Jump to content

சிறுவன் & ஊடகவியளாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கும்,  இரணில் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமாதான காலப்பகுதியில் வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டினை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த இரு சிங்கள ஊடகவியளாளர்கள் பார்வையிட்டார்கள். அவர்களை தமிழ் ஊடகவியளாளர் ஒருவர் அவ்விடத்துக்கு கூட்டிவந்திருந்தார். சிங்கள ஊடகவியளாளர்கள்,  சிங்களத்தில் தங்களது சந்தேகங்களைக் கேட்க , தமிழ் ஊடகவியளாளர் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். பிறகு அவர்கள் குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவு இடமான தீருவிலுக்கு சென்றார்கள்.  அங்கே ஒரு 11 வயதுமிக்க சிறுவன் ஒருவன், அவ்விடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.   சிங்கள ஊடகவியளாளர் ஒருவர் சிங்களத்தில் அச்சிருவனைப்பார்த்து ஏன் இவர்கள் இறந்தார்கள் என்று கேட்டார்.   தமிழ் ஊடகவியளாளர் தமிழில் இதனை மொழிபெயர்க்க, சிறுவன் ' குமரப்பா, புலேந்திரனின் சாதனைகள், இந்தியா இலங்கையின் கூட்டுச்சதி' என்பவற்றினை விளக்கினான். இதனைக் கேட்டசிங்கள ஊடகவியளாளர் ஒருவர் ' ரூபாவாகினி நடாத்திய போட்டியில்  தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களிடம், இலங்கையின் முதலாவது பிரதமர் பற்றிக் கேட்டபோது பலர் சரியான பதில் தெரியாமல் தவித்ததினையும், 11 வயது சிறுவன் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பற்றி இவ்வளவு விளக்கமாக இருப்பதையும் பற்றிச் சொல்லி ஆச்சரியப்பட்டார். அச்சிறுவனைப் பார்த்து நீ விடுதலைப்புலிகளை நேசிக்கிறயா? என்று கேட்டார். சிறுவன் இல்லை என்றான். 

ஊடகவியளாளர்கள் அவ்விடத்தினைவிட்டு சிறுதூரம் சென்றதும், அச்சிறுவன் நிலத்தில் எதோ எழுதிக்கொண்டிருந்தான். தமிழ் ஊடகவியாளர், அச்சிறுவன் என்ன எழுதுகிறான் என்று திரும்பி வந்து பார்க்க அங்கே 'விடுதலைப்புலிகள்' என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது.  'புலிகளைத்தான் பிடிக்காது என்று சொன்னீர். ஏன் அவர்களின் பெயரை இங்கு எழுதினீர். ' என்று தமிழ் ஊடகவியாளர் கேட்க,  ''எனக்கு அவர்களைப்பிடிக்கும் என்று சொன்னால் அந்தச் சிங்களவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்' என்று சொன்னான்.

தமிழ் ஊடகவியளாளர் இதனைச் சிங்கள ஊடகவியளாளர்களிடம் கூறி 'உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இங்கு இருப்பவர்களிடம் , அதில் அச்சிறுவன் என்ன எழுதினான் என்று கேட்டுப்பாருங்கள் என்றார்.

 சிங்கள ஊடகவியளாளர் தனது சந்தேகத்தினை அருகில் நின்றவர்களிடம் கேட்டு அறிந்ததும், 'விடுதலைப்புலிகளினை முற்றாக பிற்காலத்தில் அழித்தாலும், அவர்களை தமிழ் மக்களின் மனதில் இருந்து முற்று முழுதாக அழிக்கமுடியாது.அதற்கு  புலிகளின் நினைவு இடங்களும் தமிழ் மக்களுக்கு துணைபோகின்றன' என்று சொன்னார்.

 2009க்குப் பிறகு வடக்கு கிழக்கில் இருந்த மாவீரர் துயில் இல்லங்கள், நினைவுத்தூபிகள், சங்கிலியன், பண்டாரவன்னியன் அரசர்களின் சிலைகளும்,விபுலானந்தர் போன்ற புலவர்களின் சிலைகளும் அழிக்கப்பட்டன. வீரத்துடன் நின்ற சங்கிலியனின் சிலைக்குப் பதிலாக சாந்த குணத்தினாலான சங்கிலியன் சிலை கட்டப்பட்டது.  இடிக்கப்பட்ட கோவில்களும், தேவாலயங்களும் புனர் நிர்மானம் செய்யப்பட்டன.

புதுபுது கோவில்களும் தேவாலயங்களும், புதுக்கடவுளுக்கு அமைவிடங்களும் கட்டப்பட்டுவருகின்றன. புத்தர்சிலைகளும் பெருகிக்கொண்டுவருகின்றன. சிங்கள இராணுவத்தினது நினைவுத்தூபிகளும் கட்டப்பட்டுவருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு என்ன சொல்லவாறீயள்........?புலிகள் திறம் என்றீயளா?சிங்கள ஊடகவியாளாலர்கள் திறம் எங்கிறியளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11.5.2016 at 6:03 AM, கந்தப்பு said:

2009க்குப் பிறகு வடக்கு கிழக்கில் இருந்த மாவீரர் துயில் இல்லங்கள், நினைவுத்தூபிகள், சங்கிலியன், பண்டாரவன்னியன் அரசர்களின் சிலைகளும்,விபுலானந்தர் போன்ற புலவர்களின் சிலைகளும் அழிக்கப்பட்டன. வீரத்துடன் நின்ற சங்கிலியனின் சிலைக்குப் பதிலாக சாந்த குணத்தினாலான சங்கிலியன் சிலை கட்டப்பட்டது.  இடிக்கப்பட்ட கோவில்களும், தேவாலயங்களும் புனர் நிர்மானம் செய்யப்பட்டன.

புனர்நிர்மாணம் எனும் பெயரில் சிங்கள குடியேற்றமும் புத்தவிகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கந்தப்புவை மீண்டும் கண்டதில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை யாராலும் மறைக்க  முடியாது.
அது மண்ணுக்குள்ளே புதைக்கப்பட்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நெஞ்சை நக்கீட்டீங்க போங்க.

வாயைத் திறக்க முடியாத தமிழன்.

Link to comment
Share on other sites

கருணாநிதி இப்பவும் அரசியல் செய்வது இதனால் தான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.