Jump to content

"அடிப்பிடித்த சட்டியை..." இலகுவாக கழுவ வேண்டுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அடிப்பிடித்த சட்டியை... இலகுவாக கழுவ வேண்டுமா?

சமைத்துக் கொண்டு இருக்கும் போது.... தொலைபேசி அழைப்பு, வீட்டு  வாசலில் திடீரென்று  தபால்காரன் அல்லது வேறு ஒருவர் மணியடிப்பது, சுவாரஸ்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்....   கவனம் சிதறுப் பட்டுப் போகும் போது.... எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்த சட்டி அடிப்பிடித்தால்..... இலகுவாக நீக்க இந்த முறையை பின் பற்றுங்கள்.:)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லா இருக்கே...! சட்டியை ஒருக்கா அடிப்பிடிக்க  வைச்சுட்டு செய்து பார்க்க வேண்டும்....! பிழைச்சுது என்டால்  அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன், சட்டி அனுப்பி வைக்கவும்....! tw_blush:

Link to comment
Share on other sites

இதை விட இலகுவான முறை.

டிஷ் வாஸேருக்கு பாவிக்கும் கட்டிய உடைத்து பாதியை போட்டுவிட்டு தண்ணீரை நிரப்பவும். மறுநாள் காலை எழுந்து பாத்தால் எல்லாமே துப்பரவா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தமிழ் சிறி .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தகவலுக்கு நன்றி.

 கூட்டம் கூட்டமா வந்து நன்றி சொல்வதைப்பார்த்தால் கனபேர் சமைக்கும் விசயம் இப்பதான் விளங்குது ???

கன சட்டி இனிமேல் தான் கரி இல்லாத சட்டியாக மாற போது ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முனிவர் ஜீ said:

 கூட்டம் கூட்டமா வந்து நன்றி சொல்வதைப்பார்த்தால் கனபேர் சமைக்கும் விசயம் இப்பதான் விளங்குது ???

கன சட்டி இனிமேல் தான் கரி இல்லாத சட்டியாக மாற போது ??

இதை நான் சொல்லித்தான் ஆகணும்...! 

வீடுகளில் ஆண்கள் சமைக்கும்போது சட்டி அடிப் பிடிப்பது அரிது...! அல்லிராணிகள் சமைக்கும்போதுதான் அதிகமாய் அடிப் பிடிக்கும்...!

--- ஒரே நேரத்தில் பல வேளைகள் செய்தல்....!

--- வலிப்பு வந்தவர்கள் போல் தோளுக்கும் காதுக்கும் இடையில் போணை வைத்துக் கொண்டு சம்சாரிச்சுக் கொண்டு சமைத்தல்...!

--- தொலைக் காட்சியில் சீரியல் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டு சமைத்தல்....!

--- தாலி கட்டிய அப்பாவிகளைத் திட்டிக் கொண்டு சட்டியைப் பார்த்தல்...! ( அது பாவம், ஒரே நேரத்தில் கீழ்ச் சூடும் மேல்ச் சூடும் தாக்கி பொங்கிக் கருகி....)

 

 

Link to comment
Share on other sites

18 minutes ago, suvy said:

அல்லிராணிகள் சமைக்கும்போதுதான் அதிகமாய் அடிப் பிடிக்கும்...!

 

அல்லி ராணிகள் அடிப்பிடிக்க வைத்தாலும் சிங்கனுக்குத்தானே வேலை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... இணையவனையும் இழுத்துவந்து  பதிவிட வைத்திருக்கெண்டால் , அவரும் ரொம்ப நொந்துதான் போயிருக்கின்றார்...!  tw_blush:

கண்டது  மகிழ்ச்சி....!

Link to comment
Share on other sites

4 hours ago, இணையவன் said:

அல்லி ராணிகள் அடிப்பிடிக்க வைத்தாலும் சிங்கனுக்குத்தானே வேலை. :rolleyes:

 

4 hours ago, suvy said:

ஆஹா... இணையவனையும் இழுத்துவந்து  பதிவிட வைத்திருக்கெண்டால் , அவரும் ரொம்ப நொந்துதான் போயிருக்கின்றார்...!  tw_blush:

கண்டது  மகிழ்ச்சி....!

