Jump to content

மகாபாரத போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா.??


Recommended Posts

மகாபாரத போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா.??

ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது. இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர்.

சோதனை செய்யப்பட்டும் மைதானத்தை விட்டு சுமார் 10-20 மைல் தூரத்தில் சோதனையின் பார்வையிடும் பகுதி அமைக்கப்படுகின்றது. சரியான 5.29 மணி 45 விநாடிகளில் முதல் அணு ஆயுதம் வெடிக்கச் செய்யப்படுகின்றது. இது தான் இன்று வரை உலகம் அறிந்த முதல் அணு ஆயுதம் என நினைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதற்கு முன்னரே அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது உங்களுக்குத் தெரியுமா.??

சோதனை

நியூ மெக்சிகோவில் வெடிக்கச்செய்யப்பட்ட ஆயுத வெடிப்பில் இருந்து நெருப்பு சுமார் 600 அடி அகலத்திற்குப் பரவுகின்றது. இதன் பாதிப்பு சுமார் 20,000 டன் டிஎன்டி வெடிக்கும் போது ஏற்படுவதைப் போன்று இருந்தது.

ஆயுதம்

இதன் வெடிப்பு துகள்கள் மேகத்தில் சுமார் 7 மைல் உயரத்திற்குப் பறந்து செல்கின்றது. இதன் நடுக்கமானது சுமார் 100 மைல் தூரத்திலும் உணரப்படுகின்றது. அன்று உலகில் புதிய ஆயுதம் ஒன்று கிடைக்கின்றது.

அதிர்ச்சி

இதனைக் கண்டறிந்த டாக்டர். ராபர்ட் ஓபென்ஹெய்மர் அதிர்ந்து போனார். இச்செய்தியைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் அழுதனர், ஆனால் பெரும்பாலானோரும் அமைதியாய் இருந்தனர்.

முதல் முறை

முதல் முறையாக உலகம், மனிதன் கண்டறிந்த மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் மூலம் தாக்கப்படுகின்றது. ஆனால் இது போன்ற ஆயுதம் முன்பே பயன்படுத்தப்பட்டிருந்தால் பூமியின் வரலாறு எப்படி இருந்திருக்கும்.

அணு போர்

சில வரி ஆதாரங்களை கொண்டு அணு போர் மற்றும் அணு ஆயுதங்கள் பூமியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் இவை பல ஆண்டுகளுக்கு முன் அரங்கேறியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

அறிவியல் புனைகதை

நமக்கு முன் பூமியில் வாழ்ந்த முன்னோர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியது அறிவியல் புனைகதை போன்று இருந்தாலும், நியூ மெக்சிகோ சோதனைக்கு பின் வெளியான டாக்டர். ஓபென்ஹெய்மர் அறிக்கையில் இதற்கான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றது.

குறிப்பு

எனக்கு பகவத் கீதையின் குறிப்புகள் நினைவுக்கு வருகின்றது. ஓபென்ஹெய்மர் ஆங்கில பதிப்பில் 11 ஆம் பகுதி 32 வது வசனத்தைக் குறிப்பிட்டிருந்தார். "Now I am become Death, the destroyer of worlds", தமிழில் "உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் [5அ]. நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே [5ஆ] அழிவார்கள்.

புராணம்

மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்ற புராணங்கள் கி.மு இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை ஆகும். இந்தப் புராணங்களில் பண்டைய நாகரீகமான ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர்கள் குறித்த கதைகள் இடம் பெற்றிருக்கின்றது.

வரலாறு

இந்த நாகரீகமானது 12,000 ஆண்டுகளுக்கு முன் அல்லது முன்னதாக பதிவு செய்யப்பட்ட நாகரீகத்தை விட 5,000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் வாழ்ந்த பண்டைய நாகரீகம் ஆகும்.

