Jump to content

2007 ம் ஆண்டு ராசி பலன்


Recommended Posts

2007 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மேஷம்

சாதனைகள் புரிந்து எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை உடைய மேஷ ராசி நேயர்களே!

உங்களுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு ஒரு எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகிறது. அதாவது ஏமாற்றத்தைத் தவிர்த்து, மாற்றங்களை நோக்கிப் பயணப்படப் போகிறீர்கள். ராசியாதிபதி, செவ்வாய் கஷ்டத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சி பலம் பெற்று குருவுடன் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும்.

சுகஸ்தானத்தில் இந்த ஆண்டு ஜூலை வரையில் சஞ்சரிக்கும் சனி பகவான், குரு பகவானின் கனிந்த பார்வையில் உள்ளார். எனவே தாயார் வழியில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. லாப ஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் உங்கள் வீட்டுக் கதவை அதிர்ஷ்ட தேவதையின் மூலம் தட்டுவார். கேது பகவான் பூர்வ புண்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், சிறு குழப்பங்களுக்கு இடையே உங்கள் முயற்சிகள் கைகூடும். குருபகவானின் அருட்பார்வை அயனசயன மோட்ச ஸ்தானத்தின் மீதும், தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும், சுகஸ்தானத்தின் மீதும் படிவதால் குடும்பத்தில் வசதி, வாய்ப்புகள் பெருகும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உறவினர்களின் வருகையினால் அனுகூலங்கள் அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த தொய்வுகள் விலகி, சேமிப்புக்கு வழியேற்படும். அதேசமயம் சிறு விரயங்களையும் நீங்கள் சந்திக்க நேரிடும்.

திட்டமிட்ட காரியங்களில் நீங்கள் துணிச்சலுடன் தைரியமாக ஈடுபடுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடனான உறவில் நெருக்கம் அதிகரிக்கும். சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகள் நடக்கத் தொடங்கும். கேது பகவானின் அருளினால் உங்கள் ஆன்ம பலம் அதிகரிக்கும். தகப்பனாரின் ஆதரவு சிறிது குறைந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் குரு பகவானால் காக்கப்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். ஆனாலும் சக ஊழியர்களின் உதவிகளினால் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வுபூர்வமாக பரிசீலித்து, உங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். அதேசமயம் இந்த ஆண்டில் உங்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்க வாய்ப்பில்லை.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நிலவி வந்த தடைகள் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்படின் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர், எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவார்கள். அதேசமயம் நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள், முழுமையான வெற்றியைக் கொடுக்காது. அதனால் அத்தகைய முயற்சிகளைத் தவிர்த்து பழைய கடன்களை திருப்பிச் செலுத்துங்கள்.

அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். எனினும் உங்களுக்கு கட்சியில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். ஆகவே உட்கட்சிப் பூசல்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக் கொடுத்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். ரசிகர்களின் மனதைப் புண்படுத்தாமல் நடந்து கொள்ளவும். மற்றபடி சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக்கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த ராசி பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பார்கள். மேலும் உறவினர்களை அனுசரித்துச் சென்று உங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதனால் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்க வேண்டாம். மற்றபடி விளையாட்டுகளில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம் : சிறு, சிறு சங்கடங்களைத் தவிர்க்க ராமர் கோயிலுக்குச் சென்று வழிபடவும். மேலும் "ராம ராம' என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிரத்தையுடன் ராம நாம ஜபம் செய்யவும்.

ரிஷபம்

எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றியடையத் துடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!

உங்களுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு புதிய உத்வேகத்துடன் உதயமாகிறது. உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில், பாக்ய ஸ்தானாதிபதியின் வீட்டில் அமர்ந்து சௌபாக்கியத்தைத் தரும் நிலையில் உள்ளார். அதோடு தர்ம கர்மாதிபதியான சனி பகவான் சதுர்த்த கேந்திரத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்த்து, தொழிலில் ஸ்திரத் தன்மையைக் கொடுப்பார். பத்தாம் இடத்தில் இருக்கும் ராகுவும், சுகஸ்தானத்தில் இருக்கும் கேதுவும், எதிலும் பதற்றத்தையும், சிறு சஞ்சலத்தையும் கொடுத்தாலும், தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும். இருப்பினும் எதையும் நிதானத்துடன் செய்யும் பழக்கத்துக்கு உங்களை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதேநேரம் குரு பகவான் ஸ்திரமான நிலையில் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். அவரின் அருட்பார்வை லாபஸ்தானத்தின் மீதும், ராசியின் மீதும், தைரியஸ்தானத்தின் மீதும் விழுவது சிறப்பு. அதனால் உங்களுக்கு இந்தப் புத்தாண்டு ஓரளவு அதிர்ஷ்டகரமாக, ஆனந்தமாகத்தான் இருக்கும். "நடக்கவே நடக்காது' என்று நினைத்திருந்த பணிகள் நிறைவேறும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் தீரும். கடன்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். வழக்கு வியாஜ்யங்களில் வெற்றி கிடைக்கும்.

அதே சமயம், வருடத்தின் பிற்பகுதியில் சிறிது செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பை எடுத்துச் செலவு செய்ய நேரிடலாம். குறிப்பாக தகப்பனாரின் ஆதரவு குறையலாம். அதனால் துணிந்து செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். மேலும் பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

இந்த ராசி உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பணவரவிற்கும் எந்தக் குறைவும் வராது.

