Jump to content

பட்டினத்தார் : உடற்கூற்று அறிவியலும் வாழ்வியலும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பட்டினத்தார் : உடற்கூற்று அறிவியலும் வாழ்வியலும்.....

 

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

மகளிர்கள் சேனை தராணை ஆடை
மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து

ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழழை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர் தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து

மயிர் முடி கோதி அறுபத நீல
வண்டு இமிர் தண்தொடை கொண்ட புனைந்து
மணிபொன் இலக்கு பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க

மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு கழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேர வழங்கி

ஒருமுதல் ஆகி முதுபொருளாய்
இருந்த தனங்களும் வம்பில் இழந்து
மதன சுகந்த வதனம் இது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே

வருவது போவது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து

துயில் வரும் நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு
துகிலும் இழந்து கணையும் அழிந்து
தோகையர் பாலகர்கள் ஓரணி கொண்டு

கலியுகம் மீதில் இவர் மரியாதை
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து

தெளிவும் இராமல் உரைதடுமாறி
சிந்தையும் நெஞ்சும் உலைந்து மருண்டு
திடமும் அழிந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏது என நொந்து

மறையவன் வேதன் எழுதியவாறு
வந்தது கண்டமும் என்று தெளிந்து
இனியென கண்டம் இனி என தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற

கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளர்பிறை போல எயிரும் உரோமம்
உச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு
மகதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து

வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவ காலம் அறிந்து

பழையவர் காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட என்றவர் பந்தர்
இடும் எனவந்து பறையிடமுந்தவே
பிணம்வேக விசாரியும் என்று

பலரையும் ஏவி முதியவர்தாம்
இருந்த சவம்கழு வுஞ்சிலர் என்று
பணிதுகில் தொஞ்கல் களபம் அணிந்து
பாவமே செய்து நாறும் உடம்பை

வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென நொந்து

விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே. 

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே. 

சூப்பர் அண்ணை 

இதுதான் வாழ்க்கை - இதற்குள் எத்தனை கூத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாத்தா சவக்காலை அருகே அடிக்கடி ஒலிக்கும் இந்த பாடல் உன்மையை சொல்லும் பாடலும் கூட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

சூப்பர் அண்ணை 

இதுதான் வாழ்க்கை - இதற்குள் எத்தனை கூத்து 

பட்டினத்தார்ரை தத்துவங்கள் அத்தனையும் சிந்தித்தால் எரிச்சல் பொறாமை கொலை கொள்ளை எதுவுமே இந்த உலகில் இருக்காது.

35 minutes ago, முனிவர் ஜீ said:

நன்றி தாத்தா சவக்காலை அருகே அடிக்கடி ஒலிக்கும் இந்த பாடல் உன்மையை சொல்லும் பாடலும் கூட 

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து ...
..

இப்ப சனம் இதோடையே மினைக்கடுதுகள்  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிணத்தோட சுடுகாட்டுக்கை போய்வந்த மாதிரிக் கிடக்கு...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, suvy said:

பிணத்தோட சுடுகாட்டுக்கை போய்வந்த மாதிரிக் கிடக்கு...!

எனக்கும் அதேதான் சுவியர்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பட்டினத்தார்ரை தத்துவங்கள் அத்தனையும் சிந்தித்தால் எரிச்சல் பொறாமை கொலை கொள்ளை எதுவுமே இந்த உலகில் இருக்காது.

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து ...
..

இப்ப சனம் இதோடையே மினைக்கடுதுகள்  :(

ஓம் ஓம்  என்னத்தைசொல்ல ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேர வழங்கி

ஒருமுதல் ஆகி முதுபொருளாய்
இருந்த தனங்களும் வம்பில் இழந்து
மதன சுகந்த வதனம் இது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து

பட்டினத்தார் எங்கேயோ போட்டார் !:cool:

அண்மையில் என்னை ஒருவர் கேட்டார்!

அண்ணை, இதழ் கடிக்கிற விளையாட்டு..எங்கட காலசாரத்திலை இருக்கா எண்டு!

பட்டினத்தார் இதழ் மட்டுமல்ல..வேறு என்னத்தையெல்லாம் கடிக்கலாம் என்று மேலுக்க வரிகளில் சொல்லியிருக்கிறார்!

கரை கண்ட...மனுஷன் எண்டு கேள்விப்பட்டதுண்டு!

 

இவருடைய இன்னுமொரு 'வாழ்வியல்' பாடல் உள்ளது!

அதை இங்கு இணைக்க விருப்பம் !

ஆனால் அது நீக்கப்பட்டு விடும்!

 

நன்றி..குமாரசாமி அண்ணை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினத்தார் சும்மா ஆளில்லை.. எல்லாம் ஆடி அடங்கி கட்டையில போற வயசில தான் உதுகளைப் பாடியதாகக் கேள்வி. ஆனால் நாங்க எப்பவும் இதைத் தான் சொல்லுறம்.. எங்க கருத்தை எவன் மதிக்கிறான்.

