Jump to content

அம்மா..உனக்கென ஒரு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11may2.jpg

 

அன்னையர் தினம்..!

 

அகிலத்தின் அன்னையர்களுக்கு…,

இது ஒரு தினம் !

 

என் தேசத்து அன்னையருக்கு..,

இது ஒரு செய்தி!

 

எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம்,

நினைத்துப் பார்க்கையில்…!

 

இதயத்தின் ஆழத்தில் …,

எங்கோ ஒரு மூலையில்,

இலேசாக வலிக்கின்றது!

 

அப்பா என்னும் ஆண் சிங்கம்,

பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்..,

அடங்கிப் போன அம்மா!

 

பிரசவங்களின் போதெல்லாம்,,

மரணத்தைத் தரிசித்து…,

மீண்டு வருகின்ற அம்மா!

 

ஆண் என்றாலும்.

பெண் என்றாலும்,

ஆண்டவன் தானே தருகின்றான் என்று,

ஆறுதல் கொள்ளும் அம்மா!

 

அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை,

ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்லை!

ஆயுள் காப்புறுதியும் இல்லை!

 

உரிந்த வேப்பம் பட்டைகளும்,

நல்லெண்ணையில் பொரித்த,

வெறும் முட்டைப் பொரியலும்,

கொஞ்சம் வசதியிருந்தால்…,

பச்சைக் காயம் ஆறி ப்போகக்,

கொஞ்சம் நற் சீரகம்!


 

எப்போது தூங்குகிறாள்?

எப்போது விழித்துக் கொள்கிறாள்?

என்பது யாருக்குமே தெரியாது!

ஒரு வேளை…,

எரியாத ஈர விறகுகளுக்கும்,

அரிக்கன் லாம்புகளுக்கும் மட்டுமே,

தெரிந்திருக்கக் கூடும்!

 

அக்காக்களையும், தங்கைகளையும்..,

ஓடி..ஓடிக் கவனிப்பாள்!,

 

ஏனம்மா.

எங்களை மட்டும் கடையிலா வாங்கினாய்?

 

இல்லையப்பு…,

உங்களுக்கு விளங்காது!

இது தான் எப்போதுமே அவளது பதில்!

 

நாளை அவளுக்கு எப்படியோ?

உங்களுக்கென்ன?

ஆம்பிளைச் சிங்கங்கள் நீங்கள் என்பாள்!

 

அம்மா வைத்துக்கொள்ளுங்கள்!

எதைக் கொடுத்தாலும்,

இன்னொரு பிள்ளையிடம் ,

அன்று மாலையே

அது போய் விடும்!

 

ஏனம்மா?

என்று கேட்டால்…,

எனக்கென்னதுக்கப்பு?

அவன் பார்த்துக்கொள்ளுவான்!

 

அவள் மீது கோபம் தான் வரும்!

 

,ஏன் அவ்வாறு செய்தாள்?

அக்காவின் மீது…,

அவளுக்கு விருப்பம் அதிகமா?


தனக்குக் கொள்ளி வைக்கப் போகிறவன்,

கடைக் குட்டி….,

அவன் மீது அவளுக்கென்ன,

தனியான பாசமா?

 

அன்று புரியவில்லை !

 

இன்று….,

எல்லாமே புரிகின்ற போது..,

அருகில் அவள் இல்லை!

 

அம்மா…!

சமன் படுத்த முயன்றிருக்கிறாள்!

மேடு பள்ளங்களை…

நிரவ முயன்றிருக்கிறாள்!

 

சமுத்திரத்தின் அலையாக,

வாழ்ந்து காட்டியிருக்கிறாள்!

 

எவ்வளவு உண்மை?

 

வசதியானதிடமிருந்து…,

வசதி குறைந்தததுகளுக்கு,

வசதிகளைப் பகிர்ந்திருக்கிறாள்!

 

அவளுக்கு எல்லாமே குஞ்சுகள் தானே?

 

இன்று எல்லாமே புரிகின்றது!

 

இறைவன் என்பவன்…,

எதற்காக.. அன்னையைப் படைத்தான் என்று!

 

தான் போகாத இடங்களுக்கெல்லாம்,

தாயைத் தனது பிரதிநிதியாக்கினான்!

 

அன்னையர் தின வாழ்த்துக்கள்!



 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ந்து உருவாக்கிய வரிகள் ..பாராட்டுக்கள் புங்கையூரான் . எந்நாளும் அன்னையர் தினம் தான்  எங்களுக்கு .

