Jump to content

சினிமாஸ்கோப்: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (புதிய தொடர்)


Recommended Posts

சினிமா ஸ்கோப் 25: துள்ளாத மனமும் துள்ளும்

 
asdas_3127192f.jpg
 
 
 

ஒரு திரைப்படத்தை அப்படியே நகலெடுப்பது ஒரு வகை என்றால் அந்தப் படத்தின் தாக்கத்தில் கதை எழுதி திரைக்கதை அமைப்பது மற்றொரு வகை. இந்த இரண்டு வகைகளிலும் கைதேர்ந்தவர்கள் தமிழ்ப் படைப்பாளிகள். பிற படைப்பாளிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக உதாரணம் காட்டக்கூடிய படம் சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’. சற்றேறக் குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1931-ல் வெளியான இந்த ஹாலிவுட் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இதன் கதை, இன்றுவரை பல படங்களின் திரைக்கதைக்கு அடித்தளமாக அமைந்து வருகிறது என்பதே இதன் சிறப்பு.

சிட்டி லைட்ஸ் படத்தைப் பார்க்காதவர்களுக்காக அதன் கதையை ஓரிரு வரிகளில் பார்க்கலாம். வசிக்க வீடற்ற எளிய மனிதன் ஒருவனுக்கும் நடைபாதையில் பூவிற்றுப் பிழைப்பு நடத்தும் பார்வையற்ற பெண்ணுக்குமான உறவை மனிதநேய இழையில் தொடுத்துக் கட்டிப் பார்வையாளரின் முன்வைத்த படம் இது. இந்தப் படத்துக்குத் தான் சார்லி சாப்ளின் முதன்முதலில் பின்னணியிசை அமைத்தார். இதன் திரைக்கதையின் நேர்த்தி காரணமாக இன்றுவரை இதன் பாதிப்பில் உருவாக்கப்பட்ட எந்தப் படத்தாலும் இதைத் தொடவே முடியவில்லை. இது வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் என்றால், இதன் தாக்கத்தில் உருவான அனைத்துப் படங்களும் வீட்டில் தொங்க விடப்படும் காகித நட்சத்திரங்களாகவே காட்சிகொள்கின்றன.

மனிதநேயக் காதல்

பார்வையற்ற பெண்மீது கொண்ட பிரியம் காரணமாக அவளது வறுமையைப் போக்க உதவுகிறார் எளிய மனிதரின் வேடமேற்றிருக்கும் சார்லி சாப்ளின். தற்கொலை செய்துகொள்ள முயலும் ஒரு மில்லியனரைக் காப்பாற்றும் சாப்ளினுக்கு உதவுகிறார் அந்த மில்லியனர். ஆனால் அவர் போதையில் இருக்கும்போது மட்டுமே சாப்ளினை அவருக்கு அடையாளம் தெரியும். போதை தெளிந்தால் சாப்ளினை விரட்டிவிடுவார். இப்படியொரு விநோதக் கதாபாத்திரம் அது.

பூக்காரப் பெண்ணின் நெருக்கடியைப் போக்கவும் அவளது பார்வையைத் திரும்பப் பெறவுமான பணத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் சாப்ளின் இறங்கியபோது, எதிர்பாராத சம்பவத்தால் சாப்ளின். திருட்டுக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். பூக்காரப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வரும் சாப்ளினைக் காவல்துறையினர் பிடித்துச் சிறைக்கு அனுப்பி விடுகின்றனர்.

காட்டிக் கொடுக்கும் ஸ்பரிசம்

சிறைக்குச் சென்று திரும்பிவரும், பிச்சைக்காரர் போன்ற தோற்றம் கொண்ட சாப்ளினை பேப்பர் விற்கும் சிறுவர்கள் கிண்டல் செய்கிறார்கள், அவரது கிழிசலான உடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்துச் சிரித்தபடியிருக்கிறாள் பூக்காரப் பெண். அவளுக்கு இப்போது பார்வை வந்துவிட்டது. சாப்ளின் அவள் முன்னால் வந்து நிற்கிறார். அவர் கையிலுள்ள ரோஜாப்பூவில் ஒவ்வொரு இதழாக உதிர்கிறது. அது முழுவதும் உதிர்ந்த கணத்தில் அவர்மீது இரக்கம்கொண்டு ஒரு புது ரோஜாவைக் கொடுக்கிறாள் பூக்காரப் பெண்.

அப்போது அவருடைய கையை வருடும்போது அந்த ஸ்பரிசம் அவர் தனக்கு உதவியவர் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இருவரும் இணைகிறார்கள். இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கும் தன்மை காரணமாக இப்போது படத்தைப் பார்த்தால்கூட ஒரு புதிய படத்தைப் பார்ப்பது போல் உணர முடியும். படத்தின் ஒரு ஷாட்கூடத் தேவையற்றது எனச் சொல்ல முடியாது. அவ்வளவு கச்சிதமான படைப்பு இது.

‘சிட்டி லைட்’ஸின் தாக்கத்தில் பல திரைக்கதைகள் தமிழில் எழுதப்பட்டி ருக்கின்றன. 1954-ல் வெளியான ‘ராஜி என் கண்மணி’ இதன் தழுவல்தான். டி.ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீரஞ்சனி நடித்த இந்தப் படத்தை ஜெமினி நிறுவனம் தயாரிக்க இயக்கியவர் கே.ஜே. மகாதேவன். பின்னர் குல்ஷன் நந்தா கதை எழுத, ஏ.எல்.நாராயணன் வசனத்தில் வெளியான ‘எங்கிருந்தோ வந்தாள்’ (1970) படத்தை இயக்கினார் ஏ.சி.திருலோகச்சந்தர். இது தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் படத்தில் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கரு ‘சிட்டி லைட்ஸ்’ படத்தின் கருவைப் போன்றதே. ‘சிட்டி லைட்’ஸில் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் இதில் பித்துப் பிடித்த கதாபாத்திரம். அந்த வேடமேற்றிருப்பவர் சிவாஜி கணேசன். பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஆதரவாக வந்து அவரைக் குணப்படுத்துபவர் ஜெயலலிதா.

அவரது கதாபாத்திரம் ஒரு தேவதாசிப் பெண் போன்றது. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்படியொரு சூழலில் மாட்டிக் கொள்வார் ஜெயலலிதா. மனநிலை பாதிப்பு கொண்ட சிவாஜியைக் கவனித்துக்கொள்ளும் ஜெயலலிதாவை ஒரு அசந்தர்ப்பமான பொழுதில் தனதாக்கிக்கொள்வார் சிவாஜி. ஆனால் அவருக்குப் பித்து தெளிந்த சமயத்தில் ஜெயலலிதாவை யாரென்றே தெரியாது. பின்னர் அதை யார் தெளிவுபடுத்துகிறார்கள் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

பித்துத் தெளிந்த பின்னர் சிவாஜி ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு கொள்வார் ஜெயலலிதாவைப் பார்த்து யாரிந்தப் பெண் எனக் கேட்பார். அப்போது ஜெயலலிதா, பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லி நடித்துக்காட்டுவார். கிட்டத்தட்ட மனப்பிறழ்வுக்குள்ளானவர் போல் நடந்துகொள்வார். இந்தக் காட்சி உங்களுக்கு ‘மூன்றாம் பிறை’ படத்தை ஞாபகமூட்டக்கூடும்.

மேலும் பல தாக்கங்கள்

பாலுமகேந்திரா கதை, திரைக்கதை எழுதி இயக்கிய படம் ‘மூன்றாம் பிறை’ (1983). எங்கிருந்தோ வந்தாளைக் கவிழ்த்துப் போட்டால் அது மூன்றாம் பிறை. இதில் ஸ்ரீதேவி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். அவருக்கு ஆதரவு காட்டுபவர் கமல் ஹாசன். இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் தன்னை யாரென்று வெளிப்படுத்த, ஸ்ரீதேவியின் முன்பு நடித்துக்காட்டுவர் கமல் ஹாசன். மனநலம் பிறழ்ந்த ஒருவன் என்றே ஸ்ரீதேவி அவரை நினைத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் கமல் அவமானப்படுவது சிட்டி லைட்ஸில் சாப்ளின் அவமானப்படுவதற்கு நிகரானது. என்ன ஒன்று ‘கமல் அளவுக்கு’ சாப்ளின் நடித்திருக்க மாட்டார். அப்படி நடித்ததால்தான் கமலுக்குத் தேசிய விருது கிடைத்தது. படத்தின் வணிக வெற்றிக்கு சில்க் ஸ்மிதா பயன்பட்டிருப்பார்.

மூன்றாம் பிறை போன்ற படத்தில் பூர்ணம் விஸ்வநாதன், சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகளை உருவாக்கத் தனித் தைரியம் வேண்டும். அதைப் பெற்றிருந்திருக்கிறார் பாலுமகேந்திரா. இந்தப் படத்தை இந்தியிலும் பாலுமகேந்திரா உருவாக்கினார். நேரிடையாக சிட்டி லைட்ஸைத் தழுவி உருவாக்கப்பட்ட ராஜி என் கண்மணி தோல்விப்படம். ஆனால் எங்கிருந்தோ வந்தாள், மூன்றாம் பிறை ஆகியவை வெற்றிப் படங்கள்.

மகேந்திரன் திரைக்கதை வசனத்தில் உருவான நிறைகுடம் (1969), எழில் இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் (1999), மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளிவந்த நிலவே முகம் காட்டு (1999) போன்ற பல படங்களில் சிட்டி லைட்ஸின் தாக்கத்தை உணர முடியும். கடைசி இரண்டும் தெலுங்கு, கன்னடம் என வெவ்வேறு மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்துப் படங்களையும் ஒருசேரப் பார்க்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தால் நீங்கள் புதிய திரைக்கதை ஒன்றையே எழுதிவிட முடியும். ஆனால், அது சிட்டி லைட்ஸைத் தாண்டக்கூடிய வகையில் அமையுமா என்பதுதான் உங்களுக்கான சவால். அந்தச் சவாலை இப்போதும் உங்களிடம் விதைக்கும் படமாக சிட்டி லைட்ஸை உருவாக்கியதுதான் சார்லி சாப்ளின் என்ற கலைஞனின் மேதைமைக்குச் சான்று.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-ஸ்கோப்-25-துள்ளாத-மனமும்-துள்ளும்/article9516531.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

சினிமா ஸ்கோப் 26: காதல் கவிதை

 
 
 
Desktop_3130358f.jpg
 
 
 

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தோயெவ்ஸ்கி எழுதி, 1848-ல் வெளியான கதை ‘ஒயிட் நைட்ஸ்’. பனி பொழியும் காலத்தின் நான்கு இரவுகளில் நடைபெறும் சம்பவங்களை உள்ளடக்கிய கதையான இது ஒரு கனவுலகவாசியின் நனவுலகக் குறிப்புகள். கதைப்படி அந்தக் கனவுலகவாசி கூச்ச சுபாவி. அவனது பிரதேசத்தில் அழகிய இளம்பெண்கள் பிரவேசித்ததில்லை. பெண்களின் உலகுக்குள் அவனும் அத்துமீறி நுழைந்ததில்லை. ஓரிரவில் அவன் சந்திக்கும் இளம்பெண் ஒருத்தி அவனது வாழ்வின் திசையை மாற்றுகிறாள். தன்னைப் பிரிந்து சென்ற காதலனுக்காகக் காத்திருக்கிறாள்.

நான்கு நாட்களுக்குள் கனவுலவாசிக்கும் இளம் பெண்ணுக்கும் நட்பும் காதலும் உருவாகிவிடுகின்றன. அவள் முழு மனத்துடனும் காதலுடனும் கனவுலகவாசியுடன் கைகோத்த கணத்தில் பழைய காதலன் தோன்றிவிடுகிறான். அந்தக் காதலனுடன் சென்றுவிடுகிறாள் இளம்பெண். கனவுலகவாசி மீண்டும் தன் கனவுகளில் தஞ்சமடைந்துவிடுகிறான்.

அவளின் முடிவுகள்

சற்றே நீண்ட இந்தச் சிறுகதையை உலகின் பல இயக்குநர்கள் படமாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதமான படத்தைப் படைத்திருக்கிறார்கள். கதை ஒன்றுதான். ஆனால், திரைக்கதையின் போக்குக்கு ஏற்ப இதன் காட்சிகளும், கதாபாத்திரங்களின் தோற்றங்களும் மாறுபடுகின்றன. களம் மாறுபடுகிறது, கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் வித்தியாசம் வந்துவிடுகிறது. இப்படி யாக அவை வெவ்வேறு வகையான திரை அனுபவங்களைத் தருகின்றன.

அடிப்படையில் இந்தக் கதையே முழுக்க முழுக்க காதலுணர்வில் முகிழ்த்த கதை. ஆகவே அசட்டுத்தனங்களுக்கும் அற்புதத் தருணங்களுக்கும் குறைவில்லை. ஒரு திரைப்படத்துக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்கள் என எவையுமில்லை. ஆனால், அறிவால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத உணர்வின் அடிப்படையில் அந்த இளம்பெண் எடுக்கும் முடிவுகள் அதிர்ச்சிதரவல்லவை.

இனிய காட்சியனுபவம்

இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு 1957-ல் இத்தாலிய இயக்குநர் லூக்கினோ விஸ்கோந்தி ‘ஒயிட் நைட்ஸ்’ என்னும் பெயரிலேயே ஒரு படத்தை உருவாக்கினார். கறுப்பு வெள்ளைப் படமான இதில் பனிபொழியும் இரவு, ஆற்றுப் பாலம், அதை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவை அசையும் ஓவியங்களைப் போலவே காட்சிகொள்ளும். கதையைப் போலவே இதிலும் இளம்பெண்ணின் பாட்டி உறங்கும்போது, தன்னுடன் அந்தப் பெண்ணின் உடையைப் பிணைத்திருப்பார். தீவிர வாசிப்பனு பவத்துக்கான கதையை இனிய காட்சியனுபவமாக மாற்றியிருப்பார் இயக்குநர்.

பிரெஞ்சுப் படம்

இதே கதையை 1971-ல் ‘ஃபோர் ஆஃப் எ ட்ரீம்மர்’ என்னும் பெயரில் ஃபிரெஞ்சு இயக்குநர் ராபே ப்ரேஸான் (ஆங்கில உச்சரிப்பு ராபர்ட் ப்ரஸ்ஸான்) படமாக்கினார். ‘பிக் பாக்கெட்’ படத்தை உருவாக்கிய ராபே ப்ரேஸான் தனக்குரிய முத்திரைகளுடன் ஒயிட் நைட்ஸ் கதையைக் கையாண்டிருப்பார். இந்தக் கதையில் இளம்பெண்ணுக்குப் பாட்டி கிடையாது. அதற்குப் பதில் அம்மா. தனது தனிமைக்குள் உழலும் அந்தக் கனவுலகவாசி ஓர் ஓவியன், ஆனால் அதையே பிறரிடம் வெளிப்படுத்தாத அளவுக்கு உள்ளடங்கிய குணம் கொண்டவன்.

தன் குரலில் தானே பேசி அதைக் கேட்டு மகிழ்பவன். அழகிய வெள்ளைப் புறாக்கள் புல் தரையில் அலைவுறும் ஒலியை மிகுந்த விருப்பத்துடன் பதிவு செய்யும் அளவுக்கு மென்மையானவன். காதலனுக்காகக் காத்திருந்த இளம்பெண் அவனைத்தான் காதலிக்கிறாள்; காதலன் திரும்பிவிடவும் கைவிட்டுவிடுகிறாள்.

ஸ்ரீதரின் கலைவண்ணம்

முக்கோணக் காதல் கதைகளைத் தனித்துவத்துடன் இயக்கியிருந்த இயக்குநர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதி இயக்கிய ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ (1979) திரைப்படத்தில் ஒயிட் நைட்ஸின் பாதிப்பை உணர முடியும். திரைக்கதையில்ஸ்ரீதர் செய்திருந்த பல மாற்றங்களே இந்தப் படத்தை ஒயிட் நைட்ஸிலிருந்து வேறுபடுத்தும். வேணி என்னும் இளம் பெண் கதாபாத்திரத்தை லதா ஏற்று நடித்திருப்பார். அவருடைய காதலனாக ஜெய்கணேஷ் வேணு என்னும் பாத்திரத்திலும், வேணியை உருகி உருகிக் காதலிக்கும் வாசு என்னும் பாத்திரத்தில் விஜயகுமாரும் நடித்திருப்பார்கள். காதலன் பாத்திரத்தை ஸ்திரீலோலனாக மாற்றியிருப்பார் ஸ்ரீதர். ஒயிட் நைட்ஸில் ஓராண்டில் திரும்பிவந்துவிடுவதாகக் காதலன் கதாபாத்திரம் சொல்லிவிட்டுச் செல்லும். ஆனால், இதில் வேணியிடம் வேண்டியது கிடைத்ததும் ஜெய்கணேஷ் தலைமறைவாகிவிடுவார்.

பல முற்போக்கு சங்கதிகளை இந்தப் படம் கொண்டிருக்கும். வேணியின் அண்ணன் மகளாக வரும் பருவப் பெண் அடல்ட் ஒன்லி ஜோக்குகளை அள்ளிவிடுபவளாக நடித்திருப்பாள். வேணுவிடம் வேணி தன்னை இழந்திருப்பதை அறிந்தும் அவளைக் கரம் பற்ற விரும்புபவனாகவே வாசுவின் கதாபாத்திரத்தைப் படைத்திருப்பார் ஸ்ரீதர். வாலி எழுதிய ‘என் கல்யாண வைபோகம்’, ‘நானே நானா யாரோ தானா?’ உள்ளிட்ட பல பாடல்கள் இந்தப் படத்தை மறக்க முடியாததாக மாற்றியிருக்கிறது.

2003-ல், தோழர் எஸ்.பி.ஜனநாதன் கதை, வசனம் இயக்கத்தில் வெளியான ‘இயற்கை’ படமும் இதன் பாதிப்பில் உருவானதே. இதை ஜனநாதனே நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தானோ என்னவோ படத்தின் டைட்டிலில் எதுவும் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஸ்ரீதரின் படத்தில் கனவுலகவாசியின் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்திருந்தார் என்றால் இயற்கையில் காதலன் கதாபாத்திரத்தில் அவருடைய மகன் அருண் விஜய் நடித்திருப்பார்.

பொழுதுபோக்குப் படங்களை உருவாக்கிவந்த ஸ்ரீதர் படத்தின் கதாபாத்திரங்கள் போல் முற்போக்கான கதாபாத்திரங்களை, மாற்றுப் படங்களை உருவாக்குவதான பாவனை காட்டும் ஜனநாதன் உருவாக்கவில்லை. நாயகி மாசற்ற பெண்ணாகவே படைக்கப்பட்டிருப்பாள். நெய்தல் நிலத்தின் பின்னணியில் படத்தை உருவாக்கியிருந்ததால் படத்துக்குப் புதியதொரு நிறம் கிடைத்தது. சிறந்த படமென மாநில அரசின் விருதும் கிடைத்தது.

பாலிவுட்டின் ‘ஒயிட் நைட்ஸ்’

இத்தனை படங்களுக்குப் பின்னர், இந்திப் பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‘சாவரியா’ (2007) என்னும் பெயரில், ஒயிட் நைட்ஸ் கதையை ஒரு காவியப் படமாக்கினார். காதலனாக சல்மான் கானும், காதலியாக சோனம் கபூரும், கனவுலகவாசியாக ரன்பீர் கபூரும் நடித்திருப்பார்கள். இத்தாலிப் படத்திலும், ஃபிரெஞ்சுப் படத்திலும் அந்த இளம் பெண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பாள். இந்திப் படத்தில் அந்தப் பெண் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவள். மெலோ டிராமா வகையைச் சேர்ந்த இந்தப் படம் ஒயிட் நைட்ஸின் தீவிரத் தன்மையைக் குறைக்கும் வகையிலானது.

ஸ்ரீதரைப் போலவே, அமெரிக்க இயக்குநர் ஜேம்ஸ் க்ரேயும் இந்தக் கதையின் பாதிப்பில் 2008-ல் ‘டூ லவ்வர்ஸ்’ என்னும் பெயரில் ஒரு படமெடுத்தார். இதில் அந்தக் கனவுலக வாசிக்கு வேறு ஒரு காதலியையும் இவர் உருவாக்கியிருப்பார். தான் விரும்பிய இளம் பெண் அவளுடைய காதலனுடன் சென்ற பிறகு, கனவுலகவாசி மற்றொரு காதலியைத் தஞ்சமடைந்துவிடுவான்.

ஒரே கதையைப் பல்வேறு திரைக்கதைப் பாதைகளில் கொண்டுசென்று பல படங்களை உருவாக்கிவிட முடியும். ஆனால் எல்லாப் படங்களும் தனித்துவம் கொண்டதாக அமைய வேண்டுமென்றால் அதற்கு இயக்குநரின் ஒத்துழைப்பு தேவை. அவருடைய பார்வை வழியேதான் படம் மெருகேறும்; அல்லது மொண்ணையாக மாறும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-ஸ்கோப்-26-காதல்-கவிதை/article9532092.ece

Link to comment
Share on other sites

 

சினிமா ஸ்கோப் 27: வெள்ளித்திரை

 
 
 
 
 
  • vellithirai__3133874g.jpg
     
  • vellithirai_2_3133873g.jpg
     
 

பிறமொழியில் ஒரு நல்ல படத்தைப் பார்க்கும்போது, அதைத் தமிழில் உருவாக்க வேண்டும் எனப் படைப்பாளிகள் சிலர் நினைக்கின்றனர். சிலர் வணிகரீதியில் வெற்றிபெற்ற படத்தை மொழிமாற்றத் துடிக்கிறார்கள். தற்போதைய மலையாளப் படங்கள் பல இரண்டாவது காரணத்தாலேயே மொழிமாற்றம் பெறுகிறதோ என்று தோன்றுகிறது. மலையாளப் படங்கள் தமிழுக்கு வருவது என்பது இன்று நேற்று தொடங்கிய பழக்கமல்ல; நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டிருக்கிறது; இப்போது காணப்படுவதைப் போல, ஒரு மலையாளப் படம் வணிகரீதியில் (பாக்ஸ் ஆபிஸ் ஹிட்) வெற்றிபெற்றுவிட்டாலே தமிழில் அந்தப் படத்தை மறு ஆக்கம் செய்தே ஆக வேண்டும் என்று போட்டிபோடும் மனநிலை அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. அழுத்தமான கதைகளுக்கும் திரைக்கதைகளுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

கறுப்பு வெள்ளைக் காலம் முதல்

எம்.ஜி.ஆர். நடித்த ஒரே ஒரு மலையாளப் படமான ‘ஜெனோவா’ தமிழில் வெளியாகியிருக்கிறது. சிவாஜி கணேசன் நடித்த ‘பாபு’படமும் மலையாளத்தில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘ஓடயில் நின்னு’ படத்தின் மறு ஆக்கமே. எம்.கிருஷ்ணன் நாயர், தான் இயக்கிய ‘பாடுன்ன புழா’படத்தையே தமிழில் ‘மன்னிப்பு’ என்னும் பெயரில் இயக்கினார். வங்காளப் படங்கள், பிரெஞ்சுப் படங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் தனது படங்களைப் படைத்தவராக அறியப்பட்டிருக்கும் கே.பாலசந்தரும் பல மலையாளப் படங்களைத் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார். ஐ.வி.சசி இயக்கத்தில் மது, ஷீலா நடித்த ‘ஆ நிமிஷம்’தான் ‘நூல் வேலி’ ஆனது. கமல் ஹாசன் நடிக்க அவர் இயக்கிய ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் மூலமும் மலையாளம்தான். கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘அடிமைகள்’தான் ‘நிழல் நிஜமாகிற’தானது.

நகலெடுக்க முடியாத அசல் படங்கள்

ஆக, தமிழுக்கும் ஏற்ற, தமிழில் கிடைக்காத கதைகளுடன் மலையாளப் படம் வெளியாகும்போது, அதைத் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள். இந்தப் போக்கின் தொடர்ச்சியாகவே, ஃபாசில் தனது பல மலையாளப் படங்களை ‘பூவே பூச்சூடவா’, ‘பூவிழி வாசலிலே’, ‘வருஷம் 16’, ‘காதலுக்கு மரியாதை’ என்று படமாக்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. உணர்வுபூர்வமான கதையம்சப் படங்களைப் போலவே, மலையாளத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படங்களும், அரசியல் படங்கள் சிலவும் தமிழுக்கு வரத் தொடங்கின.

சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், ஜெயராம் நடித்த ‘மழவில்காவடி’ என்னும் படத்தைத்தான் பாண்டியராஜன் ‘சுப்பிரமணியசாமி’ என்னும் பெயரில் தமிழ்ப் படமாக்கியுள்ளார். சத்யன் அந்திக்காடு இயக்கிய ‘நாடோடிக் காற்று’தான் தமிழில் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடிப்பில் ‘கதாநாயகன்’ ஆனது. இந்தப் படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றாலும் அதையும் தாண்டி மலையாளப் படங்கள் கொண்டிருந்த ஆதார உணர்வைத் தமிழ்ப் படங்கள் எந்த அளவுக்குக் கொண்டிருந்தன என்பதைப் பொறுத்தே அவற்றுக்கான வரவேற்பு தமிழில் கிடைத்திருக்கிறது. ‘மக்கள் என் பக்கம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ போன்ற படங்கள் மலையாளத்திலிருந்தே தமிழுக்கு வந்திருந்தன என்றபோதும் அவை அசல் தமிழ்ப் படங்களைப் போன்ற நிறத்தையே கொண்டிருந்தன.

மரணித்த மறு ஆக்கங்கள்

ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்கு ஒரு படத்தை மறு ஆக்கம் செய்யும்போது, முதல் மொழியைவிட மேம்பட்ட வகையிலோ குறைந்தபட்சம் அதற்கு இணையான வகையிலோ படத்தை உருவாக்கினால் மட்டுமே அந்த மறு ஆக்கத்துக்கு மதிப்பு ஏற்படும். கதை, திரைக்கதை, வசனம், கதாபாத்திரங்களின் உருவாக்கம், கதை நிகழும் களம் போன்ற பல்வேறு அம்சங்களும் இரண்டாவது மொழியில் பொருந்திப் போகும்போதுதான் சிறந்த படைப்பாக மாறும் இல்லையெனில் அது பத்தோடு பதினொன்றாகிப் போகும். யதார்த்தத்தில் இது எந்த அளவு சாத்தியமாகியிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

மலையாளத்தில் வெளியான ‘22 ஃபீமேல் கோட்டயம்’ என்னும் திரைப்படம், கேரளாவிலிருந்து தாதியாக பெங்களூருக்குச் செல்லும் ஓர் இளம் பெண்ணின் வாழ்வைச் சிதைப்பவனை அவள் பழிவாங்குவதைச் சொன்னது. இந்தப் படத்தைத் தமிழில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்னும் பெயரில் தமிழில் உருவாக்கினார்கள். இந்தப் படத்தின் மைய அச்சானது இளம்பெண்கள் தாதிகளாகப் பிற மாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ பணிக்குச் செல்வதுதான். தமிழ்ச் சூழலில் இப்படியொரு பழக்கம் வழக்கத்திலேயே இல்லை. ஆக, அடிப்படையிலேயே இந்தப் படம் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுவிடுகிறது. இப்படி, ஒரு மண்ணுக்கேயான பிரத்தியேகப் பண்புகளைக் கொண்ட கதைகளைப் பிறிதொரு மண்ணுக்காக மறு ஆக்கம் செய்யும்போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது பாதகமான முடிவையே தரும்.

