Jump to content

அமெரிக்க போதை ஆட்டம் 'போகிமான் கோ'- சற்றே பெரிய குறிப்பு


Recommended Posts

அமெரிக்க போதை ஆட்டம் 'போகிமான் கோ'- சற்றே பெரிய குறிப்பு

 

 
கோப்புப் படம் | ஏ.எஃப்.பி
கோப்புப் படம் | ஏ.எஃப்.பி

அமெரிக்காவில் அதிபர் தேர்தலையும் தாண்டி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் போகிமான் கோ (Pokemon Go). சார்ஸ் போல கொடிய வைரஸா இது என விவரம் புரியாதவர்கள் யோசிக்கலாம். போகிமான் கோ ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம். இந்த விளையாட்டால் தான் கடந்த சில நாட்களாக அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போகிமான் கோ விளையாடிக் கொண்டே கார் ஓட்டியதால் விபத்து, முழு நேரம் போகிமான் கோ விளையாட வேலையை விட்டவர், போகிமான் கோ விளையாடுபவர்களை பின் தொடர்ந்து கொள்ளை சம்பவம் என பரபரப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

என்ன இது போகிமான் கோ எனத் தெரிந்துகொள்ளும் முன் போகிமான் பற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக்கை பார்ப்போம்.

GO_-_AP_-_alabama_2936930a.jpg
அலபாமாவில் நடைபாதையில் போகிமான் கோ
விளையாடிக்கொண்டே நடப்பவர்கள் | படம்: ஏபி

20 வருட போகிமான் சாம்ராஜ்ஜியம்

பாக்கெட் மான்ஸ்டர்ஸின் (Pocket Monsters) சுருக்கமே போகிமான் - பாக்கெட்டில் அடங்கும் குட்டிச்சாத்தான்கள் தான் போகிமான். 1996-ஆம் ஆண்டு நின்டெண்டோ (Nintendo) என்ற ஜப்பானிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ கேம் இது. போகிமான் உலகில், சுற்றி மறைந்திருக்கும் சின்னச் சின்ன போகிமான்களை தேடிக் கண்டுபிடித்து அதை நாம் வசப்படுத்த வேண்டும். வசப்படுத்தியதும் அதற்கு பயிற்சி தந்து அதன் சக்திகளை கூட்டி மற்ற போகிமான்களுடன் சண்டையிட்டு அதன் மூலம் இன்னும் சக்திவாய்ந்த போகிமான்களை பெற வேண்டும். இதுதான் போகிமான் விளையாட்டு. இதில் பிகாச்சு (Pikachu) என்ற போகிமான் கதாபாத்திரம் மிகப் பிரபலம்.

தொடர்ந்து பல வீடியோ கேம்கள், அனிமேஷன் திரைப்படங்கள், கார்டூன் தொடர்கள் என இன்று வரை, அதாவது 20 வருடங்களாக போகிமான் பொழுதுபோக்குத் துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதுவரை 73 போகிமான் கேம்களும், 18 போகிமான் திரைப்படங்களும், 800 பகுதிகளைக் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும் போகிமான் கார்டூன் தொடரும் வெளியாகியுள்ளன. போகிமான்களின் எண்ணிக்கையும் 700-க்கு மேல் போய்விட்டது. இந்த போகிமான் கலாச்சாரத்தின் சமீபத்திய பரிணாம வளர்ச்சி தான் போகிமான் கோ என்ற மொபைல் விளையாட்டு.

Go_-_AP_2936932a.jpg

போகிமான் கோ

முழுக்க முழுக்க கணிணியில் உருவாக்கப்படுவது வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்றழைக்கப்படும். உண்மையான காட்சிகளில் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட விஷயங்களையும் கலப்பது ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality). அப்படி ஆக்மெண்டட் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பத்தில் வெளியாகியிருக்கும் விளையட்டு போகிமான் கோ.

