Jump to content

மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர் திருவாளர். பிரான்சிஸ் சேவியர் காலம் ஆகினார்...


Recommended Posts

மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர் திருவாளர். பிரான்சிஸ் சேவியர் காலம் ஆகினார்...

 
மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர்  திருவாளர். பிரான்சிஸ் சேவியர் காலம் ஆகினார்...



பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான திருவாளர். பிரான்சிஸ் சேவியர் அவர்கள் யூன் 10, 2016 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் காலம் ஆகினார்.


யூலை 25, 1933ல் யாழ்ப்பாணம் நாரந்தனையில் பிறந்த இவர், தனது இளமைக்காலத்தினை யாழ்ப்பாணத்திலேயே கழித்திருந்தார். ஆரம்பத்தில் தபாலதிபராக நியமணம் பெற்றிருந்த அவர் தனது விடாமுயற்சி, கல்வியறிவு மற்றும் தனிப்பட்ட ஆளுமைகளின் காரணமாக இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதியினை பெற்று சட்டத்தரணியானார்.


இலங்கையில் இனமுரண்பாடுகள் காரணமாக நலிவுற்றிருந்த தமிழ் சமூகத்திற்கு தன்னார்வத்தின் அடிப்படையில் சேவையாற்றத்தொடங்கிய இவர் 1977ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் இல்லத்தினை ஸ்தாபித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட ரீதியான தனது இலவச சேவைகளை நிறுவனமயப்படுத்தியிருந்தார். தொடர்ந்து, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கிவந்த மனித உரிமைகள் இல்லத்தின் கிளையினை அக்காலகட்டத்திலிருந்த அவசியப்பாடுகளின் அடிப்படையில் 1984ல் கொழும்பில் ஆரம்பித்திருந்தார்.


தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் தொடர்பில் உலக அரங்கில் அனைவரதும் கவனத்தினை ஈர்ப்பதில் பெரிதும் பாடுபட்டுவந்த திருவாளர். சேவியர் அவர்கள் 1987 மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முதல் பிரேரணை கொண்டுவரப்படுவதற்கும் நிறைவேற்றப் படுவதற்கும் முதற்காரணமானவராவார்.


மேலும் ஜெனீவாவை தளமாக கொண்டியங்கும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நாவின் வலையமைப்பில் மூன்று ஆண்டுகள் வரை பணியாற்றியிருந்த அவர் அதன் பின்னதாக இலங்கைக்கு திரும்பி தனது பணிகளை தொடர்ந்த நிலையில், 1988 காலப்பகுதியில் சட்டத்தரணி கே.கந்தசாமி (ரி.ஆர்.ஓ) அவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டதனை தொடர்ந்து, திருவாளர். சேவியர் மீதும் உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கனடாவிற்கு தனது குடும்பத்தோடு புலம்பெயர்வதற்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருந்த இவர் அங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கான சட்ட உதவிகளை வழங்குவதில் ஆர்வத்தோடு செயற்பட்டு வந்துள்ளார்.


மேலும், சிறைகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பில் முன்னின்று குரல் கொடுத்த இவர், 1983ம் ஆண்டு தொடங்கி பிரபல வழக்குகளான கொக்கட்டிச்சோலை நல்லநாயகம், வண. பிதா. சிங்கராஜா, என். நித்தியானந்தம் மற்றும் தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் பலரதும் வழக்குகளுக்கு இவரே சட்ட உதவிகளை வழங்கியிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவிலான ஆவணப்படுத்தல் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி உரிமை மீறல்களை ஆவணப்படுததுவதற்கான தகுந்த நடவடிக்கைகளையும் இவர் மேற்கொண்டிருந்தார்.


இவரால் ஸ்தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் இல்லமானது தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தனது கிளைகளை பரப்பி பல்லாயிரக்கணக்கிலான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்களுக்காக சேவையாற்றி வருவதற்கு தனது ஆதரவினையும் ஒத்தாசையினையும் இவர் தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.


போர் மற்றும் இனமுரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் எதிர்கால நல்வாழ்வு தொடர்பில் மிகவும் கரிசனையோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் அல்லது பெற்றுக்கொடுப்பதில் தன்னாலான பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருந்த திருவாளர். பிரான்சிஸ் சேவியர் ஐயா அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் மனித உரிமைகள் சார்ந்த பணிகளுக்காகவும், சிறையிடப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தமிழ் மக்களின் நலனுக்காகவும் தன்னாலான அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்த இவரின் மறைவானது தமிழ் சமூகத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும் என்பது என்றும் நினைவில் கொள்ளத்தக்கது.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133087/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.