Jump to content

வாழ்க்கைமரம்


Recommended Posts

l_478304_4ee028bd-150x150.jpg

இரண்டுவாரங்களுக்கு முன்பு அஜிதன் என்னிடம் நான் ஒரு படத்தைப் பார்த்தாகவேண்டுமென்று சொன்னான். அவனுடைய நோக்கில் அவன் பார்த்த படங்களில் அதுவே தலைசிறந்தது. நான் அவனை நான் இதுவரை சந்தித்த மிக நுண்ணுணர்வுள்ள மனிதர்களில் ஒருவனாக நினைப்பவன். ஆகவே அந்தப்படத்தைப் பார்க்க முடிவுசெய்தேன். அஜிதன் அதைக் குறுந்தகடாக பெங்களூரில் இருந்து கொண்டுவந்திருந்தான். ‘அப்பா, நான் படத்தைப்பத்தி ஒண்ணுமே பேசலை. சிலசமயம் மட்டும்தான் ஒரு கலை அதோட சரியான சாத்தியங்களைக் கண்டுபிடிக்கும்னு நினைக்கிறேன். இது அந்தமாதிரி ஒரு படைப்பு’ என்றார்

டெரன்ஸ் மாலிக் [Terrence Malick] எடுத்த வாழ்க்கைமரம் [The Tree of Life ] தொலைக்காட்சித்திரையில் ஓட ஆரம்பித்தது. சிலநிமிடங்களில் நான் அதுவரை கொண்டிருந்த திரைப்படரசனைப்பயிற்சி அதைப்பார்ப்பதற்கு போதுமானதல்ல என்ற உணர்வு உருவாகியது. திரைமொழியின் வழக்கமான இலக்கணம் எதுவும் செல்லுபடியாகாத ஒரு கதைசொல்லல். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சினிமா என்பது இன்றுவரை காட்சிகளின் [சீன்] தொடர்தான். இந்தப்படம் காட்சித்துளிகளின் [ஷாட்] தொடர்.

மேலும் சிலநிமிடங்களில் அந்தப்படத்தைப்பார்ப்பதற்கான பயிற்சியை அந்தப்படமே அளித்தது. என்னை ஆழ உள்ளிழுத்துக்கொண்டது. நான் பெரும்பாலும் எந்த சினிமாவையும் அணுகி ரசிப்பவனல்ல. சினிமா என்பது ஒரு கலைவடிவம் என்ற வகையிலேயே மகத்தானவற்றைச் சொல்ல சாத்தியமற்றது, முழுமையை அடைய முடியாதது என்ற எண்ணம் என்னிடம் இருபதாண்டுக்காலமாக இருந்துகொண்டிருக்கிறது. அது கண்முன் காட்டியாகவேண்டுமென்ற கட்டாயமே அதன் எல்லைகளைத் தீர்மானித்துவிடுகிறது. மிகச்சில திரைப்படங்களே அந்த எண்ணத்தை ஊடுருவி என்னை வந்து தொட்டிருக்கின்றன. பர்க்மானின் ஏழாவது முத்திரை [Seventh seal], தர்கோவ்ஸ்கியின் பலி [sacrifice] போல. இது அந்த வரிசையில் அமைந்த படம். என் வரையில் அப்படங்களின் தொடர்ச்சியும்கூட.

http://www.dailymotion.com/video/xiw2xt_tree-of-life-film-clip_shortfilm

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகப் படம் என்னை வெளியே தள்ள ஆரம்பித்தது. ஆச்சரியமாக இருந்தது. என்னால் அந்த விலகலைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. காட்சிகள் எனக்குப் பொருள்தரவில்லை. ஒருகட்டத்தில் நான் வெளியே வேறெங்கோ இருந்தேன். என் மகள் கண்கள் மின்ன அதில் மூழ்கியிருந்தாள். அஜிதன் பத்தாவது முறையாக அதற்குள் இருந்தான். நான் அசைந்து ‘நான் மேலே செல்கிறேன்’ என்றேன். அஜிதன் ஏமாற்றமடைந்தான். கண்களில் அடிபட்ட பாவனை

நான் ஒருமணி நேரம் கழித்துக் கீழே வந்தேன். ‘அஜி இவ்வளவுநேரம் உன்னைத் திட்டினான். நீ அவனுக்குப்பிடிச்ச படத்தை வேணும்னே நிராகரிக்கிறதா சொல்றான்’ என்றாள் அருண்மொழி. நான் அஜிதனிடம் ‘நான் நிராகரிக்கலை அஜி. படம் என்னை வெளியே தள்ளிச்சு. ஏன்னு தெரியலை….மேலே போனபிறகுதான் தெரிஞ்சுது. அது ஆழமா விசாலாட்சியம்மாவை ஞாபகப்படுத்துது….ஐம்பது வயசுக்கு மேலே, இவ்வளவுதான்னு தெரிஞ்ச வயசிலே இந்தப்படம் தர்ற உணர்ச்சிகளே வேற’ என்றேன். அவன் புரிந்துகொண்டான்.

