Jump to content

பார்த்ததும்.. பிறந்தவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13528776_1150756078280788_66447302350339

 

மலர் ஒன்று

மலர்களுக்கு விளக்குப் பிடிக்கிறது..

காதலுக்கு காவலுக்கு அல்ல..

காவாலிகள் அவற்றை சிதைத்திடக் கூடாதின்னு. !!!

 

(அப்பப்ப இங்கால சில கிறுக்கல்களோடு வந்து  போவம்... நீங்களும் வந்து பார்த்து ரசிச்சுப் போங்க. )

 

  13516371_1150751361614593_62776362734488

வெண்ணிற மேகங்களுக்கு

சிவப்பு வர்ணம்  தீட்டும் மலர்கள்..

தமக்குள் பேசிக் கொள்வது

தீட்டுன்னு இதை உலகம் வெறுக்கக் கூடாதுன்னு..! tw_blush:

13439228_10157149385365055_3898701104377

பெண்ணுக்குள்

நிலவை புதைக்கும் உலகம்

தன்னை முழுக்காட்ட நினைத்தது மறந்து

நிலவு மூழ்கி எழுகிறது

என்ன கொடுமை இதுன்னு...!tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்பத்திலிருந்து?? 

நான் எழுத நினைக்கிறேன் ஆனாலும் வார்த்தை முட்டுதே?☺tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் முன்பும்  பல படங்களூடன்க  கூடிய  கதைகள் , கவிதைகள் எழுதியவர்தான். இப்ப அசை மீட்கின்றார் என நினைக்கின்றேன்....!

நன்றாக இருக்கு , தொடருங்கள், மங்கலகரமாய் மங்கையுடன் ஆரம்பித்திருக்கின்றீர்கள்...! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

நன்றாக இருக்கு , தொடருங்கள், மங்கலகரமாய் மங்கையுடன் ஆரம்பித்திருக்கின்றீர்கள்...! tw_blush:

அதொன்னுமில்லை சுவிண்ணா...

முதற் காட்சியில் உள்ள காட்சியும் கன்னியும் மனதில் ஏற்படுத்திய கிளர்ச்சி வளர்ச்சியடைந்து குளிர்ச்சியான வரிகளாகி துளிர்ச்சியடைக்கின்றதன் விளைவு இதுன்னு வைச்சுக்கலாம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13315685_1013582748726982_41958008331711

சூரியனால் ஒளிரும் நிலாப் போல

எரியும் சுடரில் ஒளிரும் இவள் வதனம்

ஏக்கமெனும் இருள் சுமக்குது

மெழுகுன்னு காலம் உருகுதுன்னு..!

 

13439079_934513870037202_122494448678559

மலை முகடுகளோடு

வீட்டுக் கூரைகள்..

கடுப்பாகிப் போகின்றன

தாங்கள் எல்லாம் சின்னவீடுகளுன்னு. tw_blush:

13537775_10157150939600055_4956638066644

பறவைகளுக்கு குந்தக் கிளை இருக்கு

மனிதர்களுக்கு குந்தக் கதிரை இருக்கு

பறவைகளை தாங்கும் கிளை கலங்கவில்லை

மனிதர்களைக் காணும் மரம் கலங்குகிறது...

கால் தறியுமோ கதிரைக்கின்னு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1910147_10152177183222944_67574894489096

பிறப்பில் சாவு உறுதின்னு
தெரிந்தும் இடையில்..
காதல் தோல்வின்னு
சாவில் விழுவதும்
படிப்பில் தோல்வின்னு
சாவில் விழுவதும்
கடன் தொல்லைன்னு
சாவில் விழுவதும்
ஏன் மதவெறின்னு
வெடிச்சுச் சிதறுவதும்
நிகழும் உலகில்
ஓர் இனத்தின் வாழ் உரிமைன்னு
உடல் வெடித்தோர்
இவ்வுலகில் சிலரேன்னு
ஈழத்துப் பரணி
நினைவில் வைக்க
பிறந்தது யூலை 5ன்னு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/07/2016 at 5:09 AM, nedukkalapoovan said:

அதொன்னுமில்லை சுவிண்ணா...

முதற் காட்சியில் உள்ள காட்சியும் கன்னியும் மனதில் ஏற்படுத்திய கிளர்ச்சி வளர்ச்சியடைந்து குளிர்ச்சியான வரிகளாகி துளிர்ச்சியடைக்கின்றதன் விளைவு இதுன்னு வைச்சுக்கலாம். tw_blush:

இதென்ன புதுமையடா? பெண்ணை கண்டு நெடுக்ஸுக்கு மனதில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கு .....வாழ்த்துக்கள்..:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 02/07/2016 at 9:09 PM, nedukkalapoovan said:

அதொன்னுமில்லை சுவிண்ணா...

முதற் காட்சியில் உள்ள காட்சியும் கன்னியும் மனதில் ஏற்படுத்திய கிளர்ச்சி வளர்ச்சியடைந்து குளிர்ச்சியான வரிகளாகி துளிர்ச்சியடைக்கின்றதன் விளைவு இதுன்னு வைச்சுக்கலாம். tw_blush:

உந்தக் கிளார்ச்சி வளர்ச்சி குளீர்ச்சி துளீர்ச்சி எல்லாம் ஒரு துனணவி தேடும் அறீகுறீகள் ராசா....! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13592347_10153709740592944_8712188196239

உன் கண்களில்  கவிதை படித்தேன்

உன் வதனமதில்  நிலவின் ஆய்வு செய்தேன்

உன் இமைகளில் கருமையின் நிறப்பிரிகை உணர்ந்தேன்

உன் விரல்களில் வாத்தியம் வாசித்தேன்

உன் உதடுகளில் இனிமையின் மீடிறன் கணித்தேன்

நீ...

பெண் அல்ல.. ஓவியமுன்னு..!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 05/07/2016 at 0:42 PM, suvy said:

உந்தக் கிளார்ச்சி வளர்ச்சி குளீர்ச்சி துளீர்ச்சி எல்லாம் ஒரு துனணவி தேடும் அறீகுறீகள் ராசா....! tw_blush:

 

ஏதோ நல்லது நடந்தால் வாழ்த்துவோம் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முனிவர் ஜீ said:

ஏதோ நல்லது நடந்தால் வாழ்த்துவோம் ??

ஏ.. ஏ.. ஒரு மனுசன் சுதந்திரமா கற்பன செய்யவும் தடையா. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

ஏ.. ஏ.. ஒரு மனுசன் சுதந்திரமா கற்பன செய்யவும் தடையா. tw_blush:

உங்கள் கற்புக்கு ஒரு  அணைதான்  தானே கற்பனை ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.