Jump to content

மங்கள சமரவீரவின் ஐ.நா உரையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம !


Recommended Posts

மங்கள சமரவீரவின் ஐ.நா உரையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம !

 

பத்து விடயங்களை முன்வைத்து சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுபறிக்கை விடுத்தள்ளது.

நடந்த முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி அறிக்கையளித்திருந்தார்.

இந்நிலையில், மங்களவின் அறிக்கைக்கு பதிலறிக்கையாக, பத்து விடயங்களை பிரதானமாக சுட்டிக்காட்டி, சிறிலங்காவின் முன்னுக்குபின் முரணான நிலைப்பாடுகளையும், பொறுப்பற்றை போக்கினையும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்.

எட்டுபக்கங்களை கொண்ட அறிக்கையின் முக்கியாவிடயங்கள் பின்வருமாறு அமைகின்றது :

1) ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்துக்கும் மங்கள சமரவீராவின் உரைக்கும் முரண்பாடு உள்ளது. 
அரசின், மக்களின், பாதுகாப்புப் படைகளின் கண்ணியம் காக்கவே தீர்மானத்தைச் செயலாக்கப் போவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா சொன்னதையே இவரும் சொல்கிறார். இது மனித உரிமை மன்ற உயர் ஆணையர் அறிக்கையின் படி போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்போரைக் காக்கும் கண்ணோட்டமாகும். மாற்றநோக்கு நீதிக்கு சிறிலங்கா தரும் இந்த விபரீத விளக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

2) சிறிலங்கா அரசின் செயல்பாட்டில் சிறிதளவு முன்னேற்றம் இருப்பதாக உயர் ஆணையர் தம் வாய்மொழி அறிக்கையில் கூறியிருப்பினும், நீதிக்கான உறுதி தேக்கமடையும் ஆபத்தையும் சுட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் பெரும்பாலும் தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது என்றும், கொலைகளுக்கும் ஆள்கடத்தலுக்கும் காரணமானவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் சமரவீராவிடம் பதிலே இல்லை.

3) உயர் ஆணையர் 2015 செப்டெம்பர் (OISL) அறிக்கையில் அடைந்த முடிவுகளை மங்கள சமரவீரா ஒப்புக்கொள்ளவே இல்லை. காணாமலடித்த வன்செயல்கள், ஆள்கடத்தல்-கொலைகள், பாலியல் துன்புறுத்தல், குற்றச்சாட்டுகளே இல்லாமல் முன்னாள் புலிகளைச் சிறைப்படுத்தல் – அறிக்கை குறிப்பிடும் இந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. 
மீளிணக்கம், நீதி தொடர்பாக 'மெல்ல மெல்ல விரைவுபடுத்துவது'தான் அரசின் கொள்கையாம்!

குற்றங்கள் நடந்து ஏழாண்டு கழிந்த பின்! நீதிப் பொறிமுறை அமைந்தாலும் போரின் இறுதிக்கட்டம் பற்றிய பரிசீலனையே இருக்காது என்னும் பொருள்பட மங்கள சமரவீரா பேசியுள்ளார். இது கவலைக்குரியது.

4) காணாமற்போனோர் செயலகம் (OMP) அமைப்பதற்கு முன் ஏற்கெனவே உறுதியளித்த படி பாதிப்புற்றோருடன் கலந்து பேசவில்லை என்பது பற்றி மங்கள சமரவீராவிடம் விளக்கமேதும் இல்லை. காணாமலடிக்கும் வன்செயலால் பாதிப்புற்றவர்களுக்கு பன்னாட்டு உடன்படிக்கையின் படி இழப்பீடு தர மறுப்பது பற்றியும் விளக்கமில்லை.

5) தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கிலிருந்து சிறிலங்கப் படைகளை விலக்கிக் கொள்வது பற்றி மங்கள சமரவீரா பேசவே இல்லை. படைநீக்கத்துக்கு அடையாள முயற்சி கூட இல்லை.

6) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கம் செய்வதாக 30.1 தீர்மானத்தில் கொடுத்த உறுதிமொழியை சிறிலங்கா நிறைவேற்றவில்லை. அது கொண்டுவரப்போவதாகச் சொல்லும் புதிய சட்டம் பழைய சட்டத்தை விட மோசமாக இருக்கக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அச்சம் தெரிவித்துள்ளார்.

7) தீர்மானத்தில் சிறிலங்கா உறுதியளித்த படி உள்நாட்டு நீதிப் பொறிமுறையில் பன்னாட்டு நீதிபதிகளைச் சேர்க்க உயர் ஆணையர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போதிலும் சிறிலங்கா அதிபர் மீண்டும் மீண்டும் மறுத்து வருகிறார். இந்த முரணை மறைக்க மங்கள சமரவீரா சாதுரியமாக சொற்சிலம்பம் ஆடுகிறார். ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லியே நீதிப் பொறிமுறை ஏதும் அமைக்காமல் இழுத்தடிக்கும் தந்திரம்தான் இது.

8) மங்கள சமரவீரா சொல்லும் ஜனநாயக மீட்சி சிங்கள சமூகத்திற்குத் தானே தவிர தமிழ்ச் சமூகத்திற்கன்று. தமிழர்களின் தேசமென்னும் தகுதியையும் சுயநிர்ணய உரிமையையும் அரசு ஏற்றுக் கொள்ளாத வரை ஜனநாயகமும் தனிமனித உரிமைகளும் செழிக்கப்போவதில்லை. மீளிணக்கம் என்ற பெயரில் கலப்புத் திருமணங்கள், இராணுவ நல்லெண்ணச் சிற்றூர்கள் என்று பல்வேறு வழிகளில் தமிழினத்தை உட்செரிக்கும் கபட முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

9) இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய கொடுஞ்செயல் நிகழ்ந்து இலட்சம் மக்கள் உயிரிழந்து ஏழாண்டுக்கு மேலாகி விட்டது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி நீதி வழங்கச் செய்திட அனைத்துலகப் பன்னாட்டுச் சமூகத்தை வேண்டுகிறோம். சிறிலங்கா அரசங்கம் இதைச் செய்யும் என்றோ, இன ஒடுக்குமுறையைக் கைவிடும் என்றோ நாம் நம்பவில்லை.

10) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நீதிக்கான முயற்சியை ஐநா ஊடாகத் தொடரும் போதே, ஐநாவுக்கு வெளியிலும் தொடர்ந்து பாடாற்றும்.

இவ்வாறு பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்களது மறுப்பறுக்கையின் பிரதான விடயங்கள் அமைந்துள்ளன.‪#‎copy‬#

நாதம் ஊடகசேவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.