நொண்டியடிக்கும் நட்சத்திரத் தேர்வு

சில வேளைகளில் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வும் சிக்கலாக மாறிவிடும். உதாரணமாக மலையாளத்தில் பல சுவாரசியமான திரைக்கதைகளை உருவாக்கியுள்ள இயக்குநர் சீனிவாசன் படைக்கும் பாத்திரங்கள் கேலிக்குரிய பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவை கோமாளித்தனமானவை மட்டுமல்ல; அவற்றிடம் உள்ளடங்கிய ஒரு புத்திசாலித்தனம் பளிச்சிடும். அப்படியான பாத்திரங்களைப் படைப்பதே சீனிவாசனின் இயல்பு. அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்குத் தமிழில் நடிகர்களே இல்லை. ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் தமிழ்ப் படைப்பாளிகள் கவலைகொள்வதில்லை. இலுப்பைப் பூக்களின் சர்க்கரையில் திருப்தியடைந்துவிடுகிறார்கள்.

‘வடக்குநோக்கியந்திரம்’ படத்தில் அவர் ஏற்றிருந்த சந்தேகக் கணவன் பாத்திரத்தைத் தமிழில் கருணாஸ் ஏற்று நடித்திருந்தார். கருணாஸ் என்னும் காமெடி நடிகரை அப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்ததால் ‘திண்டுக்கல் சாரதி’ மிக ஏமாற்றம் தந்த திரைப்படமாக மாறியது. ‘உதயனானுதாரம்’ படத்தில் சீனிவாசன் ஏற்றிருந்த வேடம், தமிழ்ப் படங்களில் காணப்படும் அபத்தமான, கதாநாயகத்தனக் காட்சிகளைப் பகடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இயல்பிலேயே அந்தக் கதாபாத்திரத்திடம் ஒரு கோணங்கித் தனமும் வெகுளித் தனமும் தென்படும்.

ஆனால், தமிழில் அதை ‘வெள்ளித் திரை’ ஆக்கியபோது அந்த வேடத்தை ஏற்றிருந்தவர் பிரகாஷ்ராஜ். அவர் கமலையே கரைத்துக் குடித்து ஏப்பம்விட்ட திருப்தியில்தான் நடிக்கவே தொடங்குவார். அத்தகைய அதிபுத்திசாலி நடிகர் பிரகாஷ்ராஜ். அவரை அந்த வெகுளித்தனமான கதாபாத்திரம் தாங்குமா? இவ்வளவு ஏன், சீனிவாசன் ஏற்றிருந்த ஒரு கதாபாத்திரத்தைத் தமிழில் இயக்குநர் தங்கர்பச்சானே ஏற்று நடித்திருக்கிறார் என்றால் சீனிவாசனை எந்த அளவு தமிழ்த் திரையுலகம் அலட்சியமாகக் கையாண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவற்றுக்கு மாறாக, இயக்குநர் பார்த்திபன், தனது ‘புள்ளகுட்டிக்கார’னில் சிறுவேடம் ஒன்றில் சீனிவாசனையே பயன்படுத்தியிருப்பார்.

மாறிய ரசனை, மாறாத மறுஆக்கம்

இதுபோக, மலையாளப் படங்களின் போக்கே பெருமளவில் மாறிவிட்டது. அவை தமிழ்ப் படங்களைப் போலவே உருவாக்கப்படுகின்றன. சமீபத்தில் ‘பிரேமம்’ அங்கே பெரிய வெற்றியைப் பெற்றதன் காரணம் அதன் படமாக்கலில் வெளிப்படையாகக் காணப்பட்ட தமிழ்ப் படத்தனமே. நடிகர் விஜய் நடித்த பல தமிழ்ப் படங்கள் அங்கே வசூலை வாரிக்குவிக்கின்றன. பார்வையாளர்களின் மனம் அங்கே பெரிய அளவில் மாறியிருக்கிறது. இப்போதைய மலையாள ரசிகர்களின் தேவை ‘பிரேமம்’தான் ‘செம்மீன்’ அல்ல. அவர்களுக்காக உருவாக்கப்படும் ‘பிரேமம்’ போன்ற திரைப்படங்கள் ஒரு பார்வையில் தமிழ்ப் படங்களே. அவற்றைத் தமிழில் மறு ஆக்கம் செய்ய இவ்வளவு அடித்துக்கொள்ள வேண்டுமா? அப்படி அடித்துப் பிடித்து உருவாக்கிய பல படங்கள் கலைரீதியாகவும் வசூல்ரீதியாகவும் தோல்வியைத்தானே தந்துள்ளன?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-ஸ்கோப்-27-வெள்ளித்திரை/article9546574.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சினிமா ஸ்கோப் 28: மூடுபனி வீடு

 

 
 
veedu_3139454f.jpg
 
 
 

வீடு கட்டுவதைப் பற்றி ஒரு கதை எழுதி அதைப் படமாக்கினால் எப்படி இருக்கும்? ரசனைக்குரியதாக இருக்காது என்று தானே சொல்வோம். ஆனால், உணர்வுபூர்வமான வீட்டைக் கட்டுவதையே உருப்படியான சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. அது ‘வீடு’ (1988). தனது படங்களில் தனக்குத் திருப்தி அளித்த இரண்டில் ஒன்று ‘வீடு’என்று பாலுமகேந்திரா நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இன்னொன்று ‘சந்தியா ராகம்’.

கதை எழுப்பும் கேள்விகள்

‘வீடு’ திரைப்படத்தின் கதை மிகவும் சாதாரணமானது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளம்பெண் பகீரதப் பிரயத்தனப்பட்டு வீடொன்றைக் கட்டுகிறார். வீடு கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மெட்ரோ நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள். இதுதான் கதை. ஒரு கதை எழுப்பும் அடிப்படைக் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தரும் வகையில் காட்சிகளை அமைத்துவிட்டாலே திரைக்கதை சரியாக அமைந்துவிடும் என்பது திரைக்கதையின் அடிப்படைப் பாடம்.

வீடு கதையில் அந்தப் பிரதானப் பாத்திரம் 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் செல்வச் சீமானல்ல. அவனுக்கும் திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அந்தப் பெண் ஏன் வீடு கட்ட முயன்றாள்? இது நமக்கு எழும் முதல் கேள்வி. அதற்கான விடைதான் படத்தின் முதல் சில காட்சிகள்.

நிலம்… பணம்… வீடு?

வசிக்கும் வாடகை வீட்டைக் காலி பண்ண வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். இன்றுகூடச் சென்னையில் வீடு தேடி அலைந்தால் நாம் பட்டினத்தார் ஆகிவிடும் அளவுக்கு நமக்கு அனுபவங்கள் கிடைத்துவிடும். சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’யில் வீடு தேடி அலைவதன் அவஸ்தையை இயக்குநர் மணிகண்டன் இயல்பாகக் காட்சிகளாக்கியிருப்பார். அன்றும் இந்த நிலைதான். அதில் மாற்றமில்லை. சுதா வீடு தேடி அலைந்து சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. செயலில் இறங்கிவிடுகிறாள் சுதா.

ஏன் வீடு கட்ட வேண்டும் என்பதற்குப் பதில் கிடைத்துவிட்டது. எப்படிக் கட்டினாள் என்ற கேள்விக்குப் பதில்தான் தொடரும் காட்சிகள். வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. நிலம் சரி. வீடு கட்டப் பணம்? தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்டக் கடன் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். நிலமும் இருக்கிறது பணத்துக்கும் வழிசெய்தாகிவிட்டது. அடுத்து மளமளவென்று வீட்டைக் கட்டிவிட வேண்டியதுதானே? அப்படியெல்லாம் முடியுமா? வீடு கட்டுவது என்றால் லேசுப்பட்ட காரியமா? சிக்கல் வரத்தானே செய்யும்? சிக்கலே இல்லையென்றால் திரைக்கதை எப்படி ரசிக்கும்?

இயக்குநருக்குக் கிடைத்த உந்துதல்

வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப் பிரச்சினை, மனப் பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை எழுப்பி முடித்தபோதுதான் சுதாவை நிலைகுலையச் செய்வது போன்ற கிளைமாக்ஸ். அவள் நீதிமன்றத்தின் படியேறுவதுடன் படம் முடிந்துவிடுகிறது.

இது யதார்த்தமான திரைப்படம். எதிரே திரையில் சலனக் காட்சிகள் நகர்கின்றன என்பதையே மறக்கடித்துவிடும் படத்தின் ஒளிப்பதிவு. அவ்வளவு தத்ரூபம். இளையராஜாவின் ‘ஹவ் டூ நேம் இட்’ ஆல்பத்தின் இசையைச் சில காட்சிகளின் பின்னணியில் பயன்படுத்தியிருப்பார்கள். பிற காட்சிகளிள் பின்னணியில் அப்பாஸ் கியரோஸ்தமியின் படங்களைப் போன்று இயற்கையான ஒலிகளால் நிரம்பியிருக்கும். அது உணர்வைக் கிளறும்.

அன்னக்கிளி வந்த பின்னர் தமிழ்நாட்டில் டீக்கடைகளில் இந்திப் பாட்டுப் போடுவது வழக்கிலிருந்து மறைந்துவிட்டது என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் டீக்கடையொன்றில் ஆர் டி பர்மனின் யம்மா யம்மா பாடல் ஒலிக்கும். தனது சிறுவயதில் தன் தாய் கட்டிய வீடு காரணமாக அவரது குணத்தில் ஏற்பட்ட மாறுபாடு பற்றிய ஆழமான நினைவுகளின் தாக்கமே இந்தப் படத்துக்கான உந்துதல் என்று பாலுமகேந்திரா சொல்லியிருக்கிறார். இதுதான் படத்தின் உயிரோட்டத்துக்குக் காரணமாக இருந்திருக்கும்.

house_3139455a.jpg
ஹவுஸ் ஆஃப் ஃபாக் அண்ட் சேண்ட்

தந்தை அளித்த வீடு

இதே போல் வீட்டை மையமாக வைத்து 2003-ல் ஓர் அமெரிக்கத் திரைப்படம் வெளியானது அதன் தலைப்பு ‘ஹவுஸ் ஆஃப் ஃபாக் அண்ட் சேண்ட்’. வீடு படத்தில் சுதா வீடு கட்டப் போராடுகிறாள் என்றால் இந்தப் படத்தில் தன் தந்தை தனக்காகத் தந்துவிட்டுச் சென்ற வீட்டைக் கைப்பற்றப் போராடுகிறாள் படத்தின் நாயகி. வீட்டுக்கான வரியைக் கட்டவில்லை என்பதால் அவளது வீட்டை ஏலத்துக்கு விட்டு விடுகிறது அரசு. அந்த வீட்டை அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அரேபியர் ஒருவர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கிவிடுகிறார்.

அவர் வீட்டைத் தர மறுக்கிறார். அந்தப் பெண்ணோ தன் வீட்டைக் கைப்பற்றத் துடிக்கிறார். இருவருக்குமான போராட்டம் திரைக்கதையாக மாறுகிறது. இறுதியில் இந்த வீடே தனக்குரியதில்லை என்று சொல்லிவிடுகிறார் அந்தப் பெண். அந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை அழுத்தமாகப் படமாக்கியிருப்பார் வடிம் ப்ராவ்மென் என்னும் இயக்குநர். இது இவரது முதல் படம். அரேபியர் வேடமேற்று நடித்திருப்பவர் பென் கிங்ஸ்லி.

முடிவுக்கு முன் ஒரு வீடு

வீட்டைப் பிரதான விஷயமாகக் கொண்ட இன்னுமொரு அமெரிக்கப் படம் ‘லைஃப் ஆஸ் ஏ ஹவுஸ்’. இதில் தன் தந்தையின் கடற்கரையோர வீட்டை இடித்துவிட்டுப் புதிய வீடு ஒன்றைக் கட்ட முற்படுவான் விவாகரத்து பெற்ற நாயகன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறது நிறுவனம். அந்த தினமே அவனுக்குப் புற்று நோய் என்பதும் தெரிந்துவிடுகிறது. அதை யாரிடமும் அவன் தெரிவிக்கவில்லை. இறப்பதற்குள் வீட்டைக் கட்டிவிட முயல்கிறான்.

வளரிளம் பருவ மகனின் ஒத்துழைப்புடனும் இதைச் செயல்படுத்த விரும்புகிறான். ஆனால் மகனோ தகப்பனை வெறுக்கிறான், வீடு கட்டும் பணியில் ஒத்துழைக்க மறுக்கிறான். மகனுக்குத் தந்தையின் நோய் நிலை தெரிந்ததா, வீடு கட்டப்பட்டதா போன்றவற்றை உள்ளடக்கிய திரைக்கதையைப் படமாக்கியிருப்பார் இயக்குநர் இர்வின் விங்க்லர்.

நிம்மதியாக வாழலாம் என்று தான் ஒரு வீட்டுக்காக மனிதர்கள் பிரயத்தனப்படுகிறார்கள் ஆனால் வீடு அந்த நிம்மதியை அவர்களுக்கு அளிக்கிறதா என்னும் கேள்வியைத் தான் இந்தப் படங்கள் எழுப்புகின்றன.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-ஸ்கோப்-28-மூடுபனி-வீடு/article9567856.ece

Link to comment
Share on other sites

சினிமா ஸ்கோப் 29: வண்ணக்கனவுகள்

 

 
veyil_3141738f.jpg
 
 
 

தொண்ணூறுகளுக்கு முன்னரான காலம் இப்போது போலில்லை. சினிமா பார்க்க வேண்டும் என்றால் தியேட்டருக்குத் தான் செல்ல வேண்டும். விரும்பிய பாடலை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால்கூடப் படத்தை மீண்டும் பார்ப்பது ஒன்றே வழி. அதனால் திரையரங்குடன் அந்தரங்க உறவு கொண்டிருந்த ரசிகர்கள் அநேகர். வண்ணக்கனவுகள் பொதிந்த பசுமையான வெளியாகத் திரையரங்கம் அவர்களது மனதில் நிலை கொண்டிருக்கும். இப்போது கேட்டாலும் அவரவரது ஊரில் இருந்த, இருக்கும் திரையரங்கின் கதையை ரசிக்க ரசிக்கச் சொல்வார்கள். அப்படியொரு ரசிகன்தான் வசந்தபாலன் இயக்கிய வெயில் (2006) படத்தின் நாயகன் முருகேசன்.

கரிசல் நிலத்தின் வாசனை

கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற பசுபதி, சினிமாவால் வாழ்வைத் தொலைத்த, எம்.ஜி.ஆர். ரசிகனான முருகேசன் என்னும் வேடத்தை ஏற்றிருப்பார். ஆழப்புதைய சரியான ஆழிக்காகக் காத்திருப்பவர்கள் கூத்துப்பட்டறைக்காரர்கள். தானும் சளைத்தவரல்ல என்பதை இந்தப் படத்தில் காட்டியிருப்பார் பசுபதி. தோல்வி பெற்ற ஒருவனின் வாழ்க்கைச் சம்பவங்கள் என்பதால் பசுபதி ஆழ்கடலில் மூழ்கித் தரைதொட்டு மேலெழுவார். சினிமாவால் முருகேசனது வாழ்வு என்ன ஆனது என்பதன் பின்புலத்தில் காலத்தில் கரைந்துபோகும் கரிசல் வட்டாரத்தின், வாழ்வின் ஞாபகங்களை மண்ணின் மணத்துடன் மீட்டெடுக்க முயன்றிருப்பார் வசந்தபாலன். இதன் திரைக்கதையில் முருகேசனுக்கும் பாண்டிக்குமான பிரியம் வெளிப்பட்டிருந்த விதம் ஆண் பெண் உறவு பற்றிய அக்கறையுடன் கையாளப்பட்டிருக்கும்.

அண்ணன் தம்பி பாசம், காதல், தகப்பன் மகனின் விநோத உறவு, நலிவடையும் தொழில், உருப்பெறும் புதுத் தொழில், தொழில் போட்டி, பகைமை என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான விறுவிறுப்பான அம்சங்கள் அனைத்தை யும் கொண்டிருந்த படமாக வெயில் அமைந்திருந்தது. இந்தப் படத்தின் கன்னியப்பா டாக்கீஸ் காட்சிகள் அனைத்துமே இத்தாலிப் படமான ‘சினிமா பாரடைஸை நினைவூட்டும்.

வழுக்கிச் செல்லும் திரைக்தை

1990-ம் ஆண்டில் சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்ற படம் சினிமா பாரடிஸோ (1988). சினிமா பாரடிஸோ என்னும் தியேட்டரில் தனது பால்யத்தையும் பருவத்தையும் கழித்துப் பின் சினிமா இயக்குநராக உயர்ந்த, சிறு வயதில் தோத்து எனச் செல்லமாக அழைக்கப்பட்ட, சல்வதோரி திவிதாவின் கதைதான் அந்தப் படம். ஆல்ஃப்ரெதோ என்னும் சினிமா ஆபரேட்டருக்கும் தோத்துவுக்குமான உறவின் பிணைப்பு வெளியாக அந்தத் திரையரங்கமே இருக்கும்.

அந்த ஊரின் பிரதான சதுக்கத்தில் மையமாக அமைந்த சினிமா பாரடிஸோவின் பின்னணியில் அவர்களது வாழ்வைச் சொன்ன படம் அது. ஆல்ஃப்ரெதோவின் மறைவுச் செய்தியுடன் படம் தொடங்கும். அதை அறிந்த சல்வதோரியின் நினைவுகளாகப் படம் திரையை நிறைக்கும். வெயிலில் படம் முருகேசனின் பார்வையில் தான் சொல்லப்படும். சினிமா பாரடைஸின் காட்சிக்கோணங்களும் வண்ணத் தோற்றமும் ரசிகர்களின் மனத்தில் அப்படியே அப்பிவிடும் தன்மை கொண்டது. சுவாரஸ்யமான திருப்பங்கள் கிடையாது. அது வாழ்வைச் சொல்லும் படம். எனவே, அதற்கேற்ற திரைக்கதை கண்ணாடித் தளத்தில் நீர் பரவுவதைப் போல் மென்மையாக வழுக்கிக்கொண்டு செல்லும்.

cinema_paradiso_3141739a.jpg

உன்னைப் பற்றிப் பேச வை

தோத்துவுக்கு சினிமா மீது ஏற்படும் காதலை இந்தப் படத்தின் திரைக்கதை மிகுந்த ரசனையுடன் காட்சிகளாகச் சித்தரித்திருக்கும். முருகேசன் வேறு வழியில்லாத சூழலில் கன்னியப்பா டாக்கீஸை தஞ்சமடைவான். ஆனால் தோத்துவுக்கு அப்படியல்ல; சினிமா பாரடிஸோ அவனது சொர்க்கம். அதன் ஒவ்வோர் அசைவையும் அவன் கூர்ந்து கவனித்து, ஆபரேட்டிங் வேலையைக் கற்றுக்கொண்டவன். தியேட்டரில் நெருப்புப் பற்றி ஆல்ஃப்ரெதோ கண் பார்வையைப் பறிகொடுத்த பின்னர் அந்த தியேட்டர் ஆபரேட்டராகப் பொறுப்பேற்றுக்கொள்வான் தோத்து.

ரசிகர்கள் சந்தோஷமாகத் திரைப்படம் பார்க்கும்போது, அவர்களுக்கு அந்த மகிழ்வை அடைந்த திருப்தி ஏற்படுவதை ஆல்ஃப்ரெதோ தோத்துவிடம் பிரியத்துடன் சொல்வார். என்னதான் விருப்பத்துடன் வேலைசெய்தாலும் அந்தப் பணி குறித்த சங்கடங்களையும் அவர் தோத்துவுடன் பகிந்துகொள்வார். அதனால்தான், ‘உன் பேச்சு போதும், உன்னைப் பற்றிய பேச்சு தேவை’ என்று தோத்துவை ஊரை விட்டு விரட்டுவார்.

தோத்துவும் தங்கமும்

தோத்து தியேட்டர் இருக்கையில் அமர்ந்துகொண்டு சிறு துவாரம் வழியே பார்க்கும் ஆல்ஃப்ரெதோவைப் பார்த்து சைகையில் பேசும் காட்சியைப் போலவே வசந்தபாலனின் வெயிலில் முருகேசனின் காதலி தங்கம் தியேட்டர் இருக்கையில் அமர்ந்துகொண்டு முருகேசனுடன் காதல் கலந்த சைகை மொழியில் பேசுவாள். போதிய ஆதரவு இல்லாமல் சினிமா பாரடிஸோ இடிக்கப்படுவதைப் போலவே கன்னியப்பா டாக்கீஸும் இடிக்கப்படும். வெயிலின் ஒரு பகுதி சினிமா பாரடிஸோவை நினைவூட்டுவதைப் போல் அதன் இன்னொரு பகுதி டெஸ்பரடோ ஸ்கொயர் என்னும் இஸ்ரேலியப் படத்தை ஞாபகப்படுத்தும்.

இன்னுமொரு ‘திரை’ப் படம்

2001-ல் வெலியான இந்த இஸ்ரேலியப் படம் டெஸ்பரடோ ஸ்கொயர் என்னும் ஒரு தியேட்டரை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும். ஊரை விட்டு 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடிப் போன, ஆவ்ரம் என்னும் பெயர் கொண்ட தம்பி, தன் அண்ணன் மோரிஸின் ஓராண்டு நினைவஞ்சலி தினம் அனுசரிக்கப்படும் வேளையில் ஊருக்குள் வருகிறான். இந்த வேளையில் மோரிஸ் தன் இரண்டாம் மகன் நிஸ்ஸிம் கனவில் வந்து, மூடிக் கிடக்கும் பழைய தியேட்டரில் இறுதியாக ஒரு படத்தைத் திரையிட வேண்டும் எனச் சொல்லி மறைகிறான். தியேட்டரைத் திறக்கும் முயற்சியில் இரு மகன்களான ஜார்ஜும் நிஸ்ஸிமும் ஈடுபடுகிறார்கள்.

தியேட்டரில் எந்தப் படத்தைத் திரையிட வேண்டும் என்று யோசிக்கும்போது இந்திப் படமான சங்கம் அங்கே திரையிடப்பட வேண்டும் என்கிறான் அந்த ஊரில் வாழும் இந்தித் திரைப்பட ரசிகனான இஸ்ரேல் -அவன் தியேட்டர் கூரை மேல் அமர்ந்து சுவரின் சிறு துவாரம் வழியே திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பவன். தியேட்டர் ஆபரேட்டரான ஆரோனும் அதை ஆமோதிக்கிறான். அந்தப் படத்தைத் திரையிட வேண்டாமென மறுக்கிறாள் மோரிஸின் மனைவியான செனியோரா.

ஆனால் மகன்கள் தாயின் மறுப்பைப் புறக்கணித்து சங்கம் படத்தைத் திரையிட முயல்கிறார்கள். சங்கம் படத்தின் பிரிண்ட் தேடி அலைகிறார்கள். அதுவோ ஆவ்ரமிடம்தான் இருக்கிறது. இரு நண்பர்கள் ஒரு பெண்ணைக் காதலிப்பதும் அதைத் தெரிந்துகொண்ட நண்பன் ஒருவன் நட்புக்காகக் காதலை விட்டுத் தருவதும் சங்கம் படத்தின் கதை. அதைப் போலவே மோரிஸின் வாழ்விலும் நடந்திருக்கிறது செனியோராவும் ஆவ்ரமும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இது தெரியாமல் மோரிஸுடன் செனியோராவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அண்ணனுக்காகத் தன் காதலைத் துறந்து ஊரை விட்டு ஓடிப்போனவன்தான் ஆவ்ரம். இந்த உண்மை மகன்களுக்குத் தெரியவருகிறது. இப்படிச் செல்லும் டெஸ்பரடோ ஸ்கொயரின் திரைக்கதை.

வெயில், டெஸ்பரடோ ஸ்கொயர் இரண்டு படங்களிலும் பிரதானமாக தியேட்டர் உண்டு; அண்ணன் தம்பி பாசமுண்டு; நினைவஞ்சலி சுவரொட்டி ஒட்டப்படுவதுண்டு; இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பும் கதாபாத்திரமுண்டு.

ஆனாலும் வெயில் ஒரு தமிழ்ப் படம். அதற்கான குணாதிசயங்களுடன் அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதனாலேயே சிறந்த இந்தியப் படமென்ற தேசிய விருதும் வெயிலுக்குக் கிடைத்தது. இந்த மூன்று படங்களையும் பார்க்கும் ரசிகர் ஒருவர், வெயிலின் உருவாக்கத்தில் சினிமா பாரடைஸ், டெஸ்பரடோ ஸ்கொயர் போன்றவற்றின் சாயலைக் கண்டடைய முடியும், அவ்வளவுதான்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-ஸ்கோப்-29-வண்ணக்கனவுகள்/article9577928.ece

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சினிமா ஸ்கோப் 30: சில நேரங்களில் சில மனிதர்கள்

 

 
 
Desktop_3149114f.jpg
 
 
 

சில வேளைகளில் சாதாரணப் படம் அநேகரால் ரசிக்கப்படும்; அநேகரால் புறக்கணிக்கப்படும் படம் கவனிக்கத்தக்க படமாக அமைந்துவிடும். இது சினிமாவின் மர்மமான அம்சங்களில் ஒன்று. தனிநபர் ரசனையைப் பொறுத்த அம்சம் இது என்பதால் ஏன், எதற்கு, எப்படி என்று எந்தக் கேள்வியையும் எழுப்ப இயலாது. புனைவும் யதார்த்தமும் சரியான கலவையில் அமையும்போது, அது பார்ப்பதற்கு உகந்த படமாகிவிடும். இந்தக் கலவை சமையலில் வெளிப்படுவது போன்ற ஒருவகையான கைப்பக்குவம்தான். எப்போதும் இந்தக் கைப்பக்குவம் ஓர் இயக்குநருக்குக் கைகொடுக்கும் என்று கூற முடியாது. மேலும், இப்படியான கைப்பக்குவத்துடன் படமாக்கப்பட்ட ஒரு படம் பெருவாரியான ரசிகர்களால் ரசிக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம். ஆனால், ஒரு படம் அதற்கான ரசிகர்களைச் சென்றடைவதுதான் முக்கியம். அப்படிச் சரியான ரசிகர்களைச் சென்றடைந்த படம் வெற்றிபெறும். வெற்றி என்றால் வணிகரீதியான வெற்றியல்ல; படைப்புரீதியான வெற்றி.

கிடாரியும் களியும்

சமீபத்தில் இரண்டு படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஒன்று பிரசாத் முருகேசன் இயக்கிய ‘கிடாரி’. மற்றொன்று சணல்குமார் இயக்கிய ‘ஒழிவுதிவசத்தே களி’. ‘கிடாரி’ வன்முறைப் படம் என முத்திரை குத்தப்பட்டது. ஆகவே அது பெரும்பான்மையானவர்களால் கவனிக்கப்படவில்லை. ‘ஒழிவுதிவசத்தே களி’யின் கதையோ இதற்கு நேரெதிர். படம் பார்க்கலையா எனத் துக்கம் விசாரிக்கும் அளவுக்கு விதந்தோதப்பட்டது. அதை ஒரு காவியம் என்றெல்லாம் கொண்டாடினார்கள்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்தபோது, திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு ஆகியவை பற்றிய எண்ணம் எழுந்தது. கிடாரியில் பலமான திரைக்கதை உள்ளது, ஒழிவுதிவசத்தே களியிலோ திரைக்கதை என்ற ஒன்றே முற்றிலுமாக இல்லை. ஒரு கல்யாண வீடியோ எடுப்பது போன்ற தன்மையுடன் படமெடுத்திருக்கிறார்கள். ஒழிவுதிவசத்தே களி சொல்லும் சேதி சமூகத்துக்கு அவசியமானதே. ஆனால், அது திரைப்படம் அல்ல; வெறும் கதைப் படம்.

இருவித அதிர்ச்சிகள்

ஒரு திரைப்படத்துக்குத் திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இந்தப் படம் உண்ணி ஆர் என்னும் மலையாள எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஒருவகையான குறியீட்டுப் படம்தான். அதனால்தான் திரைக்கதைக்குப் பொருந்தாத அந்த கிளைமாக்ஸுடன் படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான சண்டை, பாட்டு, நகைச்சுவை என்ற வகையில் அடங்காமல் புதுப் பாதையில் பயணித்த படம் இது. நான்கைந்து நண்பர்கள் அடர்ந்த வனமொன்றின் நடுவே ஒரு மாளிகையில் குடிக்கச் செல்கிறார்கள்.

