதிர வைக்கும் வகை தான் இந்த ஆபிரிக்க மூட நம்பிக்கை.

ஆபிரிக்காவின் ஒரு வறுமை மிக்க நாடு மாலாவி . இந்த நாட்டின் தென் பகுதியின் குக்கிராமங்களில் இன்றும் நிகழும் இந்த கருமாந்திரம் பிடித்த மூட நம்பிக்கை குறித்து பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது.

நம்மூர் கிராமங்களில், சலவை செய்வோர், முடி வெட்டுவோர், பூசாரி, பரியாரி, வாத்தியார், வெட்டியான் என தொழில் ரீதியாக இருப்பதை போல,
இந்த கிராமங்களில் கெயினா (Hyena) என்னும் நபர்கள் உள்ளார்கள். இவர்களது வேலை அதிர வைக்கும் ரகம். ஒன்றும் பெரிதாக இல்லை. விதவையான பெண்களை, வயதுக்கு வரும் சிறுமிகளை பாலியல் ரீதியாக புனிதப் படுத்துவது. (sexual "cleansing").

Eric Aniva

Hyena: Eric Aniva

கால் முதலில் வெளியே வரும் வகையில் பிறப்பவர்கள், எண்ணெய் போட்டு உருவித் தேய்த்தால், உளைவு நீங்கும் என்ற வகையில் ஒரு சில நம்பிக்கைகள் எமது ஊரில்  உள்ளனவே. அதே போன்ற சில வகை காரணங்கள் காரணமாக ஊரின் கெயினா தெரிவு செய்யப் படுவார்.

பெண் ஒருவரின் கணவர் இறந்து விட்டால், இந்த கெய்யனாவுடன் உறவு கொண்டு, உடலை சுத்தப் படுத்திய பின்னே, அந்தப் பெண்ணின் கணவனைப் புதைக்க முடியும் என்பது ஊர் நம்பிக்கை.

அதே போல பூப்படையும் சிறு பெண்கள் அந்தப் பெண்களின் பெற்றார் ஏற்பாடு 

செய்யும் நிகழ்வில், இந்த கெய்யனா கிளம்பி வந்து அந்த சிறு பெண்ணுடன் உடலுறவு கொண்டு அந்த சிறுமியை பாலியல் ரீதியாக புனிதமாக்குவார். 

அதிர, அருவருக்க வைக்கும் இந்த மூட நம்பிக்கை கலாச்சாரம் பல ஆண்டுகளாக இந்த கிராமங்களில் நடந்து வருகின்றது. 

இந்த வகை பாலியல் புனிதமாக்குதலினால், குழந்தைப் பருவத்தில் இருந்து சிறுமி, குடும்ப நிர்வாகம் செய்யும் பக்குவம் மிக்க பெண் பராயத்துக்குள் செல்கிறாராம். அதே போல் விதவைப் பெண், இந்த புனித தாக்குதல் மூலம், மறுமணம் செய்யலாம், அதன் காரணமாக கோபமடையக் கூடிய முன்னைய இறந்த கணவனின் ஆவித் தாக்குதலுக்கோ உள்ளாக மாடடார். இந்த வகை புனிதமாக்குதலுக்கு கிளப்பு முன், தனக்கு தேவையான 'சக்தியினை' அளிக்க, ஒரு வேர் ஒன்றினை அவித்து குடித்து தான் கிளம்புவாராம்.

Eric Aniva #

வேர்: வெட்டி வேறு வாசம்...விடலைப் பிள்ளை நேசம்

அங்குள்ள வழக்கப் படி, இவர் உறவு கொள்ளும் போது, கொண்டம் போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில்லையாம். சிறுமிகளாயின், முதலாவது மாதப் போக்கின் பின் ஒரு குறித்த, கருத்தரிக்க முடியாத நாளை கணக்கில் வைத்து புனிதமாக்குதல் நடை பெறும். விதவையாயின்..... ?

இந்த வகை புனித மாக்கல் நடக்காவிடில்,அல்லது அந்தப் பெண்கள் புனிதமாக்கலுக்கு மறுத்தால் அந்த பெண்களின் குடும்பத்தில், நோய் நொடிகள், சாபங்கள், துர் மரணங்கள் நிகழும் என்ற மூட நம்பிக்கையே இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணம்.

