Jump to content

மனைவி - கள்ளக்காதலனை கட்டி வைத்து கொடூரமாக அடிக்கும் கணவன் - வீடியோ


Recommended Posts

மனித உரிமை ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தவ தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

குறித்த வீடியோவில், ஒருவர் வீட்டின் முன் பொதுமக்கள் முன்னிலையில் தனது மனைவி மற்றும் ஒரு வாலிபரை கயிற்றில் கட்டி வைத்து சரமாரியாக தாக்குகின்றார். இருவரும் வலியால் கதறுகின்றனர்.

அந்த வாலிபர் அவரது மனைவியின் கள்ளக்காதலர் என குற்றம்சாட்டப்படுகிறார். அவர்களின் கள்ள உறவை கண்ட கணவன் இருவருக்கும் தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் வீடியோவில்அந்து எந்த மாநிலம் ஊர் என குறிப்பிடப்படவில்லை., ஆனால் அது வட மாநிலமாக இருக்கலாம் என ஆர்வலர்கள் நம்புகின்றனர். அந்த பெண்ணின் குரலை கேட்கும் போது பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

எனினும், சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறிய முயற்சி செய்ததாகவும், ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் குந்தன் ஸ்ரீவஸ்தவ தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/india/03/104095

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, போல் said:

மனித உரிமை ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தவ தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

எனினும், சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறிய முயற்சி செய்ததாகவும், ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் குந்தன் ஸ்ரீவஸ்தவ தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/india/03/104095

தெரிஞ்சு எனனத்த செய்யப் போறம். ?

பார்த்தமா, அடுத்த திரி போனமா என்று இருக்கிறம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக் காதலனை விட, மனைவிக்குத் தான்.... அதிக அடி விழுகுது போலை கிடக்கு.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இந்தக் கணவன் ஆண் குலத்துக்கே ஒரு அவமானம்!

எப்படி சொல்வீர்கள்?

சரிவரவில்லை என்றால், விடவேண்டியது தானே என்ற, எமது பார்வையை விடுத்து, அவர்கள் கண்கள் ஊடு பாருங்கள்.

வீட்டைப் பாருங்கள்... இந்திய ஸ்ராண்டற்க்கு, வசதியாக இருக்கிறது. மனிதர் வசதியாகவே வைத்து இருந்திருக்கிறார்.

சாப்பாடு, வீடு, வசதி எல்லாம் கிடைத்தால்.. உடலில் கொழுப்பு எடுக்கும் தான்... அவரது கோபம் நியாயமானதாக இருக்கும்.

அடியைப் போட்டு, இரண்டு பேரைரும், ஜோடியா திரத்தியிருப்பார். ஆனால் கள்ளக்காதலருக்க ஏற்கனவே குடும்பம் இருந்தால், கள்ளக் காதலரை திரத்தி விட்டு, மனைவியை மன்னித்து விட்டிருப்பார்.

அடிக்கிற கை தான்..?

கடந்த வாரங்களில், கள்ளக்காதல் விவகாரம் இரண்டு, கொலைகளில் முடிந்திருக்கிறது.

ஒரு நெருடல், சிறுவர்கள் சுத்தி இருந்து பார்ப்பது. ஆனால், இது தவறு என்று பாடம் கற்பதால் அனுமதிக்கப் பட்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

எப்படி சொல்வீர்கள்?

சரிவரவில்லை என்றால், விடவேண்டியது தானே என்ற, எமது பார்வையை விடுத்து, அவர்கள் கண்கள் ஊடு பாருங்கள்.

வீட்டைப் பாருங்கள்... இந்திய ஸ்ராண்டற்க்கு, வசதியாக இருக்கிறது. மனிதர் வசதியாகவே வைத்து இருந்திருக்கிறார்.

சாப்பாடு, வீடு, வசதி எல்லாம் கிடைத்தால்.. உடலில் கொழுப்பு எடுக்கும் தான்... அவரது கோபம் நியாயமானதாக இருக்கும்.