அவர்களுக்கிடையேயான உரையாடல், சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே சமூகத்தைப் பற்றிய, ஜனநாயகத்தைப் பற்றிய இயக்குநரின் புரிதலை வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அதிர்ச்சி தரும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சி இருவகையானது சிலருக்கு எப்படியான படம் என்ற வியப்பு கலந்த அதிர்ச்சி, சிலருக்கு என்னடா படம் என்ற சலிப்பு கலந்த அதிர்ச்சி. இந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும்படியான திரைக்கதை அமைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அமையாமல் போனதால் அது ஒரு சராசரியான படமாகவே நிலைகொண்டிருக்கிறது.

50 நிமிடங்களுக்கு மேலான ஷாட், ஸ்பாட் ரெக்கார்டிங் போன்ற முயற்சிகள் வெறும் கவன ஈர்ப்புக்கான அளவிலேயே பயன்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் அது இந்திய ஜனநாயகம் பற்றிப் பேசுகிறது, பெண்களின் நிலையைப் பற்றிப் பேசுகிறது, ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிப் பேசுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனால், அது ஒரு முழுநீளத் திரைப்படமா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. அது மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட குறும்படம் என்ற அளவிலேயே உள்ளது.

லாகவமான நையாண்டி

கிடாரி துரோகத்தின் அரசியலையும் வீரத்தின் முகவரியையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. சுவாரசியமான திரைப்படத்துக்குத் தேவையான அம்சங்களை அதன் திரைக்கதை கொண்டிருந்தது. மிகவும் முதிர்ச்சியான காட்சி மொழியால் காட்சிகள் திரையில் எழுதப்பட்டிருந்தன. தனக்காக வாழ்வதற்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்வதற்குமான வேறுபாட்டைச் சுட்டியபடி படம் பயணிக்கிறது. தான் வாழ்வதற்காகத் தன் குட்டியை விழுங்கும் பாம்பு போன்ற தன்மையுடன் கொம்பையா பாண்டியன் வேடம் படைக்கப்பட்டிருந்தது.

ஒரு சமூகமே வீரம் என்று கொண்டாடும் விஷயத்தை மிக லாகவமாகப் படம் நையாண்டி செய்திருக்கிறது. பழியும் வன்மமும் நிறைந்த வாழ்வில் துரோகம் சில வேளைகளில் நிழல் தரும் மரமாகவே உருக்கொண்டுவிடுகிறது. நிழல் தந்த மரம் ஐந்துதலை நாகம் என்பது புரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? அந்த அதிர்ச்சியை அதன் கிளைமாக்ஸ் தரும். வீரம் என்பது வெறும் தந்திரம் என்பதை வெளிப்படுத்தும்போது, வீரத்துக்காக மார்தட்டும் சமூகம் தலைகுனிவதே சரியானது என்பதைப் படம் உணர்த்துகிறது. குருதி நதியில் மிதந்த சடலமாகப் படம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், படம் ரத்தமும் சதையுமாகக் கையில் நெளியும் பிறந்த சிசு போன்றது.

கிடாரியில் பிரச்சினை இல்லையா, அவ்வளவு அற்புதமான படைப்பா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் மிகப் பெரிய பலவீனம் கிடாரி கதாபாத்திரத்தை சசிகுமார் வெளிப்படுத்தியிருந்த விதம். ஒரு காட்சியில்கூடத் திரைக்கதையின், கதாபாத்திரத்தின் பளுவை அவரால் தாங்க முடியவில்லை என்பதைப் படம் பார்க்கும்போது உணரலாம். இது கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம், மதயானைக்கூட்டம் போன்ற படங்களைப் போன்றதுதான். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் தான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் சுமையைப் பறவையின் இறகு போல் தாங்கியிருந்தார். ஆனால், கிடாரியில் அவர் சறுக்கியிருக்கிறார். சாதிப் பெருமைப் படக் கதாபாத்திரங்களின் தன்மை அவர் மீது ஒரு கறையாகவே படிந்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

வலுவான கதாபாத்திரம் வலுவான நடிகர்

இந்த இடத்தில் ‘த ரெவனென்ட்’ படத்தின் லியோனர்டோ டி காப்ரியோ நினைவுக்கு வருகிறார். படத்தின் பளுவைத் தனியொருவராக அவர் தூக்கிச்சென்றிருப்பார். அவரும் சசிகுமாரும் ஒன்றா என்று கேட்டு அடிக்க வராதீர்கள். திரைக்கதையைச் சுமக்கும் வலுக்கொண்ட நடிகர் வாய்க்காவிட்டாலும் திரைக்கதை ஜொலிக்காது என்பதைச் சொல்லவே இந்த உதாரணம்.

மொத்தத்தில், ஒரு முழுநீளத் திரைப்படம் செய்தி சொல்லலாம்; சொல்லாமல்போகலாம். அதைவிட முதன்மையான விஷயம் அது திரைப்படமாக இருக்க வேண்டும். எவ்வளவு கலைத்தரத்துடன் படைக்கப்பட்டாலும் அது பொழுதுபோக்குக்காகவே உருவாக்கப் படுகிறது; அந்தப் பொழுதுபோக்கு பயனுள்ளதாக அமைய ஒரு இயக்குநர் பிரயத்தனப்படலாம். அப்படி அமைந்துவிட்டால் அது நல்ல படமென்று சொல்லப்பட்டுவிடும். அதன் காட்சிமொழி இயல்பாகவும் பக்குவமாகவும் வெளிப்படும்போதே அது திருப்தி தரும் படமாகும்.

இப்படியான திருப்தியைத் தருவதற்கான அடித்தளத்தை ஒரு நல்ல திரைக்கதையால் கொடுக்க இயலும். நல்ல திரைக்கதையை அதன் கதாபாத்திரங்களுக்கு உகந்த நடிகர்களுடன் பார்ப்பதற்கேற்ற பதத்திலும் முதிர்ச்சியுடனும் நல்ல திரைப்படமாக்குவது இயக்குநரின் கைகளிலேயே உள்ளது. ஆக, கிடாரி நட்சத்திரத் தேர்வில் சறுக்கியது என்றால் ஒளிவுதிவசத்தே களி திரைக்கதையில் சறுக்கியது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-ஸ்கோப்-30-சில-நேரங்களில்-சில-மனிதர்கள்/article9607891.ece

Link to comment
Share on other sites

சினிமா ஸ்கோப் 31: இதயத்தைத் திருடாதே

 

 
mani_3156304f.jpg
 
 
 

திரைக்கதையை அழகுபடுத்துபவை உணர்வுபூர்வமான சம்பவங்கள். அடுத்தடுத்த கட்டத்துக்குக் கதை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் படம் சப்பென்றாகிவிடும். ஓடினால்தானே அது நதி, தேங்கினால் குட்டைதானே. கிட்டத்தட்ட ஒரே கதைப் போக்கு என்றபோதும், திரைக்கதையின் பயணம் வெவ்வேறாக அமைந்த இரண்டு தமிழ்ப் படங்களைப் பார்க்கலாம். ஒன்றைப் பிரபலமான இயக்குநர் இயக்கியிருக்கிறார். மற்றொன்றைப் பெயரறியாத இயக்குநர் இயக்கியிருக்கிறார்.

மலையோர கிராமத்தில் ஒரு காதல்

‘முடிவல்ல ஆரம்பம்’ 1984-ல் வெளியான தமிழ்ப் படம். படத்தைத் தயாரித்து இயக்கியிருப்பவர் என்.மொஹியுத்தீன்; திரைக்கதையும் அவர்தான். படம் அநேகமாக ஏதோ ஒரு இந்திப் படத்தின் மறு ஆக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், படத்தின் கதையை எழுதியிருப்பவர் இந்திக் கதையாசிரியரும் இயக்குநருமான சரண்தாஸ் ஷோக்.

அது ஒரு மலையோரக் கிராமம். அவள் ராதா, அந்தக் கிராமத்தில் ரோட்டோரத்தில் டீக்கடை நடத்தும் பெண்மணியின் ஒரே மகள். பத்தாவதுவரை படித்திருக்கிறாள். கிட்டத்தட்ட பதினாறு வயதினிலே மயிலு போன்றவள். இந்தப் படமே மெலிதாக `பதினாறு வயதினிலேவை பகடி செய்கிறது.அவன் கண்ணையா, லாரி ஓட்டுநர். தொழில் நிமித்தமாகச் செல்லும் வழியில் அடிக்கடி டீக்கடைக்கு வந்து செல்கிறவன். இருவருக்குமே இள வயது. பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்ளும் பருவம். காதல் வயப்படுகிறார்கள். கல்யாணச் சடங்குக்கு முன்னரே இருவரையும் கலவி பிணைத்துவிடுகிறது. ராதா கர்ப்பமாகிவிடுகிறாள். கல்யாணத் தேதி குறித்துவிடுகிறார்கள். அதற்கு முன் தினம் இரவு தொழில் நிமித்தமாகச் சென்ற கண்ணையா திரும்பிவரவில்லை.

நுனிப்புல்

இந்தக் கதையைப் படிக்கும்போது, உங்களுக்குச் சமீபத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ ஞாபகம் வரலாம். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. ‘காற்று வெளியிடை’யின் திரைக்கதை பழமையானது. சொல்லப்போனால் திரைக்கதை என்ற ஒன்றே இல்லை. தொழில்நுட்பத்தால் ஊதப்பட்ட பொம்மை அது. அதனால்தான் எல்லா ஃப்ரேம்களும் அழகாக இருந்தும் படம் ஜீவனற்றுக் காட்சி தருகிறது. காற்று வெளியிடை நதியல்ல, குட்டை. வருண் பாகிஸ்தான் சிறையில் மாட்டிக்கொள்கிறான். வயிற்றில் குழந்தையுடன் லீலா இருக்கிறாள். இருவரும் இணைவார்களா என்பதே கிளைமாக்ஸ்.

ஆனால், வெறும் காதல், மன்னிப்பு, மீண்டும் காதல் மீண்டும் மன்னிப்பு என்று பள்ளத்தில் விழுந்த லாரி டயர் போல் படம் ஒரே இடத்தில் சுழன்றுகொண்டிருக்கும். ஆணாதிக்கம், பெண் உரிமை, போர் என்ற பம்மாத்துகள் வேறு படத்தில் துருத்திக் கொண்டிருக்கும். நுட்பமாக வெளிப்படுத்துதல் வேறு, நுனிப்புல் மேய்தல் வேறு. காற்று வெளியிடை இரண்டாவது வகையானது.

லீலாவின் நிலையில்தான் ராதாவும் இருக்கிறாள். ஆனால், லீலா போல் ராதாவுக்கு மூளைப் பிசகில்லை; காதலுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளத் தயாராகவும் இல்லை. அவளுக்குத் தன்னை ஏமாற்றிச் சென்ற காதலன் மீது கடுங்கோபம் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் அவனைப் பழிவாங்கவும் தயாராக இருக்கிறாள். முடிவல்ல ஆரம்பம் படத்தில் தெளிவான திரைக்கதை இருக்கிறது. பல சுவாரஸ்யமான முடிச்சுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அழகாக அவிழ்க்கப்படுகின்றன.

தெளிவாக விரியும் திரைக்கதை

கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான ராதா, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதை மருத்துவமனையும் காப்பகமும் இணைந்த கருணை இல்லம் ஒன்றின் வாசலில், இருள் விலகியிராத அதிகாலை நேரத்தில் யாருமறியாத வகையில் விட்டுவிடுகிறாள். இதுதான் தொடக்கக் காட்சி. வெளிச்சம் வந்த பின்னர், தன் பெயரை சீதா எனச் சொல்லி அதே கருணை இல்லத்தில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறாள். அவளது குழந்தை ஜான் என்னும் பெயரிலேயே அந்த மருத்துவமனையில் வளர்கிறது. தெளிந்த நீரோடையாக இப்படிப் பல சம்பவங்கள் தொடர்கின்றன.

முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்குப் பல கேள்விகள் எழுகின்றன. யாரிந்தப் பெண்? ஏன் குழந்தையை விடுதியில் கொண்டுவந்து போடுகிறாள்? குழந்தைக்கும் அவளுக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்விகள் எழும் சமயத்தில் அவளது குழந்தைதான் அது என்பது உணர்த்தப்படுகிறது. அவளது குழந்தை என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும். பிறருக்குத் தெரியாது. அதை வைத்து நகரும் கதையில் ராம் என்னும் மருத்துவர் உள்ளே வருகிறார். அவருக்கு சீதா மீது காதல் அரும்புகிறது. அவர் ராம்; அவள் சீதா. எனவே, பார்வையாளர்கள் மனதில் ஒரு கணக்கு வந்துவிடுகிறது. ஆனால், மணமாகாமலே சீதா குழந்தையுடன் இருக்கிறாளே, என்ன செய்வது? சீதாவிடம் திருமணம் பற்றிப் பேசுகிறார் ராம். அப்போது அவள் நினைவில்தான் அவளது காதல் கதை விரிகிறது.

ratnam_3156301a.jpg

கதையின் கதை

அந்தக் காதல் கதைக்குள் ஒரு பதினாறு வயதினிலே ஒளிந்துள்ளது. கண்ணையாவும் ராதாவும் காதல் வயப்பட்டுத் துள்ளித் திரிந்த ஊரில் பதினாறு வயதினிலே பரட்டை போல் லோகு எனும் ரௌடியும் வாழ்ந்துவருகிறான். அவனுக்கும் ராதா மீது ஒரு கண். அது மாத்திரமல்ல; சப்பாணி போல் ஒரு கதாபாத்திரமும் படத்தில் உண்டு. ஒரு செல்வந்தரின் மகனான அந்தக் கதாபாத்திரம் வைத்தி. சப்பாணி மயில் மேல் உயிராக இருப்பது போல் வைத்தி ராதா மேல் உயிராக இருக்கிறான். பதினாறு வயதினிலே சப்பாணி கதாபாத்திரமே டேவிட் லீனின் ‘ரேயான்’ஸ் டாட்டர்’ (1970) படத்தின் மைக்கேல் கதாபாத்திரத்தை நினைவூட்டக்கூடியது. மைக்கேல் கதாபாத்திரமும் காலை இழுத்து இழுத்துதான் நடக்கும். இந்த வேடத்தை ஏற்றிருந்த ஜான் மில்ஸ் இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருந்த நடிப்புக்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவில் ஆஸ்கர் விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்றார்.

வெளிப்படும் உண்மை

ஒரு கட்டத்தில் சீதாவும் ஜானும் தாயும் மகனும் என்பது அனைவருக்கும் தெரியவந்து விடுகிறது. அதன் பின்னர், ராமுக்கும் சீதாவுக்கும் திருமணம் என்னும் சூழலில் கண்ணையா வந்துவிடுகிறார். ஒரு விபத்தில் கண் பார்வை பறிபோன நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்ணையாவின் கண் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சையை ராம் மேற்கொள்கிறார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தைப் போன்று காதலியின் கணவனுக்கு சிகிச்சை செய்யும் காதலன் நிலையில் ராம் கதாபாத்திரம் இருக்கும். கண் பார்வை வந்துவிட்டால் ராதாதான் சீதா என்னும் பெயரில் மருத்துவமனையில் இருக்கிறாள் என்பது கண்ணையாவுக்குத் தெரிந்துவிடும்.

கண்ணையாவுக்குப் பார்வை திரும்பினால் தொழில்ரீதியில் ராமுக்கு வெற்றி. ஆனால், தனிப்பட்ட வாழ்வில் தோல்வி. கண்ணையாவின் பார்வை திரும்பியதா, சீதா கண்ணையாவுடன் சேர்ந்துவிட்டாளா இல்லை ராமுக்கும் அவளுக்கும் திருமணமா என்பதே கிளைமாக்ஸ் காட்சி. இப்படி ருசிகரமான காட்சிகளால் திரைக்கதை உயிர்ப்புடன் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றதா, இதன் இயக்குநர் வேறு ஏதேனும் படத்தை இயக்கியிருக்கிறாரா என்பவை தெரியவில்லை. படத்தின் வசனங்களில் பாலசந்தர் பாதிப்பு தெரிகிறது.

‘முடிவல்ல ஆரம்பம்’ வெளியானது 80-களில். இப்போது 2017. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, முற்போக்குச் சாயலில் பிற்போக்கான திரைக்கதை அமைத்திருக்கிறார் மணி ரத்னம். தொழில்நுட்பம் அவரது மிகப் பெரிய பலம். என்ன இருந்தும் திரைக்கதை உயிர்த் துடிப்போடு இல்லாவிட்டால் தொழில்நுட்பத்தால் ஒரு பயனும் இல்லை என்பதற்குக் காற்று வெளியிடை சரியான உதாரணம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-ஸ்கோப்-31-இதயத்தைத்-திருடாதே/article9653830.ece

Link to comment
Share on other sites

சினிமாஸ்கோப் 32: புதையல்

 

 
 
friens_3161186f.jpg
 
 
 

திடுக்கிடும் திருப்பங்களும் ரசனையான காட்சிகளும் சினிமாவை ருசிகரமானதாக்கும். அந்தத் திருப்பங்களும் காட்சிகளும் ஏதாவது ஒரு முடிச்சை உருவாக்குவதும் பின்னர் அதை அவிழ்ப்பதுமாகவே திரைக்கதையின் பயணம் அமையும். இந்த முடிச்சு ஒன்றாகவும் இருக்கலாம்; பலவாகவும் இருக்கலாம். பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு பெரிய முடிச்சிட்டு அதை அவிழ்ப்பதே திரைக்கதையின் வேலையாக இருக்கும்.

அந்த முடிச்சு எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அதை அவிழ்ப்பதும் சுவாரசியமாக இருக்கும். ஒரு முடிச்சைப் போட்டு அதை மட்டுமே அவிழ்ப்பதைப் போல் பல முடிச்சுகள் கொண்ட திரைக்கதையும் அமைக்கலாம். இந்த வாரம் இரண்டு படங்களைப் பார்க்கலாம்.

புதைகுழியில் ஒரு போராட்டம்

ஒன்று தமிழ்ப் படம், மற்றொன்று ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட ‘பரீட்’ (Buried 2010) என்னும் ஸ்பெயின் நாட்டுப் படம். வாழ்வதற்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட படம் இது. இந்த இரண்டு படங்களில் ‘பரீட்’ ஒரே முடிச்சைக் கொண்ட படம். ஆனால் தமிழ்ப் படத்தில் பல முடிச்சுகள் உண்டு. ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு, ஒவ்வொன்றையும் அவிழ்த்துக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

‘பரீட்’ படத்தில் திரையில் ஒரே கதாபாத்திரம்தான் நடித்திருக்கும். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் ரேயான் ரெனால்ட்ஸ் என்னும் கனடா நாட்டைச் சார்ந்த நடிகர். படத்தை இயக்கியிருப்பவர் ரோட்ரிகோ கார்டஸ். அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரக் ஓட்டுநர், பால் கான்ராய் ஈராக்கில் பிணைக்கைதியாக மாட்டிக்கொள்கிறார். பிணைக்கைதியாக அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம் ஒரு சவப் பெட்டி.

ஆம், ஒரு சவப் பெட்டியில் அவரை வைத்து மூடி அந்தப் பெட்டியை மண்ணில் புதைத்துவிடுகிறார்கள். அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் அமெரிக்க டாலரை, அதுவும் மண்ணில் புதையுண்ட அவரிடமே கேட்டு ஈராக் தீவிரவாதிகள் மிரட்டுகிறார்கள். அந்தச் சிக்கலிலிருந்து அவர் மீட்கப்பட்டாரா மீள வழியின்றி மாண்டாரா என்பதையே அந்தப் படம் சொல்லிச் செல்லும்.

கிளிஷேக்களை கிள்ளியெறிந்த படம்

பசுமையான சூழல்களும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் மனதை ஈர்க்கும் வண்ணமயமான லொகேஷன்களும் ஒரு படம் எற்படுத்தும் ரசனையைக் கூட்டக்கூடியவை. அப்படியான இடங்களில் படமாக்கலை மேற்கொண்டால்தான் படத்தின் மூலம் கிட்டும் காட்சி அனுபவத்தின் ருசி கூடும். அதனால்தானே தமிழ்ப் படங்களில் ஒரு பாடலுக்காகவே இதுவரை படப்பிடிப்பே நடக்காத புதிதான ஒரு நாட்டையோ புதிரான ஓர் இடத்தையோ தேடிக் கண்டுபிடித்துச் சென்று படம் பிடிக்கும் வழக்கமே தோன்றியது. ஆனால், இந்தப் படத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், படம் முழுவதும் அந்தச் சவப் பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் அந்த ஓட்டுநரையே சுற்றிச் சுற்றி வரும். ஆனாலும் படம் அலுப்புத் தட்டாமல் செல்லும். அந்த வகையில் திரைக்கதையாசிரியர் கிறிஸ் ஸ்பார்லிங் காட்சிகளை நகர்த்தியிருப்பார்.

dark_3161187a.jpg

படம் தொடங்கிய நிமிடத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் அந்த ஓட்டுநர் தப்பிப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பைத் திரைக்கதை விஸ்தரித்தயபடியே செல்லும். அவரிடம் இருக்கும் மொபைல் உதவியுடன் அவர் வெளி உலகைத் தொடர்புகொண்டு அந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்கப் பார்ப்பார். அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளாகவே படத்தின் சம்பவங்கள் அமைந்திருக்கும். அந்த ஓட்டுநரைத் தவிர ஏனைய கதாபாத்திரங்கள் எல்லாமே வெறும் குரல்களாகவே வெளிப்பட்டிருக்கும். அவரைத் தவிரப் படத்தில் முகத்தைக் காட்டும் ஒரு கதாபாத்திரம் அவருடன் அலுவலகத்தில் வேலைபார்த்த பெண் சகா ஒருவர். அவரும்கூடப் படத்தில் ஒரு வீடியோ படத்தின் காட்சியாகத்தான் வருவார். மற்றபடி அந்த ஓட்டுநர் மட்டுமே முழுப் படத்தையும் ஆக்கிரமித்திருப்பார்.

இது ஓர் இயக்குநருக்குச் சவாலான விஷயம்தான். இதை வெறுமனே இப்படி ஒரு த்ரில்லராக மட்டும் உருவாக்கியிருந்தால் அதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால், படத்தில் நிறுவனங்கள் தமது ஊழியரை எப்படி ஈவு இரக்கமில்லாமல் நடத்துகின்றன என்ற விமர்சனம் இடம்பெற்றிருக்கும். நெருக்கடியில் மாட்டிக்கொண்ட ஊழியரைச் சிறிதுகூடக் குற்றவுணர்வு இன்றி கைகழுவிவிடும் நிறுவனங்களின் குரூரத்தை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கும் பாங்கால்தான் இது மாறுபட்ட திரைப்படமாகிறது.

ஒரு பேஸ் பால் விளையாட்டு வீரருக்குக் கிடைக்கும் மரியாதையும் கவனிப்பும் ஒரு ட்ரக் ஓட்டுநருக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வசனம் உண்டு. கடைசி வரையில் அந்த ஓட்டுநர் தப்பித்துவிட மாட்டாரா, மனைவி, குழந்தையுடன் சேர்ந்துவிட மாட்டாரா என்ற ரசிகரின் எதிர்பார்ப்பு கடைசியில் பொய்த்துப்போகும்போது அந்தப் படம் உருவாக்கப்பட்டதன் காரணம் புரிந்துவிடும்.

குற்ற உணர்வின் கைதியாக…

குற்ற உணர்வே அற்ற அதிகாரிகளைக் கொண்ட நிறுவனத்தின் கதையை ‘பரீட்’ காட்சிப்படுத்தியிருந்தது என்றால், குற்ற உணர்வு காரணமாகத் தன் நண்பனின் மீது நீங்காத அன்பு கொண்டு வாழ்ந்த ஓர் இளைஞனைப் பற்றிச் சித்தரிந்திருந்தது, சித்திக் இயக்கிய ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படம். மாறுபட்ட முயற்சிகளுக்கு முகம் கொடுக்காத விஜய் போன்ற நடிகர் நடித்திருந்தும் படம் ஓரளவு ரசனைக்குரியதாக உருவானதற்குக் காரணம் இதன் திரைக்கதைதான். அதன் பலத்தில்தான் படம் நின்றது. விஜயும் சூரியாவும் நண்பர்கள். விஜயின் தங்கை சூரியாவை காதலிப்பார். சூரியா அதை மறுத்துவிட்டு ஓடுவார்.

ஆனால் விஜயோ அந்தக் காதலை ஆதரிக்கவே செய்வார். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க விரும்புவார். இதனிடையே அவரும் சூரியாவும் சேர்ந்து பெரும் செல்வந்தக் குடும்பத்தின் மாளிகைக்குச் செல்ல நேரும். அங்கு தேவயானியுடன் விஜய்க்கு காதல் வரும். அதைத் தொடர்ந்து ஏற்படும் சிக்கல், சூரியாவுக்கும் தேவயானிக்கும் மோதல், நண்பனுக்காகத் திருமணம் வேண்டாம் என விஜய் மறுப்பது எனப் படம் முழுவதும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல முடிச்சுகள் வந்து விழும்.

படத்தின் தொடக்கத்தில் சூரியாவின் தம்பி மரணத்துக்குத் தாமே காரணம் என்ற குற்ற உணர்வாலேயே எல்லோரையும்விட சூரியாமீது அதிக அன்பைப் பொழிபவராக இருக்கும் விஜய் கதாபாத்திரம். படத்தின் இறுதியில் அப்படியே இந்தச் சூழல் சூரியாவுக்கும் பொருந்திவரும். விஜய் சாவுக்குத் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வு சூரியாவைப் பற்றி நிற்கும். இந்த இரு குற்ற உணர்வையும் களைந்து, படத்தை சுபமாகவே முடித்திருப்பார் இயக்குநர். விஜய் என்ற கதாநாயகத்துவ நடிகருக்காக இந்த உணர்வுபூர்வமான படத்தின் கிளைமாக்ஸில் அடிதடி, சண்டை எனச் சும்மா தெறிக்கவிடுவார்கள்.

நம் கதாநாயகர்களது பிம்பம் காரணமாக இப்படிச் சில சேதாரங்கள் திரைக்கதையில் நேரத்தான் செய்யும். அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இயக்குநர்களும் படத்தை உருவாக்குகிறார்கள்; ரசிகர்களும் படத்தைப் பார்க்கிறார்கள். ஆக, ஒரு படத்தில் எத்தனை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதிலோ எத்தனை முடிச்சுகள் உள்ளன என்பதிலோ ரசிகர்களின் கவனம் பதியப்போவதில்லை, அவர்களது கவனமெல்லாம் படம் ரசிக்கத்தகுந்த வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பதிலேயே நிலைத்திருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாஸ்கோப்-32-புதையல்/article9681597.ece

Link to comment
Share on other sites

சினிமாஸ்கோப் 33: உன்னைப் போல் ஒருவன்

 

 
புதிய பறவை
புதிய பறவை
 
 

இயக்குநர் மைக்கேல் ஆண்டர்சன் இயக்கத்தில் 1958-ல் வெளியான திரைப்படம் ‘சேஸ் ஏ குரூக்டு ஷேடோ’. டேவிட் ஆஸ்பார்ன், சார்லெஸ் சின்க்ளெய்ர் ஆகியோருடன் இணைந்து ஆண்டர்சன் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். தன் தந்தையும் சகோதரனும் இறந்த சோகத்தில் இருக்கிறார் அந்த இளம் பெண். அப்போது அவரது வீட்டுக்கு இளைஞர் ஒருவர் வருகிறார். வந்தவர், தான் அந்தப் பெண்ணின் சகோதரன் என்கிறார். இளம் பெண்ணுக்கோ அதிர்ச்சி. ஏனெனில், அவளுடைய சகோதரன் விபத்தில் மரித்துப்போயிருக்கிறான். ஆனால், அவளுடைய சகோதரன் என்பதற்கான எல்லாச் சான்றுகளையும் அந்த இளைஞன் வைத்திருக்கிறான். உள்ளூர் காவல் துறையே குழம்புகிறது.