எல்லாம் ஆடிஅடங்கிற நேரத்தில தான்.. பலருக்கு மூளை வேலை செய்ய ஆரம்பிக்குது. சாவுப் பயம். tw_blush:tw_tounge:

சாவுக்குப் பயந்துதான் சித்தார்த்தனும் (புத்தர்) துறவியானார். ஆனால்.. உண்மையான மெய்யியல் என்பது.. பிறப்புடன் ஆரம்பிக்கிற ஒரு அறிவு நிலை. அது படிப்பறிவோடு பகுத்தறிவோடு கலந்து பெருகனும். ஆனால் அதை எங்க பெருக்கினம்.... சிற்றின்ப அறிவை தான்.. பெருக்கி.. மனித சனத்தொகையை பெருக்கிட்டு.. அப்புறம் ஆடி அடங்கிற நேரத்தில்....ஆசுவாசமாக படிக்கிறது தான் பட்டினத்தார் பாடல்கள்.  பயன் என்ன..?????! :rolleyes:

பட்டினத்தார் பாடல்கள் பாடசாலைகளில் படிப்பிக்கப்படனும். சிறுவயதிலேயே எதிர்கால வாழ்க்கை என்றால் என்ன.. அதன் எல்லை என்ன... என்பதை குழந்தைகள் சிந்திக்கக் கற்றுக் கொடுத்தால்.. அவர்கள் பேராசைகளுக்கு உட்பட்டு தம்மை தாம் சார்ந்த மனித சமூகத்தை சிதைக்கும் வழிகளைப் பின்பற்றுவதைக் குறைக்க முடியும். குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும்.

வாழ்க்கையை.. இன்னும் இன்னும் மேம்பட்ட மெய்யியல் அறிவோடு அறிவியல் கலந்து.. கூடிய மனித நேயத்தை வளர்த்து அமைத்துக் கொள்ள உதவ முடியும். 

எங்கட அம்மாம்மா... நான் குட்டிப் பையனாக இருக்கும் போதே... பட்டினத்தார் பாடல்களில் வரும் வாழ்வியல் நிலையாமை பற்றிச் சொல்லுவா... அதை எல்லாம் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ.. பூமியில் மனித வாழ்வை.. வெகு சாதாரணமாக கருதிட ஒரு சிந்தனை வெளி ஏற்பட்டது. பிற உயிரினங்களின் வாழ்வியலை அவதானிக்கும் அவற்றில் அக்கறை செய்யும் பண்பு வளர்ந்தது. வாழ்க்கை என்பது ஒன்னும் சாதனை அல்ல சாதாரணம் என்று புலப்பட்டது. இது.. மனித சிந்தனையில்.. மெய்யியல் அளவைக் கூட்டி இருக்கு என்று சொன்னால் மிகையல்ல. மெய்யியல் அறிவுக்காக அறிவியல் அறிவுப் பெருக்கத்தை.. இந்தப் பிரபஞ்சத்தின் ஆக்கம் இயக்கம் பற்றிய நுட்பமான அறிதலை.. அதனை மனித வாழ்வியல் மேம்பாட்டுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திப்பதை தடுக்கனுன்னு அவசியமில்லை. மனிதன் ஆக்க முடியாத.. இயற்கைக்கு பாதிப்பில்லாத அறிவியலும் ஒரு மெய்யியலே.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினத்தார் துறவு பூண முடிவெடுத்து தாயிடம் போறார்....

தாய்: என்ன...

மகன்: நான் துறவு பூணப் போறேன்....

தாய்: சரி போய்வா...

அங்கேயே தனது உடைகளைக் களைந்து  கோவணத்துடன் நின்று கொண்டு மாத்திக் கட்ட இன்னொரு கோவணத்தை எடுக்கிறார்...

தாய்: துறவிக்கு எதுக்கு இரண்டு கோவணம்...

மகன்: அதைத் தூக்கி அப்பால் போடுகிறார்....

தாய்: பறவாயில்லை அதையும் கொண்டு போ.... ஆனால் அதில் ஆசை வைக்காதே... அது காணாமல் போனால் கவலைப் படாதே விட்டுடு...

(இப்ப இங்கு யார் துறவி.)

 

இப்படித்தான் இன்னொருவர் இரண்டு கோவணத்துடன் துறவறம் போய் காட்டில் இருந்தார். தினமும் அவர் காயப் போடும் கோவணத்தை ஒரு எலி கடித்துவிட்டுப் போய் விடும். இதைக் கவணித்த ஒரு ஊரவர் இந்தக் காற் ரை வைத்திருங்கோ றாற்  றன்னாயிடும் என்று பூணையைக் குடுத்தார். துறவியும் அதை வாங்கி வைத்துக் கொண்டார். 

பூணைக்கு பால் வாங்க துறவி ஊருக்குள் போனார். துறவியின் சிரமத்தைப் பார்த்த ஊரார் அவற்ர ஆசிரமத்தில ஒரு பசுவையும் கன்றையும் கொண்டுவந்து விட்டிட்டுப் போட்டினம். றாற் ரைப் பிடிக்க காற், காற்ருக்கு மில்க் குடுக்க கவ்வும் கவ் கன்றும் வந்திட்டுது.

அறத்துப்பால் பொருட்பால் கறந்த துறவிக்கு பசும்பால் கறக்கத் தெரியவில்லை. விறகு பொறுக்கும் விடலையொருத்தி அவர் விதியென வந்து  எதிர் நின்றாள். தள்ளு சாமி தினமும் நானே வந்து கறந்து விடுகிறன் என்றாள். கறந்தும் உதவினாள். சிலநாளில் கருவுற்றாள், ஒரு பௌர்ணமியில் சிசுவும் பெற்றாள். துறவி இப்ப வலு பிஸி. பசுவில் பால் கறந்து, பூணைக்கும் குட்டிகளுக்கும் பால் வைத்து  காமத்துப் பாலை கன்னியுடன் ஆய்வு செய்வதில் ஈடுபட்டு கோவணத்தையும் கோவணம் கட்டுறதையும் மறந்திட்டுது...!

எலியும் சிக்ஸ்டீனும் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறது....!  tw_blush:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.