Go_kuwait_afp_2936935a.jpg
ஆக்மெண்டட் ரியாலிட்டியில் அமைந்திருக்கும் போகிமான் கோ விளையாட்டின் திரை | படம்: ஏ.எஃப்.பி


பயனர்கள் இதை பதிவிறக்கம் செய்து இயக்க ஆரம்பித்ததும் அவர்களது கேமராவும் இயங்க ஆரம்பிக்கும். ஏனென்றால் கேமரா லென்ஸ் வழியாக மொபைல் திரையில் பார்த்துக் கொண்டே தான் இதை விளையாட முடியும். கேமராவில் தெரியும் உண்மை காட்சிகளோடு போகிமான் குட்டி சாத்தான்கள் அங்கங்கு ஒளிந்து கொண்டிருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து, தாக்கி, தங்கள் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.

Go_Toronto_-_Reute_2936933a.jpg
ஆக்மெண்டட் ரியாலிட்டியில் நிஜ சாலையில் தோன்றும் போகிமான் | படம்: ராய்ட்டர்ஸ்

ஆனால் இது ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு விளையாடினால் நடக்காது. பயனர்கள் தங்கள் இடத்தை விட்டு எழுந்து வெளியே வந்து, போகிமான் கோ விளையாட்டில் இருக்கும் உத்தேச வழிகாட்டியை வைத்து நிஜத்திலும் மொபைல் திரையை பார்த்துக் கொண்டே நடந்து சென்றால் தான் போகிமான்களை கண்டுபிடிக்க முடியும். சில போகிமான்கள் தண்ணீர் பரப்பிலும் இருக்கும், அதற்கு உங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் சின்ன குட்டையின் பக்கமோ, ஓடையின் பக்கமோ சென்றால் தான் கண்டுபிடிக்க முடியும்.

மேலும் போகிமான் ஜிம்களில் மற்ற போகிமான் வீரர்களுடன் சண்டையிட்டு பாயிண்டுகளும் வெல்ல முடியும்.

மொபைல் விளையாட்டும் வினையானது

இப்படி போகிமான்களை தேடி ஏரியா விட்டு ஏரியா சென்று, தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு திருடு கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். மற்றவர் வீடுகளில் தெரியும் போகிமான்களை பிடிக்க சுவர் ஏறிக் குதித்து அத்துமீறியவர்கள் பிடிபட்டுள்ளார்கள். இவ்வளவு ஏன், அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வயோமிங் என்ற நகரத்தில் போகிமான்களை தேடி தன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நீர் நிலைக்கு வந்த ஷைலா விக்கின்ஸ் என்ற பெண் அங்கு மிதந்து கொண்டிருந்த ஒரு சடலத்தை பார்த்து அலறி போலீஸிடம் சென்றுள்ளார்.

636040389819004825_2936937a.JPG
கார் ஓட்டும்போது போகிமான் விளையாட வேண்டாம் என
நெடுஞ்சாலை ஒன்றில் தோன்றும் எச்சரிக்கை வாசகம்

இப்படி போகிமான் கோ விளையாட்டால் மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, இதுதான் நாங்கள் நினைத்தது என்கிறார் இந்த விளையாட்டை உருவாக்கிய ஜான் ஹான்க் (Johan Hanke). இவர் தான் இந்த விளையாட்டை வெளியிட்டுள்ள நியாண்டிக் லேப்ஸ் (Niantic Labs) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.