சான்றுகள் மட்டுமல்ல; அவளுக்கும் சகோதரனுக்கும் தெரிந்த தனிப்பட்ட விஷயங்களைக்கூட அவன் அறிந்திருக்கிறான். அவள் தன் சகோதரனுக்கு, அவன் கடற்கரையை ஒட்டிய மலைச்சாலையின் அபாயகரமான வளைவுகளில் அநாயாசமாக காரோட்டியதற்காகப் பரிசாகத் தந்த சிகரெட் பெட்டி அந்த இளைஞனிடத்தில் இருக்கிறது. சகோதரனைப் போலவே அந்த இளைஞனும் அதே சாலையில் காரோட்டுவதில் சாகசம் நிகழ்த்துகிறான். ஆனாலும் அவன் தன் சகோதரன் அல்ல என்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள். அவன் எதற்காக ஆள் மாறாட்டத்தில் வந்திருக்கிறான்? அவளிடமுள்ள வைரத்தைக் கைப்பற்றவா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காகவா என்பதை அவளால் உணர முடியவில்லை.

அவளுடைய மாமாவை அழைத்துவருகிறார்கள். அவரும் அந்த இளைஞனை அவளுடைய சகோதரன் என்கிறார். எல்லாமே அவளுக்கு எதிராக நிற்கின்றன. இறுதியாக அவனது கைரேகையை எடுத்து அதைப் பரிசோதிக்கிறார்கள். ஒரே மாதிரியான கைரேகை இருவருக்கு அமையாது என்பதால் அவள் அதை மலை போல் நம்பியிருக்கிறாள். ஆனால், அதுவும் அவளை ஏமாற்றிவிடுகிறது. இப்போது இருவரும் ஒருவரே என்ற முடிவுக்கு வந்த நேரத்தில் அந்தப் பெண் வாய் திறக்கிறாள்.

குடும்ப மானத்தைக் காப்பாற்றத் தன் சகோதரனைத் தான் கொன்றதாகச் சொல்கிறாள். இப்போது எல்லோரும் அதை நம்புகிறார்கள். அந்த இளைஞனை அவளுடைய சகோதரன் அல்ல என்று ஒப்புக்கொள்கிறார்கள். இது அத்தனையும் அவர்கள் நடத்திய நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிறது. இப்போது உங்களுக்கு ஒரு தமிழ்ப் படம் ஞாபகத்தில் வந்திருக்கும்.

வங்கமொழியில் ‘சேஷ் அங்கா’

இந்த ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவி 1963-ல் ‘சேஷ் அங்கா’ என்ற வங்க மொழித் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதை இயக்கியவர் ஹரிதாஸ் பட்டாச்சார்யா. திரைக்கதையை அவருடன் ஷியாமள் குப்தா, ராஜ்குமார் மொய்த்ரா ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர். வங்காளத்தின் புகழ்பெற்ற நடிகர் உத்தம் குமார், ஷர்மிளா தாகூர் ஆகியோர் நடித்திருந்தனர். ஆங்கிலப் படத்தின் கதையை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதில் பல மாற்றங்களைச் செய்திருப்பார்கள்.

ஆங்கிலப் படத்தில் நாயகியிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் வைரம் என்ற விஷயம் வங்காளப் படத்தில் கிடையாது. அதே போல் சகோதர சகோதரி என்ற உறவு இங்கே கணவன் மனைவியாக மாற்றப்பட்டிருக்கும். சுதான்ஷு குப்தா என்னும் தொழிலதிபர் தன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காகக் கிளம்புவதில் படம் தொடங்கும். அவருக்கும் ஷோமா என்பவருக்கும் நடைபெறும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கல்பனா குப்தா என்பவர் சுதான்ஷுவுடைய மனைவி என்று சொல்லிக் குறுக்கிடுவார். வழக்கறிஞருடன் வந்த கல்பனா குப்தா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நிறுத்திவிடுவார்.

தன் மனைவி பர்மாவில் ரங்கூனில் வைத்து விபத்தில் இறந்துவிட்டதாகவும் அவளுடைய இறப்புச் சான்றிதழ் தன்னிடம் உள்ளதாகவும் சுதான்ஷு குப்தா தெரிவிப்பார். வந்திருக்கும் பெண் யாரென்று தனக்குத் தெரியாது என்றும் அவரது நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் சொல்வார். கல்பனா குப்தா மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்.

காவல் நிலையத்தில் வழக்குத் தொடுப்பார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும். ஆனால், பெரும்பாலான சான்றுகள் கல்பனா குப்தா சுதான்ஷு குப்தாவின் மனைவி என்பதை நிரூபிக்கும் வகையிலேயே அமையும். இறுதியாக ஷோமாவும் தன் கையைவிட்டுப் போகும் நிலையில் சுதான்ஷு குப்தா தன் மனைவியைத் தானே கொன்றுவிட்டதாக ஒப்புக்கொள்வார். அவரது வாக்குமூலத்தைப் பெற நடத்தப்பட்ட நாடகமே இது என்பதும் தெளிவாகும்.

sesh_3163435a.jpg

உயரப் பறந்த பறவை

இந்த இரண்டு கதைகளைப் படித்ததுமே இவற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட, தாதா மிராசி இயக்கத்தில் 1964-ல் வெளியான படமான ‘புதிய பறவை’ உங்கள் நினைவுகளில் சிறகசைத்திருக்கும். இதே கதையை மலையாளத்தில் மம்முட்டியைக் கதாநாயகனாகக் கொண்டு ஜி.எஸ். விஜயன் என்னும் இயக்குநர் படமாக்கினார். 1989-ல் வெளியான சரித்ரம் என்னும் அந்தப் படத்தில் உறவு அண்ணன் தம்பியாக மாறியிருக்கும். அண்ணனாக மம்முட்டியும் தம்பியாக ரகுமானும் நடித்திருப்பார்கள்.

இந்தப் படத்தில் சிவன் குட்டி என்னும் திரைப்படக் கதையாசிரியர் வேடத்தில் ஜெகதி ஸ்ரீகுமார் நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரமே உலகப் படங்களைப் பார்த்து உள்ளூரில் கதை பண்ணும் வேலையைத்தான் செய்யும். அவர் ஒரு காட்சியில், இறந்துபோன தம்பி உயிருடன் வரும்போது, ‘சேஸ் ஏ குரூக்டு ஷேடோ’ படத்தில் வருவது போலவே உள்ளதே என்பார். மலையாளிகள் எப்போதுமே கெட்டிக்காரர்கள்.

புதிய பறவை வங்காளப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகவே அதன் டைட்டில் தெரிவிக்கிறது. ‘புதிய பறவை’யின் திரைக்கதையை பி.பி.சந்திரா என்பவர் எழுதியிருப்பார். வசனம் ஆரூர் தாஸ். சிவாஜி கணேசனுக்காகத் திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்திருப்பார்கள். வங்கப் படத்தில் காதல் உள்ளுறை வெப்பமாக இருக்கும். ஆனால், புதிய பறவையில் காதல் அனலாகக் கொதிக்கும். நவீன பாணி உடை, பகட்டான ஒப்பனை, உணர்வுபூர்வமான காட்சியமைப்புகள், அட்டகாசமான பாடல்கள், ஆர்ப்பரிக்கும் இசை போன்ற எல்லாவற்றையும் சேர்த்துப் படத்தைப் பிரம்மாண்டமான இசை நாடகம் போலவே உருவாக்கியிருப்பார்கள்.

காட்சியமைப்பில் கண்ணாமூச்சி

பாடல் காட்சியில் உடலழகைக் காட்டும் வகையில் பனியன் போடாமல் மெல்லிய வெள்ளைச் சட்டையை மட்டும் சிவாஜி அணிந்திருப்பார். இந்த உத்தியைப் பணக்காரன் படத்தில் ரஜினி காப்பியடித்திருப்பர். ஆங்கிலப் படத்தின் நாயகியும், வங்க நாயகனும் புகைபிடிப்பவர்கள். அதைப் போலவே சிவாஜியும் படத்தில் மிகவும் ஸ்டைலாகப் புகைபிடித்துக்கொண்டேயிருப்பார். உணவு மேசையில் அமர்ந்திருக்கும்போதுகூட அவரது விரலிடுக்கில் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும். கைரேகையை எடுக்கும் காட்சி வங்கப் படத்தில் கிடையாது ஆனால், ஆங்கிலப் படத்திலும் ‘புதிய பறவை’யிலும் உண்டு.

சிவாஜியின் நடிப்பு, அதிலும் இறுதிக் காட்சியில் எல்லாமே நாடகம் என்பதை உணர்ந்ததும் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, வசன உச்சரிப்பு எல்லாமே நயமான நாடக பாணியில் அமைந்திருக்கும். இதற்கு முன்னர் வெளியான இரண்டு படங்களிலுமே கதாபாத்திரங்கள் தம் இயல்புக்குள்ளேயே சுருண்டுதான் கிடக்கும். ஆனால், சிவாஜி என்னும் மாபெரும் நடிகர் கோபால் என்னும் கதாபாத்திரத்துக்குள் அடங்காமல் மேலெழுந்து கர்ஜிப்பார். சிவாஜியின் ரசிகர்களும் திரையரங்கில் ஆரவாரக் கூச்சலிடுவார்கள். இப்படிப் படமாக்கப்படாமல் அந்த இரண்டு படங்களையும் போல பெரிய சத்தமின்றி உருவாக்கப்பட்டிருந்தால் ‘புதிய பறவை’க்குப் பெரிய வணிக வெற்றி கிடைத்திருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாஸ்கோப்-33-உன்னைப்-போல்-ஒருவன்/article9693098.ece?homepage=true

Link to comment
Share on other sites

சினிமாஸ்கோப் 34: நான் மகான் அல்ல

 

 
படம் உதவி: ஞானம்
படம் உதவி: ஞானம்
 
 

திரைக்கதைகளுக்கு நடிகர்களைத் தேடுவதற்கும் நடிகர்களுக்குத் திரைக்கதை எழுதுவதற்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசமிருக்கிறது. திரைக்கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தைத் தேடும்போது அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைகளை மட்டும் வெளிப்படுத்தினாலே போதும். கதாபாத்திரத்தின் குணாதிசயம் புரிந்துவிடும். நாயக நடிகர்களுக்குத் திரைக்கதை எழுதும்போது அவர்களின் குணநலன்களையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். அவற்றையும் சேர்த்துத்தான் ரசிகர்கள் கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

நடிகர்களுக்குப் பொருந்தாத குணாதிசயத்தைக் கதாபாத்திரத்திடம் தவிர்த்திட வேண்டும். இல்லையென்றால் அந்தக் கதாபாத்திரம் எடுபடாது. அதனாலேயே நடிகர் எம்.ஜி.ஆர். தனது படங்களில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் குடிப்பதுபோலவோ, புகைப்பதுபோலவோ காட்சிகள் அமைப்பதைத் தவிர்த்தார். அப்படியான காட்சிகள் தனது இமேஜைச் சரித்துவிடக்கூடியவை என நம்பிச் செயல்பட்டார் அவர்.

புதுமுகங்கள் ஏன் தேவை

எம்.ஜி.ஆர். இயல்பில் நல்லவரா கெட்டவரா என்பது வேறு விஷயம். ஆனால், ரசிகர்கள் பார்க்க விரும்பிய நல்ல எம்.ஜி.ஆர். மட்டுமே திரையில் காட்சி தந்தார். கதாபாத்திரங்களது குணாதிசயம் நடிகர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் காரணமாகவே அவர் அந்தப் புரிதலைக் கொண்டிருந்திருக்கலாம். எனவேதான், புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, புதுமுக நடிகர்களைக் கொண்டு அல்லது தனக்கென பெரிய இமேஜ் ஏதுமற்ற நடிகர்களைக் கொண்டு பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

‘ஒருதலை ராகம்’, ‘புதுவசந்தம்', ‘சேது’, ‘சுப்பிரமணியபுரம்’, ‘சூது கவ்வும்’ எனப் பல உதாரணங்களைச் சுட்ட முடியும். இப்படியான படங்களின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், அந்த நடிகர்கள் பற்றிய முன்முடிவுகள் எவையும் ரசிகர்களிடம் இருக்காது.

எச்சில் கையால் காக்காவைக்கூட விரட்டாதவர் என்று பெயர் எடுத்த நடிகரை வைத்துக் கொடைவள்ளல் ஒருவரைப் பற்றிய கதையை உருவாக்கும்போது, ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டியதிருக்கிறது. உதாரணத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘லிங்கா’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்றிருந்த கதாபாத்திரம் தனது சொத்தை எல்லாம் விற்று ஊருக்காக அணைகட்டுவது போல திரைக்கதை அமைந்திருக்கும். அது சாத்தியமா என்பதை ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை மட்டும் வைத்துத் தீர்மானிக்கவில்லை கதாபாத்திரத்தை ஏற்றிருந்த நடிகரின் குணநலன்களையும் பரிசீலித்தே தீர்மானித்தார்கள். ஆகவே அந்தத் திரைக்கதை எடுபடாமல் போனது.

சமூகவலை எனும் எழுச்சி

அதே போல் ஒரு திரைக்கதையை எந்தக் காலகட்டத்தில், யாருக்காக எழுதுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே உத்தியை எப்போதும் பின்பற்றும் போக்கும் ஆபத்தானது. ‘லிங்கா’ திரைப்படம் எண்பதுகளில் வெளியாகியிருந்தால் ஒருவேளை அது மிகப் பெரிய வெற்றியைக்கூடப் பெற்றிருக்க முடியும். அன்று ரஜினி காந்த் என்ற நடிகருக்கு மிகப் பெரிய இமேஜ் இருந்தது. சமூக வலைத்தளங்களின் அபரிமிதமான வளர்ச்சி ரஜினி காந்தின் முகமூடியை அகற்றியிருக்கிறது. இந்தச் சூழலில் வெளியான ‘லிங்கா’வின் திரைக்கதை ரசிகர்களுக்கு அந்நியமாகப் பட்டிருக்கலாம்.

இந்தப் படத்தின் தோல்வி தந்த பாடத்தாலேயே அதன் பின்னர் வெளியான ‘கபாலி’ என்ற ரஜினி காந்த் படம் தலித் சினிமா என்று முன்னிறுத்தப்பட்டு வெற்றியை நோக்கி நகர்த்தப்பட்டது என்பதாகவும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ரஜினி காந்த் என்னும் நடிகருக்கான திரைக்கதையை எழுதுவது பெரிய கம்ப சூத்திரமல்ல; ஆனால், ஏழு கடல் தாண்டி, எட்டு மலை தாண்டிச் சென்று திரைக்கதையைப் பெற்று வந்தது போல் காட்டிக்கொள்ள வேண்டும். ‘அருணாச்சலம்’ என்னும் சாதாரணப் படத்துக்காக என்னவெல்லாம் கதைகள் பரப்பப்பட்டன என்பதைக் கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்.

ரஜினி காந்தை முன்வைத்துச் செய்யப்படும் பல கோடி ரூபாய் வியாபாரத்தின் பொருட்டே இந்தத் திரைக்கதைக்காக, இந்தத் திரைப்படத்துக்காக எப்படி எல்லாம் சிரமப்பட்டிருக்கிறோம் என்ற விஷயங்களை எல்லாம் படம் தொடங்கிய நாள் முதலே ஊடகங்களின் உதவியுடன் பார்வையாளர்களிடம் பரப்புகிறார்கள்.

திரைபிம்பம் முன்னிறுத்தும் ரஜினி

ரஜினியைப் பொறுத்தவரை, அவர் திரைப்படங்களில் ஏழைகளுக்கு உதவுவார்; பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பார்; அநியாயங்கள் கண்டு பொங்குவார்; அம்மா, தங்கை என்றால் நெகிழ்வார். மொத்தத்தில் திரைப்படங்களில் அவர் ஓர் ஏழைப் பங்காளன்; ஒரு நவீன கால ராபின்ஹூட். பெரும்பாலான திரைப்படங்களில் இப்படியான திரைக்கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவந்தவர் அவர்.

எப்போதுமே வலுவான திரைக்கதையிலேயே திறமையான நடிகரின் பங்களிப்பு பளிச்சிடும். ரஜினி காந்தின் படங்களில் திரைக்கதையை வலுவேற்றுவதற்காக அவரது தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை இணைத்துக் காட்சிகள் அமைக்கப்பட்டதும் தமிழ்த் திரை கண்ட ஒன்றே. தமிழில் பெரிய வெற்றிபெற்ற ‘மன்னன்’ படம் ‘அனுராகா அரளிது’ என்னும் கன்னடப் படத்தின் மறு ஆக்கம்தான். இந்தப் படத்தில் விஜயசாந்தி ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்கு எதிராக ரஜினி காந்த் பேசும் வசனங்கள் அரசியல்ரீதியாக அவருடைய ரசிகர்களால் அர்த்தம்கொள்ளப்பட்டன. ‘மன்னன்’ படத்தில் ரஜினி காந்த் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருப்பார். ‘அடிக்குது குளிரு’ என்னும் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஜன்னி வந்துவிடும். என்றபோதும் அந்தப் படம் பெற்ற வெற்றிக்குத் தமிழக ரசிகர்களின் இந்தப் புரிதலும் காரணமானது.

திரைக்கதையின் பலம்

இதற்கு அடுத்து வெளிவந்த ‘அண்ணாமலை’ படத்தில் அரசியல்ரீதியான வசனங்கள் படு வெளிப்படையாகவே அமைக்கப்பட்டிருந்தன. வினுச்சக்ரவர்த்தி ஏற்றிருந்த ஏகாம்பரம் எனும் அரசியல் கதாபாத்திரத்துக்கு எதிராக ரஜினி பேசும் வசனங்கள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரானதாக ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டுப் பலத்த கைதட்டலைப் பெற்றுத் தந்தன. ‘அண்ணாமலை’யின் மூலப் படமான ‘குத்கர்ஸ்’ என்னும் இந்திப் படத்தில் இந்தக் காட்சிகள் கிடையாது. இவை தமிழுக்காகவே செய்யப்பட்ட மாற்றங்கள். அதுவும் ரஜினி கதாபாத்திரம் கேமராவைப் பார்த்தே சவால் விடும்; வசனங்களைப் பேசும்.

‘அண்ணாமலை’ பெற்ற வணிக வெற்றியால் இப்படியான வசனங்கள் அவருடைய படங்களான ‘பாண்டியன்’, ‘உழைப்பாளி’, ‘முத்து’ போன்றவற்றிலும் தொடர்ந்தது. ஆனால், இத்தகைய வசனங்கள் பாண்டியனுக்குக் கைகொடுக்கவில்லை. அது ‘பாம்பே தாதா’ என்னும் கன்னடப் படத்தின் மறு ஆக்கமாகவே உருவானது. ஆனாலும், ஜெயசுதாவைப் பார்த்து ரஜினி பேசும் பல வசனங்கள் ஜெயலலிதாவைப் பார்த்துப் பேசப்படுவதாக நினைத்தே ரசிகர்கள் படத்தைப் பார்த்தனர். ஆனாலும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஆக, மக்கள் செல்வாக்குப் பெற்ற நட்சத்திரமாக இருந்தாலும் திரைக்கதை சரியாகச் சோபிக்கவில்லை எனில் நட்சத்திரத்தின் உழைப்பு வீண்தான் என்பதே பாலபாடம். ரஜினி காந்த் பெரிய நடிகர், ரசிகர்கள் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது உண்மை எனில், ரஜினி காந்த் ஆத்மார்த்தமாக நடித்துக் கொடுத்த ‘ஸ்ரீராகவேந்திரர்’, அவர் கதை வசனம் எழுதிய ‘வள்ளி’, ஆன்மிக அனுபவமாகக் கருதி நடித்த ‘பாபா’ போன்றவை பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவை தோல்வியே கண்டன. திரைக்கதையின் பலத்திலேயே நடிகர்கள் ஜொலிக்க முடியும்; நடிகர்கள் பலத்தில் திரைக்கதை ஜொலிக்காது என்பதையே அது உணர்த்துகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாஸ்கோப்-34-நான்-மகான்-அல்ல/article9707094.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

சினிமாஸ்கோப் 35: புதுப்புது அர்த்தங்கள்

 

 
 
 
 
'த பேனிஷ்மெண்ட்' - 'நெஞ்சமெல்லாம் நீயே'
'த பேனிஷ்மெண்ட்' - 'நெஞ்சமெல்லாம் நீயே'
 
 

விலக்க இயலாத நெருக்கமும் விளக்க முடியாத இடைவெளியும் கொண்ட கணவன் மனைவி உறவு அந்தரங்கமானது; ஆத்மார்த்தமானது. அந்த உறவுக்கென மரபு சார்ந்த சில நியதிகளும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. தனி மனித மனம் விதிமுறைகளை மீறவே யத்தனிக்கும். இரு நபர்களுக்கிடையேயான அந்த உறவில் மூன்றாம் நபர் குறுக்கிடும்போது ஏற்படும் விரிசல் அல்லது விரிசல் காரணமாக மூன்றாம் நபர் உள்நுழைதல், சிக்கலுக்கும் அதே நேரத்தில் படைப்புக்கும் அடித்தளமிடும். ஆகவே, அதனடிப்படையில் அநேகப் படங்களை இயக்குநர்கள் உருவாக்கிவிடுகிறார்கள்.

சில நிர்ணயங்களுக்குள் வாழ்வதும் ஒரு வாழ்க்கை, சில நியதிகளை மீறி வாழ்வதும் ஒரு வாழ்க்கை. மீறிய இவர்கள் புதிய வார்ப்புகள் என்ற வாக்கியங்களுடன் நிறைவுபெறும், பாரதிராஜா திரைக்கதை இயக்கத்தில் தயாரான ‘புதிய வார்ப்புகள்’ (1979) படம். இந்தப் படத்தில் தன் மனைவி ஜோதியின் (ரதி) கழுத்தில் சுருக்குக் கயிறு போன்று தான் கட்டிய தாலியை அறுத்தெறிந்து, அவளை அவளுடைய காதலன் சண்முகமணியுடன் (கே.பாக்யராஜ்) அனுப்புவான் அமாவாசை (கவுண்டமணி). ஆர். செல்வராஜ் கதை எழுதிய இந்தப் படத்தின் வசனம் கே. பாக்யராஜ்.

அறுத்தெறியப்படும் தாலி

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இதே பாக்யராஜ் ‘எண்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும் ஆனால், உங்கள் மனைவி எனக்குக் காதலியாயிட்டு வராது’ என்று ‘அந்த 7 நாட்க’ளில் வசனம் பேசுவார். இது வெளியானது 1981-ல். பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1991-ல் வெளியான ‘புதிய ராகம்’ படத்தில் ஒருவருடைய மனைவியான பின்னரும் ஒரு பெண் தன் காதலருடன் இணைந்துவிடுவாள். ‘அந்த 7 நாட்க’ளில் பெண்ணின் பெருமையாக, மண்ணின் மகிமையாகப் போற்றப்பட்ட மஞ்சள் நிறத் தாலி, இந்தப் படத்தில் மலம் போல் டாய்லெட் கோப்பைக்குள் மூழ்கடிக்கப்படும். இதைத் தயாரித்து இயக்கியவர் நடிகை ஜெயசித்ரா. இது அவருடைய முதல் படம். இளையராஜாவின் இசையில் வெளியான இந்தப் படத்துக்கு ஜீவனளித்ததில் இசைக்கு முக்கியப் பங்குண்டு.

‘புரியாத புதிர்’ (1990) படத்தில் சந்தேகப்படும் கணவனாக நடித்த ரகுவரன் ‘புதிய ராக’த்திலும் அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் வெளியான ‘தொட்டாற்சிணுங்கி’யிலும் ரகுவரனுக்கு இதே போன்ற வேடம்தான். ‘புதிய ராகம்’ பட நாயகியான, பாடகி ஜெயசித்ராவின் வருமானத்தில் வாழும் ரகுவரனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை.

அனைத்தையும் தாலிக்காகப் பொறுத்துக்கொண்ட ஜெயசித்ராவால் அவன் தன் கர்ப்பப் பையை அறுத்தெறிந்ததை மட்டும் தாங்கிக்கொள்ள முடியாமல், தாலியைத் துச்சமாக மதித்து - அதையும் அவன்தான் அறுத்தெறிவான் - தூக்கி எறிந்துவிட்டுத் தன் காதலனுடன் வாழ வருவாள் நாயகி. கணவன் மனைவி உறவில் காதல் இல்லாமல் போகும்போது அங்கே விரிசல் உண்டாகிறது. இந்தக் காதலின் அவசியத்தை அழகாக உணர்த்தும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் வெளியான ‘த பிரிட்ஜெஸ் ஆஃப் மேடிசன் கவுண்டி’. தன் வாழ்நாளில் நான்கு நாட்கள் மட்டுமே நீடித்த காதல் நினைவுகளிலும் காதலன் ஞாபகங்களிலும் எஞ்சிய வாழ்நாளையே கழிக்கும் மனைவியின் கதை அது.

கணவனைப் பங்குபோடும் மனைவி

இயக்குநர் கே .ரங்கராஜ் இயக்கிய முதல் படமான ‘நெஞ்சமெல்லாம் நீயே’ (1983) படத்தில் கணவன் மனைவிக்கிடையேயான விரிசல் காரணமாகக் காதல் காணாமல்போகும். ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது’ என்னும் சங்கர் கணேஷின் பாடல் வழியே இந்தப் படத்தை எளிதில் நினைவுகூரலாம். ‘ஒரு மனைவி எதை வேண்டுமானாலும் பங்கு போட்டுக்கொள்வாள் ஆனால், தன் கணவனைப் பங்குபோட மாட்டாள்’ என்ற ஐதீகத்தைப் புறந்தள்ளிய படம் இது.

இதில் தன் தோழிக்காகத் தன் கணவனையே தந்துவிடுவாள் ஒரு மனைவி. தான் நேசித்து மணந்தவன் தன் தோழியின் கணவன் என்பதை அறிந்து உயிரையே விட்டுவிடுவாள் ஒரு பெண். தான் நேசிக்கும் மனைவியின் விருப்பத்துக்காக அவளுடைய தோழியை மணக்கச் சம்மதிப்பான் ஒருவன். யதார்த்தத்தில் சாத்தியப்படாத அசாத்திய விஷயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை. இதன் வழியே கணவன் மனைவி உறவு குறித்த பரிசீலனை மேற்கொள்ளப்படும்.

கே.பாக்யராஜின் ‘மௌன கீதங்க’ளில் ஒருமுறை மற்றொரு பெண்ணை நாடிய கணவனை விட்டு விலகிவிடுவாள் ஒரு மனைவி. திரும்பவும் அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்ற திரைக்கதை வழியே கணவன் மனைவி உறவில் மேற்கொள்ள வேண்டிய சில சமரசங்களைச் சுட்டிச் செல்வார் பாக்யராஜ். கே.ரங்கராஜின் ‘உன்னை நான் சந்தித்தேன்’ (1984) படத்தில் தன் மேல் சந்தேகப்படும் கணவனின் போக்கு பிடிக்காமல், எந்தத் தவறும் செய்யாத அந்த மனைவி கணவனை விட்டு விலகிவிடுவாள்.

அவள், தன் மனைவியின் நினைவில் வாழும் குடிகார மனிதர் ஒருவருடைய குழந்தையின் நல்வாழ்வுக்காக அவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பாள். அவர் இறந்த பின்னர் அந்த மகளுக்காகத் தன் பூவையும் பொட்டையும் இழப்பாள். அதே கோலத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு தன் கணவனைச் சந்திப்பாள். அதன் பின்னர் அவள் வாழ்வு என்ன ஆனது என்பது எஞ்சிய திரைக்கதை.