வியாபாரிகளுக்கு கொடுக்கல்-வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும், கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். சில நேரங்களில் கடும் போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இதனால் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டி வரலாம். ஆகவே எதிலும் விழிப்புடன் இருக்கவும். புதிய முதலீடுகளை நன்கு ஆலோசித்த பிறகே செய்யவும்.

விவசாயிகள் உழைப்பிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வார்கள். கால்நடைகளால் கூடுதல் நலம் பெறுவார்கள். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும். அதே சமயம், புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். அதேநேரம் கட்சி மேலிடத்தில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளிடம் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகளை இனம் கண்டு ஒதுங்குவீர்கள்.

கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். அதனால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். மற்றபடி சக கலைஞர்களிடம் நட்புடன் நடந்து கொண்டு, புதிய ஒப்பந்தங்களைப் பெறவும். ரசிகர்களின் ஆதர பெற்று கலைப்பயணங்களை மேற்கொள்ளவும்.

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதேநேரம் பேசும் நேரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

மாணவமணிகள் படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவார்கள். அதே சமயம் புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

பரிகாரம் : சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டு வரவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ""நம சிவாய' என்று உச்சரிக்கவும்.

மிதுனம்

தெய்வ பலத்தின் துணையுடன், புத்திசாலித்தனத்தால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு உரிய புதன் பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் தேகப் பொலிவு கூடும். வசீகரத் தோற்றத்தைப் பெறுவீர்கள். ராசியாதிபதியுடன் தைரிய ஸ்தானாதிபதி சூரியன் இணைந்து, புத ஆதித்ய யோகத்தைக் கொடுப்பார். எனவே அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் ஏழரை நாட்டு சனி முடியும் கட்டத்தில் உள்ளீர்கள். ஆனாலும் இந்தக் கால கட்டத்தில் கேந்திராதிபத்ய தோஷமும், பாதகாதிபத்ய தோஷமும் நீங்கப் பெற்ற குரு பகவானின் கனிந்த பார்வை உங்கள் ராசியின் தொழில் ஸ்தானத்தின் மீதும், விரய ஸ்தானத்தின் மீதும், தன ஸ்தானத்தின் மீதும் படிகிறது. எனவே தொழிலில் நிலவி வந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட வேண்டிய நிலை மாறும்.

ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் கேது பகவானும், பாக்யஸ்தானத்தில் ராகு பகவானும் இருப்பதால் உங்களுக்கு நியாயமாக வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். தகப்பனாரின் ஆதரவு அமோகமாகக் கிடைக்கும். டென்ஷன்கள் குறைந்து, தெளிந்த மனத்துடன் செயலாற்றுவீர்கள். மனச் சோர்வு அகன்று, வசீகரப் புன்னகையினால் அனைவரையும் கவருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றங்கள் உண்டாகும். அதேநேரம் வருடத்தின் முற்பகுதியில் அநாவசியப் பிரயாணங்களைத் தவிர்க்கவும். தவிர, எவருக்கும் முன் ஜாமீன் போட்டு பணம் வாங்கித் தர வேண்டாம்.

இந்த ராசி உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு முன் கூட்டியே செய்து முடிக்கவும். உங்கள் கடமைகளிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவும். எனினும் சில நேரங்களில் நீங்கள் இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். அதே சமயம் பண வரவுக்குத் தடைகள் வராது. எதிர்பார்த்த சம்பள உயர்வு, சரியான நேரத்தில் வந்து சேரும். இருப்பினும் மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறைந்து காணப்படுவதால் கவனமாகப் பணியாற்றவும்.

இந்த ராசி வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாகவே இருக்கும். கடன்களைப் பெற்று கடையைச் சீரமைப்பீர்கள். புதிய சந்தைகளில் உங்கள் பொருட்கள் விற்பனையாகும்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். புதிய கழனிகளை வாங்குவீர்கள். மற்றபடி கால்நடைகளுக்கும், புழு பூச்சி ஒழிப்புக்கும் சற்று செலவு செய்ய நேரிடும். மேலும் பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். அதேசமயம் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளை ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். அனைத்துச் செயல்களையும் நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களும் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். புதிய ஆடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள்.

மாணவமணிகள் கல்வியிலும், உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வார்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற, போதிய பயிற்சி எடுத்து படிக்கவும்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியையும், நவக்கிரகத்தில் குரு பகவானையும் தரிசித்து வாருங்கள்

கடகம்

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற கொள்கையை உடைய கடக ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நலம் பயக்கக்கூடிய வகையில் பிறக்கின்றது.

உங்கள் ராசியாதிபதி உச்சம் பெற்று காணப்படுவதால் உங்களின் எண்ணங்கள் அனைத்தும் சீரிய முறையில் வெற்றியடையும். புகழும், செல்வாக்கும் மெல்ல, மெல்ல உயரும். பூர்வ புண்ய ஸ்தானத்தில் வலுவுடன் அமர்ந்த பாக்யாதிபதி குரு பகவான், பாக்ய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும், ராசியையும் பார்வையிடுவது சிறப்பு. இதனால் உங்களின் எதிர்காலத் திட்டங்கள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அரசாங்க உதவியோடு பெரியதொரு பொருளாதார அபிவிருத்தியைக் காண்பீர்கள்.

