Jump to content

கிராமத்து மீன் குழம்பு


Recommended Posts

கிராமத்து மீன் குழம்பு

 

கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள்.

varutharacha meen kuzhambu

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

 

கிரேவிக்கு...

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

புளிச்சாறு - 2 டேபின் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

அரைப்பதற்கு...

தேங்காய் - 1/4 கப்

கறிவேப்பிலை - 1 கையளவு

இஞ்சி - 2 இன்ச்

பச்சை மிளகாய் - 2

 

தாளிப்பதற்கு...

எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கையளவு

பூண்டு - 6 பற்கள்

மிளகு - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பௌலில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுதுள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, உப்பு மற்றும் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து பிரட்டி 1 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குறைவான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும். இறுதியில் மீன் துண்டுகளை சேர்த்து, 5-6 நிமிடம் மீனை வேக வைக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் புளிச்சாறு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/village-style-meen-kuzhambu-recipe-011476.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கலர்புல்லாய் இருக்கு...., மண்சட்டிதான்  சுமே அன்ரிட்ட இரவல் வாங்கிட்டாப் போச்சு. அவவையும் கனநாளாய்க் காணேல்லை....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்ல கலர்புல்லாய் இருக்கு...., மண்சட்டிதான்  சுமே அன்ரிட்ட இரவல் வாங்கிட்டாப் போச்சு. அவவையும் கனநாளாய்க் காணேல்லை....!  tw_blush:

நேற்று தான் திண்ணையில நிண்டாவே.... UK பிரிய வேண்டும் என்று தீர்மானித்தாலும், தன்னை ஜெர்மனிக்கு அனுப்பேலாது கண்டியளே என்று பயந்து கொண்டிருந்த எங்களுக்கு ஆறுதலா சொல்லிட்டா. அப்பாடி, இப்பதான் நிம்மதி....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நல்ல கலர்புல்லாய் இருக்கு...., மண்சட்டிதான்  சுமே அன்ரிட்ட இரவல் வாங்கிட்டாப் போச்சு. அவவையும் கனநாளாய்க் காணேல்லை....!  tw_blush:

யோவ் அக்கா என்ன  சட்டி பானை கடையோ வைத்து இருக்கா லண்டனில ??

மண் சட்டியில் கறி சமைத்தால் ஒரு சில மணித்தியாலங்கள் திறக்காமல் அப்படியே வைத்து (மீனில் போடப்பட்ட எல்லா மசாலாக்களும் சேரும்    )பின்  உண்டால் இன்னும் ருசிகரமாக இருக்கும் 

எங்கள் ஆஷ்ரமத்தில் இருப்பது எல்லாம் குண்டான் மண் சட்டிகள் தான்  அகப்பைகள் சிரட்டை அகப்பை மட்டுமே பயன்படுத்தி உண்டு திண்டு மகிழ்கிறோம் நாள் தோறும்  ???

Link to comment
Share on other sites

1 hour ago, முனிவர் ஜீ said:

எங்கள் ஆஷ்ரமத்தில் இருப்பது எல்லாம் குண்டான் மண் சட்டிகள் தான்  அகப்பைகள் சிரட்டை அகப்பை மட்டுமே பயன்படுத்தி உண்டு திண்டு மகிழ்கிறோம் நாள் தோறும்  ???

எந்த ஆச்சிரமம் முனிவர் ஜீ... :grin:றக்கா ரோட்டா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

எந்த ஆச்சிரமம் முனிவர் ஜீ... :grin:றக்கா ரோட்டா..

ஹாஹா தம்பி இந்த பக்கமும் வந்திடாதே  துபாய்  பக்கம் தான் றிக்கா ரோடு துபாய் குறுக்கு சந்து டெய்ரா துபாய் ??

Link to comment
Share on other sites

  • 1 year later...

கிராமத்து மீன் குழம்பு

 

தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கி
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1(பெரியது )
புளி - எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன் (காரம் உங்கள் விருப்பம் )
விளக்கெண்ணெய் - தாளிக்க
வெங்காய வடகம் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை :

1.மீனை நன்கு சுத்தம் செய்து , மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு கிளறி , அலசி விடவும் .(இதுபோல் செய்வதால் அதன் வாடை குறையும் )

2.அலசிய மீனை தண்ணீர் வடித்து தனியாக வைக்கவும் .
3.வெங்காயத்தை தட்டி வைக்கவும் (அ ) நறுக்கி வைக்கவும் .(அம்மி இருப்பவர்கள் சீரகத்தை அம்மியில் பொடித்து ,அதை எடுக்கும் போது , வெங்காயத்தையும் அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும் .