குறுக்கீடாக வரும் உறவு

எந்த நாடானாலும் தன் மனைவி மற்றொரு மனிதரின் கருவைச் சுமந்தால் அவளுடைய கணவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாதுதான்போல. ரஷ்யப் படமான ‘த பேனிஷ்மெண்’டில் (2007) ‘தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால், அந்தக் குழந்தை உன்னுடையதில்லை என்றும் ‘ஒரு மனைவி தன் கணவனிடம் கூறுவாள். அதைக் கேட்டு நொறுங்கிப்போவான் அந்தக் கணவன். ஏற்கெனவே அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் வேறு இருக்கும். இந்த நிலையில் இந்த விஷயத்தை எப்படி அணுகுகிறான் என்பதை அந்தப் படம் திரைக்கதையாக விரித்திருக்கும்; அதன் முடிவோ அதிர்ச்சி தரத்தக்கதாக இருக்கும்.

இந்தப் படத்தை இயக்கிய ஆந்த்ரேய் ஜயஜிந்த்சேவின் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தின் காட்சிக் கோணங்களும் படத்தின் பின்னணியில் ஒலிக்கும் சப்தங்களும் படமாக்கப்பட்ட நிலக் காட்சிகளும் கட்டிடங்களும் கதாபாத்திரங்களின் மவுனங்களும் காட்சியின் இடையே நீளும் அமைதியும் இவை எல்லாமும் சேர்ந்து கதாபாத்திரங்களின் உணர்வை அப்படியே பார்வையாளர்களுக்குள் ஊற்றும்.

கடந்த ஆண்டில் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் ஆஸ்கர் வென்ற ‘த சேல்ஸ்மேன்’ (2016) படத்திலும் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே குறுக்கீடாக வந்துசேர்ந்த ஒரு மனிதரால் நேரும் அலைக்கழிப்பே திரைக்கதையாகியிருக்கும். திரைப்படங்களின் வாயிலாக நாம் காணும் கணவன் மனைவி உறவை வைத்துப் பார்க்கும்போது, உலகின் எல்லாப் பகுதிகளிலும் கணவன் மனைவி உறவு என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிக்கல்களைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால், நமது உறவுகளில் முக்கிய இடம் பெறும் மஞ்சள், குங்குமம், தாலி, பூ போன்ற விஷயங்களைப் பிற நாட்டுப் பார்வையாளர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாஸ்கோப்-35-புதுப்புது-அர்த்தங்கள்/article9712601.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சினிமாஸ்கோப் 36: அபூர்வ சகோதரிகள்

 

 
 
scope_3172973f.jpg
 
 
 

திரைக்கதையைச் சுவாரசியமாக்கப் பயன்படும் உத்திகளில் ஒன்று ஆள்மாறாட்டம். ஒரே போல் தோற்றம் கொண்ட இருவர் இடம் மாறினால் ஏற்படும் குழப்பங்களைத் திரைக்கதையாக்கும் போக்கும், ஹாலிவுட் படங்களைத் தழுவும் போக்கும், ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சிபோல் பி.யூ.சின்னப்பா நடித்த ‘உத்தம புத்திரன்’ (1940) காலத்திலிருந்தே இருந்துவருகிறது. ஹாலிவுட் படமான ‘த மேன் இன் தி அயன் மாஸ்க்’ (1939) படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தை இயக்கியவர் மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம். இது அலெக்சாந்தர் துமா எழுதிய பிரெஞ்சுக் கதையின் திரைவடிவமே. இதன் பின்னர் சிவாஜி கணேசன் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த ‘உத்தம புத்திரன்’ டி.பிரகாஷ் ராவின் இயக்கத்தில் 1958-ல் வெளியானது.

சிவாஜி மாத்திரமல்ல; எம்.ஜி.ஆர்., கமல் ஹாசன், ரஜினிகாந்த், அஜித் போன்ற அனைத்து நடிகர்களும் ஆள்மாறாட்ட உத்தி கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர்கள் மட்டுமல்ல; சாவித்திரி (காத்திருந்த கண்கள்), வாணிஸ்ரீ (வாணிராணி), அம்பிகா (தங்கமடி தங்கம் – ‘அத்தமக தங்கத்துக்கு என்ன மயக்கம்’ என்னும் இளையராஜாவின் பாடல் இடம்பெற்ற படம்), சிநேகா (பார்த்திபன் கனவு) உள்ளிட்ட நடிகைகளும் இப்படியான கதைகளில் நடித்திருக்கிறார்கள்.

காத்திருந்த கண்கள்

சிவாஜியின் ‘உத்தம புத்திர’னை இயக்கிய டி.பிரகாஷ் ராவ்தான் சாவித்திரி இரட்டை வேடத்தில் நடித்த ‘காத்திருந்த கண்கள்’ (1962) படத்தையும் இயக்கியிருந்தார். வளர்ந்த கலை மறந்துவிட்டாள் பாரடா கண்ணா, ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே உள்ளிட்ட பல இனிய பாடல்கள் கொண்ட படம் இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘படகோட்டி’ படத்தை இயக்கியவர் இவர். சிவாஜி நடித்த ‘வசந்த மாளிகை’ படத்தை இயக்கியவரும் ஒரு பிரகாஷ் ராவ்தான். அவர் கே.எஸ்.பிரகாஷ் ராவ். ஸ்ரீமதி மாளபிகாராய் என்னும் வங்காள எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘காத்திருந்த கண்கள்’ திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார்கள் எம்.எஸ்.சோலைமலையும் மாராவும். இதில் இரண்டு சாவித்திரிகளும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள். ஆனால், பிறந்த சில மணி நேரத்திலேயே இருவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்வைத் தொடர்கிறார்கள்.

லலிதா நகரத்தில் வளமையான வீட்டிலும், கிராமத்தில் வறுமை நிறைந்த குடும்பத்தில் செண்பகமும் வளர்கிறார்கள், நாட்டுவைத்தியம் செய்யும் குடும்பத்தில் பிறந்து, ஆங்கில மருத்துவம் பயின்ற டாக்டர் வேடம் ஜெமினி கணேசனுக்கு. செண்பகத்தின் தாயைக் குணப்படுத்த ஜெமினி அவர்கள் வீட்டுக்கு வருகிறார். அவரது பண்பு செண்பகத்தைக் கவர்ந்துவிடுகிறது. ஜெமினியை அவர் தன் கணவனாகவே வரித்துவிடுகிறார். ஆனால் ஜெமினியோ செண்பகத்தைப் பார்த்திருக்கவே மாட்டார்.

சூழல் காரணமாக நகரத்துக்கு வரும் ஜெமினிக்கு லலிதா அறிமுகமாக, இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். மணமாக வேண்டிய சமயத்தில் லலிதா சென்ற ஒரு ரயில் விபத்தில் சிக்குகிறது. அதே ரயிலில் வந்த செண்பகம், லலிதாவின் வீட்டுக்கு வருகிறார். ரயில் விபத்தில் லலிதா இறந்துவிட்டதாக செண்பகம் நினைத்துக்கொள்கிறார். ஜெமினியும் லலிதாவும் காதலர்கள் என்பதையும் அறிந்துகொள்கிறார். தான் விரும்பிய காதலனை அடைவதற்காக தானே லலிதாவாக மாறிவிடுகிறார்.

எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருக்கும்போது, லலிதா உயிருடன் இருப்பது ரசிகர்களுக்குத் தெரியவருகிறது. ஒரு திரைக்கதையில் இப்படியான திருப்பங்களும் எதிர்பாராத மாற்றங்களையும்தானே ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஓவியம் வரையத் தெரிந்தவர் லலிதா, செண்பகமோ அந்தக் கலை அறியாதவர். இதை வைத்து திரைக்கதையில் சில ருசிகரக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். பின்னர் லலிதா, செண்பகம், ஜெமினி வாழ்வில் ஏற்படும் குழப்பங்களும் அவர்கள் கண்டடையும் தீர்வுகளுமென எஞ்சிய படம் நகர்ந்திருக்கும்.

இடம் மாறிய விருதுகள்

இந்தப் படம் வெளியான 41 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்குவந்த படம் ‘பார்த்திபன் கனவு’ (2003). கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த இது காதலை உள்ளடக்கிய ஃபேமிலி ட்ராமா. சில பாடல்களும் சண்டைக் காட்சிகளும் திரைக்கதையும் இதை ஒரு பொழுதுபோக்குப் படமாக மாற்றியிருக்கும். கே. பாலசந்தரின் படத்தைப் போன்று வார்த்தை விளையாட்டு அதிகம் இப்படத்தில். இந்தப் படத்துக்குச் சிறந்த படம், சிறந்த இயக்குநர் போன்ற பல பிரிவுகளில் தமிழக அரசு விருதும் கிடைத்திருக்கிறது. நாயகனான ஸ்ரீகாந்த் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார் என்ற செய்தி ஆச்சரியத்தை அதிகப்படுத்தும்.

ஆனால் சிநேகாவின் இரட்டை வேட நடிப்பில் காட்டிய மாறுபாடு கவனிக்கும்படியாக இருந்த படம். ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ படத்தில் டணால் தங்கவேலு செய்திருந்த வேலையற்ற கணவன் நகைச்சுவையின் சாயலில் நடிகர் விவேக்கின் காமெடி டிராக் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இதற்காகச் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் நடிகர் விவேக் பெற்றுள்ளார்.

ஒரே தோற்றத்தால் உளச் சிக்கல்

‘காத்திருந்த கண்க’ளைப் போல் ஒரே குடும்பத்து இரட்டையரல்ல இதன் மையப் பாத்திரங்கள். இதில் வெவ்வேறு பகுதியில் வாழும் இருவரது ஒரே தோற்றம் காரணமான குழப்பங்களே திரைக்கதையானது. வழக்கமான வாழ்விலிருந்து விலகி ரசனையான வாழ்வுக்கும் காதலுக்கும் ஆசைப்படும் நவீன இளைஞன் பார்த்திபன். (ஸ்ரீ காந்த்). காற்றில் பறக்கும் கேசம், கலகலவென்ற சிரிப்பு என நவீனப் பெண்ணாக அவர் கண் முன்னால் அடிக்கடி வந்துபோகிறார் ஒரு பெண் (சிநேகா). அவரைப் பார்த்த கணத்திலேயே இவர்தான் தன் துணைவி என்றே எண்ணிவிடுகிறார் பார்த்திபன்.

அதே நேரத்தில் அவரது குடும்பத்திலும் சத்யா என்னும் ஒரு பெண்ணைப் பார்க்கச் சொல்கிறார்கள். வேண்டா வெறுப்பாகச் செல்லும் பார்த்திபனுக்கு ஆனந்த அதிர்ச்சி. அவர் சாலையில் பார்த்த பெண்ணே அவர். உடனே சம்மதம் தெரிவித்து விடுகிறார். மணமும் முடிந்துவிடுகிறது. மனைவியுடன் காரில் செல்லும்போது, எப்போதும் போல் அதே பெண், அதே புன்னகையுடன் சாலையைக் கடக்கிறாள். பார்த்திபனால் அந்தக் கணத்தின் கனத்தைத் தாங்க இயலாமல் போகிறது.

விசாரிக்கும் போதுதான் ஆசைப்பட்ட பெண்ணின் பெயர் ஜனனி என்பதும் அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவருகிறது. அதே ஜனனி பார்த்திபனின் வீட்டெதிரே குடிவருகிறார். இதன் காரணமான சிக்கல்கள் உருவாகின்றன, பின்னர் அவை தீர்ந்து படம் சுபத்துக்கு வந்து சேர்கிறது. இந்தப் படத்தை ‘அம்மாயி பாகுந்தி’ என்னும் பெயரில் தெலுங்கில் (இது ‘மஞ்சு பெய்யும் முன்பே’ என்னும் பெயரில் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது) மறு ஆக்கம் செய்திருக்கிறார் ‘லவ்டுடே’ பாலசேகரன்.

சிநேகாவுக்குப் பதில் மீரா ஜாஸ்மின். இரு மொழிகளிலும் சத்யாதான், தமிழின் ஜனனி தெலுங்கிலும் ஜனனிதான் ஆனால், மலையாளத்தில் ரஜினி ஆகிவிடுகிறார். தமிழில் சத்யாவுக்கு பாக்யராஜ் படம் பிடிக்கிறது. மலையாளத்திலும் தெலுங்கிலும் சத்யாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல் பிடிக்கிறது. சின்னச் சின்ன மாற்றங்கள் உண்டு மற்றபடி தமிழ்ப் படத்தை அப்படியே தெலுங்கில் நகலெடுத்திருக்கிறார்கள்.

நாற்பதாண்டுகள் இடைவெளி இருந்தபோதும் ‘காத்திருந்த கண்கள்’, ‘பார்த்திபன் கனவு’ இரண்டுமே திருமணம் என்ற சடங்குக்கு மரியாதை தர வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. இரண்டிலும் நாயகர்கள் ஆசைப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யவில்லை; தம் விருப்பங்களைப் பலிகொடுத்து நிற்கிறார்கள் ஆனாலும், மணவாழ்க்கையின் மகத்துவத்தை வலியுறுத்தும் திரைக்கதைகளே இவை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாஸ்கோப்-36-அபூர்வ-சகோதரிகள்/article9722724.ece

Link to comment
Share on other sites

சினிமாஸ்கோப் 37: மனசுக்குள் மத்தாப்பூ

 
ஆளவந்தான்
ஆளவந்தான்
 
 

எல்லோருமே மனநிலைப் பாதிப்பு கொண்ட ஒருவரை வாழ்வின் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்திருப்போம். ஆனால், உடம்பு நோயைப் புரிந்துகொள்வது போல் மன நோயைப் புரிந்துகொள்கிறோமா என்பது சந்தேகமே. மனநிலைப் பிறழ்வு, மனச்சிதைவு என பல மன நோய்கள் உள்ளன. இவற்றை வைத்துப் பல திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. பொதுவாக மனநிலைப் பிறழ்வு என்பதை நமது படங்கள் இறப்புக்குப் பதிலான இன்னொரு உத்தியாகவே பயன்படுத்துகின்றன.

‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘காதல்’ போன்ற படங்களில் தாங்க முடியாத துக்கத்தாலும் ‘மூன்றாம்பிறை’, ‘சேது’ போன்ற படங்களில் விபத்தாலும் மன நிலைப் பிறழ்வு உருவாகிவிடுகிறது. மன நிலைப் பிறழ்வுக்குள்ளான பல கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவதும் பெரும் போக்காக நடந்துவருகிறது.

ஸ்ரீதர் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் மனப் பிறழ்வைக் கையாண்டிருப்பார். மனநல நிபுணர் ஒருவர் செல்வந்தப் பெண் ஒருவரைப் (ஜெயலலிதா) பித்து நிலையிலிருந்து மீட்பார். அந்தச் சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அந்தப் பெண் அவர் மீது மையல் கொண்டுவிடுவார். அந்த மருத்துவருக்கு ஏற்கெனவே ஒரு காதலி வேறு உண்டு. இப்போது மருத்துவர் யாரைக் கரம் பிடிப்பார்? யாரைக் கரம் பிடித்தாலும் மற்றவருடைய மனம் பேதலிக்க வாய்ப்புண்டு. இந்நிலையில் அந்தப் பிரச்சினையை ஸ்ரீதர் தனக்கே உரிய பாணியில் சமாளித்திருப்பார்.

கற்பனையும் நிஜமும்

மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு எது நிஜம், எது கற்பனை என்ற வேறுபாட்டை உணர முடியாது என்கிறார்கள். இந்த நோயையும், மல்டிபிள் பெர்ஸனாலிடி (‘அந்நிய’னை மறந்துவிடுங்கள்) என்னும் நோயையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இரண்டு படங்களைப் பார்க்கலாம். ஒன்று ‘ஆளவந்தான்’ (2001); மற்றொன்று தென்கொரியப் படமான ‘எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்’ (2003).

ஜீ-வான்-கிம் இயக்கிய தென்கொரியப் படம் ஜாங்க்வா ஹாங்க்ரியான்ஜியான் என்னும் அந்நாட்டு வாய்வழிக் கதையின் அடிப்படையில் உருவானது. ஒரு சிற்றன்னை தனக்குப் பிறந்த மகன்களுக்காகத் தன் கணவனின் முதலிரண்டு மகள்களைக் கொன்றுவிடுகிறாள். ஆனால், அவர்கள் ஆவியாக வந்து பழி தீர்க்கிறார்கள். இந்தக் கதை 1924 முதலே பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது.

இதன் பாதிப்பில் ஜீ-வான்-கிம் ‘எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்’ஸை உருவாக்கியிருக்கிறார். ஏனென்றால், வாய்மொழிக் கதைக்கும் இவருடைய திரைப்படத்துக்கும் சில அடிப்படையான ஒற்றுமைகள் இருந்தாலும் பாரதூரமான வேறுபாடுகளும் உண்டு. மாறுபட்ட இதன் திரைக்கதையால் வழக்கமான ஒரு சைக்காலஜி திரில்லராகவோ வெறும் பேய்ப்படமாகவோ அடையாளம் காட்டப்படுவதில் இருந்து இது தப்பித்திருக்கிறது.

tale_3175591a.JPG
‘எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்’

புரட்டிப் போடும் திரைக்கதை

படத்தின் தொடக்கத்தில் சு-மியிடம் மருத்துவர், ‘நீயாரென நினைக்கிறாய்’ என்று கேட்கிறார். குடும்பப் படத்தைக் காட்டி, ‘இது யாரெனத் தெரிகிறதா’ என்கிறார். ‘அந்த நாளில் என்ன நடந்தது’ என விசாரிக்கிறார். அவள் மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்க்கிறாள். கதை விரிகிறது. படம் ஒரு அமானுஷ்ய பயணத்தை மேற்கொள்ளும் என்பதைப் படமாக்கக் கோணங்களும் பின்னணி இசையும் சொல்லிவிடுகின்றன. தன் தங்கை சு-ய்யான், தந்தை ஆகியோருடன் வீட்டுக்கு வருகிறாள் சு-மி. வீட்டில் சிற்றன்னை இருக்கிறாள். அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தேறுகின்றன. தன் சிற்றன்னையால் தன் தங்கை சு-ய்யானுக்குப் பாதிப்பு வந்துவிடும் என்பதால் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறாள் சு-மி.

ஒரு கட்டத்தில் சு-மியின் செயல்பாடுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சு-மியின் தந்தை அவளிடம், ‘ஏன் இங்கு வந்ததிலிருந்தே இப்படி நடிக்கிறாய்’ என ஆத்திரத்துடன் கேட்கிறார். அதற்கு சிற்றன்னை தங்கையை எப்போதும் அலமாரியில் வைத்துப் பூட்டி சித்திரவதை செய்வதை நீங்கள் உணரவில்லையா’ எனக் கோபத்துடன் கேட்கிறாள்.

அப்போது அவர் வெளியிடும் தகவல் பார்வையாளரைப் புரட்டிப் போடும். அந்த வீட்டில் அதுவரை பார்வையாளர்கள் பார்த்த பல சம்பவங்கள் சு-மியின் கற்பனையில் நிகழ்ந்தவை என்பதை விவரிக்கும். அந்த வீட்டில் சு-மியும் அவளுடைய தந்தையும் மட்டுமே உள்ளார்கள் என்பதை உணரும்போது அதிர்ச்சி ஏற்படும். மேக மூட்டம் விலகிய நிலவு போல் காட்சிகள் தெளிவாகும்.

படம் பின்னோக்கித் திரும்பும். சு-மியின் தந்தை மற்றொரு பெண்ணை விரும்புகிறார். அவளை மணமுடிக்கத் திட்டமிடுகிறார். இந்தச் சிக்கலின் காரணமாக சு-மியின் தாய் ஒரு அலமாரியில் தூக்கிட்டு இறந்துகிடக்கிறார். இதைப் பார்த்து அலறும் சு-ய்யான் மீது அலமாரி கவிழ்ந்துவிடுகிறது. அவள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை. எனவே, சு-மியாலும் அவளைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.

இந்தக் குற்றவுணர்வால் பாதிக்கப்பட்ட அவளை மல்டிபிள் பெர்ஸ்னாலிடி டிஸார்டர் என்ற மன நிலைக் கோளாறு தாக்குகிறது. அதன் விளைவுகளாலேயே அவள் தங்கை, சிற்றன்னை ஆகியோராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்கிறாள். நடிகர்களின் வரம்புக்குட்பட்ட நடிப்பும் படமாக்க நேர்த்தியும் கதாபாத்திரங்களின் உணர்வைக் கச்சிதமாகப் பார்வையாளர்களுக்கு நகர்த்தும். படத்தில் அவசியமின்றி ஒரு ஷாட் கூட இடம்பெற்றிருக்காது.

வரம்பு மீறும் நந்து

இப்போது ‘ஆளவந்தா’னுக்கு வாருங்கள். சுரேஷ் கிருஷ்ணா இயக்க, கமல ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இந்தப் படத்தில் கமலுக்கு இரண்டு வேடங்கள். ஒருவர் எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் ராணுவ கமாண்டோவான விஜய். மற்றொருவர் தன் சித்தியிடமிருந்து தன் தம்பியைக் காப்பாற்றத் துடிக்கும், சீஸோபெர்னிக் வித் பாரானாய்டு டெல்யூஷன்ஸ் என்னும் மனச் சிதைவு நோய் காரணமாக மனநோய்க் காப்பகத்தில் பராமரிக்கப்படும் நந்து.

இதிலும் அப்பா மற்றொரு மணம் புரிகிறார். ஆகவே, கொடுமைக்காரச் சிற்றன்னை உண்டு. அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள். தம்பியைப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்குண்டு என நம்புகிறான் நந்து. இப்படியொரு கதாபாத்திரத்தை கமலைத் தவிர வேறொருவர் படைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் வரம்புகளை அவர் நீட்டித்துவிட்டதுதான் சோகம். மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர்கள் வன்முறையாளர் அல்ல.

அவர்கள் பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவர்கள் என்றுதான் மருத்துவ அறிவியல் கூறுகிறது. இதைக் கமல் அறிந்திராதவராக இருக்க இயலாது. ஆனால், கமலின் கைவண்ணமான நந்து அளப்பரிய ஆற்றல் கொண்டவர்; ஒரு அதிசய மனிதர். தன் தம்பி விஜயின் காதலியான தேஜஸ்வினியைச் சித்தியின் மறு வடிவம் என்று நம்பும் நந்து , அவரிடமிருந்த தம்பியைக் காப்பாற்ற பல அசகாய சூரத்தனங்களில் ஈடுபடுகிறார். இறுதியில் தன்னையே அழித்துக்கொள்கிறார்.

‘எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்’ அடர்ந்த வனத்தில் மயான அமைதியுடன் ஓடும் நதி என்றால், ‘ஆளவந்தான்’ நகரத்தில் சலசலத்துப் பாயும் ஆக்ரோஷ ஆறு. படத்தின் ஒரு காட்சியில் நந்து தவறுதலாக ஒரு பெண்மணியின் கழுத்தை அறுத்துவிட்டு, ‘சாரி! ராங் நம்பர்’ என்பார். அந்த உத்தியை படத்திலும் கமல் பயன்படுத்தியிருந்தால் அலுப்பூட்டும் அரை மணி நேர கிளைமாக்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தியிருக்கலாம். ஆனால், கலைஞானி கமலுக்கு அந்த மனம் வரவில்லை. ஆகவே, திரைக்கதையைப் பொறுத்தவரை கொரியப் படம் புத்திசாலித்தனமானது; ‘ஆளவந்தான்’ அசட்டுத்தனமானது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாஸ்கோப்-37-மனசுக்குள்-மத்தாப்பூ/article9727794.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

சினிமாஸ்கோப் 38: அபூர்வ ராகங்கள்

  • 23chrcj_Sundrakand_3178116g.jpg
     
  • படங்கள்: உதவி ஞானம்
    படங்கள்: உதவி ஞானம்
 

எதிர்ப் பாலினத்தைச் சேர்ந்த, ஈர்ப்புமிக்க ஆசிரியர் ஒருவர் சட்டென்று மாணவரின் மனதுக்குள் குடிபுகுந்துவிடுவார். இங்கு வயது வேறுபாடு என்பது எப்போதுமே இரண்டாம்பட்சம்தான். என்னதான் மரபு வேலியிடப்பட்டிருந்தாலும் ஏதோ ஓர் ஆசிரியர் ஒரு மாணவியின் மனத்திலும் ஏதோ ஓர் ஆசிரியை ஒரு மாணவன் மனத்திலும் பிரியத்தை விதைக்கத்தான் செய்வார்.

இது அடிப்படையான ஓர் உளவியல் அம்சம். இந்தப் பிரியம் புற்றுக்குள் பாம்பாகச் சுருண்டுகிடக்கும்போது, யாருக்கும் சிக்கலில்லை. இது படமெடுத்து ஆடத் தொடங்கினால் அப்போது பிரச்சினை வரும். அப்படிப் பிரச்சினையானால் அது திரைக்கதையாகும்; திரைப்படமாக மாறும்.

குடும்பக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களையே அதிகம் இயக்கியவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ‘சாரதா’ (1962). இந்தப் படத்தில் இரண்டு விஷயங்களை அவர் அநாயாசமாகக் கையாண்டிருப்பார். ஒன்று ஆசிரியர் - மாணவர் காதல்; மற்றொன்று நாயகனின் ஆண்மையிழப்பு. இரண்டுமே சிக்கலான விஷயங்கள். மரபைக் கட்டிக்காக்கும் செல்வந்தரான, சாரதாவின் (சி.ஆர்.விஜயகுமாரி) தந்தை வேடமேற்றிருந்த எஸ்.வி.ரங்காராவ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைத் தன்வயப்படுத்தியிருப்பார்.

ரங்காராவ் ஏற்பது போன்ற கதாபாத்திரங்களை இப்போது திரைக்கதையில் கொண்டுவந்தால், அவற்றை ஏற்று நடிக்கத் தகுந்த நடிகர்களே இல்லை. பார்த்த மாத்திரத்தில் மரியாதையும் அன்பும் செலுத்தவைக்கும் ஆகிருதி கொண்டவர் அவர்.

இது பெண்ணின் பெருமையா?

கே.வி.மகாதேவன் இசையில் ‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’, ‘மண மகளே மருமகளே வா வா’ போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. கிராமங்களில் மணமுடிந்த பின்னர் மணமகள், மணமகன் வீட்டில் அடியெடுத்துவைக்கும் வேளையில் ‘மணமகளே மருமகளே வா வா’ என்னும் இந்தப் பாடலைத்தான் ஒலிக்கவிடுவார்கள். இதில் என்ன பெரிய வேடிக்கை என்றால், இந்தப் படத்தில் நாயகனது பிரச்சினை காரணமாக நாயகனும் நாயகியும் கூடலின்பம் துய்த்திருக்கவே மாட்டார்கள். எந்த இன்பத்தையும் அனுபவித்திராத அந்த மணமகள் கன்னியாகவே மரித்தும் விடுவார்.

பாடம் எடுக்கவந்த ஆசிரியர் சம்பந்தத்தைக் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) காதலித்து, தந்தையின் எதிர்ப்பை மீறி அவரையே மணம்புரிந்தும்விடுகிறார் சாரதா. மணவறையில் கைபிடித்தவனின் மார்பில் சாய்வதற்காகப் பள்ளியறையில் காத்துக்கிடந்த சாரதாவின் நெஞ்சில் ஈட்டிபோல் இறங்குகிறது கல்லூரியில் அவனுக்கு ஏற்பட்ட விபத்து. ஆனாலும், இனி அவன் கணவனல்ல; கணவன் மாதிரி என்னும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்கிறார் அவர்.

தன் கையாலாகாத நிலையை அறிந்த கணவன் சம்பந்தம், சாரதாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புகிறான். சாரதாவிடமிருந்து மணவிலக்கு பெற்று, அவளுடைய மாமனையே (எஸ்.ஏ.அசோகன்) மணமகனாக்குகிறான் சம்பந்தம். எல்லோரும் ஏற்றுக்கொண்டபோதும், சாரதாவால் இன்னொரு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன்னை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்துவிடுகிறாள்.

