Jump to content

ஒரு வழிப்போக்கனின் கவிதை


Recommended Posts

தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் .....
வாய்க்கு வந்தததை உளறியபடி ......
சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் ....
இருந்த "அரசடிப்பிள்ளையாரை"....
வாயில் வந்ததையேல்லாம் .....
தொகுத்து கவிதையாக்கினான் .....!!!

&
பார்க்கும் இடமெல்லாம் .....
இருக்கும் தெருவெல்லாம் ......
ஆற்றங்கரையெல்லாம்  .......
வீற்றிருக்கும் பிள்ளையாரே ......
என்போன்ற வழிப்போக்கனுக்கு .....
பக்தியை அள்ளிவழங்க உம்மை ....
விட்டால் யார் உள்ளனரோ .....?

மிருகம் பாதி மனிதன் பாதி ....
கலந்திருக்கும் கடவுள் நீர் .......
அதனால் தானோ எல்லா ....
உயிரினங்களும் உம்மில் ......
இத்தனை அன்போ .....?

உம் வயிறும் நிரம்ம போவதில்லை .....
என் போன்ற வழிப்போக்கனின் .....
வயிறும் நிரம்ம போவத்தில்லை .....
பணம் படைத்தவன் வயிறும் ....
மனமும் நன்றாக நிரம்புகிறது .....
அவர்கள் பார்த்து நமக்கு ....
படைத்தால் தான் நம் வயிறு ......
நிரம்ப முடியும் ..........!!!

அதுசரி உமக்கும் புத்தனுக்கும் .....
அப்படியென்ன அரசமரத்தில் ....
காதல் - எங்கெல்லாம் அரசு 
முளைக்கிறதோ அங்கெல்லாம் ....
இருவரும் அரசை பிடிப்பதுபோல் ....
அரச மரத்தை பிடிக்கிறீர்கள் .....
அரசை பிடிப்பதில் அப்படியொரு ....
கடும் போட்டி உங்களுக்குள் .......!!!

போகிற போக்கில் அரசமரத்துக்கு ....
நீங்கள் போராட மக்களை தூண்ட ....
போகிறீர்கள் - போதுமையா....
நாங்கள் போராடிய போராட்டம் .....
நீங்கள் இருவரும் தொகுதி உடன் ...
பாட்டுக்கு வாருங்கள் ....
அரசடி பிள்ளையார் நீங்கள் ....
வடக்கு பக்கத்தையும் கிழக்கு ....
பக்கத்தையும் பார்த்து இருங்கள் ....
புத்தன் மற்ற திசைகளில் அமரட்டும் ......!!!

சற்று களைப்பாறிய வழிப்போக்கன் .....
தோள் துண்டை தலையில் போட்டபடி ....
அரசிடமிருந்து விடைபெற்றான் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
ஒரு வழிப்போக்கனின் கவிதை 01

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு.... வழிப் போக்கனின் கவிதை அல்ல.
நமது... ஈழத்திரு  தாய் நாட்டை... நேசிக்கும்,  பண்பட்டு நொந்தவனின்  கவிதை.
நெஞ்சை தொட்டுச் சென்ற.... முழுக் கதையையும், கவிதையாக்கிய....
கவிப்புயல் இனியவனுக்கு, வாழ்த்துக்கள் ஐயா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்... மீண்டும்....
வரி, வரியாக.... வாசிக்கத் தூண்டும் கவிதை இது.
அதன்... உள்ளடக்கத்தை அறிய, தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லாரும்..... வாசித்து கருத்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

On 5/30/2016 at 8:30 PM, தமிழ் சிறி said:

இது ஒரு.... வழிப் போக்கனின் கவிதை அல்ல.
நமது... ஈழத்திரு  தாய் நாட்டை... நேசிக்கும்,  பண்பட்டு நொந்தவனின்  கவிதை.
நெஞ்சை தொட்டுச் சென்ற.... முழுக் கதையையும், கவிதையாக்கிய....
கவிப்புயல் இனியவனுக்கு, வாழ்த்துக்கள் ஐயா...

 

On 5/30/2016 at 8:38 PM, தமிழ் சிறி said:

மீண்டும்... மீண்டும்....
வரி, வரியாக.... வாசிக்கத் தூண்டும் கவிதை இது.
அதன்... உள்ளடக்கத்தை அறிய, தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லாரும்..... வாசித்து கருத்து எழுதுங்கள்.

மிக்க நன்றி நன்றி 
இன்னும் எழுதுவேன் உங்களை போன்றவர்கள் தரும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!
------

தின பத்திரிகையை வாசித்து ....
உலக நடப்பை விவாதித்து ....
கொண்டிருந்த இருவரை பார்த்து ....
தோளில் இருந்த துணியால் ....
வாயை பொத்திய படி சிரித்த ....
வழிப்போக்கன் ........!!!

பேசத்தொடங்கினான் ....!!!

விசித்திர உலகமையா ......
உண்மை உலகை ஒருமுறைசுற்றி.....
வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி .....
வந்து விடுகிறது - இதுதான் இன்றைய .....
உண்மையின் இன்றைய நிலை ....!!!

இதனால் தான் .....
தீர்ப்புக்களும் தீர்வுகளும் .....
காலம் கடந்தே போய்விடுகிறது .....
உண்மையை நிரூபிக்க முன் ....
பொய் உண்மையை கொஞ்சம் ....
கொஞ்சமாய் தின்று விடுகிறது .......!!!

உலகை ஏமாறுவதர்காக .....
இன்றைய சட்டங்களும் விதிகளும் .....
உண்மையும் பொய்யும் கலந்த ....
சட்டத்தில் இயங்கி வருகின்றன ......
எல்லோருக்கும் நல்லவனாக .....
சட்டம் வேஷம் போடுகிறது ......!!!

உலகில் ஒருபக்கம் அழிவு .....
மறுபக்கம் ஆனந்த கூத்து ......
இதற்கெல்லாம் காரணம் ......
சட்டம் "உண்மை பாதி" .....
" பொய் பாதி" ஆக இருப்பதே .....
வேதனை என்வென்றால் .....
உண்மையை  நியாயப்படுத்த ....
முன்னர் பொய் அதனை .....
முழுமையாக தின்றுவிடும் .....!!!

இதுதான் இன்று ஈழத்தின் .....
உலக போக்காகும் ....
தனக்குள் முணு முணுத்த ...
படி சென்றான் வழிப்போக்கன் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
ஒரு வழிப்போக்கனின் கவிதை 02
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.