Jump to content

உன்னால் முடியும்: ’வெற்றி ஒரு நாளில் உருவாகி விடுவதில்லை’


Recommended Posts

7_2901603f.jpg
 

தொழில்முனைவோராக வெற்றிபெற மன உறுதியும் வைராக்கியமும் முக்கியம் என்பதை உணர்த்து கிறார் திருச்சி துறையூரைச் சேர்ந்த மீனா ஹரிகிருஷ்ணன். பள்ளி கல்லூரிகளுக்கான போர்டுகளை தயாரித்து வரும் இவரது கல்வித்தகுதி பிளஸ் 2. மாதம் 5 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்ட இந்த குடும்ப தலைவி இன்று சொந்த வாகனம், வீடு, சொந்த கட்டிடத்தில் தொழிற்சாலை என வெற்றிகர மான தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். அவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

நான் என் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இரண்டு வீட்டிலுமே கடுமையான எதிர்ப்பு இருந்தது. நான் பனிரெண்டாவதுதான் படித்திருக்கிறேன். என கணவர் எம்காம் வரை படித்திருந்தார். எனது கணவரது குடும்பத்தினர் பள்ளிகளுக்கான மேப் தயாரிக்கும் தொழில் செய்து கொண்டிருந்தனர். அவரோடு உடன் பிறந்தவர்கள் ஆறு பேரும், ஏரியாவுக்கு ஏற்ப அந்த தொழிலையே பிரித்துக் கொண்டு வேலை செய்ததால் அதில் பெரிதாக வருமானமில்லை. என் கணவருக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். இதில் குடும்பம் நடத்தவே கடும் நெருக்கடியாக இருக்கும். கடும் எதிர்ப்பு இருந்தாலும், சொந்த வீடு வாங்கும் வரை இங்கேயே இருப்போம் என சமாதானம் செய்து கொண்டு கணவரது வீட்டிலேயே சமாளித்துக் கொண்டிருந்தேன்.

பள்ளிகளுக்கு மேப் ஆர்டர் எடுக்க போகும்போது ``நீங்கள் போர்டுகள் செய்கிறீர்களா, வாங்கி தர முடியுமா’’ என்று கேட்பார்கள். ஆனால் அதை செய்வதற்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கிறது என்பதுகூட எங்களுக்கு தெரி யாது. ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட நான் தயாராக இல்லை. சந்தையில் ஏற்கெனவே இருந்த போர்டுகளை வாங்கி அது எப்படி செய்துள்ளனர் என்பதை பார்த்து, இன்டர்நெட் மூலம் அந்த பொருட்கள் எங்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

இதை தொடங்குவதற்கு முதலீடு தேவை என்கிற நிலையில் எனது கணவரது தம்பி அவரது ஒரு இடத்தை விற்று 2 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதை வைத்து மூலப் பொருட்களை வாங்கி ஆட்களை கொண்டு தயாரித்தோம். முதலில் சின்ன சைஸில் சாம்பிள் போர்டுகளை தயார் செய்து பள்ளிகளுக்குக் காட்டினோம். பிறகு ஆர்டர்களுக்கு ஏற்ற சைஸில் தயாரித்து அனுப்பினோம்.

கணவர் மார்க்கெட்டிங் வேலைகளை கவனித்துக் கொள்ள, நான் மூலப் பொருட்கள் வாங்குவது, வேலை செய்யும் ஆட்களை கவனிப்பது, செலவுகள், பள்ளி கல்லூரிகளின் முகவரிகளை பட்டியலிடுவது, நிர்வாக வேலைகளை கவனித்துக் கொண்டேன். 2008-ல் இந்த தொழிலை தொடங்கியபோது நான் கருவுற்றிருந்தேன். இருந்தாலும் வெற்றிபெற வேண்டும் என்கிற வைராக்கியத்தில் தீவிரமாக உழைத்தேன். எங்களது முயற்சிகள் நன்றாக இருக்கவே ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின.

மூலப்பொருட்கள் டெல்லி, ஹைதரா பாத் போன்ற இடங்களில்தான் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும். இந்த வியாபாரிகளுடன் பேசிப் பேசி எனக்கு ஆங்கிலம், ஹிந்தி என மொழி பழக்கமும் கிடைத்தது. எங்களது தயாரிப்புகளுக்கு நானே பிரவுசர் தயாரித்தேன். இந்தியா மார்ட் போன்ற இணையதளங்களில் பதிவு செய்தோம். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டிங் வேலைகளை குறைத்துக் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு இமெயிலில் பிரவுசர்களை, கொட்டேஷன்களை அனுப்பியே ஆர்டர்கள் எடுக்கத் தொடங்கினோம்.

முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை என்று இருந்த ஆண்டு பரிவர்த்தனை மெல்ல மெல்ல உயரத்தொடங்கியது. கனரா வங்கி மூலம் ரூ. 10 லட்சம் வங்கி கடனுதவியும் கிடைக்க தொழிலை விரிவுபடுத்தினோம். 2013-ல் எங்களது வருமானத்திலிருந்து வீடு கட்டி குடியேறும்போது எங்களை புறக்கணித்த அத்தனை பேரும் தேடி வந்தார்கள்.

இப்போது பத்து நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன், தொழிலகத்துக்கும் சொந்த இடம், போர்டுகளை சப்ளை செய்ய சொந்த வாகனம் என அடுத்த கட்ட வளர்ச்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டில் ஆண்டு பரிவர்த்தனை இலக்கு ரூ.75 லட்சம் என நிர்ணயித்திருக்கிறேன் என்றார்.

எனது நம்பிக்கையை பார்த்துதான் கடனை அளிக்கிறோம் என்று வங்கியில் சொன்னார்கள். சொந்த பந்தங்களைத் தாண்டி வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்த நான், முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வைராக்கியம் உருவாக்கிய நம்பிக்கை அது என்கிறார். நீங்கள் இன்னும் உயரத்துக்கு போக வேண்டும் மீனா. வாழ்த்துகள்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-வெற்றி-ஒரு-நாளில்-உருவாகி-விடுவதில்லை/article8751572.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.