தொழில்நுட்பம்

இவை சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மட்டுமின்றி இவற்றில் கடவுள்கள் பறக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியதோடு அதிநவீன தொழில்நுட்ப திறன் மற்றும் வியக்க வைக்கும் ஆயுதம் போன்றவற்றை போர்க்களங்களில் பயன்படுத்தியதாக பழைய குறிப்புகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம்

இவ்வாறு அவர்கள் பயன்படுத்திய ஆயுதமானது பிரம்மாஸ்திரம் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பிரம்மாஸ்திரம் மூலம் பலர் உடல் தீயில் எரிந்தும், உருகியும் மரணித்திருக்கலாம். பண்டைய வானியல் கோட்பாட்டாளர்களும் பிரம்மாஸ்திரம் நிச்சயம் அணு ஆயுதமாக இருக்க வேண்டும் என்றே கூறுகின்றனர்.

பின்விளைவு

பிரம்மாஸ்திரத்தின் பின்விளைவுகளும், இன்றைய அணு ஆயுதங்களின் பின்விளைவுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாக இருக்கின்றது என இன்று வரை கிடைத்திருக்கும் குறிப்புகளில் தெரிய வந்திருக்கின்றது.

கோட்பாடு

இது வழக்கமான அறிவியல் கோட்பாடாக இருந்தாலும், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்ற புராணங்களில் இதனை நிரூபிக்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இருந்தும் புராணங்களில் போர் நடைபெற்றது, போரில் அதிகளவு வெடிப்புகள் அரங்கேறியதை விளக்கும் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

காரணம்

போரில் ஏற்பட்ட வெடிப்புகளை மட்டும் வைத்து கொண்டு அவை அணு ஆயுதம் என கூறி விட முடியாது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வெடிப்புகள் சூரியனை விட சக்தி வாய்ந்ததாக இருந்தது. பல்வேறு கட்டிடங்களும் அழிந்து போயின.

விளைவு

போரில் உயிர் பிழைத்தவர்கள் தங்களது உடலில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தனர். தலை முடி உதிர்தல், தோல் மற்றும் நகங்கள் விழுவது போன்ற விளைவுகளைச் சந்தித்தனர். இது போன்ற பின் விளைவுகள் ரேடிஷன் பாதிப்புகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

குறிப்புகள்

இந்த மகாபாரத குறிப்புகள் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். இப்படி இருக்கும் பட்சத்தில் உடல் மற்றும் கதிரியக்க ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டெடுத்திருப்பர்.

பாகிஸ்தான்

1922 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் அதிகாரியின் தலைமையில் பணியாற்றிய குழுவினர் சேர்ந்து சிந்துவெளி நாகரிகத்தின் பழைய நகரமான மொகெஞ்சசதாரோவை கண்டெடுத்தனர்.

உருவாக்கம்

இந்நகரமானது 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுவதோடு கி.பி 2600 முதல் 1900 உள்ளிட்ட காலகட்டத்தில் தழைத்தோங்கியதாக வானியல் கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பழைமை

எனினும் பாகிஸ்தான் ஆய்வாளர்கள் மொகெஞ்சதாரோ நகரம் மிகவும் பழைமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்கின்றனர். மேலும் இந்த நகரமானது வானிலை மாற்றம் காரணமாக அழிந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

உடல்

1920களில் சுமார் 44 மனித எலும்புக் கூடுகள் மோகெஞ்சதாரோ பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டது. இவற்றில் உடல் முகம் பூமியை நோக்கிக் கிடந்தது, மற்றும் பலர் கைகோர்த்த நிலையில் மரணித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது அவர்கள் திடீரென மரணித்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

பாதிப்பு

மோகெஞ்சதாரோ நகர மக்களுக்குக் கோரமான ஆபத்து நேர்ந்துள்ளது மட்டும் தெளிவாக தெரிகின்றது, இருப்பினும் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது சந்தேகம் எழுப்புவதாகவே இருக்கின்றது. மேலும் அவர்களின் உடல்களை எவ்வித விலங்குகளும் சீண்டவில்லை, மேலும் அவர்களின் எலும்புகள் இன்று வரை அழியாமல் அப்படியே இருப்பது பல கேள்விகளை எழுப்புவதாக அமைகின்றது.