4.தக்காளியும் நறுக்கிக் கொள்ளவும் .

5.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து அதில் புளியை ஊறவிடவும் .

6.ஊறிய புளியை நன்கு சாறு பிழிந்து கொள்ளவும் .அதனுடன் மிளகாய்த்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவும் .காரம் ,உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்ளவும் .

7.பின் மண் சட்டியில் விளக்கெண்ணை விட்டு (குழம்பினால் வரும் சேர்ப்பதால் சூட்டை குறைக்கும் . ) வெங்காய வடகம் , வெங்காயம் , சீரக தூள் , சேர்த்து வதக்கவும் .

8.இதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும் .

9.இதனுடன் புளிகலவையை விட்டு ,நன்கு கொதிக்க விடவும் .

10.சிறிது நேரத்தில் குழம்பு சிறிது கெட்டியாகி வரும் . அப்போது நறுக்கிய மீன் துண்டுகளை சேர்க்கவும் .

11.மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பு நீர்க்கும் .எனவே குழம்பு சிறிது கெட்டியான பிறகே மீன் துண்டுகள் போட்டு வேக விடவும் .

12. அவ்வளவுதான் சுவையான ,மணமான ,நாவூறும் மீன் குழம்பு தயார் .

13.வெங்காய வடகம் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக வெந்தயம் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

14.மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பை அதிகம் கிளற கூடாது . மீன் உடைந்து விடும் . எனவே சட்டியை பிடித்து குழம்பை பரவலாகும் படி அசைத்து விடலாம் .(அ ) மிக லேசாக கிளறவும் .

15.மீன் குழம்பு பொதுவாக அடுத்த நாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .

16.மீன் குழம்பு சாதத்திற்கு மட்டும் இல்லாமல் ,இட்லி , தோசை ,பழைய சாதத்திற்கும் நன்றாக இருக்கும் .

 
Bild könnte enthalten: Essen
Link to comment
Share on other sites

  • 4 months later...

சூப்பரான கிராமத்து மீன் குழம்பு

 

மீன் குழம்பை கிராமத்து ஸ்டைலில் வறுத்து அரைத்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான கிராமத்து மீன் குழம்பு
 
தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ (எந்த மீனாகவும் இருக்கலாம்)
கடுகு - 1 டீஸ்பூன்.
சின்ன வெங்காயம் - 10.
தக்காளி - 1.
கறிவேப்பிலை - சிறிது .
புளி - (ஒரு சிறிய எலுமிச்சை அளவு).
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - தேவைக்கு.

அரைப்பதற்கு...

தேங்காய் - 1 கப்.
சின்ன வெங்காயம் - 10.

வறுத்து அரைப்பதற்கு...

வரமிளகாய் - 10.
தனியா - 2 டேபிள் ஸ்பூன்.
சீரகம் - 1 டீஸ்பூன்.

201803161502234340_1_meenkulambu._L_styvpf.jpg

செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை நீரில் அரைமணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, சூடு ஆறியதும் அதனை அம்மியில், தண்ணீர் சேர்த்து மென்மையாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின் இதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை கலந்து தனியாக வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

குழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும்போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

சூப்பரான சூப்பரான கிராமத்து மீன் குழம்பு ரெடி.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் கொழம்பு 2 வருசத்திற்கு பிறகு சூடாக வந்திருக்கு 

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மீன் கொழம்பு 2 வருசத்திற்கு பிறகு சூடாக வந்திருக்கு 

முனிவர் பழைய குழம்பு எப்போதும் சுவையானது.tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து." அது கிடைக்கவில்லையே என ஏங்குவதை விட்டு எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த சுகம் எனக்கு கிடைத்திருக்கிறதே என  இருப்பதைநினைத்து மகிழ்வடைந்தால் எல்லாமே நிறைவாகும். "உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு."
    • முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும். 
    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.