பின்னர் நான் மலையாளப்பட வேலைகளுக்காக மும்பை சென்றேன். மும்பையில் இந்தப்படத்தைத் திரும்பப் பார்க்க நேர்ந்தது. அந்த நட்சத்திரவிடுதியில் பாதி அறைச்சுவரை நிறைக்கும் மிகப்பெரிய தொலைக்காட்சி. மிகச்சிறந்த ஓசையமைப்பு. நான் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் அந்தப்படத்தைப் போட்டேன். அப்போது யானை துதிக்கையால் அள்ளி இழுத்து எடுத்துக்கொள்வதைப்போல அந்தப்படம் என்னை ஆட்கொண்டது. பின்னிரவில் படத்தை முடித்தேன். பால்கனியில் நின்றுகொண்டு பால்வழிபோல ஒளிரும் மாநகரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் வந்து அந்தப்படத்தை இன்னொரு முறை பார்த்தேன். ஆழ்ந்த பெருமூச்சுடன் விடியலில் சிவந்த வானத்தை வெளியே சென்று பார்த்தேன். ஆம், இதோ இங்கிருக்கிறேன். இங்கே. எதுவும் இல்லாமலாவதில்லை, இடம்மாறுகின்றன, அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டேன்.

வாழ்க்கைமரம் ஒரு கதை அல்ல. அது ஒரு சில தன்னுணர்வுகளை ஊடுபாவாகப் பின்னி உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப்பரப்பு. அதை ஒரு கதையாகச் சுருக்கிச் சொல்வதோ , தருணங்களை விவரிப்பதோ அதை சிதைப்பதற்குச் சமம். அன்னை ஒருத்திக்கு மகனின் இறப்புச்செய்தி வருமிடத்தில் ஆரம்பிக்கிறது படம். மிக இயல்பான தொடக்கம். படம் எழுப்பும் எல்லா வினாக்களும் அப்படிப்பட்ட மரணத்தின் தருணங்களிலிருந்தே முளைக்க முடியும். அறுபதுகளில் நிகழ்கிறது அது. அந்நிகழ்ச்சியை இன்று நினைவுகூரும் மூத்தவனின் நினைவுகள் அல்லது தன்னுரைக்கோவை வழியாகப் படம் முன்னகர்கிறது.

பின்னிப்பின்னிச்செல்லும் இந்தப்படத்தின் சரடுகள் மூன்று. ஒன்று பிரபஞ்சவியல். இந்தப்பிரபஞ்சம் இதிலுள்ள விண்மீன்கள் கோள்கள் உயிர்கள் புழுப்பூச்சிகள் பிறந்திறந்து சாகும் முடிவிலா நிகழ்வின் பின்னணியில் அனைத்தும் முன்வைக்கப்படுகிறன. காலம் என்று நாம் உண்மையில் எதைச்சொல்கிறோம் என்ற துணுக்குறலை உருவாக்குகிறது டெரென்ஸ் மாலிக் அந்த நிகழ்வுப் பெருக்கெடுப்ப்பைக் காட்சிக்கோவைகளாகக் காட்டும் விதம். காலத்தின் மடியில் நிகழ்கின்றன அனைத்தும்.

இன்னொரு சரடு உயிர்த்தொடர்ச்சி. அன்னையும் தந்தையுமாக வேடமிட்டு நின்று இப்பிரபஞ்சம் கொள்ளும் லீலை. அதனூடாக உருவாக்கப்படும் மானுடவாழ்க்கையின் நாடகம். அன்னையைக் கருணை [grace)] என்றும் தந்தையை இயற்கை [Nature] என்றும் மூத்தமகன் உணர்கிறான். என் வரையில் நான் இன்னொரு உருவகத்தையே இளமையில் அடைந்திருக்கிறேன். இயற்கை என்பது அன்னை. இச்சை என்பது ஆண்மை. சக்தியும் சிவமும். இயற்கை கருணையுடன் உணவூட்டுவது. இச்சை அதன்மேல் படைப்பாகச் செயல்படுகிறது. இந்தத் திரைப்படைப்பின் தரிசனம் எனக்கு இன்னொரு திறப்பாகவே இருந்தது. இயற்கை மாற்றமில்லா விதிகள் கொண்ட கறாரான பேணும் சக்தி. அதன் மீது பரவியுள்ள கருணையே வாழ்க்கையை உருவாக்கும் விசை என்கிறது இப்படம்.