கதிர்வீச்சு

மோகெஞ்சதாரோவின் சில பகுதிகளில் அதிகப்படியான கதிர்வீச்சு அளவுகளும் பல இடங்களில் கதிர்வீச்சு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நகரம்

உலகின் சில பகுதிகளில் அதிகப்படியான கதிர்வீச்சு இருப்பது உறுதி செய்யப்படும் போது, ஏன் இவ்வாறு இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு வேலை அணு சக்தி மூலம் பாதிக்கப்பட்ட நகரமாக பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டிருப்பது மோகெஞ்சதாரோவாக இருக்குமோ.?

புத்தகம்

1979 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Atomic Destruction in 2000 B.C பிசி அதாவது கிமு 2000 காலகட்டத்தில் நிகழ்ந்த அணு அழிப்பு என்ற தலைப்பில் பிரிட்டன் ஆய்வாளர் டேவிட் டேவென்போர்ட் 45.72 மீ அகலம் கொண்ட மையப்புள்ளி ஒன்றை மோகெஞ்சதாரோவில் கண்டுபிடித்துள்ளார். அப்பகுதியில் அனைத்தும் இணைந்திருப்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

விட்ரிஃபிகேஷன்

ஆங்கில குறியீட்டு சொல்லான விட்ரிஃபிகேஷன் என்பது, ஒரு கல் முதலில் அடர் குழம்பாக மாறும் அதன் பின் உறுதியாகும். கல் உறுதியானதும் அது கண்ணாடி போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

ஆதாரம்

மோகெஞ்சதாரோ நகரத்தில் விட்ரிஃபிகேஷன் ஏற்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. விட்ரிஃபிகேஷன் என்பது ஒரு பொருள் அதிகப்படியான வெப்பத்தில் வைக்கப்பட்டாலோ அல்லது வெடிக்கச் செய்தாலோ ஏற்படுவதாகும்.

கிடங்கு

1940 மற்றும் 1950களில் இன்றைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அதாவது பண்டைய மோகெஞ்தாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆதாரம்

இதோடு உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதாவது இன்றைய ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அணு வெடிப்பு நிகழ்ந்து அதன் விளைவாகப் பாலைவன மணல்கள் கண்ணாடி போல் மாறிவிட்டன என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இதே போன்ற நிகழ்வு தான் நியூ மெக்சிகோவிலும் நடந்தது.

சிந்துவெளி

இதேப் போன்று சிந்து சமவெளி பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களும் அணு வெடிப்பினை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. இத்தனை சக்தி வாய்ந்த ஆயுதம் எங்கிருந்து வந்தது, இதனை யார் பயன்படுத்தியது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

நகரம்

பழைய புராணங்களில் மூன்று நகரங்கள் பூமியை சுற்றி வானில் பறந்து வந்ததாகவும் இவை மெட்டல் மற்றும் இரும்பு மூலம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்டத்தில் இந்த மூன்று நகரங்களுக்குள் போர் ஏற்பட்டு இதன் விளைவாகப் பூமியில் இருந்த நகரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி

இத்தகையை சக்தி வாய்ந்த ஆயுங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது நம் முன்னோர்களின் தொழில்நுட்ப யுக்திகளுக்கு ஆதாரமாக இருக்கின்றது. எனினும் அவர்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தாலும் அவர்கள் மிகவும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் நடைமுறையில் சாத்தியமில்லா தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்கின்றது.

http://m.dailyhunt.in/news/india/tamil/gizbot-tamil-epaper-tamgiz/makabaratha-boril-anu-aayuthangal-bayanbaduthappattatha-newsid-55173260து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா!

நானும் மகாபாரதம் வாசிக்கும் போது...கர்ணன் ..துர்வாசமுனிவரிடம் தான் சத்திரியன் அல்ல என்று பொய்யுரைத்து..'பிரமாஸ்திரம்' எனும்  அஸ்திரத்தைப் பெறுகிறான்! அப்போது விஸ்வாமித்திரர் அந்த அஸ்திரத்தின் பெருமையை விபரிக்கும் போது...கருவிலிருக்கும் குழந்தைக்களைக் கூட...இந்த அஸ்திரம் கொல்லும் வலிமையுடையது என்று கூறுகின்றார்! உண்மை...பொய்...கட்டுக்கதை என்பதற்கப்பால்..ஒரு கற்ப னையை உருவாக்கக் கூட. ஏதோ ஒரு நிஜம் தேவைப்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்!