பார்த்த மாத்திரத்தில் இந்த கிளைமாக்ஸ் பெரிய ஏமாற்றம் தருகிறது. பெண்ணின் பெருமை என்னும் பெயரில் அந்தக் கதாபாத்திரத்தைக் கழுவில் ஏற்றிவிடுகிறார்களே என்ற எண்ணமே வருகிறது. நிதானமாக யோசித்துப் பார்த்தால் தமது கட்டுக் களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளப் பெண்கள் முன்வராத வரையில் எந்த முயற்சியும் வீண்தான் என்பதைப் படம் உணர்த்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

‘சாரதா’வின் இரண்டு முக்கிய அம்சங்களின் சாயலில் தமிழில் இரண்டு படங்கள் வெளியாயின. ஒன்று கே.பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான ‘சுந்தர காண்டம்’ (1992), மற்றொன்று ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘பொண்டாட்டி தேவை’ (1990). ‘சாரதா’வில் நாயகனுக்கு விபத்து காரணமாக ஏற்பட்ட குறை ‘பொண்டாட்டி தேவை’யில் நாயகிக்கு நோவு காரணமாக ஏற்பட்டிருக்கும். ஆசைக் காதலனுக்கு இன்பம் தரும் தகுதி தன்னுடம்புக்கு இல்லை எனும் உண்மையைத் திருமணத்தன்று தெரிந்துகொள்ளும் நாயகி திருமணத்தைத் தவிர்க்கிறாள்.

ஆனாலும் இடைவிடாமல் முயல்கிறார் நாயகன். எனவே, நாயகனுக்காக ஒரு அறுவை சிகிச்சைக்கு நாயகி தன்னை ஒப்புக்கொடுக்கிறார். அந்த சிகிச்சை வெற்றிபெற்றால் அவர் பூரண குணமடைவார்; ஒருவேளை தோல்வியுற்றாலோ பூவுலகிலிருந்து விடைபெறுவார். ஆனால், நாயகன் அந்த அறுவை சிகிச்சையைத் தடுத்து நிறுத்தி நாயகியை மனைவியாக்கிக்கொள்கிறார்.

முறுக்கேற்றும் உத்தி

‘பொண்டாட்டி தேவை’ படத்தின் இறுதியில், தாம்பத்திய உறவு இல்லாததால் இவர் தாய்க்குப் பின் தாரமல்ல; தாய்க்குப் பின் தாயே என்ற வியாக்கியானமும் தருகிறார் இயக்குநர். ஆனால், இதெல்லாம் சாத்தியமா என்னும் கேள்வி எழுகிறது. படமும் எடுபடவில்லை. காரணம், இது யதார்த்தத்துக்குச் சற்றும் பொருந்தாத முடிவு. ‘சாரதா’ எழுப்பிய கேள்வி படத்தை வலுவாக்குகிறது, ‘பொண்டாட்டி தேவை’யில் எழும் கேள்வி படத்துக்குக் குழிபறித்துவிடுகிறது.

‘சுந்தர காண்ட’த்துக்கு வருவோம். எப்போதுமே சீன்களைப் பிடிப்பதில் பாக்யராஜ் மன்னர். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. காட்சிகளை யதார்த்தமாகத்தான் அமைப்பார். ஆனால், அவை யதார்த்தத்தில் நடைபெறச் சாத்தியமில்லாத சினிமாக் காட்சிகளாக, அதே நேரத்தில் ரசனைக்கு உத்தரவாதமளிப்பவையாகவே இருக்கும்.

தன்னுடன் படித்த நண்பன் இன்னமும் படிக்கும் பள்ளிக்கே ஆசிரியராக வருவார் சண்முகமணி. இது அக்மார்க் சினிமாத்தனம்; ஆனால் சுவாரசியம். பிரியா என்னும் இலங்கைத் தமிழ்ப் பெண்தான் படத்தின் பிரதான கதாபாத்திரம். படு சுட்டிப் பெண். பாடமெடுக்க வந்த ஆசிரியர் சண்முகமணி மீது அவளுக்குக் காதல் பிறந்துவிடுகிறது. கவுரமான ஆசிரியர் தொழிலுக்கு இழுக்கு ஏற்படும்படி ஓர் ஆசிரியர் நடந்துகொள்ள முடியுமா? ஆகவே, சண்முகமணி தடாலடியாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும் காலைச் சுற்றிய பாம்பாகத் தொடர்கிறார் பிரியா. இந்தத் திரைக்கதையை பாக்யராஜ் அவரது பாணியில் கலகலப்பாகக் கொண்டுசென்றிருப்பார்.

ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்கும் அளவுக்குப் படம் முழுவதும் பிரியாவின் சுட்டித்தனங்கள் நிரம்பி வழியும். அவை ஏன் அப்படி அமைந்தன என்பதற்கு விடை தரும் கிளைமாக்ஸ். சட்டென்று ஒட்டுமொத்த தட்பவெப்பமும் தலைகீழாக மாறிவிடும். இதைப் போன்ற திரைக்கதை உத்திதான் பார்த்திபனின் ‘சரிகமபதநி’ படத்தில் கையாளப்பட்டிருக்கும். நெகிழ்வாகச் சென்றுகொண்டிருக்கும் திரைக்கதையைச் சட்டென்று முறுக்கேற்றும் உத்தி அது. ஆனால், படம் பெரிதாகப் போகவில்லை. ‘சரிகமபதநி’ படத்தின் ஐம்பதாவது நாளன்று அப்பாடா ஐம்பதாவது நாள் என்று சுவரொட்டி அச்சடித்து ஊரெங்கும் ஒட்டியிருந்தார் அவர்.

துணிச்சலும் சாமர்த்தியமும் தேவை

‘சுந்தர காண்ட’த்தில் பிரியாவின் ஆசை , மாஸ்டரின் மனைவியாக வேண்டும் என்பதுதானே. அதற்கு மாஸ்டரின் மனைவியே ஒத்துக்கொண்டு தாலி எல்லாம் வாங்கி வருகிறாள். ஆனால், அதற்கு முன்னர் பிரியா விடைபெற்றுவிடுகிறாள். கிளைமாக்ஸில் எந்த உறுத்தலுமின்றி, எந்தக் கேள்வியும் எழாமல் படத்தைப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாகக் கலைந்துவிடுவார்கள் ரசிகர்கள்.

ஆசிரியர் - மாணவர் காதலை மையமாகக் கொண்டு ஜி.என்.ரங்கராஜனின் திரைக்கதை, இயக்கத்தில் ‘சார் ஐ லவ் யூ’ (1991) என்னும் ஒரு படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஒன்றுண்டு. மாணவி காதலித்த ஆசிரியர், அந்த மாணவியுடைய தாயின் முன்னாள் காதலர். பின்னர் நிலைமை என்னவாகும் என்பதே எஞ்சிய படம். பாடம் கற்றுக்கொடுக்க வந்த ஆசிரியருக்கும் மாணவருக்கும் காதல் வரும்போது, அது பலத்த எதிர்ப்பைச் சந்திக்கும். அதுவும் காதலே என்று புரிந்துகொள்வோர் மிகச் சிலரே. அந்தக் காதலைக் கையாளவே ஒரு பக்குவம் வேண்டும். மரபு மறுக்கும் விஷயத்தை மரபு ஏற்கும் வகையில் சொல்லும் துணிச்சலும் சாமர்த்தியமும் இருந்தால் மட்டுமே இதைப் போன்ற விஷயங்களில் கைவைக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாஸ்கோப்-38-அபூர்வ-ராகங்கள்/article9734148.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சினிமாஸ்கோப் 39: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

 

 
BGs_3183511f.jpg
 
 
 

நகரம் சூதுவாதுகளில் கைதேர்ந்தது, அதன் மனிதர்கள் மனிதநேயத்தை மறந்தவர்கள். இப்படியான நம்பிக்கை விதைப்பில் திரைப்படங்கள் பிரதானப் பங்களிக்கின்றன. திரைப்படங்களில் நகரம் குறித்துக் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் ஏராளம். இவை முழுவதும் உண்மையில்லை அதேநேரம் இவற்றில் உண்மையில்லாமலும் இல்லை. ஏதேதோ கற்பனைகளில் நகரங்களில் கால்பதித்தவர் பலருக்கும் ஏதோவொரு பெருங்கனவிருக்கும். பெரும்பாலும் அந்தக் கனவு ஈடேறுவதேயில்லை.

நகரங்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று பளபளப்பானது; மற்றது பரிதாபமானது. ஒன்றில் வளமை தூக்கலாயிருக்கும்; மற்றதில் வறுமை நிறைந்திருக்கும். வளமைக்கு ஆசைப்பட்டு வறுமையில் உழல்பவரே அநேகர். நகரத்தின் பெரும்பசிக்கு இரையாகும் மனிதர்களைப் பற்றிய யதார்த்தப் படமெடுப்பது இயக்குநர்களின் படைப்புத் திறனுக்குச் சவாலானது. கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதுபெற்ற, முதன்மையான லத்தீன் அமெரிக்கப் படங்களில் ஒன்றான ‘லொஸ் ஒல்விதாதோஸ்’ (Los Olvidados), இத்தாலிய இயக்குநர்கள் ரோபார்த்தோ ரொஸ்ஸெல்லினியின் ‘ஜெர்மனி இயர் ஸீரோ’, வித்தாரியோ தெ சிகாவின் ‘ஷூஷைன்’ (கவுரவ ஆஸ்கர் விருது பெற்றது), பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்ஷுவா த்ரூஃபோவின் ‘த 400 ப்ளோஸ்’ உள்ளிட்ட பல படங்கள் இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவை.

நகரின் அவலம்

‘லொஸ் ஒல்விதாதோஸ்’ (1950) திரைப்படத்தில் மெக்ஸிகோ நகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் சிறார்களின் அவல வாழ்க்கைச் சம்பவங்கள் வழியே மனிதர்களின் குரூரத்தைப் படம்பிடித்திருக்கிறார் இயக்குநர் லூயிஸ் புனுவெல். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பிவந்த எல் கைபோதான் படத்தின் பிரதானக் கதாபாத்திரம். அவன் சிறார்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு தீய வழிகளில் நடப்பவன். கண் பார்வை தெரியாத வீதிப்பாடகர், கால்களை இழந்து அமர்ந்த நிலையிலேயே தள்ளுவண்டியில் நகரை வலம்வரும் பிச்சைக்காரர் போன்றவர்களிடம்கூட ஈவு இரக்கமின்றி நடந்துகொள்கிறார்கள் இவர்கள். எல் கைபோவின் கூட்டாளி பெத்ரோவின் தீய நடவடிக்கைகளால் அவன் மீது அன்பு செலுத்தாமல் ஒதுக்குகிறாள் அவனுடைய தாய்.

எல் கைபோ, ஜூலியன் என்னும் சிறுவனைக் கொல்கிறான். ஜூலியன் உழைப்பில்தான் குடும்பம் பசியாறிக்கொண்டிருந்தது. ஜூலியனின் தந்தை ஒரு குடிகாரர். செய்யாத தவறொன்றுக்காக பெத்ரோவைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறாள் அவனுடைய தாய். சீர்திருத்தப் பள்ளியின் தலைவர். பெத்ரோவைப் புரிந்துகொள்கிறார். தன் மீது யாராவது நம்பிக்கையும் அன்பும் வைக்க வேண்டுமென அவன் ஏங்குகிறான் என்பதை அறிந்து அவனிடம் பரிவுடன் நடந்துகொள்கிறார்.

ஆனால், பெத்ரோவை வாழ்க்கை அலைக்கழிக்கிறது. இறுதியில் பெத்ரோவை அவனுடைய தாய் புரிந்துகொண்ட நேரத்தில், பெத்ரோ எல் கைபோவால் கொல்லப்படுகிறான். இதை அறியாத அவனுடைய தாய் அவனைத் தேடிக்கொண்டேயிருக்கிறாள். படத்தில் தன் தந்தைக்காகக் காத்திருக்கும் சிறுவன் கதாபாத்திரம் ஒன்றுண்டு. இறந்தவர்களின் பல் தீமையை அகற்றும் என்னும் நம்பிக்கையில் அதை வைத்திருக்கும் அந்தச் சிறுவன், இறுதிவரை தன் தந்தையைக் கண்டடைவதேயில்லை. வறுமையில் வாடுவோரின் இழி செயல்களைப் பழித்துப் பேசுபவர்களை வறுமையின் வேருக்கருகே அழைத்துச் சொல்லும் இந்தப் படம்.

வாழ்வின் குரூரம்

‘ஷூஷைன் ’(1946) திரைப்படத்தில் வீதியோரம் ஷூ பாலிஷ் போடும் இரு சிறுவர்கள் பணம் சேர்த்துக் குதிரை ஒன்று வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால், ரோம் நகரில் அவர்கள் வாழ்க்கை சிக்கி சின்னாபின்னமாக்கப்படும்.

ஊழல்மிக்க அந்நகரம் அவர்களைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிடும். இயக்குநர் ரொஸ்ஸெல்லினி, தன் மகன் ரமனோ நினைவுக்கு சமர்ப்பித்திருந்த ‘ஜெர்மனி இயர் ஸீரோ’ (1948) படத்தில் ,பெர்லின் நகரைச் சேர்ந்த ஒரு சிறுவன் நோயால் படுத்த படுக்கையாகிவிட்ட தன் தகப்பனுக்கு விடுதலை தர அவருக்கு விஷம் கொடுத்து நிரந்தரமாக உறங்கவைப்பான். இந்தச் செயலின் குற்றவுணர்வு உந்தித் தள்ள உயரமான கட்டிடத்திலிருந்து கீழே குதித்துத் தந்தை சென்ற இடத்துக்கே செல்வான். படத்தின் ஒரு காட்சியில் வீராவேசமான ஹிட்லரின் உரை ஒன்று காற்றில் தவழ்ந்துவரும்.

இவற்றைப் போன்றே பம்பாய் வீதிகளில் அலைந்து திரியும் சிறார்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு மீரா நாயரின் இயக்கத்தில் உருவான படம் ‘சலாம் பாம்பே’ (1988). சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது இந்தியப் படம். ஆனால், பரிசுவென்ற படம் டச்சு மொழியில் உருவான ‘பெல் த கான்க்யுரர்’. பம்பாயின் வறுமையைக் காட்சிப்படுத்திய ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ (2008) அளவுக்குக் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளாவிட்டாலும் ‘சலாம் பாம்பே’யும் சில எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ளவே செய்தது.

‘சலாம் பாம்பே’யில் பிழைப்புக்காகக் கிருஷ்ணா தனது பூர்வீகக் கிராமமான பெங்களூர் அருகே உள்ள பிஜாபூரிலிருந்து பம்பாய் செல்கிறான். டச்சுப் படத்தில் பிரதானக் கதாபாத்திரங்களான லஸ்ஸேவும் அவருடைய மகனான பெல்லும் அதே பிழைப்புக்காக சுவீடனிலிருந்து டென்மார்க் செல்கிறார்கள். ‘சலாம் பாம்பே’ பொழுதுபோக்குப் படமல்ல; மாநகரத்தின் வீதியோரம் வீசப்பட்ட சிறார்களின் சிதிலமடைந்த வாழ்க்கையின் பக்கங்களைக் கலாபூர்வமாக வெளிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இயல்பாகப் படமாக்கப்பட்ட மாநகரின் துயரம் தொனிக்கும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இசைக் கலைஞரான டாக்டர் எல்.சுப்ரமணியத்தின் இசை இந்தப் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.

நிறைவேறாக் கனவு

அண்ணனின் இருசக்கர வாகனத்தை எரித்ததன் காரணமாக சர்க்கஸில் பணிக்குச் சேர்த்துவிடப்பட்ட கிருஷ்ணா, 500 ரூபாய் சேர்த்திருந்தால் மீண்டும் தன் ஊருக்கு திரும்பி வந்திருக்கலாம். ஆனால், இறுதிவரை அவன் சொந்த ஊருக்குத் திரும்பாமலேயே அந்த மாநகரத்திலேயே அல்லல்படுகிறான். ஒரு கிருஷ்ணா படும் பாட்டைக் காட்டியதன் வழியே உலகெங்கும் மாநகரங்களில் தங்கள் வாழ்வைத் தேடி தட்டழியும் பல கிருஷ்ணாக்களின் வாழ்வையும் பற்றி யோசிக்க வைக்கிறார் மீரா நாயர்.

பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளும் பாபா, பாலியல் தொழிலில் ஈடுபடும் அவனுடைய மனைவி, இந்தச் சூழலிலேயே வளரும் மஞ்சு என்னும் குழந்தை, பாபாவின் போதைப் பொருளை விற்பவனான சில்லிம், பாபா மூலமாக பாலியல் விடுதிக்கு வந்து சேரும் 16 வயதுப் பெண் போன்ற படத்தின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் ஒரு சோற்றுப் பதங்கள். இப்படத்தின் பாலியல் விடுதிக் காட்சிகளைப் பார்க்கும்போது, கமல் ஹாசன் திரைக்கதையில் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான ‘மகாநதி’யில் தன் மகளை மீட்கச் சென்ற சோனார் கஞ்ச் காட்சிகளும் ‘சாப் ஜான்’ திரைக்கதையில் சந்தான பாரதி இயக்கிய ‘குணா’ படத்தில் கதை நாயகன் குணா வசிக்கும் வீட்டின் சூழலும் மனதில் நிழலாடுகின்றன.

அன்றாடப் பாட்டுக்கே அனுதினமும் படும் அவஸ்தை காரணமாகப் பல மனிதர்களின் நல்லுணர்வுகளை உறிஞ்சி எடுத்துவிடுகிறது மாநகரம். அங்கே வறுமை எனும் நெருப்பில் அன்பு, பாசம், நட்பு, காதல், தியாகம் போன்ற விழுமியங்கள் கருகுகின்றன. அவர்களது வறுமையைப் போக்காது அறவுணர்வை அவர்கள் மீது ஊற்றுவது கற்சிலையின் மீது பாலூற்றுவது போன்றது என்பதையே இந்தப் படங்கள் எல்லாம் சொல்கின்றன.

ஆனால், கொலைபுரிந்துவிட்டு பம்பாய் சென்ற சிறுவன், பெரும் நாயகனாவது போன்ற மகத்தான கற்பனை சிலருக்குத் தோன்றுகிறது. ‘சலாம் பாம்பே’யின் தாக்கத்தில் தமிழில் உருவான படம் ‘மெரினா’ என்பது உண்மையிலேயே வியப்பான தகவலே. இந்தப் படம் நல்லுணர்வின் புதைகுழியில் ஆண்டுக்கணக்காக மூழ்கியிருந்த முடை நாற்றத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இது தவிர ‘கோலிசோடா’, ‘அங்காடித் தெரு’போன்ற படங்களைத்தான் தமிழில் தர முடிகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாஸ்கோப்-39-உன்னைச்-சொல்லிக்-குற்றமில்லை/article9751905.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமாஸ்கோப் 40: ரத்தக்கண்ணீர்

21chrcjOruvoothappukansimittukirathu

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

குற்றச் செயல்களால் எளிதில் ஈர்க்கப்படும் மனிதர்கள், அவற்றின் பின் விளைவுகளை எதிர்கொள்ளவே அச்சப்படுகிறார்கள். குற்றத்துக்குத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தைவிடப் பிறரை எதிர்கொள்ளத் தயங்கியே பல குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவ்வளவு எளிதில் எந்தக் குற்றத்தையும் மறைத்துவிட இயலாது; எல்லாக் குற்றங்களும் தம்மை வெளிப்படுத்திக்கொண்டுவிடும் என்பதுதான் இயற்கையின் ஏற்பாடு. குற்றம் தன்னை வெளிப்படுத்தும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது திரைக்கதையின் சுவாரசியமான பயணம்.

ஸ்பெயினைச் சேர்ந்த இயக்குநர் உவான் அந்தோனியோ பர்தெம் (Juan Antonio Bardem) இயக்கிய ‘டெத் ஆஃப் எ சைக்கிளிஸ்ட்’ (1955) என்னும் படம் கான் திரைப்பட விழாவில் திரைப்பட விமர்சகர்களின் சர்வதேசக் கூட்டமைப்புப் பரிசை வென்றது. இந்தப் படத்தின் தொடக்கத்தில், ஒரு ஜோடி காரில் செல்கிறது. ஆளற்ற சாலையில் விரைந்துசெல்லும் அந்த கார், சைக்கிளில் சென்ற மனிதன் ஒருவன்மீது மோதிவிடுகிறது.

cyclistjpg

இளைஞன் இறங்கிச் சென்று பார்க்கிறான் அடிபட்ட மனிதனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. உடனிருக்கும் பெண் அங்கிருந்து சென்றுவிடலாம் என இளைஞனைத் தூண்டுகிறாள். இருவரும் நகர்கிறார்கள். அடிபட்ட மனிதன் இறந்துவிடுகிறான். மறு நாள் நாளிதழில் இது செய்தியாகிறது. அவர்கள் இருவரும் காரில் சென்றதைப் பார்த்ததாகக் கலை விமரிசகன் ஒருவன் அவர்களை, குறிப்பாக அந்தப் பெண்ணை மிரட்டுகிறான். அவர்கள் மனங்களில் பீதி படர்கிறது.

காதலெனும் உறவு

காரில் வந்த இருவரும் கணவனும் மனைவியும் அல்ல. இருவரும் காதலர்கள். காரில் சென்ற ஆண் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அந்தப் பெண்ணும் சமூக அந்தஸ்து பெற்ற ஒருவருடைய மனைவி. அந்தப் பெண்ணால் ஒரே நேரத்தில் ஒருவருடைய மனைவியாகவும் மற்றொருவருடைய காதலியாகவும் இருக்க முடிகிறது. இரு உறவுகளின் அனுகூலங்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறாள். காதல் உறவைத் தைரியமாக வெளியில் சொல்ல முடியவில்லை; மிகவும் ரகசியமாகப் பேணுகிறாள். அதனால்தான் அவள் மிரட்டப்படுகிறாள்.

அவர்களால் கொலையை மறைக்க முடிந்ததே ஒழிய அதன் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ள இயலவில்லை. பேராசிரியர், இறந்த மனிதரின் வீட்டுக்குச் செல்கிறார். மிகவும் சாதாரண நிலையிலிருக்கும் குடும்பத்தின் வருமானத்துக்குரியவரை அவர்கள் விபத்தில் கொன்றிருக்கிறார்கள். மேல் தட்டின் விசாலமான, பிரம்மாண்ட மாளிகைகளும் கீழ்த் தட்டினர் வசிக்கும் குறுகலான நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளும் காட்டப்படுகின்றன. இப்படியான காட்சிகள் வழியாக ஸ்பெயினின் இருவேறு தரப்புகளையும் பார்வைக்குவைக்கிறார் இயக்குநர்.

விபத்துச் சம்பவம் நடந்ததற்கு மறு நாள் கல்லூரியில் மனக் குழப்பத்துடன் இருக்கும் பேராசிரியர் தன் மாணவி தேர்வில் தோற்றுப்போகக் காரணமாகிறார். ஒரு குற்றச் செயலை மறைத்ததால் தொடர்ந்துவரும் பல சம்பவங்கள் போர், காதல், காமம், திருமணம், சமூக அந்தஸ்து, மத நம்பிக்கை, மனசாட்சி போன்றவை பற்றிய தார்மிகக் கேள்விகளை எழுப்பும் வகையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படம் வாழ்வின் பல துல்லிய வண்ணங்களைக் கொண்ட கறுப்பு வெள்ளை ஓவியம் போலே படர்ந்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த பின்னர் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ (1975), ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ (1976), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986) போன்ற சில தமிழ்ப் படங்கள் மனதில் நிழலாடின.

 

பாசத்துக்காக ஒரு கொலை

மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986) படத்தில், ஒரு பாசமான தாயும் (சுஜாதா) மகளும் (ஜெயஸ்ரீ) சேர்ந்து இளைஞன் ஒருவனைக் கொன்றுவிடுகிறார்கள். ‘பாபநாசம்’ படத்தைப் போலவே மகளின் மானம் காக்கவே அந்தக் கொலை நிகழ்கிறது. யாரும் அறியாதவகையில் அந்தச் சடலத்தை ஒரு முகட்டிலிருந்து உருட்டிவிடுகிறார்கள். அதலபாதாளத்தில் விழும் அந்தச் சடலம் யார் கண்ணிலும் படாது என்று திரும்பிவிடுகிறார்கள். அது சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் மரண தண்டனைக் கைதி (சத்யராஜ்) ஒருவர் கண்ணில்பட்டுவிடுகிறது.

vidinjajpg

அவர் நேரடியாக அந்தத் தாயும் மகளும் குடியிருக்கும் வீட்டுக்கு வந்து, அந்தக் கொலையை வெளியில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியே தனது காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார். அந்தக் கொலையை விசாரிப்பதோ மகளை மணந்துகொள்ள இருக்கும் காதலன். இப்படி ஆர்வமூட்டும் பல முடிச்சுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிடுகின்றன. தாயும் மகளும் யாரைக் கொன்றார்கள், அந்தத் தூக்குத் தண்டனைக் கைதி யார், அவருக்கும் தாய், மகளுக்கும் என்ன தொடர்பு போன்றவற்றைத் தெளிபடுத்திச் செல்கிறது திரைக்கதை.

‘ஒரு கதையின் டைரி’, ‘பூவிழி வாசலிலே’ போன்ற திரில்லர் வகைப்படம்தான் இது. கொலையைச் சரியான செயல் என்று பார்வையாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமானால் அதன் பின்னணியில் வலுவான உணர்வுபூர்வ காரணம் இருக்க வேண்டும். ஒரு கொலையை யார் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதற்குப் பார்வையாளர்களின் ஆதரவு கிடைக்கும். கொலை என்பதைத் தீய செயலாகவும் குற்றச் செயலாகவும் பார்க்கும் நம் பார்வையாளர்கள் அதை நல்லவர்கள் செய்தால், நல்ல நோக்கத்துடன் செய்தால் நியாயம் என்று எடுத்துக்கொள்வார்கள். அதிலும் பெண்களின் மானத்தைக் காப்பாற்றச் செய்யப்படும் கொலைகள் பார்வையாளர்களால் கொண்டாடப்படும்.

 

எது குற்றம்?

சமூகத்தின் பார்வையில், ‘பூவிழி வாசலிலே’ படத்தில் வில்லன் செய்த கொலைக்கான காரணம் அநியாயமானது; ஆனால் ‘ஒரு கைதியின் டைரி’, ‘விடிஞ்சா கல்யாணம்’ போன்ற படங்களில் நாயகர்கள் செய்யும் கொலைக்கான காரணம் நியாயமானது எனவே, அது சமூகத்தின் பார்வையில் குற்றச்செயலாகப் பார்க்கப்படாது. ‘பாபநாச’த்தில் சுயம்புலிங்கத்துடைய குடும்பத்தின் பக்கம் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் நின்றதற்குக் காரணம் அதுதானே.

ஸ்பானிஷ் படத்தில் மணமானதற்குப் பின்னர் எந்தச் சஞ்சலமுமின்றிக் காதலனைச் சந்தித்துச் சரசமாடுகிறாள் நாயகி. ஆனால், ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் காதலனின் வேண்டுகோளை ஏற்று ஒருநாள் அவனுக்கு மனைவியாக இருக்கிறாள். அதுதான் சிக்கலாகிறது. இவ்வளவுக்கும் அவள் தமிழ்ப் பண்பாட்டைச் சிறிதுகூட மீறாமல் நடந்துகொள்கிறாள். ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் தான் காதலித்த ரகசியத்தைக் கணவனுக்குத் தெரியாமல் காப்பாற்றும் பொருட்டு மிரட்டல்காரனுக்கு அடிபணிகிறாள். இது தமிழ்ச் சூழல்.

‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ இரண்டையுமே எஸ்பி.முத்துராமன்தான் இயக்கினார். முன்னதன் கதை பஞ்சு அருணாசலம் பின்னதன் கதை புஷ்பா தங்கதுரை. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்ற சம்பவங்களால் ஆனவை. ஒருவனைக் காதலித்து மற்றொருவனைக் கரம்பிடித்த பெண் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் இந்தப் படங்கள். முதல் படத்தில் மிரட்டல்காரர் உண்டு. இரண்டாம் படத்தில் மிரட்டல்காரர் இல்லை. இரண்டு படங்களிலும் சுஜாதாதான் கதாநாயகி.

வாழ்வைப் புரிந்துகொண்ட இயக்குநர்கள் குற்றங்களை வெறும் குற்றங்களாகப் பார்க்காமல் அவற்றின் பின்னணியுடன் சேர்த்துப் புரிந்துகொள்ளச்செய்யும் வகையிலேயே படங்களை உருவாக்குகிறார்கள். ஒரு குற்றத்தில் தனிநபரின் பங்கு என்ன, சமூகத்தின் பங்கு என்ன என்பவற்றை எல்லாம் சுட்டிக்காட்டுகிறார்கள். வெறுமனே குற்றம், பழிவாங்கல், தண்டனை, மன்னிப்பு என்று முடிந்துவிட்டால் அது சராசரியான படமாக நின்றுவிடுகிறது. அதைத் தாண்டி ஏன் இந்தக் குற்றம் நிகழ்கிறது? ஏன் இது குற்றமாகப் பார்க்கப்படுகிறது? இதைத் தவிர்க்க முடியுமா, தடுக்க முடியுமா போன்ற பல சிந்தனைகளைப் பார்வையாளரிடம் உருவாக்கும் படங்கள் மேம்பட்டவையாக அமைந்துவிடுகின்றன.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19307830.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சினிமாஸ்கோப் 41: கடமை கண்ணியம் கட்டுப்பாடு

 

‘த பிரிட்ஜ் ஓவர் த ரிவர் க்வாய்’

04chrcjNATPU

நட்பு படத்தில்

04chrcjcinemasope%201

‘த பிரிட்ஜ் ஓவர் த ரிவர் க்வாய்’

04chrcjNATPU

நட்பு படத்தில்

தி

ரைக்கதை, படமாக்கும் விதம், உணர்த்தும் விஷயம் ஆகியவற்றில் சாரமிருந்தால் சாதாரணக் கதையே நல்ல படமாக மாறும். கதையையும் திரைப்படத்தையும் இணைக்கும் பாலம் திரைக்கதையே. பாலத்தையே திரைக்கதையின் பலமாக்கி இயக்குநர் டேவிட் லீன் தனது ‘த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்’ (1957) என்னும் படத்தில் வாழ்வைச் செழுமைப்படுத்த உதவும் பல செய்திகளைச் சொல்லியிருப்பார். இப்படம் பிரெஞ்சு நாவலாசிரியர் பியர் போல்லே எழுதிய ‘த பிரிட்ஜ் ஓவர் த ரிவர் க்வாய்’ என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் ராணுவத்தினரிடம் கைதிகளாகச் சிக்குகிறார்கள் ஆங்கிலேய ராணுவ வீரர்கள். இவர்களைக் கொண்டு ஒரு ரயில் தடம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது. மரண ரயில் தடம் என்று வரலாற்றில் குறிக்கப்படும் அந்த பர்மா ரயில் தட உருவாக்கப் பணியின்போது அதிகப்படியான எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் இறந்திருக்கிறார்கள். பொறியியலாளரான பிரெஞ்சு நாவலாசிரியரும் போர்க்கைதியாக ஜப்பான் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்துடன் புனைவைக் கலந்து படைத்த நாவல் இது.

 

கொள்கையில் உறுதி

டேவிட் லீனின் திரைப்படத்தில் பர்மா ரயில் தடத்தில் க்வாய் நதிக்கு மேலே ஒரு பாலம் அமைக்கப்பட வேண்டிய பணி ஒன்று வருகிறது. இதை நிறைவேற்றும் பொறுப்பு ஜப்பானிய ராணுவப் படைத் தலைவர் சைட்டோ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. போர்க்கைதிகளைப் பணியாட்களாக வைத்து இந்தப் பாலத்தை அவர் கட்டி முடிக்க வேண்டும். புதிதாக வந்திருக்கும் போர்க்கைதிகளிடம் ‘அதிகாரிகள், வீரர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டும்’ என்று சைட்டோ மிகக் கண்டிப்புடன் கூறுகிறார்.

ஆங்கிலேயப் படைத் தலைவரான நிக்கல்சன், அதிகாரிகள் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ஜெனிவா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார். ஆனால், சைட்டோ எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் நிக்கல்சனை அவமானப்படுத்துகிறார்; கடும் தண்டனை விதிக்கிறார். ஆனாலும், தன் கொள்கையில் உறுதியாக இருக்கும் நிக்கல்சன் எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.

வேறு வழியற்ற சூழலில், பணியை முடிக்க வேண்டிய நெருக்கடி அதிகரிக்கும்போது, சைட்டோ அதிகாரிகளை உடலுழைப்புப் பணியிலிருந்து விடுவிக்கிறார். இப்போது பணியை முடிக்க வேண்டிய பொறுப்பை நிக்கல்சன் ஏற்றுக்கொள்கிறார். தொழில்நுட்பரீதியில் பாலம் சரியாக இல்லாததை உணர்ந்து புதிதாகப் பாலம் அமைக்க முடிவெடுத்து வேலையைத் தொடங்குகிறார். குறிப்பிட்ட கெடுவுக்குள் பாலத்தை அமைத்து முடித்துவிட கிட்டத்தட்ட சைட்டோவைப் போன்றே எல்லா உத்திகளையும் பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளையும் வியாதியஸ்தர்களையும்கூட உடலுழைப்பில் ஈடுபடுத்துகிறார். கடும் முயற்சியில் பாலத்தை உருப்படியாகக் கட்டி முடிக்கிறார். வேலை, விதிமுறை, கொள்கை போன்றவற்றை முறையாக அனுசரிப்பதால் தனிமனிதருக்கு ஏற்படும் இழப்புகளை இந்தக் கதாபாத்திரம் மூலம் டேவிட் லீன் வெளிப்படுத்துகிறார்.

 

பைத்தியக்காரத்தனமான விதிமுறைகள்

இது ஒரு புறம் என்றால் இன்னொரு புறம், இதே பாலத்தை அழிக்க ஆங்கிலேய ராணுவமே ஒரு திட்டம் தீட்டுகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒரு படைத் தலைவர் தன் உயிரைப் பற்றிக்கூடக் கவலைகொள்ளாமல் கட்டளையை நிறைவேற்றத் துடிக்கிறார். இரு தரப்பிலும் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் கதாபாத்திரங்கள் வழியே வேலை என்னும் பெயரில் மனிதர்கள் பைத்தியக்காரத்தனமான விதிமுறைகளை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறார் டேவிட் லீன். சிறந்த படம், இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணியிசை, தொகுப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றதுடன் நிக்கல்சன் கதாபாத்திரத்தை ஏற்ற அலெக் கின்னஸுக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது இப்படம்.

பாலத்தை அடிப்படையாகக் கொண்டு 1995-ல் ‘ஸேக்ரொலாய் பஹுடூர்’ (Xagoroloi Bohudoor) என்னும் அஸ்ஸாமியப் படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ‘கடலுக்கான நீண்ட பாதை’ என்பதே இந்தத் தலைப்பின் பொருள். பொருள் பொதிந்த தலைப்பைக் கொண்ட இந்தப் படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் ஜானு பரூவா. தொழில்நுட்பரீதியாகப் பெரிய மெனக்கெடல்கள் இல்லாத படம்.

மிகச் சாதாரணமான சம்பவங்களே படத்தின் காட்சிகளாகியிருக்கும். ஆனால், அழுத்தமான மன உணர்வை வெளிப்படுத்துவதில் நல்ல ஈரானியப் படங்களின் சாயலைக் கொண்டிருக்கும். நதிக்கரை ஓரத்துக் குடிசையில் வசித்துவரும் ஒரு முதியவரும் அவருடைய பேரனுமே பிரதானக் கதாபாத்திரங்கள். அவர்களிடையேயான உறவை உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கும் தன்மையில் இயக்குநரைக் காண முடியும். நதியில் மூழ்கி மகனும் மருமகளும் இறந்துவிட்டதால் பேரனை ஆளாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது.

 

கடலுக்கான பாதை

கிராமத்து மனிதர்கள் கரையைக் கடக்கப் படகோட்டுவதன் மூலம் வாழ்வுக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்கிறார் முதியவர். அந்த நதியின் மீது பாலம் ஒன்று அமைக்க கிராமத்தினர் முயல்கிறார்கள். அப்படிப் பாலம் அமைந்தால் வாழ்வாதாரம் பறிபோய்விடும் எனப் பதைபதைக்கிறார் முதியவர். எல்லோரையும் கரைசேர்க்கும் அவர் பேரனைக் கரையேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் தத்தளிக்கிறார். நகரத்தில் வாழும் மற்றொரு மகன் மூலம் பேரனுக்கு வழிகிடைக்குமா எனப் பார்க்கிறார். அதுவும் தவறிப் போகிறது.

நகரத்தில் வாழும் முதியவரின் மகனும் மருமகளும் உறவைவிட நிலத்தையும் பொருளையும் நம்புபவர்களாக இருப்பதைத் தங்கள் நடத்தை வழியே காட்டுகிறார்கள். பொதுவாக வயதான மனிதர் என்றால் அவரை மிகவும் வெகுளியாகவும் அப்பாவியாகவும் சித்தரிப்பார்கள். அந்தத் தவறைச் செய்யவில்லை ஜானு பருவா. கடலுக்கான பாதை நீண்டதுதான், ஆனாலும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதை உணர்த்தி நிறைவுறும் படம்.

தமிழில் ‘பாலம்’ என்ற பெயரிலேயே 1990-ல் ஒரு படம் வந்திருக்கிறது. தனக்குத் தீங்கிழைத்த அரசியல்வாதி ஒருவரைப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடத்திவந்து ஒரு பாலத்தில் சிறை வைத்திருப்பார். தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கும் தன் அண்ணன், அண்ணி, நண்பர்கள் இருவர் ஆகியோரை விடுவிக்காவிட்டால் அரசியல்வாதியைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவார்.

பொதுவாகத் தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரித் தான் இப்படியான கடத்தல்கள் நடக்கும். ஆனால், அப்பாவிகளை விடுவிக்கக் கோரியே இந்தப் புரட்சிப் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். இதை இயக்கியவர் கார்வண்ணன். ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் முரளி நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் அந்த அரசியல்வாதியாக நடித்திருப்பார்.

ஒரு கிராமத்துக்குப் பாலம் வந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்கள் என்பதால் அதை வரவிடாமல் தடுக்கும் அரசியல்வாதிக்கும் அந்த ஊர் மக்களுக்குமான போராட்டத்தைச் சித்தரிக்கும் வகையில் அமீர்ஜான், ‘நட்பு’ (1986) என்னும் பெயரில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். நாடகத்தனமான இத்திரைப்படத்தின் கதை வசனம் வைரமுத்து.

திரைப்படங்கள் வெறுமனே அறநெறிகளை மட்டும் போதித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அறநெறிகள் என்பவை காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடியவை. அவற்றைத் திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் உள்வாங்கிக்கொண்டு படங்களை உருவாக்கும்போது, பார்வையாளர்களுக்குப் புதிய உலகத்தின் தரிசனம் கிட்டும்.

அதை விடுத்துக் காலம் காலமாகக் கூறப்பட்டுவரும் மரபுகளுக்கு முட்டுக்கொடுத்து உருவாக்கப்படும் படங்கள் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மட்டுமே உதவும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19413581.ece

Link to comment
Share on other sites

சினிமாஸ்கோப் 42: டும் டும் டும்

 

 
11chrcjKannirasi

‘கன்னிராசி’ படத்தில் பிரபு, ரேவதி

தி

ரைப்படங்களில் காதலுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சரக்கு திருமணமாகத்தான் இருக்கும். திருமணம் குறித்து வெளியான படங்களில் பெரும்பாலானவை அது தொடர்பான பொதுவான பிரச்சினைகளைப் பொதுப் பார்வையுடன் விவாதிக்கின்றன. இவை தவிர்த்து ஓரிரு படங்கள் சில சிக்கலான விஷயங்களைத் தனியான பார்வையுடன் பரிசீலித்துள்ளன. அதற்குப் பல சான்றுகளும் உள்ளன.

‘பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’, ‘நான் கவிஞனுமில்லை’ போன்ற இனிய பாடல்களைக் கொண்ட இயக்குநர் பீம்சிங்கின் ‘படித்தால் மட்டும் போதுமா’ (1962) திரைப்படத்தில் தம்பிக்குப் பெண் பார்க்க அண்ணனும் அண்ணனுக்குப் பெண் பார்க்க தம்பியும் செல்வார்கள். பாலாஜி, சிவாஜி கணேசன் ஆகியோர் அண்ணன் தம்பியாகவும் சாவித்திரியும் ராஜ சுலோசனாவும் மனைவிகளாகவும் நடித்திருப்பார்கள்.

தம்பி படிக்காதவன். அண்ணன் படித்தவன். எப்போதுமே படித்தவன் சூது வாதில் கெட்டிக்காரனாகத்தானே இருப்பான். பெண் பார்க்கப்போன இடத்தில் தம்பிக்காகப் பார்த்த பெண் அண்ணனின் மனதைக் கவர்ந்துவிடுகிறாள். அவளை அடைய திட்டம் போட்டு, ஒரு மொட்டைக் கடிதம் வழியே அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான் அண்ணன்காரன். ஆனால், தம்பியின் வாழ்க்கையிலோ புயல்வீசுகிறது. படிக்காதவனை அவனுடைய மனைவியே விரும்புவதில்லை. ஒரு கட்டத்தில் தம்பிக்கு அண்ணனின் சூழ்ச்சி தெரிந்துவிடுகிறது. அதன் பின்னர் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை திரைக்கதை சித்தரித்திருக்கும்.

இந்தப் படத்தில் தன் அண்ணியின் பெயர் சீதா என்பதால் சீதாப்பழத்தைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டார் நாயகன். அது ஒரு காலம். இப்போது இதைக் கேட்டாலே சிரிப்புதான் வருகிறது.

 

மாங்கல்ய தோஷம்

11chrcjselvam

‘செல்வம்’ படத்தில் கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன்

‘அவளா சொன்னால் இருக்காது’ என்னும் பாடல் இடம்பெற்ற, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘செல்வம்’ (1966) படத்திலும் திருமணம்தான் படத்தின் கரு. கதைப்படி நாயகிக்கு மாங்கல்ய தோஷம். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாளோ அந்த மணாளன் ஓராண்டில் மரணமடைந்துவிடுவான் என்கிறார்கள் ஜோதிடர்கள். நாயகனோ தன் மனதுக்கு உகந்த மாமன் பெண்ணைக் கைப்பிடிக்கத் துடித்திருக்கிறான். அவளும் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அந்த நினைப்பில் மண்ணள்ளிப் போடுகிறார்கள் ஜோதிடர்கள். ஜோதிடத்தைப் புறந்தள்ளிவிட்டு நாயகியைக் கைபிடித்துவிடுகிறான் நாயகன்.

தோஷத்தை மீறித் திருமணம் செய்ததால் ஒரு பரிகாரம் என்று ஓராண்டுக்கு நாயகனையும் நாயகியையும் பிரிந்திருக்கச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள். ஆனால், இளமை வேகம் அதையும் மீறிவிடுகிறது. நாயகனும் நாயகியும் ஒருவரில் ஒருவர் கலந்துவிடுகிறார்கள். இப்போது என்ன ஆகும் ஜோதிடம் பலித்ததா, இல்லையா என்பதைத் தனது பாணியில் படமாக்கியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

சாவித்திரி தன் நாயகனை எமனிடமிருந்து மீட்கப் போராடிய புராணச் சம்பவம் படத்தில் கதாகாலட்சேபமாக இடம்பெற்றிருக்கும். படத்தில் எஸ்.வி.ரங்கராவ் ஏற்றிருக்கும் ஆங்கில மருத்துவர் வேடம் புதுமையானது. ஜோதிடம் தொடர்பான பல விமர்சனங்களுடன், ஜோதிடம் என்பதை மனிதர்கள் தங்கள் சுயலாபத்துக்கே பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பார் இயக்குநர்.

இதே திருமண தோஷத்தை இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் தனது முதல் படமான ‘கன்னி ராசி’யில் (1985) பயன்படுத்தியிருப்பார். அவர் கதை எழுதிய இந்தப் படத்தின் திரைக்கதையை ஜி.எம்.குமாரும் லிவிங்ஸ்டனும் எழுதியிருக்கிறார்கள். அக்காள் மகளை மணந்துகொள்ளும் ஆசையில் இருப்பார் நாயகன். திருமண நேரத்தில் பொருத்தம் பார்க்கும்போது பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் என்பது தெரியவரும். அதன் காரணமாகத் திருமணம் தடைபடும். ஜோதிடம் என்பதை நம்பி வாழ்வை அழித்துக்கொள்வது அவசியமா என்பதை உணர்த்தும் வகையில் ஜோதிடம் தெரிவிப்பதற்கு நேர் எதிரான சம்பவத்தை வைத்துப் படத்தை முடித்திருப்பார்கள்.

 

விதியின் விளையாட்டு

11chrcjmetti

‘மெட்டி’ படத்தில் சரத்பாபு, ராதிகா

திருமணம் என்ற சடங்கையும் குடும்பம் என்ற அமைப்பையும் கேள்விக்குட்படுத்திய இயக்குநர் மகேந்திரனின் ‘மெட்டி’யில் (1982) ஒரு குடும்பமே திருமண தோஷத்தால் அவதிப்படும். ஆனால், இதில் ஜோதிடம் என்பது காரியமில்லை, விதிதான் கைகாட்டப்படும். தமிழின் தீவிரமான சில படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் தமிழ்ச் சமூகத்தின் முகத்திரையை முடிந்த அளவு சேதாரப்படுத்தியிருப்பார் மகேந்திரன். குடிகாரத் தகப்பனின் தகாத செயல்களால் அவரை வெறுத்து ஒதுக்கும் மகன் வேடம் நாயகனுக்கு. கல்யாணி அம்மா, தரகர் தங்கம், டீக்கடைக்காரரான பாலேட்டா, எழுத்தாளர் விஜயன் போன்ற கதாபாத்திர சித்தரிப்புகள் பிறர் படங்களில் காணக்கிடைக்காதவை. கல்யாணி அம்மாவின் தற்கொலைக் காட்சி தமிழ்ப் பாரம்பரியத்தின் மீது எச்சிலை உமிழ்ந்திருக்கும். இளையராஜாவின் இசை படத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கும்.

‘பணங்கிறது ஒரு க்வாலிஃபிகேஷன் இல்ல... நான் தங்கத்த ரொம்ப கேவலமா நெனைக்கிறவன்… நீங்க என்னிக்கோ அவங்கள கொல பண்ணீட்டீங்க, ஆனா அவங்க இறந்தது இன்னக்கிதான்... இப்படிக் குருட்டுப்பூனை விட்டத்துல தாவுன மாதிரி எதுக்கு அவனக் கட்டிக்க ஆசைப்படுற… உந்தலைவிதியையும் உங்கம்மா தலைவிதியையும் யார் மாத்துறது எல்லாம் நாசமாப்போங்க. இந்தக் குங்குமத்துல தான் உலகமே இருக்கோ பொம்பளய்ங்களுக்கெல்லாம்… நான் அம்மாவ நெனச்சி அழல, அம்மா வாழ்ந்த வாழ்க்கையை நெனச்சி அழறேன்…’ போன்ற பல வசனங்கள் மின்னல் கீற்றுகளாய் ‘பளிச் பளிச்’என வந்து விழும். சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை அறிந்த இயக்குநர் மகேந்திரன், இந்தப் படத்தின் ரத்தினச் சுருக்கமான பல வசனங்கள் வழியே நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சாடியிருப்பார். பெண்கள் திருமணத்தை வேண்டி விரும்பி எல்லாம் ஏற்கவில்லை, வேறு வழியே இல்லாத காரணத்தால்தான் ஏற்க வேண்டியதிருக்கிறது என்னும் யதார்த்தத்தையே படம் சுட்டி நிற்கும்.

 

உடன் கட்டை என்னும் சதி

இயக்குநர் அபர்ணா சென், ‘சதி’ (1989) என்னும் பெயரில் ஒரு வங்க மொழிப் படம் எடுத்திருக்கிறார். இது 1800-களில் இந்தியச் சமூகத்தில் வழக்கத்திலிருந்த உடன்கட்டை ஏறுதலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம். அம்மா, அப்பாவை இழந்து, வாய் பேச இயலாத நிலையில் வாழும் ஒரு பரிதாபத்துக்குரிய பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் ஷபானா ஆஷ்மி. அவளுடைய திருமண தோஷம் காரணமாக அவளை ஓர் ஆலமரத்துக்குத் திருமணம்செய்து வைத்துவிடுவார்கள். அவள் கருத்தரித்தும் விடுவாள். ஆனால் அது மரத்தின் வேலையல்ல; ஒரு மனிதரின் கைங்கர்யம்தான். மாடு பெண் கன்றை ஈன்றால் மகிழும் சமூகம் பெண் பிள்ளை பிறந்தால் ஏன் துக்கம்கொள்கிறது எனும் கேள்வியைக் காட்சிரீதியாக எழுப்பியிருப்பார் அபர்ணா சென். இந்தப் படத்தின் திரைக்கதை தாயைவிட மேலாக உங்களைத் தாலாட்டும். அதையெல்லாம் மீறி பொறுமை காத்தால் படத்தைப் பார்த்து முடிக்க இயலும்.

பொதுவாக அனைத்துப் படங்களிலுமே திருமணத் தடை போன்ற நம்பிக்கை காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை மாறவில்லை. சமீபத்தில் வெளியான ‘பாம்புச் சட்டை’ படத்தில்கூடத் தன் அண்ணிக்குத் திருமணம் நடத்திவைக்க அந்த நாயகன் படாதபாடு படுவான். அவருடன் ஒரே வீட்டில் இருக்க நேரும் நாயகனையும் அண்ணியையும் தொடர்புபடுத்தி ஊரே பேசும். ஆண் - பெண் உறவு, திருமணம் என்பவை குறித்தெல்லாம் இன்னும் இந்தச் சமூகத்தில் பெரிய அளவிலான புரிதல் வரவில்லை. ஆனாலும் மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வப்போது திரைப்படங்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றன என்பதே ஆறுதல்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19465912.ece

Link to comment
Share on other sites

சினிமா ஸ்கோப் 43: சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 
18chrcjRamanetthanairamanadi

‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தில் கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன்

சி

னிமாக் கனவில் தினந்தோறும் தலைநகரங்களில் அடைக்கலமாகும் இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம். தமிழ்நாட்டில் வீட்டைவிட்டு ஓடிவரும் இளைஞர்களில் பலர் தேசத்தைக் காக்க ராணுவத்தில் சேரவில்லை என்றால் பெரும்பாலும் கலையைக் காக்க சினிமாவில்தான் சேருகிறார்கள். அதிலும் காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்குப் பிரதான இலக்கு சினிமாதான். ஒரு பெரிய நடிகராகவோ இயக்குநராகவோ ஆன பின்னர்தான் சொந்த ஊர் திரும்ப வேண்டும் எனச் சங்கல்பம் எடுத்துக்கொள்வார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் யாராவது ஒரு அமெச்சூர் நாடகத்தில் நடித்துவிட்டாலோ ஏதாவது ஒரு உப்புமா நாடகத்தை எழுதிவிட்டாலோ அவ்வளவுதான், அவரது கதை முடிந்தது. அடுத்த சத்யஜித் ரே, அடுத்த அமிதாப் என்ற கனவில் கோடம்பாக்கத்துக்கு ரயிலேறிவிடுவார். இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இல்லை. இப்படி வருபவர்களில் பத்து சதவீதத்தினர்கூட வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஏனெனில், சினிமா என்னும் பரமபதத்தில் ஏணிகள் சொற்பமே, அதிகமும் பாம்புகள்தான். இடையில் எத்தனையோ இழப்புகள். அத்தனையையும் தாங்கிக்கொண்டு ஆயுள் முழுக்க இரண்டு மணி நேர சினிமா ஒன்றில் பங்களித்துவிட வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள். அறிவு இதை அபத்தம் எனலாம்; உணர்வு மட்டுமே இதைப் புரிந்துகொள்கிறது.

கே. பாலசந்தரின் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘சர்வம் சுந்தர’த்தில் (1964) சினிமா முயற்சியில் தோற்றுப்போய் ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்க்கும், மிகவும் சுமாரான தோற்றம் கொண்ட நாகேஷ் ஒரு காதல் காரணமாக மீண்டும் முயன்று பெரிய நடிகராகிவிடுகிறார். படத்தில் அவரது காதல் கைகூடாது.

பி.மாதவன் இயக்கிய ‘ராமன் எத்தனை ராமனடி’யில் (1970) கிராமத்தில் ஜமீன்தாரின் தங்கையான கே.ஆர்.விஜயாவைக் காதலித்திருப்பார் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, வெகுளித்தனமான சிவாஜி கணேசன். இதனால் ஜமீன்தார் நம்பியாரால் அவமானப்படுத்தப்படும் சிவாஜி கணேசன் பெரிய நடிகராகும் லட்சியத்துடன் சென்னைக்கு வந்துவிடுகிறார்; படபடவென அடுத்தடுத்த காட்சிகளில் வெற்றிகரமான நடிகராகிவிடுகிறார். எந்தக் காதலியைக் கரம் பற்றுவதற்காக அவர் நடிகரானாரோ அந்தக் காதலியை அவர் மீண்டும் சந்திக்கும்போது அவர் மற்றொருவரின் மனைவி.

 

சொர்க்க வாசல்

இதே பி. மாதவனின் இயக்கத்தில், ஷோபா, சிவகுமார் நடித்து வெளிவந்த படம் ‘ஏணிப்படிகள்’ (1979). இதில் ஒரு கிராமத்து தியேட்டர் ஒன்றில் குப்பை பெருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செல்லக்கண்ணுவுக்கு சினிமா எனும் சொர்க்கத்தின் வாசல் திறக்கிறது. அவளை முன்னேற்ற அவளுடைய காதலன் மாணிக்கம் உறுதுணையாக இருக்கிறான். ஆனால், செல்லக்கண்ணு, கமலாதேவி என்னும் நட்சத்திரமாக மாறத் தொடங்கியபோது அவளுடைய அண்ணனும் அண்ணியும் மாணிக்கத்தைத் தந்திரமாக வெளியேற்றிவிட்டு அவளது புகழ் வெளிச்சத்தில் குளிர்காய்கிறார்கள்.

இந்தத் தந்திரத்தை எல்லாம் அறிந்த கமலா தேவி தற்கொலை செய்துகொண்டு செல்லக்கண்ணுவாக மாறித் தன் மாணிக்கத்தைக் கரம்பற்றுகிறாள். இந்தப் படம் தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கிய ‘சீதாம்மாலக்‌ஷ்மி’ படத்தின் மறு ஆக்கம்தான். வசனத்தை மகேந்திரன் எழுதியிருப்பார்.

இந்தப் படங்களில் ஏதோ ஒரு வகையில் காதல் காரணமாகச் சில கதாபாத்திரங்கள் நடிகர்களாகின்றன. பிரவீணா பிலிம் சர்க்யூட் என்னும் நிறுவனத்தின் பெயரில் கே.பாக்யராஜ் தயாரித்து இயக்கிய ‘தாவணிக்கனவுக’ளில் (1984) தன் தங்கைகளைக் கரையேற்றுவதற்காகக் கதாநாயகனாக முயல்வார் பாக்யராஜ். கதாநாயகனாக மாறிக் கைநிறையச் சம்பாதிப்பார்.