மூன்றாவது சரடு காமம். காமம் என்பது ஓர் உயிர் தன்னை இங்கே உணரும் விதம். தன்னை இங்கே நிறுத்திக்கொள்ளும் விழைவு. தன்னை எஞ்சச்செய்துவிட்டுப் போகும் முனைப்பு. அது தன்னுணர்வாக அகங்காரமாக தன்னைப் பெருக்கிக்கொள்கிறது. சொல்லிச்செல்லும் ஜாக் காமம் மூலம் உணரும் தன்னுணர்வும் அதை தன் தந்தைக்கும் தாய்க்குமிடையேயான ஊசலாட்டமாக அவன் அறியும் அலைக்கழிப்பும் இந்த படத்தின் முக்கியமான பகுதி.

காலத்தின் முடிவிலா வெளியில் உயிர்க்குலங்கள் இதை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. இயற்கையும் கருணையும் ,. இருத்தலும் மரணமும் என ஒரு இருமையைக் கட்டமைத்து ஆடிமுடித்து மீண்டும் ஆட வெளியே சென்று காத்திருக்கின்றன. படத்தின் இறுதியில் ஜாக் அவனுடைய இளமையைப்பின் தொடர்ந்து செல்லும் பயணம். அங்கே அன் தம்பியையும் அன்னையையும் சந்திக்கும் புள்ளி. திரைப்படம் கனவுக்கு மட்டுமே உரிய மகத்தான தர்க்கத்தை அடையும் இடம் அது.

கடலில் ஒரு சிறு குமிழிக்கொப்பளிப்பாக எழும் வாழ்க்கை கடலாக மாறி முடியும் சித்திரத்தை அளிக்கும் அந்த முடிவு பெரும் கலைபப்டைப்புகள் உருவாக்கும் செயலின்மையை நம்முள் நிறைக்கக்கூடியது. பூமியை உண்ணுகிறது காலம். பிறப்பிறப்பின் பெருவெளி. அழிவதும் ஆவதும் ஒன்றேயாக நம் முன் விரியும் காட்சிகளின் கருஞ்சுழி.

‘நத்தை உண்ணும் இலைபோல

நெரிகிறது பிரபஞ்சம்.

மௌனத்தில் இருப்பேன்,

காலத்தைக் கேட்டவாறு’

என்ற வரி என் நினைவில் எழுந்தது. இருபத்தேழாண்டுகளுக்கு முன் நான் எழுதியது. என் அம்மாவின் தற்கொலையை நான் சுமந்தலைந்த நாட்களில். காலச்சுவடில் பல ஆண்டுகளுக்குப்பின் அது அச்சானது. அந்த வரியை நான் கண்முன் திரைப்படமாகக் கண்டுகொண்டிருந்தேன்.

வாழ்க்கை மரம் அனைவருக்குமான படம் அல்ல. படம் முழுக்கப் பின்குரல் ஒலித்துக்கொண்டே இருந்தாலும் அது காட்சிகளைக் கோர்ப்பதில்லை. காட்சிகள் நாம் கற்பனையால் உருவாக்கிக்கொள்ளும் ஒழுங்கால்தான் தொகுக்கப்பட்டாகவேண்டும். பெரும்பாலான திரைப்படங்கள் நம் முன் நிகழ்ந்துகொண்டிருக்கும், நாம் சாட்சிகளே ஒழிய பங்கேற்பாளர்கள் அல்ல. இது அப்படியல்ல. இது நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டிய படம். ஆகவே தமிழில் இப்படம் இன்றுவரை பேசப்படாததிலும் வியப்பில்லை. சினிமாவிலிருந்து சினிமாவால் தொடப்பட முடியாத ஒன்றை நோக்கிச் செல்லும் ஒரு பறந்தெழலுக்கான ஆற்றல் கொண்டவர்களுக்கு மட்டும் உரித்தான படம் இது.

படம் பார்த்து ஒரு வாரம் தாண்டியிருக்கிறது. படத்தில் ஒரு காட்சியை நான் நினைவுகூர்ந்தேன். ஒரு பெரிய கட்டிடம் தழல்விட்டு எரிந்து எழுகிறது. தீ அந்தக்கட்டிடத்தைத் தன் ஆயிரம் நாக்குகளால் நக்கி நசுக்கி உண்ணும் ஒலி மட்டும் நிறைந்திருக்கிறது. பின் துணுக்குறலுடன் அறிந்தேன், அது இந்தப்படத்தின் காட்சி அல்ல. தர்கோவ்ஸ்கியின் படத்திலுள்ள காட்சி. அது என் அகத்தில் எங்கே இணைந்துகொண்டது? அதன் மூலம் நான் இந்தப்படத்துக்கு அளிக்கும் அர்த்தம் என்ன?

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் May 18, 2013

http://www.jeyamohan.in/36636#.V3S0F9SLRxA

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.