ராசியில் உள்ள சனி பகவானை குரு பகவான் பார்த்து, கஷ்டங்களைக் குறைத்து நிறைவைக் கூட்டுவார். சாயாக்கிரகங்களான கேது பகவானும் ராகு பகவானும் முறையே குடும்ப ஸ்தானத்திலும், அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பது ஒரு வகையில் சிறப்பென்றே கூறலாம். சனி பகவானைப் போல் நலம் புரியும் ராகு பகவான், சனி பகவானின் வீட்டில் அமர்ந்து அளவிட முடியாத செல்வாக்கை உண்டாக்குவார். கேது பகவானின் ஆதிக்கத்தினால் மகான்களின் தரிசனம், தெய்வ தரிசனம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியைப் பெறுவீர்கள். பொதுவாக இந்தப் புத்தாண்டில் உங்களின் பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும்.

குடும்பத்தினரிடையே அன்பும், பாசமும் வளரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிக்கும் திறமை உண்டாகும். அதேநேரம் அனாவசியச் செலவுகளும் ஏற்படும். மற்றபடி சகோதர, சகோதரி வழியில் கருத்து வேறுபாடுகள் குறைந்து காணப்படும். தேவையில்லாத சில அலைச்சல்கள் உண்டானாலும் முடிவு உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும்.

இந்த ராசி உத்யோகஸ்தர்கள் தங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவார்கள். வேலைப் பளு அதிகரித்தாலும் அவற்றைச் சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் துவங்கும். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும்.

வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பார்கள். உங்களின் செயல்கள் சிறிது காலதாமதத்திற்குப் பின்பு வெற்றிபெறும். அதேசமயம் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடவும்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே கிடைக்கும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறவும். நீர் வரத்து குறைவாக இருப்பதால் பாசன வசதிகளுக்குச் செலவு செய்ய நேரிடும். அதேநேரம் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்துச் செல்லவும்.

இந்த ராசி அரசியல்வாதிகள் வெற்றிகளைக் குறைவாகவும், தோல்விகளை அதிகமாகவும் சந்திக்க நேரிடலாம். ஆகவே எல்லா பலன்களையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ளவும். உங்கள் திட்டங்களைப் பொறுமையாக இருந்து செயல்படுத்தவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். எனினும் பிறரிடம் மனம் திறந்து பேசுவதைத் தவிர்க்கவும்.

கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். சக கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவார்கள்.

பெண்மணிகளைப் பொறுத்தவரை கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு சீராகவே இருந்து வரும். அதே சமயம், சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சூடான வார்த்தைகளைப் பேச வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்வார்கள். அதேநேரம் பெற்றோர்களின் ஆதரவு குறைவாகவே காணப்படும்.

பரிகாரம் : கணேசரை வழிபட்டு நலன்களைக் கூட்டிக் கொள்ளவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ""கம் கணபதயே நம'' என்று சொல்லி வரவும்.

சிம்மம்

எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளை எட்டிப் பிடிக்கும் குணமுடைய சிம்ம ராசி நேயர்களே!

இந்த ஆண்டு தொடக்கத்தில் ராசி அதிபன் சூரிய பகவான், ஆத்மகாரகனாகி, பஞ்சம திரிகோணத்தில் அமர்ந்திருப்பது உங்களின் சாதனைகளை வெளியுலகிற்குப் பறைச் சாற்ற உதவுகிற அம்சமாகும். சோதனைகள், சறுக்கல்கள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் போன்றவை இந்த ஆண்டு இல்லை என்றே கூறலாம். சுகஸ்தானத்தில் அமர்ந்த குரு பகவானின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கும், கர்ம ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் கிடைக்கிறது. விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி பகவானின் மீது விழும் பார்வையினால் பிரச்சினைகள் நீங்கி, உங்களின் அமைதியான உறக்கத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வீண் செலவுகளும் கட்டுப்படும். தொழிலில் அபிவிருத்தி, மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு தூரதேசம் சென்று வரும் யோகமும் கிடைக்கும்.

ராசியில் உலவும் கேது பகவானும், சப்தமத்தில் அமர்ந்த ராகு பகவானும் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களை நீக்குவார்கள். இதுவரை ஒத்திப் போட்ட விவகாரங்களில் புதிய அக்கறையுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் உங்களின் துணிச்சலைக் கண்டு ஆச்சர்யப்படுவார்கள். மறைமுக நெருக்கடிகள் அகலும். சகோதர, சகோதரிகளுடனான உறவு சீர்படும். பொதுவாக இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு மகிழ்ச்சி நிறையும். உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதேநேரம் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நலம் பயக்கும். மற்றபடி எந்தச் செயலையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிடுவீர்கள். இருப்பினும் அனாவசியப் பயணங்கள் வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும், வேலைப் பளுவும் அதிகரித்தாலும், நீங்கள் செய்து முடித்த வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பணவரவு உண்டாகும். ஆனாலும் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இந்த ஆண்டு விரும்பத்தகாத இடமாற்றங்களும் உண்டாகும்.