Go_alaska_-_AP_2936945a.jpg
அலஸ்காவில், தடை மீறி வரவேண்டாம் என போகிமான்
பயனர்களுக்கு வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி

போகிமான் கோ ஒரு உடற்பயிற்சி தான்

"நமது ஆரோக்கியத்துக்காக பல செயலிகளை பதிவிறக்கம் செய்து அதனால் எந்த பலனையும் அனுபவிக்காமல் தோல்வியடைந்த ஒரு ஒலிம்பிக் வீரனைப் போல உணர்ந்திருப்போம். ஆனால் போகிமான் கோ விளையாடுபவர்கள் ஒரு இடத்தில் இருக்க முடியாது. நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு எந்த வித அழுத்தமும் இருக்காது. நிஜ உலக இடங்களை இந்த விளையாட்டில் இணைத்திருப்பதால் இதுவரை உங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் உங்களுக்கு தெரியவராத பல சுவாரசியமான இடங்கள் இதன் மூலம் தெரிய வரும்" என்கிறார் ஜான் ஹான்க்.

john_hanke_reuters_2936940a.jpg
ஜான் ஹான்க் | படம்: ராய்ட்டர்ஸ்

முன்னதாக, ஜான் ஹான்க் உருவாக்கிய தொழில்நுட்பமே பின்னாளில் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு கூகுள் எர்த் (Google Earth) என மாறியது. அதை உருவாக்கியபோது கிடைத்த அனுபவத்தில் தான், போகிமான் கோ விளையாட்டின் முன்னோடியான இங்க்ரெஸ் (Ingress) என்ற, GPS சார்ந்த விளையாட்டை ஜான் ஹான்க் உருவாக்கினார். ஆரம்பத்தில் ஒரு ஏப்ரல் ஃபூல் வேடிக்கையாக தான் போகிமான் கோ ஆரம்பித்தது என்பது கூடுதல் சுவாரசிய தகவல்.

கலாச்சார அடையாளமாக மாறிய போகிமான் கோ

வெளியான சில நாட்களிலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டு என்ற சாதனையை போகிமான் கோ படைத்தது. தினமும் 21 மில்லியன் அமெரிக்க மக்கள் இதை விளையாடுகிறார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது.

போகிமான் விளையாடும் சக போகிமான் ட்ரெய்னர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் போகிமான்களுக்குள் சண்டை போட்டு விளையாடும் அம்சமும் இதில் உள்ளதால், இதை ஒட்டி புது நண்பர் சந்திப்புகளை (Pokmon go Dates)அமெரிக்கர்கள் பலர் ஆரம்பித்துள்ளனர். மக்களோடு மக்களாக இணைந்து நேரம் செலவழிக்க முடிவதாக சிலர் கருதுகின்றனர். இதுநாள் வரை உடற்பயிற்சி செய்யாத நாங்கள் போகிமான் கோ-வால் விளையாட்டாக 8-9 கிலோமீட்டர்கள் நடந்து விட்டோம் என பலர் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Go_Twitter_2936943a.JPG
போகிமான் கோ விளையாடி உடற்பயிற்சி செய்தவர்களின் ட்வீட்டுகள்


அமெரிக்கர்கள் மட்டுமல்லாது அமெரிக்க வாழ் இந்தியர்கள், அவர்கள் மூலம் இந்த விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட இந்திய வாழ் இந்தியர்கள் என பலரும் இது சார்ந்த மீம்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆக்மெண்டட் ரியாலிட்டி அல்ல இது

இந்நிலையில் இந்த விளையாட்டு முழுக்க ஆக்மெண்டட் ரியாலிட்டி அல்ல. அதன் மிக அடிப்படையான ஆரம்ப வடிவமே இது என்றும் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

எது எப்படியோ, அமெரிக்காவில் புது புரட்சியையே ஏற்படுத்தியுள்ள போகிமான் கோ, இப்போதைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளில் (குறிப்பாக சைனா - ஜப்பானில்) வெளியாகும்போது இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதற்கு அமெரிக்க சம்பவங்கள் வெறும் ட்ரெய்லர் தான் என நினைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விளையாட்டு வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் அமெரிக்க பதிப்பை டவுன்லோட் செய்து நம்மூரிலும் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள் என்பது கொசுறு செய்தி.

http://tamil.thehindu.com/opinion/blogs/அமெரிக்க-போதை-ஆட்டம்-போகிமான்-கோ-சற்றே-பெரிய-குறிப்பு/article8864915.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.