Jump to content

கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி


Recommended Posts

கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ! ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் . 

இக்குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த பொது பட்டகாலில் படும் என்பது போல் கருணாகரனை கைது செய்து புனர் வாழ்வு முகாமில் வைத்துள்ளனர் .மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த பொது தலை மகனாக இருந்த பதினாறு வயது மகன் லீம்சன் ஏழ்மை நிலை காரணமாக சுருக்கிட்டு தற்கொலை செய்து மேலும் மோச நிலையை ஏற்ப்படுத்தி விட்டது மிகப் பரிதாபத்துக்குரியது .இன் நிலையில் இக் குடும்பத்துக்கு நோர்வேயில் உள்ள நல்ல மனம் உள்ள ஏழு குடும்பங்கள் இணைந்து ரூபா எண்பதினாயிரம் உதவியுள்ளது .ஆலையத் திருப்பணிக்கும் அன்னதானத்துக்கும் அள்ளிக் கொடுத்து தங்கள் பெயரை விளம்பரப் படுத்தும் கொடையாளிகள் உள்ள இக் காலத்தில் தம் பெயரை வெளியிடாது உதவி செய்த இக் குடும்பங்களை பாராட்ட வேண்டியதே !
இக் குடும்பங்கள் எல்லா வளமும் பெற்று சிறப்பாகவாழ இறைவன் அருள் புரிவான் என்பது திண்ணம் .

காலையடி இணையம்

DSC01952DSC01953DSC01954DSC01957DSC01958IMG_0001 (1)

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகும்... நல்லதொரு முன்மாதிரியான செயல்.
நோர்வேயில் வாழும்,  அந்த  ஏழு குடும்பம் செய்த செயலைப் போல்....
நாமும்... ஒரு நாலு குடும்பம், ஒரு விழாவில் சந்தித்து.... சந்தோசமாக கதைக்கும் போது....
இப்படியான... முயற்சிகளை செய்யும் போது,  அந்த பாதிக்கப் பட்ட குடும்பத்தின் மகிழ்ச்சியை நாமும் பெறுவோம்.

Link to comment
Share on other sites

உதவி செய்த குடும்பங்களிற்கு வாழ்த்துகள்.

முட்டாள் பையன், தூக்கிட முதல் தன் குடும்பத்தை யோசித்திருக்கலாம். வாழ இந்த புமியில் எத்தனையோ கொட்டிக்கிடக்கு, அதை முறையான வழியில் பயன்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வந்தியதேவன் said:

உதவி செய்த குடும்பங்களிற்கு வாழ்த்துகள்.

முட்டாள் பையன், தூக்கிட முதல் தன் குடும்பத்தை யோசித்திருக்கலாம். வாழ இந்த புமியில் எத்தனையோ கொட்டிக்கிடக்கு, அதை முறையான வழியில் பயன்படுத்தவில்லை.

நாங்கள் வேறு ஒரு மனநிலையில் இருந்து முடிவுகளை எடுக்கிறோம்! சிந்திக்கிறோம்!

அவர்களது மனநிலை வேறு...! சூழ்நிலை வேறு!

அதைத் தான் நாங்கள் மாற்ற முயற்சிக்க வேண்டும்!

அது மாறாத வரைக்கும்..இவ்வாறான முடிவுகளை அவர்கள் எடுத்துக் கொண்டேயிருப்பார்கள்!

நாம் செய்யும் உதவிகள் நிச்சயம் அவர்கள் வாழும் சூழலை மாற்றும் என நம்புவோம்!

Link to comment
Share on other sites

வாழ்கையில் தற்கொலை செய்ய துணிந்த ஒரு மனிதனுக்கு எவ்வளவு மனத்திடம் இருக்க வேண்டும். அம்மனத்திடத்தினை ஆக்கபூர்வமான முறையில் வாழ பயன்படுத்தியிருக்கலாம். இவன் இறந்து சாதித்தது என்ன? மற்றவர்களுக்கு மன கஷ்டத்தை கொடுத்ததை தவிர வேறெதுவும் இல்லை. அனுதாபப்பட முடியவில்லை. 

உதவி செய்த குடும்பங்களிற்கு நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.