இந்த ராசி வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். மற்றபடி புதிய சந்தைகளை நாடிச் செல்லும் நேரத்தில் அதீத கவனத்துடன் செயல்பட்டு காரியமாற்றவும். கூட்டுத் தொழில் புரிவோர், சற்று கூடுதல் உஷாராக இருப்பது நல்லது.

விவசாயிகளுக்குக் கொள்முதல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். அதனால் உபரி வருமானத்தைப் பெருக்க காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை ஊடுபயிராக விளைவித்துப் பயன்பெறவும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து விற்றால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமுறாமல், கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது பார்த்துக் கொள்ளவும்.

கலைத்துறையினர் இந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். அதே சமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்; போகப் போக நிலைமைகளும் மாறிவிடும்.

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான ஆண்டு. புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். பண வரவுக்கும் எந்தக் குறைவும் வராது.

மாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு மதிப்பெண்களைப் பெறுவார்கள். உங்களின் முயற்சிகளுக்கு ஆசிரியரிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். மற்றபடி திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம் : துர்கையம்மனை வழிபட்டு வரவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ""ஜயஜய துர்கா'' என்று சொல்லி வரவும்.

கன்னி

தன்னம்பிக்கைக்கு உதாரணமாகத் திகழும் கன்னி ராசி நேயர்களே!

உங்கள் ராசியாதிபதி சதுர்த்த கேந்திரத்தில் புத ஆதித்ய யோகம் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. எனவே உங்களின் செயல்கள் சாதனைகளாக மாறும் ஆண்டாகவே இது அமைகிறது. தொழிலில் விரும்பத் தகுந்த மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வருமானங்கள் குறையாமல் சேமிப்பு அதிகமாகும். உங்களின் புத்தி சாதுர்யத்தால், முக்கியப் பிரமுகர் என்கிற நிலைக்கு உயர்வீர்கள்.

உங்கள் ராசிக்கு பாதகாதிபதியையும், கேந்திராதிபத்ய தோஷத்தையும் பெற்ற குருபகவான் மறைவு பெற்று களத்ர ஸ்தானத்தையும், பாக்ய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவானையும் பார்ப்பதால் தனக்கும் மிஞ்சி, தானம் செய்யும் நிலையை அடைவீர்கள். பிதுரார்ஜிதச் சொத்துக்கள் சிரமமின்றி கைக்கு வந்து சேரும்.

ஆறாம் இடத்தில் அமர்ந்த ராகுவும், விரய ஸ்தானத்தில் அமர்ந்த கேதுவும், உங்களின் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். மேலும் ஆறாம் அதிபதியே பூர்வ புண்யாதிபதியாகி லாபஸ்தானத்தில் குரு பகவானின் பார்வையைப் பெற்றிருப்பதால், பருத்தி புடவையாய்க் காய்த்தது போல் குழந்தைகளின் வாழ்க்கையில் அதிசயிக்கத் தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். அவர்களால் அனுகூலங்கள் இரட்டிப்பாகி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

பொதுவாக இந்தப் புத்தாண்டில் உங்களின் வேலைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையும். அனைவருக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். பொருளாதார நிலைமை அமோகமாக இருக்கும். அதேசமயம் உற்றார், உறவினர்களின் மனக் கசப்புக்கும் ஆளாவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். இருப்பினும் சக ஊழியர்கள் பகைமைப் பாராட்டுவார்கள். அதனால் அவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். அதே நேரத்தில் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி செயலாற்றினால் தோல்விகளில் இருந்து தப்பிக்கலாம்.

வியாபாரிகளைத் தேடி, வர வேண்டிய பணம் வந்து சேரும். கூடுதலாக உழைத்து மன உறுதியுடன் செயல்பட்டு, வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். நண்பர்கள் உதவிக் கரம் நீட்டுவார்கள். குறிப்பாக மக்கள் விரும்பும் பொருட்களை விற்பனை செய்து லாபத்தை அள்ளவும்.

விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அதோடு மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். சுப காரியங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகளும் தேடி வரும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள்.

கலைத்துறையினரைத் தேடி, புதிய ஒப்பந்தங்கள் தாமதமாக வந்து சேரும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்த அளவே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்ய நேரிடலாம். அதோடு வேலையில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.

இந்த ராசி பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை கிடைக்கும். அதேநேரம் கணவரிடம் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றபடி பொருளாதார நிலைமையில் எந்தக் குறைவும் ஏற்படாது.

மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். அதே சமயம், இப்படி உழைப்பவர்கள் சிலர் "முதல் ரேங்க்' வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம் : சாஸ்தாவை வழிபட்டுப் பயன் பெறவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் "ஐயப்பா' என்று கூறி வரவும்.

துலாம்

நியாயங்களை நேசிக்கும் துலாம் ராசி நேயர்களே!