அடியைப் போட்டு, இரண்டு பேரைரும், ஜோடியா திரத்தியிருப்பார். ஆனால் கள்ளக்காதலருக்க ஏற்கனவே குடும்பம் இருந்தால், கள்ளக் காதலரை திரத்தி விட்டு, மனைவியை மன்னித்து விட்டிருப்பார்.

அடிக்கிற கை தான்..?

கடந்த வாரங்களில், கள்ளக்காதல் விவகாரம் இரண்டு, கொலைகளில் முடிந்திருக்கிறது.

ஒரு நெருடல், சிறுவர்கள் சுத்தி இருந்து பார்ப்பது. ஆனால், இது தவறு என்று பாடம் கற்பதால் அனுமதிக்கப் பட்டிருப்பார்கள்.

என்ன காரணமாக இருந்தாலும்.. ஒரு கணவன் தனது மனைவியைப் பகிரங்கமாகக் கட்டி வைத்து அடிப்பது சரியாகப் படவில்லை! அதுவும் கள்ளக் காதலனையும் அருகில் வைத்துக் கொண்டு..!

உடன்பாடில்லா விட்டால்..விட்டு விலகிச் செல்லலாம்! அல்லது தனியாக அவளிடம் பேசித் திருத்தப் பார்த்திருக்கலாம்! கண்டித்திருக்கலாம்!

ஏன்.. சில வேளை அடித்தும் தண்டித்திருக்கலாம்! (எனக்கு இதில் உடன்பாடில்லாது விடினும்..)

இனி அந்தப்பெண்ணுக்கு..அந்தச் சமுதாயத்தில் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியென்ன விடப்பட்டிருக்கின்றது?

ஒரு வேளை... இவரது 'ஆண்மையை' வெளி உலகுக்குக் காட்ட இவரது இந்த 'அடி..உதை' ஒரு வேளை உதவியிருக்கலாம்!

ஆனால்...இவர்களது குடும்ப வாழ்க்கை என்பது... இனி ஒருபோதும்..முன்பிருந்த மாதிரி இருக்கமாட்டாது என்பது மட்டும் நிச்சயம்!

ஒரு வேளை...பகிரங்கத் தண்டனை இல்லாமலிருந்திருந்தால்..அவள் நிச்சயமாக முன்பிருந்ததை விடவும்...நல்ல மனைவியாக இருந்திருப்பாள் என்பது மட்டும் நிச்சயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புங்கையூரன் said:

என்ன காரணமாக இருந்தாலும்.. ஒரு கணவன் தனது மனைவியைப் பகிரங்கமாகக் கட்டி வைத்து அடிப்பது சரியாகப் படவில்லை! அதுவும் கள்ளக் காதலனையும் அருகில் வைத்துக் கொண்டு..!

உடன்பாடில்லா விட்டால்..விட்டு விலகிச் செல்லலாம்! அல்லது தனியாக அவளிடம் பேசித் திருத்தப் பார்த்திருக்கலாம்! கண்டித்திருக்கலாம்!

ஏன்.. சில வேளை அடித்தும் தண்டித்திருக்கலாம்! (எனக்கு இதில் உடன்பாடில்லாது விடினும்..)

இனி அந்தப்பெண்ணுக்கு..அந்தச் சமுதாயத்தில் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியென்ன விடப்பட்டிருக்கின்றது?

ஒரு வேளை... இவரது 'ஆண்மையை' வெளி உலகுக்குக் காட்ட இவரது இந்த 'அடி..உதை' ஒரு வேளை உதவியிருக்கலாம்!

ஆனால்...இவர்களது குடும்ப வாழ்க்கை என்பது... இனி ஒருபோதும்..முன்பிருந்த மாதிரி இருக்கமாட்டாது என்பது மட்டும் நிச்சயம்!

ஒரு வேளை...பகிரங்கத் தண்டனை இல்லாமலிருந்திருந்தால்..அவள் நிச்சயமாக முன்பிருந்ததை விடவும்...நல்ல மனைவியாக இருந்திருப்பாள் என்பது மட்டும் நிச்சயம்!