தன் தங்கைகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் என மாப்பிள்ளைகளை வரிசையில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். ஆனால், அவர்களோ தங்களது கஷ்ட காலத்தில் உதவிய டெய்லர், போஸ்ட்மேன் போன்ற சாதாரணர்களையே கரம்பற்ற விரும்புவார்கள். பணத்தைவிட பரிவே பிரதானம் என்பதே படம் சொன்ன செய்தி. ஆனால், மக்கள் அந்தச் செய்தியைக் கேட்க விரும்பவில்லை; படம் தோல்வியடைந்தது.

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயி’லில் விஜயன் ஏற்றிருந்த பட்டாளத்தார் போன்ற கேப்டன் என்னும் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். திரைக்கதையில் கேப்டன் கதாபாத்திரம் சுப்ரமணியனுக்கு உதவியிருக்கும். படத்தைப் பொறுத்தவரை சிவாஜியால் பாக்யராஜுக்கு உதவியில்லை. சிவாஜியை இயக்கியாகிவிட்டது என்னும் பெருமை மட்டுமே அவருக்கு மிச்சம்.

 

சின்னச் சின்ன திருப்பம்

மலையாளத்தில் வெளியான ‘கட்டப்பனையிலே க்ருதிக் ரோஷன்’ (2016) படத்தின் சில காட்சிகளில் ‘தாவணிக் கனவுகள்’நினைவுக்கு வந்தது. இப்படத்தில், விஷ்ணு உண்ணிகிருஷ்ணனை சினிமாவில் கதாநாயகனாக்க அவருடைய தந்தை முயல்வார். ஏனெனில் அவர் சினிமா நடிகராக விரும்பியிருப்பார். ஆனால், அது நடைபெறாமல் போனதால் தன் மகனை எப்படியும் நடிகனாக்க ஆசைப்படுவார். திருடனாகவே சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அவருக்கோ கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். இறுதியில் கதாநாயகனாக ஆகிவிடுவார்.

இந்தப் படத்தில் ஒரு காட்சி உண்டு. இயக்குநர் ஒருவர் தன் மனைவியுடன் ஹோட்டலுக்கு வருவார். அதைப் பார்த்த விஷ்ணு அவரிடம் போய் வாய்ப்பு கேட்கலாம் எனச் செல்வார். ஆனால், இயக்குநரோ குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக மனம் வெதும்பிய நிலையிலேயே அங்கு வந்திருப்பார். விஷ்ணுவைக் கண்டபடி திட்டி அனுப்பிவிடுவார்.

இது தான் யதார்த்தம். அதன் பின் அந்த இயக்குநரே அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட விஷ்ணுவுக்குக் கதாநாயகன் வாய்ப்பளிப்பார். இது திரைக்கதைக்கான சுவாரசியம். சின்னச் சின்னத் திருப்பங்கள், சுவாரசியங்கள், நகைச்சுவைக் காட்சிகளுடன் கூடிய இயல்பான திரைப்படம் இது. படத்தின் திரைக்கதையும் விஷ்ணு உண்ணிகிருஷ்ணன்தான். படத்தை இயக்கியிருப்பவர் நாதிர்ஷா.

மார்டின் பிரகத் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பெஸ்ட் ஆக்டர்’ (2010) திரைப்படத்தில் பள்ளிக்கூட ஆசிரியரான மோகனுக்கு சினிமா ஆசை இருக்கும். நிம்மதியான ஆசிரியர் வேலையை விட்டு எதற்காக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வியை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரும் சினிமா வாய்ப்புக்காகப் பல படிகளில் ஏறி இறங்குவார். ஒரு கேங்க்ஸ்டர் வேடத்தில் நடிப்பதற்காக உண்மையிலேயே ஒரு கொட்டேஷன் குழுவில் இணைந்துவிடுவார்.

அதனால் பல சிக்கல்கள் உருவாகும். அனைத்திலிருந்தும் விடுபட்டு இறுதியில் நாயகனாகிவிடுவார். ஒரு நடிகனுக்கு அடிப்படையில் என்ன தேவை என்பதை உணர்த்தும்வகையிலான திரைக்கதை இது.

 

புதுக் களம்

அனீஷ் உபாசனா இயக்கத்தில் 2012-ல் வெளியான ‘மேட்னி’ திரைப்படத்தில் ஒரு புதுவிதமான கதைக் களம். இதில் சினிமா ஆசை கொண்ட நாயகன் ஆச்சாரமான இஸ்லாமிய குடும்பத்துப் பிள்ளை. குடும்பச் சுமை காரணமாக வேலை தேடி நாயகி நகரத்துக்கு வருகிறாள். இருவரும் ஒரு சினிமாவில் நடிக்கும் சூழல் அமைகிறது. நல்ல கதைப் படம் என நம்பி அதில் நடிக்கிறார்கள்.

ஆனால், அந்தப் படம் திரைக்கு வரும்போது துண்டுப் படங்கள் இணைக்கப்பட்ட சதைப் படமாக மாறிவிடுகிறது. இதனால் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களைச் சொல்வதே இந்தப் படம்.

ஒரு திரைக்கதையில் சினிமா ஆசை கொண்ட கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்துவிடுகின்றன. ஆனால், யதார்த்தத்தில் சினிமாவுக்காக வாழ்வைத் தொலைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த யதார்த்தத்தைப் புரியவைக்கும் கதைகளைக் கொண்ட படங்களுக்கு உதாரணங்கள்தான் ‘மேட்னி’ போன்றவை.

இவை உங்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதில்லை; இந்தப் பாதை இப்படியும் அமையலாம் கவனமாக இருங்கள் என உங்களை எச்சரிக்கின்றன. எல்லா எச்சரிக்கைகளையும் மீறி சினிமாக் கதவுகளைச் சில கால்கள் வந்தடையும்; கைசோர அதன் கதவுகளைத் தட்டிப் பார்க்கும். அவர்களின் வாழ்வு விருதால் நிறையுமா விருதாவாகுமா என்பதே காலத்தின் திரைக்கதை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19509810.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சினிமாஸ்கோப் 44: அவள் அப்படித்தான்

 

 
08chrcjAvalappaditthan

அவள் அப்படித்தான்

மிழ் சினிமாவில் ஆண் பெண் உறவு பற்றிய வெளிப்படையான படமொன்றை உருவாக்கியவர் ருத்ரய்யா. ஒரே படத்தின் மூலம் உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைக்கப்பட்ட இயக்குநரும் அவர்தான். அவருக்கு அளவுக்கதிக புகழ் கிடைத்துவிட்டது என்று கூறுவோர் உண்டு. அந்த அளவுக்குத் தகுதி கொண்ட படமல்ல ‘அவள் அப்படித்தான்’ என்பது தீவிரமான மனப்போக்கு கொண்ட சிலரது எண்ணம். ஆனாலும், ஒரு பொதுவான ரசிகனின் ரசனையில் அவருடைய ‘அவள் அப்படித்தான்’ எதிர்பாராத குறுக்கீடுகளை நிகழ்த்தியது.

 

மரபுகளை உடைத்தாள் மஞ்சு

   

1978-ல் அந்தப் படம் வெளியான பின்னர் தமிழ் சினிமாவின் மரபு வேலிகள் திசையறியாது தவித்தன. அதுவரையான பெண் கதாபாத்திரங்களை எல்லாம் அது மிகச் சிறியதாக மாற்றிவிட்டு விஸ்வரூபம் எடுத்திருந்தது. கே.ராஜேஷ்வர், வண்ணநிலவன் ஆகியோருடன் இணைந்து இதன் திரைக்கதையை எழுதியிருந்தார் ருத்ரய்யா. அவர்கள் படைத்த மஞ்சு கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் நவீனப் பாத்திரங்களுக்கு முன்னோடியாகவே விளங்கியது. அதுவரை அப்படியொரு துணிச்சலான கதாபாத்திரம் எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்ததா என்பது சந்தேகமே.

இன்றுவரை அந்தப் படம் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம் மஞ்சுவாக நடித்திருந்த ஸ்ரீபிரியாதான்; அல்லது ஸ்ரீபிரியா ஏற்றிருந்த மஞ்சு கதாபாத்திரம்தான். ஒரு நடிகையாகத் தனது படைப்புத்திறனின் உச்சத்தை மஞ்சு கதாபாத்திரம் வழியே அவர் வெளிப்படுத்தியிருந்தார். பெண் விடுதலை, பெண்களின் நிலைமை போன்ற பல விஷயங்களைப் பேசும் இந்தப் படத்தின் வழியே சமூகத்தின் போலித்தனத்தையும் அம்பலப்படுத்தினார் ருத்ரய்யா. ‘அவள் அப்படித்தான்’, மஞ்சுவை மட்டுமல்ல, மஞ்சு போன்ற எவரையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைச் செய்தி. இதே செய்தியை வெவ்வேறு இயக்குநர்கள் வெவ்வேறு படங்கள் வழியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

பேரன்பும் பெருங்கோபமும்

1979-ல் வெளியான மேற்கு ஜெர்மனி நாட்டுத் திரைப்படம் ‘தி மேரேஜ் ஆஃப் மரியா ப்ரௌன்’. ரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர் இயக்கத்தில் வெளியானது இந்தப் படம். இதன் நாயகியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவள் என்ன நினைக்கிறாள், யாரை விரும்புகிறாள் என்பது எல்லாம் அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இரண்டாம் உலகப் போரின்போது அவளுக்குத் திருமணம் ஆனது. திருமணம் செய்துகொண்ட அவளுடன் அவளுடைய கணவன் அரை நாளும் ஒரு ராத்திரியும் மட்டுமே வாழ்ந்துவிட்டு போருக்குச் சென்றுவிடுகிறான்.

போருக்குச் சென்ற அவனை அவள் தேடிக்கொண்டே இருக்கிறாள். அவன் ஒரு நாளில் திரும்பிவந்துவிடுகிறான். அந்த நாளில் அவள், அந்த மரியா, தனக்குப் பிடித்த காதலனுடன் படுக்கையில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் காதலனின் கரு மிதந்துகொண்டிருக்கிறது. காதலனுக்கும் கணவனுக்கும் மோதல் வருகிறது. அவள் காதலனை அடித்துக்கொன்றுவிடுகிறாள். கணவன் பழியேற்றுச் சிறைக்குச் செல்கிறான்.

08chrcjmarrige%20of%20maria%20braun

தி மேரேஜ் ஆஃப் மரியா பிரௌன்

 

இப்போது கணவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவளுக்கு வருகிறது. ஒரு தொழிலதிபரின் காரியதரிசியாகப் பணியில் சேரும் மரியா, அவரது அன்புப்பிடியில் சிக்கிக்கொள்கிறாள். அவர் அவளை மணந்துகொள்ள விரும்புகிறார். அவளைப் பொறுத்தவரை அவள் கணவனுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்திருக்கிறாள். ஆகவே, மனம்விட்டு தொழிலதிபர் கேட்டும் மணம்புரிய மறுத்துவிடுகிறாள். சிறையிலிருக்கும் கணவனை வெளியே கொண்டுவரப் பாடுபடுகிறாள்.

இந்தக் கதையைப் படித்ததும் உங்களுக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுமைப்பெண் திரைப்படம் நினைவுக்கு வரலாம். அதிலும் ரேவதி தன் கணவன் பாண்டியனைச் சிறையிலிருந்து விடுவிக்கப் படாத பாடு படுவார். வெளியே வரும் கணவன் தனது நடத்தையைச் சந்தேகப்படும்போது, புயலாகப் பொங்கி எழுந்து படிதாண்டுவாள்.

சிறையிலிருக்கும் மரியாவின் கணவரைத் தொழிலதிபர் சென்று பார்க்கிறார். மரியாவின் கணவனுக்கும் இந்த உறவு தெரியவருகிறது. சிறையிலிருந்து வெளியே வரும் அவன். மரியாவைவிட்டுப் பிரிந்துசெல்கிறான். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இணைகிறார்கள். அவள் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறாள். இதற்கிடையில் தொழிலதிபர், அவரது சொத்தை மரியாவுக்கும் அவளுடைய கணவனுக்கும் எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறார்.

அவள் மீண்டும் கணவனுடன் சேர்ந்த அன்று இந்தத் தகவல் அவளுக்குக் கிடைக்கிறது. கேஸ் ஸ்டவ்வில் சிகரெட் பற்றவைக்கும் அவள் கேஸ் ஸ்டவ்வை அடைக்க மறக்கிறாள். சிலிண்டர் வெடித்து இருவரும் இறக்கிறார்கள். ஸ்டவ் தானாக வெடித்ததா அவள் வெடிக்கவைத்தாளா குழப்பம் வருகிறதா என்று அதுதான் மரியா. மரியா போன்றவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

 

பின்தொடரும் பெண்மையின் நிழல்

மஞ்சு, மரியா போன்றவர்களைத்தான் ஞாபகப்படுத்துகிறார் ஆல்தியா ஜான்சனும். இது ராமின் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ 2017. ஆண்களால் ஒரு காலமும் பெண்களைப் புரிந்துகொள்ள முடியாது. பெண்கள் மனமுவந்து தரும் இடத்தில் ஆண்கள் சில காலம் தங்கிக்கொள்ளலாம். அவ்வளவுதான். அந்த இடத்தையும் ஆண்கள் தங்கள் மந்த புத்தியால் அழித்துக்கொள்கிறார்கள். ஆல்தியா ஜான்சன், சௌமியா, வீனஸ் போன்ற பெண்களது வாழ்வு ஆண்களால் அலைக்கழிக்கப்படுகிறது.

இங்கு பிரபுக்களும் அங்கித்களும் வேலைக்காதவர்கள். ஜேக்கப்களும் ஆல்தியாக்களைப் புண்படுத்துகிறார்கள். பர்ணபாஸ்களுக்கு என்ன உரிமை இருக்கிறது வீனஸ்களைத் தண்டிக்க? இப்படியான கேள்விகளை எல்லாம் உள்ளடக்கிய தரமணி உலகமயமாக்கலின் காலத்தின் பெண்களின் துயரங்களைப் புதுமையான திரைமொழியில் பேசியது. இயற்கையை அழித்த உங்கள் வாழ்வில் இதுபோன்ற துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும் அது எச்சரிக்கிறது. அதன் மொழி சற்றுக் கடுமையானது. ஆனால், அது சொன்ன சேதி புரிந்துகொள்ளப்பட வேண்டியது. புரிந்துகொள்வது அவரவர் பாடு.

 

கனவுக்கும் நனவுக்குமான இடைவெளி

இவையெல்லாம் ஆண்கள் பார்வையில் வெளிப்பட்ட படங்கள். இந்த ஆண்டு வெளியான இந்திப் படமான ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ ஒரு பெண்ணின் பார்வையில் பெண்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்த திரைப்படம். இதை இயக்கியவர் ஆலங்கிரிதா ஸ்ரீவாஸ்தவா. பெண்களின் கனவுக்கும் நனவுக்குமான இடைவெளிகளை இப்படத்தின் வாயிலாகப் படமாக்கியிருக்கிறார். ஜீன்ஸ் அணிந்து சுதந்திர வானில் பறக்கும் ஆசை கொண்ட இஸ்லாமியப் பெண் ஒருவர், அனுதினமும் புர்கா தைப்பதிலேயே தனது பருவத்தைக் கழிக்க நேர்கிறது. விரும்பிய காதலனைக் கரம்பற்ற முடியாமல் தாய் செய்துவைத்த திருமணத்துக்கு ஆளாகும் பெண் ஒருவர், தனது சமூக மரபுக்கெதிரான தன் எதிர்ப்பைக் காட்டுகிறார்.

08lipstick%20under%20my%20burkha

லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா

 

திருமண நிச்சயதார்த்தன்றே தன் காதலனுடன் உறவுகொள்கிறார். மற்றொரு மணமான இஸ்லாமியப் பெண்ணோ பணியிடத்தில் திறம்படச் செயலாற்றுகிறாள்; படுக்கையிலோ அவளை உறவுகொள்வதற்கான இயந்திரம் போல் பயன்படுத்துகிறான் கணவன். 50 வயதைக் கடந்த மற்றொரு பெண் தனது பெயரைக் கூட மறக்கும் அளவுக்குப் புற உலகினரால் நடத்தப்படுகிறார். தனக்கு நீச்சல் கற்றுத்தரும் இளைஞனிடம் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல் வழியே புதியதொரு உலகத்தைத் தரிசிக்கிறார்.

அவர்கள் நால்வரையும் அவர்களைக் குற்றப்படுத்த எந்தத் தகுதியுமற்ற ஆண்கள் அற்பக் காரணங்களுக்காகக் குற்றப்படுத்துகிறார்கள். பெண்களின் எந்தக் கனவையும் புரிந்துகொள்ளாத ஆண்கள், இதற்கெல்லாம் தகுதியற்றவர்கள் என்கிறார் இயக்குநர்.

இந்த எல்லாப் படங்களிலுமே பெண்கள் புகைபிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள், ஆண்களுடன் உறவு கொள்கிறார்கள். அவர்களின் வழியில் எல்லாம் ஆண்கள் எதிர்ப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனாலும் பெண்கள் கனவு காணும் ஆத்மார்த்த உறவை அளிக்க வகையற்ற கையறுநிலையிலேயே ஆண்கள் இருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை ஆண்கள் உணர்ந்துகொள்வதாகவே அத்தனை படங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் புரிந்துகொள்கிறார்களா?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19637772.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமாஸ்கோப் 45: விடுகதை

15chrcjorange%20mittai

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் விஜய் சேதுபதி

15chrcjAnniyan%20get%20ups

‘அந்நியன்’ படத்தில் மூன்று தோற்றங்களில் விக்ரம்

15chrcjorange%20mittai

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் விஜய் சேதுபதி

15chrcjAnniyan%20get%20ups

‘அந்நியன்’ படத்தில் மூன்று தோற்றங்களில் விக்ரம்

திரைப்படத்தைப் பொறுத்தவரை புதிய கதைகள் என எவையுமே இல்லை. எல்லாவற்றையுமே நம் முன்னோடிகள் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். திரைக்கதையில் மட்டும்தான் புதிது புதிதாக எதையாவது சொல்ல முடியும். எத்தனையோ திரைக்கதைகளைப் படித்துவிட்டு எவ்வளவோ திரைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒரு திரைக்கதை அமைக்க அமர்ந்தாலும் உருவாகப்போகும் புதிய திரைக்கதை பழையவற்றிலிருந்து மாறுபட்டு அமைய வேண்டும். இல்லையென்றால் திருப்தி கிடைக்காது. திரைக்கதைகளைப் படிப்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் ஏற்கெனவே எந்தெந்தக் கருப்பொருட்களில் எல்லாம் படங்கள் வந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள மட்டுமே உதவும். அவற்றைப் பார்த்துக் காட்சிகளை அப்படியே சுடும்போது படைப்பாளியின் தராதரம் வெளிப்பட்டுவிடும். ஷங்கர் பெரிய இயக்குநர் என அறியப்பட்டிருக்கிறார். ‘அந்நிய’னில் விக்ரமை ‘தி செவன்த் சீ’லின் மரணக் கதாபாத்திர கெட்டப்பில் வெளிப்படுத்தும்போது சட்டென்று எரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது. யோசிக்கவே மாட்டார்களா அப்படியே எடுத்துவைத்துவிடுகிறார்களே எனச் சலிப்பாக இருக்கிறது. ஒரு கதாபாத்திர வடிவமைப்புக்கே இப்படி என்றால் முழுப் படத்தையும் உருவிப் படம் பண்ணினால் ரசிகர்கள் படைப்பாளிகளை எப்படி மதிப்பார்கள்?

தமிழில் வித்தியாசமான படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் படைப்பாளிகளாலோ படங்களின் தலைப்புக்குக்கூட மெனக்கெட முடிவதில்லை. ஏற்கெனவே வந்து வெற்றிபெற்ற படங்களின் தலைப்புகளை அப்படியே வைத்துக்கொள்கிறார்கள். எழுபது எண்பது வருடங்களுக்கு முன்னர் வந்த படங்களின் தலைப்புகளை மறுபடி பயன்படுத்தினால் பரவாயில்லை. எண்பதுகளில் வந்த படங்களின் தலைப்புகளையே மறுபடியும் பயன்படுத்திவிடுவது ஏமாற்றத்தையே தருகிறது.

புதிய விஷயங்களை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு அவை கிடைக்கும்போது சட்டென்று பற்றிக்கொள்வார்கள். எப்போதுமே இந்திப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த சினிமா ரசிகர்களைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்கச் செய்ய முடிந்திருந்தது இளையராஜாவால். இளையராஜாவை மிஞ்சி என்ன செய்துவிட முடியும் என எண்ணியிருந்தால் ஒரு ஏ.ஆர்.ரஹ்மான் உருவாகியிருக்க மாட்டார். மாஸ்டர்களை மதிக்க வேண்டும் அதே நேரத்தில் அவர்களை மிஞ்சும் வகையில் படங்களை உருவாக்க முயல வேண்டும்? தமிழில் மிக அரிதான வகையிலேயே வித்தியாசமான களங்களில் படங்கள் உருவாக்கப்படுகின்றன.

 

அதே நிலம்.. புதிய களம்

2015-ல் ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்றொரு படம் வந்தது. பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து, நடித்த படம். அது வணிக ரீதியாக வெற்றிபெற்ற படமல்ல. ஆனால், புதிதாக எதையாவது தர வேண்டும் என்ற உந்துதலில் உருவாக்கப்பட்ட படம். அதுவரையிலும் தமிழ் இயக்குநர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தையும் கல்லிடைக்குறிச்சியையும் சுந்தரபாண்டிய புரத்தையும் குற்றாலத்தையும் அழகாகக் காட்டி வந்தார்கள். ‘ஆரஞ்சு மிட்டா’யில் அதே திருநெல்வேலி மாவட்டம்தான். அதே அம்பாசமுத்திரம்தான். ஆனால், அந்தப் படத்தில் தென்பட்ட நிலம் வேறு படங்களில் தென்படாத நிலம். 108 ஆம்புலன்ஸ் என்னும் புதிய வரவைத் திரைக்கதையின் மையமாக்கி ஒரு படத்தை உருவாக்க முடிந்த தன்மை புதிது. அதன் திரைக்கதை பெரும்பான்மையோருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயம். ஆனால், அதன் நோக்கம் புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்பதே. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் அவர் இருப்பதாலேயே ‘சூதுகவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவரையும் ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களின் டெம்ப்ளேட் கதாபாத்திரங்களில் அடக்கிவிடவே திரையுலகம் முயலும். அதில் நாயகர்கள் ஜாக்கிரதையாக இருந்தால் தமிழ்ப் படங்களுக்கு நல்லது.

 

அடையாளமாகும் படங்கள்

சகலகலா வல்லவன் கமல் ஹாசனை நாம் ‘ஹே ராம்’, ‘மகாநதி’ போன்ற படங்களுக்காகத்தான் நினைவுகூர்கிறோம். காலத்தால் முந்தைய அத்தகைய படைப்புகள் மட்டுமே அவரது அடையாளம். வணிகரீதியாக வெற்றிபெற்றதா என்பதை எல்லாம் மீறி கமல் ஹாசன் திரைத்துறையை எவ்வளவு நேசித்தார் என்பதற்குச் சான்றாக அப்படியான படங்கள் நிலைத்திருக்கும். ‘காதல் கோட்டை’ படத்தின் மூலம் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்ற அகத்தியனுக்குத் தனது தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்பு கொடுத்தார் கே பாலசந்தர். அப்போது அகத்தியன் உருவாக்கிய படம் ‘விடுகதை’. அது ஒரு தோல்விப் படம்தான். ஆனால், மரணம் பற்றி ஆக்கபூர்வமாகப் பேச முயன்றிருந்தார். மரணத்தை யதார்த்தமாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றிப் படம் பேசியது. அது பெரிதாக வரவேற்கப்படவில்லை. மீண்டும் அவர் ‘காதல் கோட்டை’ சாயலிலே ‘காதல் கவிதை’, ‘வசந்த மாளிகை’ பாதிப்பிலே ‘கோகுலத்தில் சீதை’ என்று சென்றுவிட்டார். மணிரத்னத்திடமிருந்து வெளிவந்த சுசிகணேசனின் முதல் படம் ‘விரும்புகிறேன்’. அவர் மிக விருப்பத்துடன்தான் படத்தை உருவாக்கினார். நல்ல சப்ஜெக்ட்தான். வணிகரீதியில் வெற்றிபெறவில்லை. ஆனால் சுசி கணேசனை நினைவுபடுத்த அந்தப் படம்தான் உதவும். மணிரத்னத்திடமிருந்தோ கமல் ஹாசனிடமிருந்தோ ஒருவர் ஆக்கபூர்வமான ஆளாக வெளிப்படுவதே அபூர்வம். அப்படி வெளிப்பட்ட சுசி கணேசன் ‘கந்தசாமி’, ‘திருட்டுப் பயலே’ போன்ற படங்களின் வழியேதான் வெற்றிபெற்ற இயக்குநரானார்.

 

உணர்த்தும் ஊடகம்

‘உதிரிப்பூக்கள்’ தொடங்கி ‘சுப்ரமணிய புரம்’, ‘சூது கவ்வும்’, ‘ஆரண்ய காண்டம்’, ‘மதயானைக் கூட்டம்’ போன்ற சில திரைப்படங்கள் மட்டுமே சட்டென்று நினைவில் வருகின்றன. இதற்கிடையே ‘சேது’, ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’ போன்ற சில படங்கள் வழக்கத்திலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. இந்த எல்லாத் திரைப்படங்களுமே ஏதாவது ஓர் கருத்தை எடுத்துக்கொண்டு அதை உணர்த்துவதற்கான திரைக்கதையை அமைத்துக்கொண்டுதான் பயணப்பட்டிருக்கின்றன. பார்வையாளர் சொல்லப்பட்ட திரைக்கதையின் வழியே உணர்த்தப்பட்ட கருத்தை உள்வாங்கிக்கொள்கிறார். ஆகவே, திரைக்கதை சுவாரசியமாக இல்லையென்றால் எதையுமே பார்வையாளரால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் படத்திலிருந்து விலகிவிடுகிறார்கள். இங்கே கருத்து என்பது ஒரு செய்தி அவ்வளவுதான். அதை நன்னெறி என்பதாக மட்டும் உள்வாங்கிக்கொள்ள வேண்டியதில்லை.

கருத்து சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை என்று இயக்குநர்கள் சொன்னாலும் படங்கள் ஏதாவது ஒரு கருத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. கருத்தை வெளிப்படையாகச் சொன்னால் அடப்போங்கப்பா என ரசிகர்கள் அலுத்துக்கொள்வார்கள். ஆகவே, அதை உணர்த்தும்படியான திரைக்கதையை அமைக்கும்போது ரசிகர்கள் அதை உணர்ந்துகொள்வார்கள்.

படம் ஒரு விஷயத்தை உணர்த்த வேண்டுமே தவிர அதையே போதிக்கக் கூடாது. போதனை கட்டுரையின் தன்மை, திரைப்படத்தின் தன்மை உணர்த்துதலே. போதனைத் தன்மைக்கு உதாரணமாக கே.எஸ்.சேது மாதவன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ‘நம்மவ’ரைச் சொல்லலாம். திரைக்கதையின் காட்சிகள் அனைத்துமே மையக் கருத்தை உணர்த்துவதற்கான பயணமாக இருக்கும்போது படம் சுவாரசியமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் ருசிகரமாகச் சொல்லி உணர்த்த வேண்டிய செய்தியைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதில்தான் திரைக்கதை அமைப்பின் சவாலே அடங்கியுள்ளது. அதை முடிந்தவரை நுட்பமாகச் செய்ய வேண்டும். ரஜினி காந்த் படத்து ஓபனிங் காட்சிபோல் அமைந்துவிடக் கூடாது. அது ரஜினிக்கு சரி. நல்ல படத்துக்குச் சரியாக அமையாது.

(நிறைவடைந்தது)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689579.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.