உங்களின் ராசியாதிபதி சுக ஸ்தானமெனும் சதுர்த்த கேந்திரத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களின் தொழிலில் ஸ்திரத்தன்மை ஏற்படும். பாக்யாதிபதி தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து, பாக்ய ஸ்தானத்தையும் பார்த்து தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுப்பதால் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். தெய்வ பலத்தால் உங்களின் வேண்டுதல்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பலம் பெற்ற குருபகவான் உங்கள் வருமானத்தை ஸ்திரமாக்கியதுடன், ஐந்தாம் பார்வையாக கடன் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுவது சிறப்பு. இதனால் உங்களுக்கு வர வேண்டிய கடன்கள் முழுவதுமாக வசூலாகிவிடும். மருத்துவச் செலவுகள் குறையும். தொழிலில் எதிர்பாராத அளவுற்கு முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மேலும் லாப ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவானும், பஞ்சம திரிகோணத்தில் அமர்ந்த ராகு பகவானும், உங்கள் தொழிலில் இருந்த குளறுபடிகளை நீக்குவார்கள். உங்களை மிடுக்குடன் சமுதாயத்தில் நடக்க வைப்பார்கள். சுற்றமும், நட்பும் உங்களின் சொல் கேட்டு நடக்கும்.

இந்த வருடத்தின் பின் பகுதியில் லாப ஸ்தானத்திற்கு பெயரும் சனிபகவான், உங்களை எல்லா வகையிலும் சிறக்கச் செய்வார். மூத்த சகோதரி, சகோதர வழியில் நலன்களைப் பெறச் செய்வார். பொதுவாக இந்தப் புத்தாண்டு மிகவும் சாதகமாகி, உங்களின் தனித்தன்மை எல்லா செயல்களிலும் வெளிப்படும். எதிரிகளின் பலம் குறையும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எந்தவொரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.

உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் உங்களின் வேலைகளைத் தாங்களாகவே முன்வந்து பகிர்ந்து கொள்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளைப் பரிவுடன் கவனிப்பார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் அன்போடு பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடும் எண்ணம் மேலோங்கும். சிறிய முதலீடுகளில் பெரிய லாபங்களைக் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். புதிய யுக்திகளை புகுத்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். கால்நடைகளால் நல்ல பலனை அடைவீர்கள். குறிப்பாக கருப்பு நிற விளைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் நல்ல லாபத்தை அள்ளுவார்கள்.

இந்த ராசி அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். கட்சித் தொண்டர்களின் ஆதரவு நிரம்பக் கிடைக்கும். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் இருந்து நற்பெயரை எடுப்பீர்கள். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் உங்கள் பேச்சுக்கு அடிபணிவார்கள்.

கலைத்துறையினருக்கு இது முன்னேற்றகரமான ஆண்டு. புதிய ஒப்பந்தங்களை நல்ல முறையில் முடித்துக் கொடுப்பீர்கள். சக கலைஞர்களின் உதவியையும், பாராட்டையும் பெறுவீர்கள். இருப்பினும் எதிலும் பொறுப்பும், நிதானமும் தேவை.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அதேசமயம் பேசும்போது வார்த்தைகளில் கவனத்துடன் இருக்கவும்.

மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். எதையும் சிந்தித்துப் பார்த்து செயலாக்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: நேரம் கிடைக்கும் போதெல்லாம் முருகனின் நாமத்தைச் சொல்லி வழிபடவும்.

விருச்சிகம்

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துச் செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

உங்களின் ராசியாதிபதி சுய ராசியிலேயே ஆட்சி பெற்று, தன பஞ்சமாதிபதியான குரு பகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. எனவே சந்தோஷம் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள். கிரிக்கெட்டில் "அரை சதம் அடிக்க முடியுமா?' என்று நினைத்திருந்த வீரர் சதமே அடித்துவிட்டாற்போல், உங்கள் செயல்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றியைத் தேடித்தரும். உங்களை பிறர் உதாரணமாகக் கூறும் அளவுக்கு மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள்.

ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். அதேசமயம் சதுர்த்த கேந்திரத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவானும், தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது பகவானும் உங்களின் உடல் ஆரோக்யத்திலும், தொழிலிலும் சிறு சிறு குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். அதனால் எவரையும் முழுவதுமாக நம்பி உங்களின் செயல்களை ஒப்படைக்க வேண்டாம். மேலும் உடல் ஆரோக்யத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். குரு பகவானின் அருட்பார்வை பஞ்சம திரிகோணத்தின் மீதும், களத்ர ஸ்தானத்தின் மீதும், பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி பகவான் மீதும் படிவதால் குழந்தைகள் சிறப்படைவார்கள். கணவன், மனைவி ஒற்றுமையில் குதூகலம் நிறையும். தந்தை வழி, பிதுரார்ஜிதம் போன்றவைகளில் நன்மை கிடைக்கும்.

பொதுவாக இந்த ஆங்கிலப் புத்தாண்டில் பணவரவிற்குக் குறைவு இருக்காது. திட்டமிட்ட செயல்கள் அனைத்தையும் வெற்றியுடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சிலர் வீடு, வாகனம் வாங்குவார்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும், அவற்றை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். ஆனாலும் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காணமுடியாது. அதே சமயம் உங்கள் கெüரவத்திற்கு எந்த இழுக்கும் வராது.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிறு சிக்கல்களைச் சந்திப்பார்கள். அதனால் சிலருக்கு நஷ்டங்களும் உண்டாகலாம். அதேநேரம் கூட்டாளிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடந்து கொள்வார்கள். இதனால் உங்கள் செயலாற்றும் திறமை கூடும்.