 மறந்தவர்களுக்கு  நினைவூட்ட ஒரு நாள் அன்னையர் தினம். யாழ் கள அன்னையர்களுக்கு   வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின்.... . கவிதையில், எந்த வரியை மேற்கோள் எடுத்து கருத்து சொல்லலாம் என்று தேடிய போது....
முழுக் கவிதையும், அர்த்தம் நிறைந்த வரிகள்.  வாசிக்கும் போது.... கண் கலங்கியது உண்மை.

அன்னையர் தின வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிலாமதி said:

உணர்ந்து உருவாக்கிய வரிகள் ..பாராட்டுக்கள் புங்கையூரான் . எந்நாளும் அன்னையர் தினம் தான்  எங்களுக்கு .

 மறந்தவர்களுக்கு  நினைவூட்ட ஒரு நாள் அன்னையர் தினம். யாழ் கள அன்னையர்களுக்கு   வாழ்த்துக்கள் 

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள், நிலாமதி அக்கா!

நீங்கள் கூறுவது உண்மை தான்!

எமது கலாச்சாரத்தில் எல்லா நாட்களும் அன்னையர் தினங்களே! 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதையா? இல்லை உணா்வுகளின் வெளிப்பாடா? வாிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது, வாசித்து முடிக்கையில் விழிகளில் ஒருதுளி நீர் . நன்றிகள் புங்கை. இமயமாய் அம்மா அதன் சிகரமாய் அப்பா. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான உணர்ச்சிமிகுந்த கவிதை. வணக்கம் புங்கைtw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2016 at 4:21 PM, தமிழ் சிறி said:

புங்கையூரானின்.... . கவிதையில், எந்த வரியை மேற்கோள் எடுத்து கருத்து சொல்லலாம் என்று தேடிய போது....
முழுக் கவிதையும், அர்த்தம் நிறைந்த வரிகள்.  வாசிக்கும் போது.... கண் கலங்கியது உண்மை.

அன்னையர் தின வாழ்த்துக்கள். 

வணக்கம்.. தமிழ் சிறி!

இருந்ததை இழந்த பின்னர் தானே...இழப்பின் பரிமாணம் தெரிகின்றது!

அம்மா என்ற வலை அறுந்து போனதும்...வேடங்கள் அவசியமில்லாமல் போக...உண்மை முகங்கள தங்களை அடையாளம் காட்டுகின்றன!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வறுமை' என்னை ஒரு போதும்
அழவைத்ததே இல்லை அன்று....!
''அம்மா உடன் இருந்ததால்!!''

இன்று வறுமையும் இல்லை;
அம்மாவும் இல்லை.

கட்டில் மெத்தை இருக்கு;
ஓட்டை  வீடும் கூட
மாடிக்கட்டிடமாச்சு
தினம் ஒன்று உடுத்தவும் இருக்கு.

ஆனாலும்,
''நீ மட்டும் இல்லையே அம்மா......''

''வாய்க்கு ருசியா ஆக்கி போடணும்,
உன் மடியில்  தலை வைத்துப் பல
கதை பேசி தூங்கணும்!
மறுபடியும் பிறப்பாயா....?

அம்மா....................

 

Link to comment
Share on other sites

அம்மாவை இழந்தேன்

மறுபடியும் வந்தாள் மனைவியாக 
மறுபடியும் பிறந்தாள் மகளாக 

அம்மாக்கள் இறப்பதேயில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் கவிதையை படித்தேன் ....பச்சை முடிந்துவிட்டது...அம்மா ....என்னத்தை எழுத...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2016 at 2:36 AM, Kavallur Kanmani said:

இது கவிதையா? இல்லை உணா்வுகளின் வெளிப்பாடா? வாிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது, வாசித்து முடிக்கையில் விழிகளில் ஒருதுளி நீர் . நன்றிகள் புங்கை. இமயமாய் அம்மா அதன் சிகரமாய் அப்பா. வாழ்த்துக்கள்

வணக்கம்...காவலூரின் கண்மணி!

அம்மாக்கள், எமது கலாச்சாரத்தின் கதாநாயகிகள்!

நாம் அழுகின்ற போது அழுது....நாம் சிரிக்கின்ற போது சிரிக்க அவர்களால் மட்டுமே முடியும்!

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

உணர்வின். வரிகள் அருமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.