ஆக..இந்த முனிவர்கள்...தேவர்களிடமிருந்து  (வேறு கிரகங்களில் இருந்து வந்தவர்கள்) அணுவாயுதங்களைப் பெற்று..(அவை அம்புகள் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கக் கூடும்)..அவற்றை உபயோகிப்பதற்கான கடவுச்சொற்களை (Code- Password)  .மட்டும் முனிவர்களுக்குச் சொல்லிக்கொடுதிருக்கக் கூடும்! இவற்றைய அவர்கள் மந்திரங்கள் என அழைத்திருக்கலாம்! அல்லது அந்த ஆயுதங்கள் voice activation technology மூலம் விழிப்பு நிலைக்குக் கொண்டுவரப் படக் கூடியவையாக இருந்திருக்கவும் கூடும்!

இதே போலவே அர்ஜுனனின் பாசுபதாஸ்திரம் சிவனிடம் இருந்து அவனுக்குக் கிடைத்திருக்கக் கூடும்!

இப்படியே இராவணனின் புஷ்பக விமானம் எனப் பல புராணங்களிலும் ..இதிகாசங்களிலும் காணப்படுகின்றன!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் சாட்டிலைட் டெக்னாலஜி யைத்தான் 
மேலே ..மேலே தேவர்கள் என்று அழைத்திருப்பார்கள்  போல 

சட்டலைட் இன்ஜினீயர்களை முனிவர்கள் என்றும் அழைத்து வந்திருக்கலாம். 

இவளவு டெக்னாலஜி இருந்தும் இந்திய எல்லையை யாரும் கடந்ததில்லை.
பூமி உருண்டை என்ற வாதம் கூட எங்கும் இல்லை.

பாரதத்திட்க்குள் நின்று பல நூறு ஆண்டுகள் பரோட்டா சுட்டு சாப்பிடவே 
இது உதவி இருக்கிறதுக்கு. 

ஒரு பொய்யை உண்மை என்று நிறுவ போனால் .....
அடுக்கி கொண்டே போகவேண்டியதுதான்.
எல்லையே கிடையாது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நான் நினைக்கிறேன் சாட்டிலைட் டெக்னாலஜி யைத்தான் 
மேலே ..மேலே தேவர்கள் என்று அழைத்திருப்பார்கள்  போல 

சட்டலைட் இன்ஜினீயர்களை முனிவர்கள் என்றும் அழைத்து வந்திருக்கலாம். 

இவளவு டெக்னாலஜி இருந்தும் இந்திய எல்லையை யாரும் கடந்ததில்லை.
பூமி உருண்டை என்ற வாதம் கூட எங்கும் இல்லை.

பாரதத்திட்க்குள் நின்று பல நூறு ஆண்டுகள் பரோட்டா சுட்டு சாப்பிடவே 
இது உதவி இருக்கிறதுக்கு. 

ஒரு பொய்யை உண்மை என்று நிறுவ போனால் .....
அடுக்கி கொண்டே போகவேண்டியதுதான்.
எல்லையே கிடையாது !

உங்கள் கருத்தை நான் மறுதலிக்கவில்லை!

இந்தியாவில் மட்டுமல்ல..மற்றும் மாயன், இன்கா போன்ற தென்னமெரிக்க நாடுகளும் இவ்வாறான கதைகளும், சான்றுகளும் காணப்படுகின்றன!

இதே போலவே.. ஆபிரிக்க நாடுகளிலும் 'ஸீரியஸ்' நட்சத்திரத் தொகுதியை நோக்கி....ஒரு வருடாந்த நடன பூஜை நிகழ்வொன்றும் நடை பெறுகின்றது!

இந்தியாவைப் பற்றியே பதிவு இருந்ததால் தான் இந்தியாவைக் குறித்துக் கருத்தெழுத வேண்டிய தேவை ஏற்பட்டது!

