Jump to content

காவலிருக்கிறேன்


Recommended Posts

இன்றுடன் ஆறாவது நாள் நான் கடைசியாக சாப்பிட்டு.

பச்சைபுல்மோட்டையின் அக்கரையில் காவலரணில் காத்திருக்கும் போராளிகளுள் ஒருவன் நான்.

வயிறு மூன்றாவது நாளாக என்னுடன் பேசுகிறது. வாயில் ஏதோ ஒரு கசப்புணர்வு. பற்களின் ஈறுகளில் இருந்து வடியும் குருதியை என் நாக்கும் இலையான்களும்  போட்டி போட்டுகொண்டு உறிஞ்சுகின்றன.

கண்களில் இமைகளுக்கு மேலே ஆயிரம் குண்டுசிகளால் குற்றுவது போன்ற ஒரு வலி. ஒற்றை தலைவலி.மூன்று ஆடிலேறி குண்டுகள் தலைக்குள் இறங்குவது போல ஒரு வலி. 

வயிற்றின் ஓசையை அடக்க இருந்த ஒரே நீல நிற சாரத்தினை முன்னால் ஓடும் நீரிலே நனைத்து கட்டியிருந்தேன். அதையும் மீறி வயிறு பேசியது. இனி அந்த சரத்தை இறுக்க வயிற்றிலே இடமே இல்லை. 

T-56 சுடுகருவியின் காட்டியினூடு எதிரியின் நிலைகளை பார்க்கிறேன்.ஒவ்வொரு எதிரியும் 80 களின் சினிமாவில் தெரியும் பாடல் காட்சிகளை போல நான்கு ஐந்தாக தெரிகிறார்கள். எதில் எந்த உருவம் என்பதை மூளை யோசிக்க திறன் இல்லை.

சுடுகருவியை கீழே சாத்திவிட்டு வானத்தை பார்க்கிறேன். சுட்டெரிக்கும் சூரியனும் அழகான மேகங்களும், ஏனோ மனம் ரசிக்கும் நிலையில் இல்லை. எச்சில்களை விழுங்குவதால் மட்டும் பசியை தீர்த்து கொள்ளலாம் என்று வயிறு நினைத்ததோ என்னவோ. எச்சில்கள் விழுங்கப்பட்டுகொண்டிருந்தன.

இராணுவ நிலைகளில் தமிழ் சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. மினசாரகனவு திரைப்படத்தில் இருந்து கரிகரனின் குரலில் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா" பாடல் கடல் காற்றின் திசையில் ஒலித்து கொண்டிருந்தன. சினிமா பாடல்களை கேட்டறியா போராளிகளான எங்களால் கூட ரசிக்க முடியாமல் பாட்டு ஒலிக்க சூரியன் தன் நிலைகளுக்குள் மறைந்து கொண்டான்.

படையணிகள் மாறி காவல் இருப்பதுபோல சூரியன் போக நிலவு தன்  நிலையெடுத்து வானத்திலே காவல் இருந்தது. எத்தனையோ நாட்கள் நிலவை பார்த்து பேசியதுண்டு. இன்று பேச பசி இடம் கொடுக்கவில்லை.

முன்னிரவும், வண்டுகளின் ரீங்காரமும், நாங்கள் முன்னேறிவிடுவமோ என்றபயத்தில் இடைக்கிடை சுடும் எதிரியின் சன்னங்களுக்கு நடுவிலும் இமைகள் கனத்தன. உலகிலேயே பாரமான பொருள் என்ன என்று கேட்டால் கண்ணயரும் நேரத்தில் கண் இமைகள் தான் என்று பதில் எழுதிவிடலாம்.

பணிமாற்றம் செய்ய போராளிகளின் அளவு குறைவு. நாள் முழுவதும் பணிசெய்ய வேண்டியநிலைமை. கண்கள் ஓய்வு கேட்டன. நிலைகளுக்கு பின்னால் நிம்மதியாக உறங்கும் எம் மக்களின் முகங்கள் வந்து போயின.நித்திரைக்கு விலை ஒரு கோடியை தாண்டி இருந்தது.

இரண்டு நெருப்பு குச்சிகளை உடைத்து கண்களுக்குள்ளே செருகி இமைகள் மூடாதவாறு செய்துவிட்டு, சுடுகருவியின் இழுவைக்குள்  கைவிரலை அழுத்தியபடியே..   

காவலிருக்கிறேன் எதிரியின் வருகைக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் நன்றாக இருக்கிறது தொடரட்டும் வாழ்த்துகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் தோல்வியை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.
தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கமில்லாத இரவுகள்...!

 

தொண்டைக்குழிக்குள் வனாந்தரம்!