இந்த ராசி விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம். மற்றபடி புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். இருப்பதையே திருப்தியாகச் செய்து முடிக்கவும். மற்றபடி கால்நடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். அதே சமயம் முக்கியப் பிரச்சினைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்த்து விடுங்கள்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் ஒருங்கே சேரும். சக கலைஞர்களின் மூலம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும். மற்றபடி பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால் இன்னும் முன்னேறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டையும் பெறலாம்.

பரிகாரம் : மஹாலட்சுமியை தரிசித்து நலம் பெறுங்கள்.

தனுசு

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், நல்லோர்களால் நேசிக்கப்படுபவர்களாவும், ஆன்ம ஒளி நிரம்பியவர்களாயும் உள்ள தனுசு ராசி அன்பர்களே!

உங்களின் ராசியாதிபதி கேந்திராதியத்ய தோஷம் நீங்கப் பெற்று, பூர்வபுண்ய பஞ்சமாதிபதியுடன் இணைந்து விரயத்தில் இருக்கிறார். அவர்களின் சேர்க்கை குரு மங்கள யோகத்தைக் கொடுக்கிறது. மேலும் அஷ்டமாதிபதியான சந்திரன் உச்சம் பெற்று, பஞ்சமாதிபதியையும், லக்னாதிபதியையும் பார்த்து, கஜகேசரி யோகம், சசிமங்கள யோகம் ஆகியவற்றைப் பெறுகிறார். அதோடு ராசியிலேயே தர்ம கர்மாதிபதிகள் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தைப் பெற்றிருப்பதால் நீங்கள் இந்தப் புத்தாண்டில் ராஜபாட்டையில் நடக்கப் போகிறீர்கள்.

அஷ்டம சனியின் பிடியில் இருந்தாலும், சகல தோஷங்களையும் தன் அருட்பார்வையினால் போக்கும் குரு பகவானால் பார்க்கப்படுவதால், சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தின் பிறிதொரு காரகத்துவமான பொக்கிஷங்களைக் கொடுக்க முற்படுவார் என்பதில் சந்தேகமில்லை. இதனால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நடக்காமல் தடையாகி நின்ற செயல்கள் அனைத்தும் நிறைவேறத் தொடங்கும். மெல்ல, மெல்ல உயரே பறக்கும் சிறிய பறவை போல் சிறகடிக்கக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு வேண்டியவர்களும் வாழ்க்கையில் உயர்வதைக் கண்டு மகிழ்வீர்கள்.

பொதுவாக இந்தப் புத்தாண்டில் சந்தோஷங்கள் நிறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க முனைவீர்கள். சகோதர-சகோதரி வழியில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கி, அன்பு மேலோங்கும்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவார்கள். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வேறு சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்களும் உண்டாகும்.

வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவார்கள். கொடுக்கல்-வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அதேநேரம் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.

விவசாயிகளுக்கு வர வேண்டிய குத்தகைப் பாக்கிகள் கிடைக்கும். பயிர்களுக்கு புழு, பூச்சிகளால் எந்த விதப் பெரிய பாதிப்பும் ஏற்படாது. குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். மாற்றுப்பயிர் செய்வதன் முலம் மேலும் லாபத்தை அள்ளுவீர்கள்.

இந்த ராசி அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டாலும், திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பல வழிகளில் வருவாய் பெருகும். அதேநேரம் தொண்டர்களை அனுசரித்துச் செல்வது அவசியம்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்து கொண்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்; சக கலைஞர்களும் நட்பு பாராட்டுவார்கள். தவிர, ரசிகர்களையும் அரவணைத்துச் செல்லவும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். பணவரவும் சரளமாக இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். அதேநேரம் விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு வெற்றியடைவீர்கள். மேலும் சீரிய முயற்சி செய்தால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம் : பெருமாளை தரிசனம் செய்து வாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் "கோவிந்தா' என்று சொல்லி வரவும்.

மகரம்

"நினைத்ததை அடையாமல் விடமாட்டேன்' என்ற மன உறுதியை உடைய மகர ராசி நேயர்களே!

உங்களின் ராசிநாதன் திக் பலம் பெற்று ராசியைப் பார்ப்பதால், திட்டமிட்ட பணிகள் உடனுக்குடன் நடந்தேறும். உங்களின் புகழும், செல்வாக்கும் குறையாமலிருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். பூரண சுபரான குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து தைரிய ஸ்தானத்தையும், பஞ்சம ஸ்தானத்தையும், களத்ர ஸ்தானத்தையும், சனி பகவானையும் பார்ப்பது சிறப்பு. இதனால் கொடுத்த கடன்கள் வசூலாகும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். ""மறைந்த புதன் நிறைந்த மதி, நிறைந்த நிதி'' என்பதற்கு இணங்க மறைந்த பாக்யாதிபதியால் உங்களின் பேச்சில் வசீகரமும், சொல்வன்மையும் உண்டாகும்; எதிர்பார்த்த செüபாக்யங்கள் உங்களைத் தேடி வரும்.