இவரது சமூக சேவைக்கு பணம் காணிக்கையாக கொடுக்கப் படுகிறது. £5 ($7) வரை ஒரு புனிதமாக்குதலுக்கு கிடைக்கும். இரு மனைவிகள் மூலம் இவருக்கு ஐந்து பிள்ளைகள். ஆனால் தனது புனிதமாக்குதல் மூலம் எத்தனை பெண்களை, சிறுமிகளை தாயாக்கி உள்ளார் என்பது தெரியாதாம். இது வரை சுமார் 104 பெண்கள், சிறுமிகளுடன் உடலுறவு கொண்டதாக சொல்லும் இவர், உண்மையாக கணக்குகள் வைப்பதில்லை என்பதால், சரியான தொகை தெரியாதாம்.

தான் சிறுமிகளுடன் மிக மென்மையாக நடந்து கொள்வதால் அவர்கள் அந்த இரவினை மிகவும் ரசிப்பு மிக்கதாக அனுபவிப்பதாகவும் அடுத்தநாள் அவர்களே, சூடு நீர் வைத்து தன்னை குளிப்பாட்டி அனுப்புவதாகவும் இவர் ஒரு 'சரியான ஆம்பிளை' என்றும், இந்த கெய்யனா தமக்கு புனிதமாக கிடைத்ததில் பெருமை அடைவதாக, வேறு பெண்களிடம் தன்னை சிபாரிசு செய்வதாக பெருமை கொள்கிறார்., மறு புறத்தே அந்த சிறுமிகள் BBC நிருபரிடம், மென்மை இன்றி நடந்த அந்த மனிதரை சந்திக்காமலே இருந்திருக்கலாம், எல்லாம் எமது தாய் தந்தையர் செய்த வேலை என குறை சொல்லி இருக்கிறார்கள்.

தான் புனிதமாக்கும் சிறுமிகள் 12 முதல் 13 வயதான பாடசாலை செல்பவர்கள் என்கிறார் அவர். இது கிராம கலாசார வழக்கம் ஆகையால், ஒரு பெரும் தவறாக கருதப் படுவதில்லை. சமுகத்தில் உள்ள 10 கெயினாக்களில் தானும் ஒருவர் எனும் எரிக், ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு கெய்னா இருப்பார் என்கிறார். 

கொண்டம் பாவிக்காத இந்த 'சேவையினால்'  HIV பரவும் அபாயம் உள்ளது. உண்மையில் இந்த கெயினா  எரிக் ஒரு HIV Positive நபர். தன்னை சேவை செய்ய அழைக்கும் பெற்றாருக்கு இதனை சொல்வதில்லை என்கின்றார் எரிக். இருப்பினும், அவர் நோயினைப் பரப்ப மாடடார். மாறாக அவரது புனிதமாக்கல் சேவையினால், அந்த பெண்ணுக்கோ அல்லது அவரது குடும்பத்தினையோ நோய் நொடி, தீவினை அண்டாது என்ற மூட நம்பிக்கை நிலவுகிறது.

10ல் ஒருவர்  HIV நோய் கொண்டவராக இந்த சமூகத்தில் உள்ளனர் என ஐநா அறிக்கை சொல்கிறது. 

பிபிசி நிருபர் தனது அருமை பெருமைகளை ரசிக்கவில்லை என குறிப்பால் அறிந்து கொண்ட, ஒரு கால் ஊனம் கொண்ட எரிக், தான் முன்னைப் போல இப்போது சேவை செய்வதில்லை என்றும் நிறுத்திக் கொண்டு வருவதாகவும் சொன்னார்.

பழமையான மத நம்பிக்கை என்றாலும் பரவாயில்லை, ஆனால் இவர்கள் கிறீஸ்தவ மதத்தினை பின் தொடர்பவர்கள். ரகசியமாக இருந்து இப்போது வெளியே தெரிய வந்த இந்த ஆபத்தான கலாச்சார சீர்கேடு, வெளியே அரச, தர்ம ஸ்தாபன, ஐ நா அமைப்புக்களினால் கண்டிக்கப் பட்டு உள்ளது.