புங்கையர்,

முதலிலேயே சொல்லிப்போட்டேன்: எமது கண்களூடாக பார்கப்படாது என்று...

நீங்கள் எழுதியது நியாயமானது, எமது பார்வையில்..

அவர்கள் பார்வையில் பாருங்கள்..... இவர் தருவது சாதா தண்டனை. இது அவர்களுக்கு பெரும் தன்மானப் பிரச்சனை.

இந்த விடயத்தில், தலையையே வெட்டி கைல தூக்கிப் போய், போலீஸ் போனவர்கள் கதையும் உண்டே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

இந்தக் கணவன் ஆண் குலத்துக்கே ஒரு அவமானம்!

அப்ப புங்கையர், இது பெண் குலத்துக்கே அவமானமோ? 

சரியா கவலைப்பட்டீங்க என்று ஒரு மாறுதலா?புருசனுக்கு கள்ளப் தொடுப்பு எண்டால்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அப்ப புங்கையர், இது பெண் குலத்துக்கே அவமானமோ? 

சரியா கவலைப்பட்டீங்க என்று ஒரு மாறுதலா?புருசனுக்கு கள்ளப் தொடுப்பு எண்டால்?

 

என்ன இருந்தாலும் சிங்கன் சிங்கன் தான் 
ஒரு வார்த்தை சொல்லாமல் அடி வாங்குறான் ......தன் மீது பிழை இருப்பதால் கப் சிப் 
ஆண் குலத்திற்கே பெருமை ...ஆனால் இதற்கு மேலே உள்ள பெண் அடி விழ முன்னமே கத்தி ஊரை கூப்பிடுறா ....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ பெண்ணோ விருப்பமில்லாட்டில் சமரசமாய் பிரிந்து வாழுறதுதான் மனித பண்பு. மனம்மொத்து வாழுறதுதான் வாழ்க்கை....அதை விட்டு அடி குத்து தண்டனைகளுடன் வாழ்வதற்கு பெயர் வாழ்க்கையல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆணோ பெண்ணோ விருப்பமில்லாட்டில் சமரசமாய் பிரிந்து வாழுறதுதான் மனித பண்பு. மனம்மொத்து வாழுறதுதான் வாழ்க்கை....அதை விட்டு அடி குத்து தண்டனைகளுடன் வாழ்வதற்கு பெயர் வாழ்க்கையல்ல...

ஊரில் ஒரு காலத்தில் கோடிப்பக்கத்தில் பதுங்கி கனபேரைப்போட்டு வெண்ட கழட்டிய   ஞாபகம் வருகிறது  இதை பார்க்க ஆனால் அது ஊர் பெரிய தலைகள் ???

ஆனால் இச் சந்தர்ப்பத்தில் எப்படி போட்டு அடிச்சாலும் தாங்கி கொள்ளவாங்கள் ?

உங்களுக்காக ஒரு கதை எழுதுகிறேன் பிறகு கு. சா☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஆணோ பெண்ணோ விருப்பமில்லாட்டில் சமரசமாய் பிரிந்து வாழுறதுதான் மனித பண்பு. மனம்மொத்து வாழுறதுதான் வாழ்க்கை....அதை விட்டு அடி குத்து தண்டனைகளுடன் வாழ்வதற்கு பெயர் வாழ்க்கையல்ல...

உண்மைதான், எனினும்.

இங்க இலண்டனில கூட Domestic Violence என்பது போலீசுக்கு தலைவலி சமாச்சாரம்....

சீனாவில் 60% குடும்பங்களில் இது சாதாரணமாம்.

ஆபிரிக்காவில், மணைவியை ஒரு முறையாவது அடிக்காதவன் ஆண்மகன் இல்லை என்ற கருத்து நிலவுகிறதாம். 