கிறிஸ்தவ மதத்தின் நூல்களிலும் மொசெஸ் ஒருமுறை 'கடவுள்களால்''வேறொரு கிரகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுத் திரும்பவும் பூமியில் கொண்டு வந்து விடப்பட்டதாக ஒரு கதை கூறப்பட்டுள்ளது! அவர் திரும்ப வந்த போது அவர்களது உறவினர்களனைவரும் , அவரை விடவும் மிகவும் வயதானவர்களாக ஆகி விட்டவர்களாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது! இது  Time Travel  ஆல் ஏற்பட்டிருக்கலாம் என்று இப்போது நம்புகின்றார்கள்!

இந்தியாவிலும் நவக்கிரகங்களைப் பற்றியும்..அவற்றின் நகர்வுகளைப் பற்றியும் அறிந்திருன்றார்கள்!

நீர் குளிரும் என்று யாரும் எழுதி வைக்கவில்லைத் தானே! ஏனெனில் அது ஒரு வெளிப்படையான உண்மை!

அதே போலப் பூமி உருண்டை என்பதும் ஒரு வெளிப்படையான உண்மையாக அந்தக் காலத்தில் இருந்திருக்கக் கூடும்!

விரிந்த மனதுடன் ..உண்மைகளை எதிர் கொள்ளுவோமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து அறிவானவர்கள் அந்த காலத்தில் இருக்கவில்லை என்பதல்ல 
அன்றி அறிவுபூர்வனவை முந்தைய நாட்களில் இருக்கவில்லை என்பதும் அல்ல.

மகாபாரத போரே ஒரு கந்தறு கதை 
அதன் உச்சியே தேரை கிருஷ்ணர் பெருவிரலால் அமத்தினார் என்பதாகும்.
இனி அப்போதே கைட்ரொலிக் ஸிஸ்டெம் இருந்தது அதை அமுக்கி 
கிருஷ்ணர் தேரை சிறிதாக்கினார் என்றும் வரும்.

கைட்ராலிக் ஸிஸ்டெம் அணுஆயுதம் எல்லாம் இருந்திருப்பின் 
நாம் படிக்கும் மகாபாரதம் முற்றிலும் பொய்! அர்ஜுனனின் வில்வித்தை 
பாண்டவர் வனவாசம்.....  அணுகுண்டு யாருக்கு சொந்தம் ?
யார் வீசினார் எங்கு வீசினார் ?

இந்த கேலிக்கூத்துதான் என்னுடைய கருத்தும் கேள்வியாகும்.

முன்னோரிடம் இருந்த மூலிகை அறிவும் 
உடல் உபாதைகள் பற்றிய அறிவும் மங்கி போனதால்தான் 
நாம் இன்று பல நோய்களால் அவதிப்படுகிறோம். 

பூமியில் எரிமலைதான் பாரிய மாறுதல்களை கொண்டுவந்து இருக்கிறது 
பூமி அதிர்ச்சிக்கு காரணமான பிளேட்டுக்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது 

மலைகளில் உள்ள பாறைகள் எல்லாவற்றிலும் வரிகள் இருக்கினறன 
ஒரு கால எல்லையில் நடந்த கதைகள் அந்த வரிகளில் பதிவாகி இருக்கிறது.

குண்டு குளம் பாதாளம் எல்லாம் அதனால்தான் வருகிறது.

tectonics.jpg

india-eurasia-plates.jpgeqfocus.gif

What%2Bcaused%2Bthe%2BNepal%2Bearthquake

Link to comment
Share on other sites

புராணங்களை ஆய்வு செய்பவர்கள் முதலில் பூமியில் நவீன மனித இனம் உருவான காலப்பகுதி முதல் மனித நாகரீகம் உருவான காலப்பகுதி வரையிலான Timeline பற்றிய அடிப்படையை அறிந்து கொள்ள வேண்டும். புராணங்களை நிறுவுவதற்காகக் கற்பனையில் தவறான தகவல்களை வரலாறு என்று பரப்புரை செய்வோர் அதற்கான எதிர் விளைவையே வருங்காலத்தில் பெற்றுக் கொள்ள வேண்டி வரும். இராமாயணம் போன்ற ஒரு நிகழ்வு வரலாற்றில் நிகழ்ந்திருக்கலாம். அதனை உறுதிப்படுத்த இராமர் பாலம், இராவணன் வெட்டு போன்ற ஆதாரங்களை நாடினால் எல்லாமே பொய்யாகிவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.