Eric Aniva with his family

கெய்னா  எரிக் குடும்பத்துடன்

கெய்யனா எரிக்குக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி பானி, விதவையானவுடன், புனிதப் படுத்தலுக்கு இந்த கெயினா அழைக்கப் பட்டிருந்தார். பின்னர் ஆசையில் அவரையே மனைவி ஆக்கிக் கொண்டார். 

இவர் செய்யும் தொழில் அவர்களுக்கு தெரிகிறது. பானி அதனை விரும்பவில்லை, எனினும் குடும்பத்துக்கு அதுதான் இப்போது போதிய வருமானத்தினை தருகிறது.

அவரது மடியில் இருந்த இரண்டு  வயது பெண் குழந்தை இதே போன்ற புனித சேவைக்கு  இன்னும் 10 வருடத்தில், ஏற்பாடு செய்வீர்களா என்று கேட்டவுடன் 'இந்த சடங்கு நிறுத்தப் பட வேண்டும், நாங்கள் எமது விருப்பத்துக்கு மாறாக கெய்னாவுடன் உறவு கொள்ள நிர்பந்திக்கப் பட் டோம். இது எங்கள் விருப்பத் தெரிவு அல்ல. பெண்களுக்கு இது மிகவும் துன்பகரமானது என்றார் பானி. 

தனக்கு இருமுறை கெய்னாவுடன் படுக்கையினைப் பகிர நேர்ந்ததை இன்றும் வெறுப்பதாக சொல்கிரார் அவர்.

அதே கேள்விக்கு , 'எனது பெண் பிள்ளைக்கா, இல்லை நான் ஒத்துக்க கொள்ளப் போவதில்லை' என்கிறார், ஊரில் உள்ள பெண் குழந்தைகளுக்கு எல்லாம் புனிதமாக்குதல் என்ற பெயரில், அங்கீகரிக்கப் பட்ட பெரும் பாலியல் வன்புணர்வுகளை செய்யும் எரிக்.

கல்வி அறிவு மூலமே இந்த சீர்கேட்டினை களைய முடியும் என்கிறது உலகிuன் வறுமை மிக்க மாலாவி நாட்டின் அரசு. 

இந்த பிபிசி அறிக்கை மூலம் உலக கவனம் இங்கே திரும்பும் என எதிர்பார்க்கலாம்.

மூலம்:  http://www.bbc.co.uk/news/magazine-36843769

  • யாழுக்காக முடிந்தவரையில் எனதுதமிழ் மொழி பெயர்ப்பு:  இதனை வாசிக்கும் போது அதிர்ச்சியும், நெருடலும் உண்டானது. பகிர நினைத்தேன். நன்றி.

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது புதுசு புதுசா இருக்கிறது   இப்படி  இருந்தால் ஏண்டா எயிட்ஸ் பரவாது கொஞ்சமாவது திருந்துங்களடா பிளடி ஆப்பிரிக்கன்ஸ்:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா இது? 

காரசாரமான பின்னூட்டங்கள் வரும் என்று பார்த்தால்...

இது உண்மையா இருக்குமோ? பிபிசி செய்தியாக் கிடக்குதே என்ற யோசனை போல.....

முன்னர் அரசர்கள் காலத்தில் சில இராச்சியங்களில் இது போன்ற நிகழ்வுகள் இருந்ததாம். தெய்வம் போன்ற அரசர்களுக்கே முதல் சமர்பணம்....

இந்த காட்டுமிராட்டித்தனம் படிப்பறிவு கூடும் போது குறைந்தது. 

ஆனால் பயம் கொள்ள வைத்து, பிளாக்மஜிக் கிலி கிளப்பி தொடர்வதே இந்த ஆபிரிக்கன் காட்டுமிராண்டித்தனம்.

tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கிட்டாங்களே சிங்கனை

Malawi man arrested after describing sex with young girls

https://uk.news.yahoo.com/malawi-man-arrested-describing-sex-young-girls-140704960.html

Link to comment
Share on other sites

ஆபிரிக்காவில் எயிட்ஸ் முற்றி சனம் செத்துப்போனால் அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கலாம் எண்டு ஒரு குறூப் கணக்குப் போடும்.. tw_astonished: மொழிபெயர்ப்புக்கு நன்றி நாதம்ஸ்.. 0474.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.