அவனவன் நொந்து நூலாகி இங்கு எதையாவது பதிந்தால் உங்களுக்கு ஒரு நக்கல்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

அல்லி ராணிகள் அடிப்பிடிக்க வைத்தாலும் சிங்கனுக்குத்தானே வேலை. :rolleyes:

இந்த மனுசன் மட்டும் தான் உன்மையை ஒத்துக்கொள்கிறார்

 

5 hours ago, suvy said:

இதை நான் சொல்லித்தான் ஆகணும்...! 

வீடுகளில் ஆண்கள் சமைக்கும்போது சட்டி அடிப் பிடிப்பது அரிது...! அல்லிராணிகள் சமைக்கும்போதுதான் அதிகமாய் அடிப் பிடிக்கும்...!

--- ஒரே நேரத்தில் பல வேளைகள் செய்தல்....!

--- வலிப்பு வந்தவர்கள் போல் தோளுக்கும் காதுக்கும் இடையில் போணை வைத்துக் கொண்டு சம்சாரிச்சுக் கொண்டு சமைத்தல்...!

--- தொலைக் காட்சியில் சீரியல் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டு சமைத்தல்....!

--- தாலி கட்டிய அப்பாவிகளைத் திட்டிக் கொண்டு சட்டியைப் பார்த்தல்...! ( அது பாவம், ஒரே நேரத்தில் கீழ்ச் சூடும் மேல்ச் சூடும் தாக்கி பொங்கிக் கருகி....)

 

 

 அடச் ச இந்த பொம்புளைங்களே இப்படி த்தானே சும்மா சமைக்கிறன் என்று சொல்லி சட்டியை பத்தவச்சுப்போட்டு பேந்து முடிஞ்சா நீங்கள் சமச்சு காட்டுங்க என்று சொல்லி இப்ப கனபேர் வீட்டில் முழுநேரமும் சமைக்கும் வேலை  இதுக்கு பேசமல்....... என்னத்தை சொல்ல ??????

Link to comment
Share on other sites

6 minutes ago, முனிவர் ஜீ said:

 அடச் ச இந்த பொம்புளைங்களே இப்படி த்தானே சும்மா சமைக்கிறன் என்று சொல்லி சட்டியை பத்தவச்சுப்போட்டு பேந்து முடிஞ்சா நீங்கள் சமச்சு காட்டுங்க என்று சொல்லி இப்ப கனபேர் வீட்டில் முழுநேரமும் சமைக்கும் வேலை  இதுக்கு பேசமல்....... என்னத்தை சொல்ல ??????

கதிர்காம கந்தா 

இந்தாளுக்கு அருள் புரியப்பா.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

கதிர்காம கந்தா 

இந்தாளுக்கு அருள் புரியப்பா.:grin:

ஏன் அண்ண ஏன் அந்த மனுசனுக்கு இரண்டு  வீடு இரண்டு சமையல் வேலைப்பாடு கூட இருக்கும்  தானே ஏன் அழைப்பான் அவரை அரோகரா அப்பனே முருகா 

இந்த பத்தின சட்டிகளுக்கு ஒரு வழிகாட்டும் அப்பா??

Link to comment
Share on other sites

2 hours ago, ஜீவன் சிவா said:

கதிர்காம கந்தா 

இந்தாளுக்கு அருள் புரியப்பா.:grin:

இதுதான் பக்குவம். கழுவினமா கவிட்டமா என்று அமைதியாகப் போனால் ஒரு பிரச்சனையும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

இதுதான் பக்குவம். கழுவினமா கவிட்டமா என்று அமைதியாகப் போனால் ஒரு பிரச்சனையும் இல்லை. 

கிண்டுவாங்கள் எண்டு தெரிஞ்சுதான் நான் நன்றியோடை விசயத்தை முடிச்சிட்டன்.....மற்ற விசயங்கள் சம்பந்தமாய் வாயே திறக்கேல்லை. Zwinker

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

இதுதான் பக்குவம். கழுவினமா கவிட்டமா என்று அமைதியாகப் போனால் ஒரு பிரச்சனையும் இல்லை. 

அண்ணாச்சி  இந்த பதிலுக்கு தனிய கிடந்து சிரிச்சேன் ஹாஹா ??