அதேசமயம் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானும், அஷ்டம ஸ்தானத்தில் கேது பகவானும் இருப்பதால் உங்களின் செயல்களில் ஏதேனும் ஒரு குறை தோன்றும். உங்கள் மனதில் அவசியமில்லாத சஞ்சலங்களும், குழப்பங்களும் உண்டாகி மறையும். ஆகவே மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளான யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வந்தால் முழுமையான வெற்றி கிடைக்கும்.

பொதுவாக இந்தப் புத்தாண்டில் புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். முயற்சிகள் வெற்றி பெறுவதில் தடைகள் ஏற்பட்டாலும் முடிவு நன்றாகவே அமையும். பொருளாதாரம் சராசரிக்கும் சற்று அதிகமாகவே இருக்கும். பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும்.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று காலதாமதத்துடன் பரிசீலிப்பார்கள். இதனால் கோபமடையாமல் பொறுமை காக்கவும். ஏனெனில் முடிவு உங்களுக்குச் சாதகமாகவே அமையும். அதே சமயம் பயணங்களால் அனுகூலங்களைப் பெற முடியாது.

வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். ஆனாலும் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். கூட்டாளிகளிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம்.

விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவால் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்த முற்படுவீர்கள். அதே சமயம், புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். சிலருக்கு பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

இந்த ராசி அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவமாட்டார்கள். எனினும் மனந்தளராது பொறுப்புடனும், பொறுமையுடனும் நடந்துகொண்டு செயலாற்றுங்கள்.

பெண்மணிகள் பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருட்களை வாங்குவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அதே சமயம் கணவரிடம் ஒற்றுமையோடு நடந்துகொள்ளவும்.

மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். ஆகவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். கோயிலில் "ராம் ராம்' என்று ஜபித்தபடியே ஆஞ்சநேயரைச் சுற்றி வரவும்.

கும்பம்

தெய்வத்தின் துணையால் வெற்றி பெற முயற்சிக்கும் கும்ப ராசி நேயர்களே!

உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். அவரை பூர்ண சுபரான குரு பகவான் பார்வையிடுகிறார். எனவே உங்கள் செயல்களில் இருந்த தேக்க நிலை மாறி, புதுமெருகுடன் செயலாற்ற முனைவீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள்.

இந்தக் காலகட்டத்தில் தொழில் ஸ்தானத்தில் சற்று பலம் குறைந்து அமர்ந்துள்ள குரு பகவான் தொழிலில் சிறு முரண்பாடுகளை கொடுத்தாலும், அவரின் கனிவான பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும், சத்ரு ஸ்தானத்திற்கும் கிடைப்பது இழப்புகளைப் பெருமளவிற்கு மீட்டுத் தந்துவிடும். பொருளாதார நிலை படிப்படியாக உயரத் தொடங்கும். சிலர் வீடு, வாகனம் வாங்கும் யோகங்களை பெறுவார்கள். உங்களை எதிர்த்துப் போடப்பட்டிருந்த பொய் வழக்குகளும் உங்களுக்குச் சாதகமாகவே முடியும்.

பஞ்சமாதிபதி லாப ஸ்தானத்திலும், பாக்கியாதிபதி விரய ஸ்தானத்தில் பாதகாதிபத்ய தோஷம் நீங்கப் பெற்றும் அமர்ந்திருப்பதால் புத்தக வெளியீடு, கலைத்துறை போன்றவை மூலம் வருமானம் கிடைக்கும். ராசியில் உள்ள ராகு பகவானும், களத்ர ஸ்தானத்தில் உள்ள கேது பகவானும் நண்பர்கள் மூலம் பல உதவிகளைப் பெற்றுத் தருவார்கள். அதோடு உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும்; செல்வாக்கு மளமளவென்று உயரும்.

அதேசமயம் மூத்த சகோதர, சகோதரிகளின் வழியில் சிறு மனக் கிலேசங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

பொதுவாக இந்தப் புத்தாண்டில் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறு தடைகளுக்குப் பிறகு நிறைவேறும். சமூகத்தில் உங்களின் நிலை உயரும். பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் தென்படும். குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், பாதிப்புகள் ஏற்படாத வகையில் இருக்கும். மற்றபடி உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதேநேரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பார்கள். வருமானமும் படிப்படியாக உயரும். மேலதிகாரிகள் உங்களுக்குச் சாதகமாகவும், பக்க பலமாகவும் இருப்பார்கள். அலுவலக வேலைகளிலும் கஷ்டம் இராது.

வியாபாரிகளுக்கு இது லாபகரமான புத்தாண்டாகவே அமைகிறது. பொருட்களின் விற்பனை நன்றாக நடக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டால் நன்கு வெற்றி பெறலாம். மற்றபடி கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம்.

விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகைப் பாக்கிகள் வசூலாகும். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். அதேநேரம் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு சற்று செலவு செய்ய நேரிடும்.

இந்த ராசி அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை திடத்துடன் செயல்படுத்துவார்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகள் தேடிவரும். அதே சமயம் முரட்டுப் பிடிவாதங்களையும், முரணான சிந்தனைகளையும் தவிர்க்கவும். இதனால் உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும்.

கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் உண்டாகும். இருப்பினும் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு அமோகமாக இருப்பதால் கவலையில்லை. அதோடு உங்களின் முயற்சியை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வர வேண்டிய பணமும் வந்து சேரும்.