 

வயிற்ருக் கூட்டுக்குள்,

வண்டுகள் ரீங்காரமிடும் ஓசை!

 

கண்ணிமைகளில்...

தேங்கிய கனவுகள்,

இன்னும் சீல் உடைக்கப்படாத,

திரைப்படச் சுருள்களாய்த் தேங்கி...,

திரையிடலுக்காய்...

காவலிருக்கின்றன!

 

ஆனால் கண்களோ,

வலிந்து திறந்த படி,

யாரோ ஒருவனுக்காய்த்,

தவமியற்றுகின்றன!

 

அனுபவம் வலியை மட்டுமே தருகின்றது!

தொடருங்கள்...பகலவன்!

Link to comment
Share on other sites

நன்றி முனிவர் ஜி, ஈழப்பிரியன் அண்ணா, மற்றும் விரும்பிய நவீனன், நந்தன், மீரா, உங்களுக்கும் நன்றிகள் பல.

புங்கை அண்ணா, 

உங்கள் கருத்துக்கு முதல் கண் நன்றிகள். என்கதையை அப்படியே உங்கள் வரிகளில் கவிதையாக்கி மேலும் மெருகூட்டி இருக்கிறீங்கள். உங்களிடம் கற்க நிறையவே இருக்கிறது. தொடர்ந்தும் யாழுடன் இருங்கள். வழித்தடம் பற்ற 'காவலிருக்கிறேன்.'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரின் வாசமறியாத நான், போராளியின் வேதனைகளை உணரக்கூடியதாக இருந்தது.

சில தமிழ் சொற்கள் விளங்கவில்லை பகலவன்.

சுடுகலன் என்றால் என்ன? சாதாரண துப்பாக்கியை தானே குறிக்கின்றது? அல்லது இது எதுவும் விசேடமானதா? (heat element?) மேலும் இன்னோரு திரியில் "ஆர்டிலறி" என  ஓர் வார்த்தையை கிருபனும் நீங்களும் பாவித்தீர்கள் இது ஒர் வித எரிகணையா அல்லது  இதுவும் ஓர் வித துப்பாக்கியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எல்லைக் காவலனை அவனது கந்தகத்தை கண்களுக்குள் புகுத்தி கண்துஞ்சாச் சிரமத்தை அப்படியே எம்மன எல்லைக்குள் அடைத்து விட்டது....! சொல்ல வார்த்தையில்லை....!!

Link to comment
Share on other sites

On 4 May 2016 at 2:32 PM, colomban said:

போரின் வாசமறியாத நான், போராளியின் வேதனைகளை உணரக்கூடியதாக இருந்தது.

சில தமிழ் சொற்கள் விளங்கவில்லை பகலவன்.

சுடுகலன் என்றால் என்ன? சாதாரண துப்பாக்கியை தானே குறிக்கின்றது? அல்லது இது எதுவும் விசேடமானதா? (heat element?) மேலும் இன்னோரு திரியில் "ஆர்டிலறி" என  ஓர் வார்த்தையை கிருபனும் நீங்களும் பாவித்தீர்கள் இது ஒர் வித எரிகணையா அல்லது  இதுவும் ஓர் வித துப்பாக்கியா?

கருத்து பகிர்விற்கு நன்றிகள் கொழும்பான். சுடுகலன் என்றால் துப்பாக்கி. ஆட்லெறி என்றால் நீண்ட தூர எறிகணை.

On 4 May 2016 at 2:50 PM, suvy said:

ஒரு எல்லைக் காவலனை அவனது கந்தகத்தை கண்களுக்குள் புகுத்தி கண்துஞ்சாச் சிரமத்தை அப்படியே எம்மன எல்லைக்குள் அடைத்து விட்டது....! சொல்ல வார்த்தையில்லை....!!

கருத்திற்கு நன்றி சுவி அண்ணா. 

மேலும் கதையை விரும்பிய கரன், ரதி, வந்தியதேவன், கிருபன் அனைவருக்கும் நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பகலவன் எவ்வளவு சோகங்கள், இழந்தவைகளுக்கு ஏற்ற தீர்வு  இன்னும் கிடைக்கவில்லை என்பது தான் துக்கமாயிருக்கின்றது..

Link to comment
Share on other sites

20 hours ago, putthan said:

தொடருங்கள் பகலவன் எவ்வளவு சோகங்கள், இழந்தவைகளுக்கு ஏற்ற தீர்வு  இன்னும் கிடைக்கவில்லை என்பது தான் துக்கமாயிருக்கின்றது..

நன்றிகள் புத்தன் உங்கள் கருத்துக்கும் ஆதங்கத்துக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.