 

4 hours ago, குமாரசாமி said:

கிண்டுவாங்கள் எண்டு தெரிஞ்சுதான் நான் நன்றியோடை விசயத்தை முடிச்சிட்டன்.....மற்ற விசயங்கள் சம்பந்தமாய் வாயே திறக்கேல்லை. Zwinker

உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறன கு. சாமி அண்ண அடுப்படி சமாச்சாரம் வேறு எதையும் யோசிக்காதீங்க ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் ஆண்கள் எவரும்... சமைத்த  சட்டி கழுவினதாக நான் கேள்விப் படவேயில்லை. 
அதற்கு வீட்டில் உள்ள பெண்கள் எவரும், சம்மதிக்கவும் மாட்டார்கள்.
வெளிநாடு வந்த பின்... அந்த வேலையை இங்கு பலரும் செய்வதைப்  பார்க்க, சற்று ஆறுதலாக உள்ளது.

ஆரம்பத்தில்... சமைத்த சட்டியை நான்  கழுவும் போது....   ஆம்பிளையள் இந்த வேலைகளை செய்யக் கூடாது , அப்படியே வையுங்கோ.... நான் பிறகு கழுவுகின்றேன் என்று கூ றிய  மனைவி, இப்போ.... காலைமை சட்டி கழுவாம கொம்புயூட்ட்ருக்கு முன்னாலை கன நேரம் இருந்திருக்கிறியள் போலை கிடக்கு என்று சொல்லுற அளவுக்கு வந்திருக்குது.
அதனாலை... இப்ப நித்திரையாலை எழும்பின உடனே... நேரே குசினிக்குத் தான் போறது.:grin:

Link to comment
Share on other sites

ம்ம்ம்.. விரல் நகம் தேய தேய இனி கழுவ வேண்டியதில்லை. இணைத்த தமிழ் சிறிக்கு நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி  நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Link to comment
Share on other sites

அட இவ்வளவு பேர் நெந்து நூலாகியிருந்தார்களா (அடியேனும் இதில் அடக்கம்) நன்றி தலைவா.

இதற்குள் யாழ்கள பெண் உறுப்பினர்களை காணவில்லை, அவர்கள் தயவு செய்து இந் திரியை துணைவருக்கு காட்டவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

ம்ம்ம்.. விரல் நகம் தேய தேய இனி கழுவ வேண்டியதில்லை. இணைத்த தமிழ் சிறிக்கு நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி  நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இத்தனை நன்றியா மனுசன் கல்யாணம் கட்டுன நாளில் இருந்து சட்டிதான் கழுவுது போல நல்லா ஏமாந்து இருக்கிறார் என்பது மட்டுமே விளங்குது??

வேறு எதையும் யோசிக்க வேண்டாம். ?

பொண்ணு பார்க்கும் நேரத்தில் பொண்ணு நல்லா சமையல் செய்வா என்று சொல்லியிருப்பாங்க மனுசன் நம்பி கட்டியிருப்பாரு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

ம்ம்ம்.. விரல் நகம் தேய தேய இனி கழுவ வேண்டியதில்லை. இணைத்த தமிழ் சிறிக்கு நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி  நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

 

53 minutes ago, முனிவர் ஜீ said:

இத்தனை நன்றியா மனுசன் கல்யாணம் கட்டுன நாளில் இருந்து சட்டிதான் கழுவுது போல நல்லா ஏமாந்து இருக்கிறார் என்பது மட்டுமே விளங்குது??

வேறு எதையும் யோசிக்க வேண்டாம். ?

பொண்ணு பார்க்கும் நேரத்தில் பொண்ணு நல்லா சமையல் செய்வா என்று சொல்லியிருப்பாங்க மனுசன் நம்பி கட்டியிருப்பாரு??

அடேங்கப்பா..... நிழலி 78 முறை, நன்றி கூ றியுள்ளதைப் பார்க்க, 
வீட்டில்... அடிக்கடி சட்டி அடிப் பிடித்து, சரியாய்   கஸ்ரப் பட்டு இருக்கிறார்  போலை இருக்கு.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மனைவியிடம் இதைக் காட்டிப் பார்த்தேன்.எங்கே அவசரமாக போகவா போறீங்கள் இரண்டு தேசிக்காயை வீணாக்காமல் ஆறுதலாதலாக உரஞ்சி கழுவலாம் தானே என்று கண்டிப்பாக சொல்லிவிட்டா.

இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் வரிசையிலை நிக்கிறதை பாக்கேக்கை மனசிலை ஒரு தென்பு  பிறக்குது.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13495040_237392049981164_666123583750121

ஆகா.... இவையளை விட.... நாங்கள், பரவாயில்லை போல இருக்கு. 14.gif:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.