Jump to content

லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை


Recommended Posts

லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை

 

 
 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அண்மைக்காலமாக சமூக வலைதளத்தை பின்னணியாகக் கொண்ட குற்ற நிகழ்வுகள் இளம் தலைமுறையினரை வெகுவாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது.

நம் நட்பு வட்டத்தில் உள்ள பெண்களில் பலரும் தங்கள் உண்மையான முகத்தை மறைத்து மீண்டும் பூ, இயற்கைக் காட்சிகளின் படங்களை புரொஃபைல் பிக்சராக வைக்கத் தொடங்கிவிட்டத்தையும் கவனிக்க முடிகிறது.

ஒரு பக்கம் உலகத்தை நமக்குச் சொல்லித் தரவல்ல ஊடகமாக திகழும் ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்கள், மறுபக்கம் மனத்தை உலுக்கும் தளமாகவும் மாறும் சூழல் நிலவுகிறது.

இந்த வேளையில், ஃபேஸ்புக்கில் இளம் தலைமுறையினர் தன்னையறியாது மூழ்குவது குறித்து கூறும்போது, "முகம் தெரியாதவர்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டு மனம் விட்டு எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு முகநூலைப் பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வீட்டில் பெற்றோர்களின் அருகாமை இல்லாததும் இதற்கு முக்கிய காரணம்.

தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்வதால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வரும் பிள்ளைகளிடம் பேசுவதற்கு வீட்டில் யாரும் இருப்பதில்லை. முன்பு போல் தாத்தா பாட்டியுடன் சேர்ந்திருக்கும் கூட்டுக் குடும்ப அமைப்பும் தற்போது இல்லை. சில வீடுகளில் அம்மா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாலும் பிள்ளைகள் வீட்டுக்கு வந்தவுடன் டியூஷன், ஸ்பெஷல் க்ளாஸ் என்று எங்காவது அனுப்பி வைத்து விடுகின்றனர்.

பிள்ளைகளுக்கு தேவையான பொருட்கள் வீடியோ கேம்ஸ், லேப்டாப், மொபைல் ஃபோன் போன்ற நவீன பொருட்களை வாங்கி தந்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர தன் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது எவ்வளவு முக்கியம் என்று உண்ர்வதில்லை. பிள்ளைகளின் நெருங்கிய நண்பர்களாக முதலில் இருக்க வேண்டியது பெற்றோர்களே. அப்படி இருந்தால் பிள்ளைகள் தன்னை சுற்றி நடப்பதையும் அவர்கள் மனதில் இருப்பதை பெற்றவர்களிடமே மனம் திறந்து பகிர்ந்துகொள்வார்கள்.

ஆனால், இங்கு பல பெற்றோர்கள் குறிப்பாக அப்பாக்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. இப்படிபட்ட சூழலே பிள்ளைகள் முகம் தெரியாதவர்களிடமும் நட்பு ஏற்படுத்திக்கொள்ள காரணமாக அமைகிறது. அதனால் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணர வேண்டும்" என்றார் மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி.

ஃபேஸ்புக்கில் வலம் வரும் இளம் தலைமுறையினர் - குறிப்பாக இளம்பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய அம்சங்கள் என அவர் பட்டியலிட்ட 10 அம்சங்கள்:

* தூங்குவது, சாப்பிடுவதற்கு என நேரம் ஒதுக்குவது போல சமூக வலைதளங்களில் இயங்குவதற்கு என்றும் தனியாக ஒரு நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அந்த நேரத்துக்கு மேல் சமூக வலைதளங்களில் இருக்க கூடாது. இதை கடைப்பிடித்தால் ஃபேஸ்புக்குக்கு அடிமையாவதை தடுக்கலாம். மேலும் ஃபேஸ்புக்கிலேயே பல மணி நேரம் வீணாவதையும் தடுக்கலாம்.

* ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் தேவையில்லாமல் நேரம் செலவழிப்பதுடன் பாதிக்கப்படுவது நமது உடல் நிலை, மனநிலையும்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

* சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குடும்பத்துடன் அல்லது நண்பர்களோடு செலவழித்தால் அதிக மகிழ்ச்சியும் உறவுகளுடனான நெருக்கமும் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்கு ஃபேஸ்புக்கில் கிடைக்கும் லைக்குகளை விட குடும்பத்தில் கிடைக்கும் கமெண்ட்ஸ் உங்களை வளர்க்க உதவும். இதன் மூலம் வீட்டில் உங்களுக்கு மதிப்பும் கூடும்.

* நேரடியாகத் தெரிந்தவர்களிடம் மட்டும் சாட்டிங் செய்யுங்கள். குடும்ப விஷயங்களைப் பகிர்வது உங்கள் தனிப்பட்ட விஷயங்களை சாட்டிங்கில் திறந்த புத்தகம் போல பகிர வேண்டாம்.

* நட்பு பட்டியலில் அதிமானவர்களை காட்ட வேண்டும், அதிக லைக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் இல்லாதவர்களுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கவும் வேண்டாம்; அக்செப்ட் பண்ணவும் வேண்டாம். ஃபேக் ஐடி என்று தெரிந்தால் அதை தவிர்த்து விட வேண்டும்.

* ஃபேஸ்புக்கில் பெண்கள் நட்பு வட்டத்தில் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்வதை தவிருங்கள்.

* வாழ்க்கை முழுவதும் உடன் வரும் துணையை ஃபேஸ்புக்கில் தேட வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். அப்படி அமைந்தாலும் நேரில் பார்த்து பேசி பழகி முடிவெடுங்கள்.

* ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன் பலமுறை பல நோக்கில் யோசிக்கவும். அதிக லைக் வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் எதிர்மறை விளைவுகளை யோசிக்காமல் புகைப்படங்களை பகிர வேண்டாம்.

* சமூக வலைதளங்கள் என்பது நமது முன்னேற்றத்துக்கு தேவைப்படும் ஒரு தொழில்நுட்பமாகவும், தகவல் பரிமாற்ற தளமாகவும் மட்டுமே பார்ப்போம். அது வாழ்க்கையில் ஒரு பங்குதான். அதுவே வாழ்க்கை இல்லை.

* தெரியாமல் அல்லது தெரிந்து செய்த தவறுகள் என்று வருந்த முடியாது. விளைவுகளை உடனே கொண்டு வரும் ஆபத்து நிறைந்தது இணையதளம். ஆனால் எது நடந்தாலும் வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு செல்லாமல் மீண்டு வருவதிலும் கவனம் தேவை.

rajamene_2925016a.jpg

மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி

http://tamil.thehindu.com/opinion/blogs/லைக்ஸ்-டூ-பேக்ஸ்-பேஸ்புக்-நண்பர்களுக்கு-10-ஆலோசனை/article8824299.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.