பெண்மணிகள் கணவரால் பாராட்டப்படுவார்கள். இதனால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும்.

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களும் உதவி செய்வார்கள்.

பரிகாரம் : பெருமாளை தரிசித்து வரவும். ""நமோ நாராயணாய'' என்று ஜபித்து வரவும்.

மீனம்

நல்லதை நினைத்து, நல்லதையே செய்யும் மீனராசி நேயர்களே!

உங்கள் ராசியாதிபதி மற்றும் ஜீவன ஸ்தானாதிபதியுமான குரு பகவான், பாக்ய ஸ்தானத்தில் பாக்யாதிபதியுடன் இணைந்து உச்சம் பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திர பகவானின் பார்வையைப் பெறுவது, மூன்று திரிகோணாதிபதிகளின் சங்கமம் என்கிற வகையில் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும். உங்களை நிதி நெருக்கடிகள் அணுகாமல், செலவுக்கு ஈடான வரவு ஏற்பட்டு சேமிப்புகளும் சேரும். எதிர்கால வளமான வாழ்க்கைக்கு வித்திடும் வகையில் புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும் குரு பகவானின் பார்வை ராசியின் மீதும், தைரிய ஸ்தானத்தின் மீதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனி பகவான் மீதும் படிவதால் உங்கள் தோற்றப் பொலிவு கூடும். அனைவரையும் உங்கள் நடை, உடை பாவனைகளால் வசீகரிப்பீர்கள். இதுவரை ஒதுக்கி வைத்திருந்த காரியங்களை துணிந்து செயல்படுத்துவீர்கள்.

குழந்தைகள் வழியில் சிறு சஞ்சலங்கள், மனக்குறைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். சத்ரு ஸ்தானத்தில் கேது பகவானும், அயன ஸ்தானத்தில் ராகு பகவானும் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். வங்கிக் கடன்கள் கிடைக்கும். தைரியமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கலாம்.

அதேநேரம் முன்பின் தெரியாதவர்களை நம்பி உங்களது ரகசியங்களை வெளியிட்டு, வீண் வம்பு விவகாரங்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொதுவாக இந்தப் புத்தாண்டில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெரும்பாலான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளமும் சிறப்பாக இருக்கும். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அதேசமயம், ஆரோக்யப் பராமரிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும்.

உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தங்கள் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க நினைப்பார்கள். உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்கி விடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். பதவி உயர்வும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல்-வாங்கல் விஷயங்கள் நல்லபடியாகவே முடியும். கூட்டாளிகள் உங்களை நம்பி புதிய முதலீடுகளில் ஈடுபட சம்மதிப்பார்கள். நீங்களும் புதிய சந்தைகளை நாடிச் சென்று, சக வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள். கால்நடைகளின் முலம் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்த ராசி அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவர். சிலர் புதிய பதவிகளில் அமர்வர். தொண்டர்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களது எண்ணங்கள் ஈடேறும். நன்மை தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களின் கையைத் தேடி வரும். மற்றபடி உங்களின் முயற்சிகள் எதுவும் வீண் போகாது. அவை எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். அதோடு மனதிற்கு இனிய சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.

மாணவமணிகள் அதிகமாக உழைத்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவர். உள்ளரங்கு விளையாட்டிலும் வெற்றி காண்பர். பெற்றோர்களின் ஆதரவுடன் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வர்.

பரிகாரம் : சிவபெருமானையும், பார்வதியையும் ஒரு சேர வணங்கி வரவும்.

http://www.dinamani.com/Astrology/newyear2007/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ராசி ஆங்கிலத்தில் Taurus. இதனை தமிழில் எப்படி சொல்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிதொரு சாத்திர ஏட்டில் எனக்கு இந்த வருடம் கலியாணம் நடக்கும் எண்டு போட்டிருக்காங்கள். உம்.... இந்த வருடமாவது.... :D:(

Link to comment
Share on other sites

பிரிதொரு சாத்திர ஏட்டில் எனக்கு இந்த வருடம் கலியாணம் நடக்கும் எண்டு போட்டிருக்காங்கள். உம்.... இந்த வருடமாவது.... :D:(

ஏன் தூயவன் அவசரபடுறிங்க? எங்கேயோ படித்த ஞாபகம் ''கல்யாணம் என்பது ஒரு இரும்பு கோட்டை, வெளியே உள்ளவர்கள் உள்ளே போக துடிகிறார்கள், உள்ளே உள்ளவர்கள் வெளியே வர துடிகிறார்கள்''. அனுபவிப்பதெல்லாம், அனுபவித்து விட்டு, பிறகு கோட்டைக்குள் போங்கோ! :P :)

Link to comment
Share on other sites

வேறு எந்த தளங்களில் ஜோதிடம் பார்க்கலாம்? தமிழில்?

எனக்கெல்லாம் இதில் நம்பிக்கை இல்லை, வேறு ஒருவருக்காக கேட்க்கிறேன். தயவு செய்து யாராவது சொல்லுங்கள். :D

Link to comment
Share on other sites

மீனம்

நல்லதை நினைத்து, நல்லதையே செய்யும் மீனராசி நேயர்களே!

இது மட்டும் தான் பிடித்து இருக்கு

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.