எமது கல்வித்தரம், வெள்ளையர் காலத்திலே மேம்பட்டதால், சில விடயங்களில் சிறந்த சிந்தனை செய்கிறோமாம்.

அவரவர் தலைவிதிப்படி வாழ்ச்கை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

ஆபிரிக்காவில், மணைவியை ஒரு முறையாவது அடிக்காதவன் ஆண்மகன் இல்லை என்ற கருத்து நிலவுகிறதாம். 

இண்டைக்கு பின்னேரம் கையாலையும் காலாலையும் இரண்டு குடுக்கத்தான் இருக்கு...:cool:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இண்டைக்கு பின்னேரம் கையாலையும் காலாலையும் இரண்டு குடுக்கத்தான் இருக்கு...:cool:

இதை யாராவது குமாரசாமி அண்ணை வீட்ட போகமுதல் பரிமளம் அக்காவுக்கு போன் போட்டு சொல்லுங்கப்பா.

அப்புறம் பாப்பம் யார் யாருக்கு எங்கெங்க வீங்கி இருக்கெண்டு. :grin:

angel smiley fighting with devil emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியுமாம்.. அதுபோல அடுத்தவர் விடயத்தில் நாங்க நல்லா தத்துவம் கதைக்கலாம். ஆனால்... பாதிக்கப்படுறவைட மனநிலையில் இருந்து பார்க்கிறப்போ..... நாம் விலத்தி நின்று வேடிக்கை பார்ப்பது தான் நல்லது.

அடியைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பார்கள். இப்படியான பெண்களுக்கு ஊர் அறிய தண்டனை வழங்கினால் தான் திருந்துவார்கள். இவர்களைப் பார்த்து மற்றவர்களுக்கும் ஒரு பயம் வரும். இது தப்புச் செய்யும் ஆண்களுக்கும் பொருந்தும்.

மனிதனிடம் பயம் இல்லையேல்.. சொந்த மனிதனையே மனிதன் பிடிச்சு சாப்பிட்டிடுவான். தமிழனை சிங்களவன் வதைக்கல்ல..அப்படி. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு பின்னேரம் கையாலையும் காலாலையும் இரண்டு குடுக்கத்தான் இருக்கு...:cool:

இப்ப பின்னேரமாச்சுது....., இன்னும் குடுத்து வாங்கலையா....!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/06/2016 at 6:17 AM, புங்கையூரன் said:

இந்தக் கணவன் ஆண் குலத்துக்கே ஒரு அவமானம்!

நீங்க இருட்டடி சிறந்தது என்கிறீர்கள்.....

ஏற்கனவே பல தரம் போட்டுப்பார்த்தாரோ என்னவோ...:grin:

Link to comment
Share on other sites

15 minutes ago, suvy said:

இப்ப பின்னேரமாச்சுது....., இன்னும் குடுத்து வாங்கலையா....!!

 

குடுத்திட்டார் ஆனால் இன்னும் வாங்கி முடியல்ல போல. இந்த  வீடியோவை 2:45 இலிருந்து பாருங்கோ எல்லாம் புரியும்.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

குடுத்திட்டார் ஆனால் இன்னும் வாங்கி முடியல்ல போல. இந்த  வீடியோவை 2:45 இலிருந்து பாருங்கோ எல்லாம் புரியும்.   

 

ஹாஹா ஹாஹா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

இதை யாராவது குமாரசாமி அண்ணை வீட்ட போகமுதல் பரிமளம் அக்காவுக்கு போன் போட்டு சொல்லுங்கப்பா.

அப்புறம் பாப்பம் யார் யாருக்கு எங்கெங்க வீங்கி இருக்கெண்டு. :grin:

angel smiley fighting with devil emoticon

 

8 hours ago, suvy said:

இப்ப பின்னேரமாச்சுது....., இன்னும் குடுத்து வாங்கலையா....!!

 

இண்டைக்கு ராசிபலன் சரியில்லை....இன்னொரு நாளைக்கு பாப்பம்....:grin:

rtwz4_zpsijc1rbsd.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.